Author: admin

திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே உள்ள இசுகபல்லி எனும் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல தோட்டங்களில் தொழிலாளர்கள் மாங்காய் அறுவடையில் ஈடுபட்டனர். ஷெட்டிகுண்டா ரயில்வே காலனி, பத்தவேடு, கல்வகுண்டா ஆகிய கிராமங்களை சேர்ந்த இவர்கள் 21 பேரும் காலை முதல் மாலை வரை மாங்காய்களை அறுத்து பிறகு லாரியில் ஏற்றினர். பிறகு அதே லாரியில் தங்கள் ஊருக்குப் புறப்பட்டனர். அந்த லாரி ரயில்வே கோடூரு மாங்காய் சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புல்லம்பேடு ரெட்டிசெருவு எனும் இடத்தில் ஏரிக்கரை மீது அந்த லாரி செல்லும்போது திடீரென நிலைதடுமாறி ஏரியில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில், சிட்டம்மாள் (25), துர்கம்மாள் (32), ஸ்ரீனு (33), லட்சுமி தேவி (36), ராதா (39), சுப்பம்மாள் (37), ரமணா (42) உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முனிசந்திரா (48) என்பவர் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read More

ஹராரே: ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஹராரேவில் நேற்று தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிகந்தர் ராஸா 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். பிரையன் பென்னெட் 30, ரியான் பரூல் 29 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லின்டே 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 142 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூபின் ஹெர்மான் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 17 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களும் விளாசினர்.

Read More

சென்னை: நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 5 ஐஏஎஸ் அதி​காரி​கள் உள்​ளிட்ட 6 பேர் ஆக.4-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு பணி​களுக்​காக கடந்த 1991-ம் ஆண்டு தமிழக அரசு பலரை பணி​யில் அமர்த்​தி​யது. பின்​னர் அவர்​கள் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதை எதிர்த்து பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் நிர்​வாக தீர்ப்​பா​யத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். அவர்​களுக்கு மாற்​றுப்​பணி வழங்க அரசுக்கு தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை உயர் நீதி​மன்​ற​மும், உச்ச நீதிமன்​ற​மும் உறுதி செய்​தது. அதன்​படி, பி.சர்​மிளா பேகம் உள்​ளிட்ட 16 பேருக்கு வணி​கவரித் துறை மற்​றும் பள்​ளிக்​கல்​வித் துறை​யில் இளநிலை உதவி​யாள​ராக பணி வழங்​கப்​பட்​டது. அவர்​களது பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணிவரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. இதனால், இவர்​கள் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தில் சேர்க்​கப்​ப​டா​மல் பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்​டனர். இதை எதிர்த்து சர்​மிளா பேகம் உள்​ளிட்ட 16…

Read More

வெகோவி எடை இழப்பு உலகத்தை புயலால் எடுத்துள்ளார் – அது மிகைப்படுத்தல் மட்டுமல்ல. மக்கள் இறுதியாக உண்மையான முடிவுகளைப் பார்க்கிறார்கள், மேலும் பல ஆண்டுகளாக எடையுடன் போராடியவர்களுக்கு இது விளையாட்டை மாற்றுகிறது. செயலிழப்பு உணவுகள் அல்லது விரைவான திருத்தங்களைப் போலல்லாமல், வெகோவி உங்கள் உடலுடன் பசியின்மையைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், நீண்ட நேரம் உணர உதவுவதன் மூலமும் செயல்படுகிறார். பிரபலங்களும் அன்றாட எல்லோரும் இதைப் பற்றி பேசுகிறார்கள், சமூக ஊடகங்கள் சலசலக்கின்றன. ஆனால் முடிவுகள் வியத்தகு முறையில் இருக்கும்போது, இது ஒரு மாய மாத்திரை அல்ல – ஆரோக்கியமான உணவு மற்றும் இயக்கம் இன்னும் முக்கியமானது. வெகுஜன ஜெனரல் ப்ரிகாம் வல்லுநர்கள் ஜி.எல்.பி – 1 மருந்துகள் செமக்ளூட்டைட் (வெகோவி) மற்றும் டிர்ஜெபாடைட் (செப்பவுண்ட்) போன்ற குறிப்பிடத்தக்க எடை இழப்பை அதிகரிக்கக்கூடும் என்று வலியுறுத்துகின்றனர் -பொதுவாக 15-21% உடல் எடையில் – ஆனால் ஸ்மார்ட் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி உத்திகளுடன் ஜோடியாக இருக்கும்போது…

Read More

புதுடெல்லி: மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி தொடர்​பான தகவல்​களை திரட்​டியது. இதன்​படி, இந்த மோசடிகள் பெரும்​பாலும் பாதுகாப்புமிக்க இடங்​களில் இருந்து நடத்​தப்​படு​வதும், சீன நிறு​வனங்​களால் கட்​டுப்​படுத்​தப்​படு​வதும் தெரிய​வந்​துள்​ளது. இந்த ஆண்டு சைபர் மோசடிகள் பற்றி நடத்​தப்​பட்ட பகுப்​பாய்​வில், இது​போன்ற குற்​றங்​களால் மாதந்​தோறும் இந்​தி​யர்​கள் ரூ.1,000 கோடியை இழப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. இந்த ஆண்​டின் முதல் 5 மாதங்​களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு இணைய வழி​யில் மோசடி நடந்​துள்​ளது. இதில் பாதிக்​கும் மேற்​பட்ட தொகை, மியான்​மர், கம்​போடி​யா, வியட்​நாம், லாவோஸ் மற்​றும் தாய்​லாந்து ஆகிய நாடு​களில் இருந்து மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து உயர் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “கடந்த ஜனவரி மாதத்​தில் ரூ.1,192 கோடி, பிப்​ர​வரி​யில் ரூ.951 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.1,000 கோடி, ஏப்​ரல் மாதத்​தில் ரூ.731 கோடி, மே மாதத்​தில்…

Read More

சென்னை: கால்​நடை மருத்​துவ படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியல் ஆன்​லைனில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. 57 பேர் கட்​-ஆப் மதிப்​பெண் 200-க்கு 200 எடுத்து சாதனை படைத்​துள்​ளனர். அடுத்த வாரம் கலந்​தாய்வு தொடங்​கு​கிறது. தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீரா​பாண்டி ஆகிய 7 இடங்​களில் உள்ள கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​களில் ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட கால்​நடை மருத்​து​வம் மற்​றும் பராமரிப்பு படிப்​புக்கு (பி.​வி.எஸ்​சி. – ஏ.ஹெச்) 660 இடங்​கள் இருக்​கின்​றன. இதில், சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு ஆகிய 4 கல்​லூரி​களில் உள்ள 420 இடங்​களில் மட்​டும் அகில இந்​திய ஒதுக்கீட்​டுக்கு 15 சதவீதம் இடங்​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன. மீதம் தமிழகத்​துக்கு 597 இடங்​கள் உள்​ளன. திரு​வள்​ளூர் மாவட்​டம் கோடு​வேளி​யில் உள்ள உணவு மற்​றும் பால்​வளத் தொழில்​நுட்ப கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்)…

Read More

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார். அப்போது அதை ஆக்ரோஷமாக கொண்டாடிய முகமது சிராஜ், பென் டக்கெட் தோள் பட்டையை இடித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முகமது சிராஜுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியையும், போட்டியின் ஊதியத்தில் 15 சதவீதத்தையும் அபராதமாக விதித்துள்ளது ஐசிசி. இந்தப் போட்டியில் சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ் விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் பென் டக்கெட் மற்றும் ஆலி போப் விக்கெட்களையும் சிராஜ் வீழ்த்தினார்.

Read More

சென்னை: நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு: பிரதமர் மோடி: பிரபல திரைப்பட ஆளுமை பி. சரோஜாதேவியின் மறைவால் வருத்தம் அடைந்தேன். இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ஒரு சிறந்த சின்னமாக அவர் நினைவுகூரப்படுவார்.அவரது பன்முகத்தன்மை கொண்ட நடிப்பு தலைமுறை தாண்டியும் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி. முதல்வர் ஸ்டாலின்: தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார். எப்போதும் இனிய முகத்துடனும்,…

Read More

உயிரைக் காப்பாற்றுவதற்காக பக்கவாதம் அறிகுறிகளை உடனடியாக அங்கீகரிப்பதன் முக்கியமான முக்கியத்துவத்தை டாக்டர் ரவேஷ் சுங்கரா எடுத்துக்காட்டுகிறார். அவர் ‘வேகமான’ சுருக்கத்தை வலியுறுத்துகிறார்: முகம் வீழ்ச்சியடைந்தது, கை பலவீனம், பேச்சு சிரமம் மற்றும் அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கும் நேரம். மூளை பாதிப்பைக் குறைப்பதற்கும் நீண்டகால இயலாமை அல்லது இறப்பைத் தடுப்பதற்கும் முதல் சில மணிநேரங்களுக்குள் விரைவாக செயல்படுவது முக்கியம். ஒரு மூளை பக்கவாதம் என்பது ஒவ்வொரு நொடியும் கணக்கிடும் மருத்துவ அவசரநிலை. அறிகுறிகளை அங்கீகரிப்பது மற்றும் உடனடி நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். இது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட போர்டு சான்றளிக்கப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரவீஷ் சுங்காரா, மூளை பக்கவாதத்தின் 3 பொதுவான மற்றும் முக்கியமான அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளார், மேலும் ‘வேகமாக’ செயல்படுவது ஏன் முக்கியம். “இந்த பக்கவாதம் அறிகுறிகளை விரைவாக அங்கீகரிப்பது ஒரு மூளையையும் உயிரையும் காப்பாற்றும்,” என்று…

Read More

புதுடெல்லி: ரயில்வே நேற்று வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: பயணி​களின் பாது​காப்​பைக் கருத்​தில் கொண்டு 74 ஆயிரம் ரயில் பெட்​டிகள், 15 ஆயிரம் இன்​ஜின்​களில் கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​படும். ரயில்​கள் 100 கிலோ மீட்​டர் வேகத்​தில் சென்​றாலும், குறைந்த ஒளி வசதி இருந்​தா​லும், இந்த கேம​ராக்​களில் பதி​வாகும் காட்​சிகள் மிக​வும் தெளிவுடன் இருக்​கும். அண்​மை​யில் பானிப்​பட் பகு​தி​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த ரயில் பெட்​டி​யில் பெண் ஒரு​வர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை ரயில்வே எடுத்​துள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Read More