திருப்பதி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே உள்ள இசுகபல்லி எனும் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல தோட்டங்களில் தொழிலாளர்கள் மாங்காய் அறுவடையில் ஈடுபட்டனர். ஷெட்டிகுண்டா ரயில்வே காலனி, பத்தவேடு, கல்வகுண்டா ஆகிய கிராமங்களை சேர்ந்த இவர்கள் 21 பேரும் காலை முதல் மாலை வரை மாங்காய்களை அறுத்து பிறகு லாரியில் ஏற்றினர். பிறகு அதே லாரியில் தங்கள் ஊருக்குப் புறப்பட்டனர். அந்த லாரி ரயில்வே கோடூரு மாங்காய் சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் புல்லம்பேடு ரெட்டிசெருவு எனும் இடத்தில் ஏரிக்கரை மீது அந்த லாரி செல்லும்போது திடீரென நிலைதடுமாறி ஏரியில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில், சிட்டம்மாள் (25), துர்கம்மாள் (32), ஸ்ரீனு (33), லட்சுமி தேவி (36), ராதா (39), சுப்பம்மாள் (37), ரமணா (42) உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முனிசந்திரா (48) என்பவர் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…
Author: admin
ஹராரே: ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஹராரேவில் நேற்று தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிகந்தர் ராஸா 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். பிரையன் பென்னெட் 30, ரியான் பரூல் 29 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லின்டே 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 142 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரூபின் ஹெர்மான் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், டெவால்ட் பிரேவிஸ் 17 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களும் விளாசினர்.
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் ஆக.4-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக கடந்த 1991-ம் ஆண்டு தமிழக அரசு பலரை பணியில் அமர்த்தியது. பின்னர் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதன்படி, பி.சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேருக்கு வணிகவரித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டது. அவர்களது பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணிவரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால், இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதை எதிர்த்து சர்மிளா பேகம் உள்ளிட்ட 16…
வெகோவி எடை இழப்பு உலகத்தை புயலால் எடுத்துள்ளார் – அது மிகைப்படுத்தல் மட்டுமல்ல. மக்கள் இறுதியாக உண்மையான முடிவுகளைப் பார்க்கிறார்கள், மேலும் பல ஆண்டுகளாக எடையுடன் போராடியவர்களுக்கு இது விளையாட்டை மாற்றுகிறது. செயலிழப்பு உணவுகள் அல்லது விரைவான திருத்தங்களைப் போலல்லாமல், வெகோவி உங்கள் உடலுடன் பசியின்மையைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், நீண்ட நேரம் உணர உதவுவதன் மூலமும் செயல்படுகிறார். பிரபலங்களும் அன்றாட எல்லோரும் இதைப் பற்றி பேசுகிறார்கள், சமூக ஊடகங்கள் சலசலக்கின்றன. ஆனால் முடிவுகள் வியத்தகு முறையில் இருக்கும்போது, இது ஒரு மாய மாத்திரை அல்ல – ஆரோக்கியமான உணவு மற்றும் இயக்கம் இன்னும் முக்கியமானது. வெகுஜன ஜெனரல் ப்ரிகாம் வல்லுநர்கள் ஜி.எல்.பி – 1 மருந்துகள் செமக்ளூட்டைட் (வெகோவி) மற்றும் டிர்ஜெபாடைட் (செப்பவுண்ட்) போன்ற குறிப்பிடத்தக்க எடை இழப்பை அதிகரிக்கக்கூடும் என்று வலியுறுத்துகின்றனர் -பொதுவாக 15-21% உடல் எடையில் – ஆனால் ஸ்மார்ட் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி உத்திகளுடன் ஜோடியாக இருக்கும்போது…
புதுடெல்லி: மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணையவழி (சைபர்) குற்ற ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி), இணையவழி பண மோசடி தொடர்பான தகவல்களை திரட்டியது. இதன்படி, இந்த மோசடிகள் பெரும்பாலும் பாதுகாப்புமிக்க இடங்களில் இருந்து நடத்தப்படுவதும், சீன நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு சைபர் மோசடிகள் பற்றி நடத்தப்பட்ட பகுப்பாய்வில், இதுபோன்ற குற்றங்களால் மாதந்தோறும் இந்தியர்கள் ரூ.1,000 கோடியை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு இணைய வழியில் மோசடி நடந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை, மியான்மர், கம்போடியா, வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,192 கோடி, பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.1,000 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.731 கோடி, மே மாதத்தில்…
சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 57 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்து சாதனை படைத்துள்ளனர். அடுத்த வாரம் கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதம் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்)…
லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார். அப்போது அதை ஆக்ரோஷமாக கொண்டாடிய முகமது சிராஜ், பென் டக்கெட் தோள் பட்டையை இடித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முகமது சிராஜுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியையும், போட்டியின் ஊதியத்தில் 15 சதவீதத்தையும் அபராதமாக விதித்துள்ளது ஐசிசி. இந்தப் போட்டியில் சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். முதல் இன்னிங்ஸில் ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ் விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்சில் பென் டக்கெட் மற்றும் ஆலி போப் விக்கெட்களையும் சிராஜ் வீழ்த்தினார்.
சென்னை: நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு: பிரதமர் மோடி: பிரபல திரைப்பட ஆளுமை பி. சரோஜாதேவியின் மறைவால் வருத்தம் அடைந்தேன். இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ஒரு சிறந்த சின்னமாக அவர் நினைவுகூரப்படுவார்.அவரது பன்முகத்தன்மை கொண்ட நடிப்பு தலைமுறை தாண்டியும் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி. முதல்வர் ஸ்டாலின்: தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார். எப்போதும் இனிய முகத்துடனும்,…
உயிரைக் காப்பாற்றுவதற்காக பக்கவாதம் அறிகுறிகளை உடனடியாக அங்கீகரிப்பதன் முக்கியமான முக்கியத்துவத்தை டாக்டர் ரவேஷ் சுங்கரா எடுத்துக்காட்டுகிறார். அவர் ‘வேகமான’ சுருக்கத்தை வலியுறுத்துகிறார்: முகம் வீழ்ச்சியடைந்தது, கை பலவீனம், பேச்சு சிரமம் மற்றும் அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கும் நேரம். மூளை பாதிப்பைக் குறைப்பதற்கும் நீண்டகால இயலாமை அல்லது இறப்பைத் தடுப்பதற்கும் முதல் சில மணிநேரங்களுக்குள் விரைவாக செயல்படுவது முக்கியம். ஒரு மூளை பக்கவாதம் என்பது ஒவ்வொரு நொடியும் கணக்கிடும் மருத்துவ அவசரநிலை. அறிகுறிகளை அங்கீகரிப்பது மற்றும் உடனடி நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். இது வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிக்கும். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட போர்டு சான்றளிக்கப்பட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரவீஷ் சுங்காரா, மூளை பக்கவாதத்தின் 3 பொதுவான மற்றும் முக்கியமான அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளார், மேலும் ‘வேகமாக’ செயல்படுவது ஏன் முக்கியம். “இந்த பக்கவாதம் அறிகுறிகளை விரைவாக அங்கீகரிப்பது ஒரு மூளையையும் உயிரையும் காப்பாற்றும்,” என்று…
புதுடெல்லி: ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 74 ஆயிரம் ரயில் பெட்டிகள், 15 ஆயிரம் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ரயில்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும், குறைந்த ஒளி வசதி இருந்தாலும், இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மிகவும் தெளிவுடன் இருக்கும். அண்மையில் பானிப்பட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
