புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 11 ஆவணங்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் கேட்பது வாக்காளருக்கு சாதகமான அம்சம்தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலா பாக்சி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்போது, “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது இந்திய குடியுரிமைக்கு ஆதாரமாக ஆதாரை ஏற்க மறுக்கும் தேர்தல் ஆணையம், வேறு 11 ஆவணங்களை கேட்பது வாக்காளர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த்,…
Author: admin
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில் அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உள்ளிட்ட போர் விமானங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதில் எப்-16 ரக விமானமும் அடங்கும். இந்நிலையில், தொலைக்காட்சி நிறுவனம் சார்பில், அமெரிக்க தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் (எப்ஓஐஏ) அந்நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையிடம் சில கேள்விகளை கேட்டிருந்தது. குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 ரக விமானங்கள் சேதமடைந்தது தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அத்துடன் இதுபற்றி பாகிஸ்தான் அரசிடம் கேட்குமாறு…
மதுரை: பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை உயர் நீதிமன்றம் உத்தரவு எதுவும் பிறப்பிக்காமல் முடித்துவைத்தது. இதையடுத்து, பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான தடை நீங்கியுள்ளது. மதுரையில் 2 இடங்களில் அதிமுக கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்றவும், கொடிக் கம்பங்கள் வைப்பதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று பட்டா இடங்களில் வைக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை 2 நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இந்த உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற…
புதுடெல்லி: ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார். இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அங்கு அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு அஜித் தோவல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார். இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என்றார். இந்நிலையில், வரும் 21-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார். அப்போது, ஐபி 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் திலகபாமாவை தோற்கடித்தார். தற்போது அந்த வித்தியாசத்தை வைத்து விஜய் கட்சி தம்பிகள் போஸ்டர் ஒட்டி ஐபி-க்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக-வினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வோ, இபிஎஸ் வருகை அடுத்த மாத இறுதியில்தான் என்பதால் எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இடையில் புகுந்து தவெக-வினர் தான் இப்போது தடாலடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஓர் அதிரடியாக, கடந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் ஐபி பெற்ற வாக்குவித்தியாசத்தைவிட இம்முறை ஒரு வாக்கு கூடுதல் வித்தியாசத்தில் ஆத்தூர் தொகுதியில் தவெக வாகை சூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக போஸ்டர்களை ஒட்டினார்கள். ‘ஆத்தூர் தொகுதியில்…
சென்னை: வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினம் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை 38 மாவட்டங்களில் முகாம் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மசூதி தெருவில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தரன், மோகன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 34,809 ரேஷன் கடைகளுக்குட்பட்ட பகுதிகளில் 70 வயதை கடந்த முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ரேஷன் பொருட்களை, ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்குவதற்கு…
சில பெண்கள் மார்பக புற்றுநோயை உருவாக்குகிறார்கள், அதே மார்பக பகுதியில் (பக்க) முன்பு அவர்கள் பல் ரூட் கால்வாய் வைத்திருந்தனர். எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகளுக்கு இடையிலான கவனிக்கப்பட்ட உறவுக்கு காரணம்-விளைவு உறவின் எந்த ஆதாரமும் இல்லை. மார்பக புற்றுநோயின் பல தோற்றம் பல் சிகிச்சை பக்க விளைவுகளுக்கு பதிலாக சீரற்ற நிகழ்வுகளின் விளைவாக அதிக வாய்ப்புள்ளது என்பதை மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சரிபார்க்கப்படாத உரிமைகோரல்கள் ஆன்லைன் நிகழ்வுகளுடன், தவறான தகவல்கள் பரவுவதன் மூலம் அச்சங்களைத் தொடர்கின்றன. ரூட் கால்வாய்கள் மார்பக புற்றுநோயை அல்லது வேறு எந்த வகையான புற்றுநோயையும் ஏற்படுத்துவதற்கான அறிவியல் ஆதாரங்களை காட்டவில்லை என்பதை மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.ஆதாரங்கள்பிட் செயின்ட் பல் மையம்: ரூட் கால்வாய் சிகிச்சையானது மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா?அனைத்து பல்: ரூட் கால்வாய்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா?பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் (என்.சி.பி.ஐ): மோசமான வாய்வழி ஆரோக்கியத்திற்கும் மார்பக புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையிலான தொடர்புமருத்துவ யதார்த்தங்கள்: ரூட் கால்வாய்…
சென்னை: அந்தமானில் வசிக்கும் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்கக்கோரி தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, உயர் நீதிமன்ற முதல் மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த நபரும், அவரதுமனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமி தனது அம்மாவுடன் அந்தமானில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சிறுமியின் தாயார் வேறு ஒரு நபரைஇரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்தமானில் உள்ளதனது மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக்கோரி சென்னையில் உள்ளசிறுமியின் தந்தை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தமானில் உள்ள சிறுமியை மீட்டு ஆஜர்படுத்த நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இந்த…
நரம்பியல் விஞ்ஞானி எமிலி மெக்டொனால்ட், நிலையான புகார் மூளையை எதிர்மறையாக கம்பிகள், சிக்கல்களில் கவனம் செலுத்தும் பாதைகளை வலுப்படுத்துதல் மற்றும் ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸை சுருக்கி, கவனம் மற்றும் முடிவெடுப்பதை பாதிக்கும் என்று விளக்குகிறார். இந்த பழக்கம் தனிநபர்களை குறைந்த கவர்ச்சியாக ஆக்குகிறது மற்றும் அவர்களை ‘பாதிக்கப்பட்ட பயன்முறையில்’ வைக்கிறது. இருப்பினும், நேர்மறையான எண்ணங்களையும் நன்றியுணர்வையும் வளர்ப்பது இதை மாற்றியமைக்கலாம், கவனத்தை மேம்படுத்துகிறது மற்றும் மிகவும் மகிழ்ச்சியான கண்ணோட்டத்தை செயல்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து புகார், நீதிபதிகள் மற்றும் விமர்சிக்கும் ஒருவர்? சரி, இந்த நடத்தை நீங்கள் உணர்ந்ததை விட அதிக தீங்கு விளைவிக்கும். உங்கள் மனநிலையை கெடுப்பதற்கு அப்பால், இது உங்கள் மூளையை மோசமாக மாற்றக்கூடும். எமிலி மெக்டொனால்ட் ஒரு அரிசோனாவை தளமாகக் கொண்ட நரம்பியல் விஞ்ஞானி மற்றும் மனநிலை பயிற்சியாளர் ஆவார், ஒரு நாள்பட்ட புகார்தாரர் என்ற தீங்கு விளக்கினார். “மற்றவர்களை புகார் செய்வது, தீர்ப்பது அல்லது விமர்சிப்பது உண்மையில் உங்கள்…
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக் காலமாக மாற்ற கோரி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சென்னையில் நேற்று பேரணி நடத்தினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்கால மாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை செயல்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டை திரும்ப பெற்று, அரசாணையை வெளியிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்து 19 ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும். சாலைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மனு அளித்து, எழிலகம் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில்…