புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டு ராணுவத்துக்கு எதிராகப் பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது 2022, டிசம்பர் 16 அன்று, இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்துப் பேசினார். “இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது மக்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி கேட்பார்கள். ஆனால், இந்திய படைகளை சீன படை தாக்கியது குறித்து ஒருமுறை கூட கேள்வி கேட்க மாட்டார்கள்” என பேசியதாகக் கூறப்படுகிறது. சீன ராணுவம், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ராகுல் காந்தி பேசியது தனக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டு முன்னாள் எல்லை சாலைகள் அமைப்பின் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். ராகுல் காந்தி…
Author: admin
திருப்பூர்: ‘உணவளிக்கும் விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிக்கலாமா?’ என கேள்வி எழுப்பி, சிபில் ரிப்போர்ட் விவகாரத்தை கண்டித்து திருப்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும், சிபில் ரிப்போர்ட் ஸ்கோர் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று (ஜூலை 15) ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், மாநில செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கோகுல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள் பேசியது: ”தமிழக அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின அடிப்படையில் பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் புள்ளி விவரத்தின்…
ஒரு புத்தகம் தவறாக இடப்படும்போது அல்லது ஒரு சொல் தவறாக எழுதப்பட்டால் ஒரே நேரத்தில் கவனிக்கும் தனிநபரின் வகையா? இந்த வைரஸ் ஆப்டிகல் மாயை உங்கள் சிறந்த மூளை டீஸராக இருக்கலாம்.வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் வைரலாகி, இந்த புதிர் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பணி? ஏறக்குறைய ஒத்த எண்கள் நிறைந்த ஒரு கட்டத்தில் ‘பி’ என்ற ஒரு மறைக்கப்பட்ட கடிதத்தைக் கண்டறியவும்.படம் 8 இன் 12 வரிசைகள் மற்றும் 12 நெடுவரிசைகளைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் நீல-பச்சை பின்னணிக்கு எதிராக ஒரே மாதிரியாக வைக்கப்படுகின்றன. நிர்வாணக் கண்ணுக்கு, அவை ஒரே மாதிரியாகத் தெரிகின்றன -ஆனால் ஒரு பாத்திரம் இல்லை. கட்டத்தில் எங்காவது ‘பி’ என்ற எழுத்தை மறைக்கப்படுகிறது, இது மாறுவேடமிட்டுள்ளது, ஏனெனில் அது அதே வடிவத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இது அரிதாகவே கவனிக்கத்தக்கது: ‘பி’ அதன் இடதுபுறத்தில் ஒரு நேர் கோட்டைக் கொண்டுள்ளது, அதேசமயம் இலக்க…
அரியலூர்: “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அரியலூர் மாவட்டம விவசாய சங்க பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார். அப்போது, ‘கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். சிறப்பு குறுவை தொகுப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நெல், கரும்பு, முந்திரிக்கு உரிய விலை நிர்ணயித்து விவசாயத்தை காக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். பின்னர் விவசாயிகளின் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தில் 2 முறை தொடக்க…
22 வயதான பிரிட்டிஷ் பெண், மோலி மோர்கன், துருக்கியில் விடுமுறையில் இருந்தபோது இரண்டு வலிப்புத்தாக்கங்களை அனுபவித்தார், ஆரம்பத்தில் ஹீட்ஸ்ட்ரோக்கால் ஏற்படுவதாக கருதப்படுகிறது. இருப்பினும், அவர் திரும்பிய பின்னர் மேலதிக சோதனைகளில் 4cm க்ளியோமா, அவரது மூளையின் இடது பக்கத்தில் புற்றுநோய் மூளைக் கட்டியை வெளிப்படுத்தியது. நரம்பு செல்களை ஆதரிக்கும் கிளைல் செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும்போது க்ளியோமாக்கள் உருவாகின்றன, பெரும்பாலும் மூளை அல்லது முதுகெலும்பில் கட்டிகளை உருவாக்குகின்றன. க்ளியோமாக்கள் பெரியவர்களில் மிகவும் பொதுவான மூளைக் கட்டிகள். எவரும் ஒரு க்ளியோமாவை உருவாக்க முடியும் என்றாலும், வயது, மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் வெளிப்பாடு போன்ற காரணிகள் ஆபத்தை அதிகரிக்கும். இந்த கட்டிகள் மெதுவாக வளரும் முதல் ஆக்கிரமிப்பு வரை இருக்கலாம் மற்றும் அவற்றின் இருப்பிடம் மற்றும் சிகிச்சையளிப்பது கடினம் காரணமாக உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். அறிகுறிகள் வேறுபடுகின்றன, ஆனால் பெரும்பாலும் தலைவலி, வலிப்புத்தாக்கங்கள், அறிவாற்றல் சிக்கல்கள் மற்றும் பார்வை அல்லது பேச்சில் ஏற்படும் மாற்றங்கள்…
புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விண்வெளிக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி பயணமான ககன்யானை நோக்கிய மற்றுமொரு முக்கிய நடவடிக்கை” என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், “வரலாற்று சிறப்புமிக்க ஆக்சியம்-4 பயணத்திலிருந்து குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா வெற்றிகரமாக திரும்பியுள்ளார். இது ஒவ்வொரு இந்தியருக்கும்…
பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்க புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்குநராக அறிமுகமான படம் ‘பிளாக்’. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஜீவா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜீவா உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக கோகுல் பினோய் பணிபுரியவுள்ளார். இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்க இருக்கிறார். ‘ஃபேலிமி’ இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள படத்தை முடித்துவிட்டார் ஜீவா. அடுத்ததாக கே.ஜி.பாலசுப்பிரமணி இயக்கவுள்ள படத்துக்குதான் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது.
கரூர்: “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் செய்தியாளர்களிடம் கூறியது: “வாங்கல் பகுதியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதை வைத்து சிலர் மட்டமான, கீழ்த்தரமான, கேவலமான அரசியல் செய்கின்றனர். அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்னுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிடுகின்றனர். அவர் இங்கு வருவதற்கு முன்பு அதிமுகவில் தான் இருந்தார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 நிமிடங்களில் மணல் அள்ளலாம் என நான் கூறியது, மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், உள்ளூர் மணல் தேவைக்காகவும் மட்டுமே. ஏதோ லாரிகளில் சென்று ஆற்றில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என கூறியது போல சித்தரிக்கின்றனர்”…
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் டெஸ்லாவின் முதல் விற்பனை ஷோரூமை திறந்து வைத்தார். அவர், “டெஸ்லா சரியான மாநிலத்துக்கும், சரியான நகரத்துக்கும் வந்துவிட்டது” என்று தெரிவித்தார். மும்பையில் முதல் டெஸ்லா ஷோரூமை திறந்துவைத்து பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “டெஸ்லாவை மும்பைக்கு வரவேற்கிறேன். டெஸ்லா இங்கு தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது. டெஸ்லா சரியான நகரத்துக்கும், சரியான மாநிலத்துக்கும் வந்துவிட்டது. டெஸ்லா இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் தொடங்கியுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்லா இங்கு உதிரிபாகங்கள் மற்றும் சேவை மையத்தையும் நிறுவ உள்ளது. மேலும், நான்கு பெரிய சார்ஜிங் நிலையங்களையும் அமைக்கவுள்ளனர். மின்சார வாகனங்கள் இயக்கத்தில் முன்னணியில் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவை டெஸ்லா தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவில் டெஸ்லா அதன் ஒய் (Y) மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்துகிறது. வரும் நாட்களில் டெஸ்லா, இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்க முடிவு…
ஃபால்சா, விஞ்ஞான ரீதியாக க்ரூவியா ஆசியாட்டிகா என்றும் அழைக்கப்படுகிறது, இது மத்திய மற்றும் தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய பெர்ரி போன்ற பழமாகும், இது வடக்கு சமவெளி மற்றும் மேற்கு இமயமலையில் பரவலாக உள்ளது. ஆயுர்வேதத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த பருவகால பழம் அதன் வளமான ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்திற்கு நவீன அங்கீகாரத்தைப் பெறுகிறது, குறிப்பாக வைட்டமின் சி, இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, வீக்கத்தைக் குறைப்பது மற்றும் நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. ஆவணப்படுத்தப்பட்ட நீரிழிவு எதிர்ப்பு, ஆண்டிமைக்ரோபையல் மற்றும் குளிரூட்டும் பண்புகளுடன், ஃபால்சா ஒரு ஊட்டச்சத்து மற்றும் சிகிச்சை அதிகார மையமாக உருவாகி வருகிறது. பப்மெட் போன்ற தளங்களில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி பினோல்கள், ஃபிளாவனாய்டுகள், சபோனின்கள் மற்றும் டானின்கள் போன்ற முக்கிய பயோஆக்டிவ் சேர்மங்கள் காரணமாக அதன் செயல்திறனை மேலும் எடுத்துக்காட்டுகிறது. இந்த சுருக்கத்தை ஃபால்சா சாப்பிடுவதன் சக்திவாய்ந்த சுகாதார நன்மைகள்ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் வைட்டமின் சிஃபால்சா பழத்தின்…
