Author: admin

டாக்டர் ச ura ரப் சேத்தி ஆரோக்கியமற்ற உணவுகள் காரணமாக இளம் பருவத்தினரில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (என்ஏஎஃப்எல்டி) ஆபத்தான உயர்வை எடுத்துக்காட்டுகிறார். பேஸ்ட்ரிகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை உணவுகளை உட்கொள்வது கல்லீரல் கொழுப்பாக அதிகப்படியான பிரக்டோஸ் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது, இது NAFLD ஐ ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாத NAFLD சிரோசிஸ் உள்ளிட்ட கடுமையான கல்லீரல் பிரச்சினைகளுக்கு முன்னேறலாம், இது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே பெருகிய முறையில் பொதுவானதாகி வருகிறது. மோசமான உணவு, உட்கார்ந்த பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறை காரணிகள் இந்த பிரச்சினையின் முக்கிய இயக்கிகள். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி, இப்போது குழந்தைகளிடையே NAFLD இன் நிகழ்வு எவ்வாறு அதிகரித்து…

Read More

லக்னோ: உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்து துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பசு காப்பகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இந்த வளாகங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து விலங்குகள், பறவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Read More

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் தகவல் அறி​யும் உரிமை சட்​டம் தொடர்பாக அனைத்​துத் துறை அதி​காரி​களுக்​கான விழிப்​புணர்வு பயிற்சி முகாம் ஊட்​டி​யில் உள்ள ஆட்சியர் அலு​வல​கத்​தில் நேற்று நடந்​தது. மாவட்ட ஆட்​சி​யர் லட்சுமி பவ்யா முன்​னிலை வகித்தார். மாநில தகவல் ஆணை​யர்​கள் பிரியகு​மார், இளம்​பரி​தி, நடேசன் தலைமை வகித்​தனர். முகாமில் தமிழ்​நாடு தகவல் அறி​யும் உரிமை சட்ட தகவல் ஆணை​யர் பிரியகு​மார் பேசி​ய​தாவது: தகவல் அறி​யும் உரிமை சட்​டம் குறித்து பொது​மக்​களிடையே அதிக அளவில் விழிப்​புணர்வு உள்​ளது. முன்பு குறை​வான அளவு மனுக்​கள் மட்​டுமே இச்​சட்​டத்​தின் கீழ் பெறப்​பட்​டன. தற்​போது பல்​வேறு துறை​களி​லிருந்து அதிக அளவில் மனுக்​கள் பெறப்​படு​கி்ன்​றன. மனு​தா​ரர்​களிடம் இருந்து வரும் மனுக்​கள் மீது உடனடி​யாக விசா​ரணை மேற்​கொள்ளுமாறு பொது தகவல் அலு​வலர்​களுக்கு அறிவுரை வழங்​கப்​பட்டு வரு​கிறது. குறிப்​பிட்ட காலத்​துக்​குள் மனுக்​கள் மீது பதில் அளிக்​காத பொது தகவல் அதி​காரி​கள் மீது நடடிக்கை மேற்​கொள்​ள​வும், சட்​டத்​தில் வழி​வகை உள்​ளது. எனவே மனு​தா​ரர்…

Read More

புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரராக இருப்பவர் பிஸ்டல் சலீம். டெல்லியின் ஜாப்ராபாத்தை சேர்ந்த இவரை சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் 26 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 800 தோட்டாக்களுடன் டெல்லி போலீஸார் பிடித்தனர். ஆனால் சிறையிலிருந்து ஜாமீன் பெற்றவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். பிறகு வெளிநாடுகளில் இருந்தவாறு இந்தியாவுக்கு ஆயுதங்களை கடத்தி, டெல்லி, உ.பி., மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் சமூகவிரோதக் கும்பல்களுக்கு விற்பனை செய்துள்ளார். இவர் நேபாள எல்லையில் மறைந்திருப்பதாக டெல்லி போலீஸாருக்கு சில நாட்களுக்கு முன் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடலில் இறங்கிய டெல்லி போலீஸார் சலீமை கைது செய்து, நேற்று டெல்லி அழைத்து வந்துள்ளனர். பிஸ்டல் சலீம் துருக்கியில் தயாரிக்கப்பட்ட பல முக்​கிய அம்​சங்​களை கொண்ட ஜிகானா பிஸ்​டல்​களை இந்​தி​யா​வுக்கு கடத்​திய முதல் நபர் ஆவார். உ.பி.​யின் அலிகருக்கு அரு​கில் உள்ள குர்​ஜாவை சேர்ந்த ரிஸ்​வான், குர்​பான் என்ற இரண்டு சகோ​தரர்​கள் சலீ​முக்கு…

Read More

திருநெல்வேலி: நெல்லை மனோன்​மணி​யம் சுந்​தரனார் பல்​கலை.​யில் நடை​பெற்ற பட்​டமளிப்பு விழா​வில், ஆளுநர் ஆர்​.என்​.ரவி 739 மாணவர்​களுக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். மனோன்​மணி​யம் சுந்​தர​னார் பல்​கலை.​யின் 32-வது பட்​டமளிப்பு விழா வ.உ.சி. கலை​யரங்​கில் நடை​பெற்​றது. பல்​கலைக்​கழகம் மற்​றும் அதன் 104 உறுப்​புக் கல்​லூரி​களில் படித்த 37,376 பேருக்கு பட்​டங்​கள் வழங்​கப்பட்​டன. இவர்​களில் 739 பேருக்கு ஆளுநர் ஆர்​.என். ரவி நேரடி​யாக பட்​டங்​களை வழங்​கி​னார். துணைவேந்​தர் ந.சந்​திரசேகர் வரவேற்​றார். இந்​திய புவி காந்​த​வியல் நிறுவன இயக்​குநர் அ.பி.டிம்ரி பட்​டமளிப்பு விழா உரை​யாற்​றி​னார். விழா​வில் பங்​கேற்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்த தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், விழா​வில் பங்​கேற்​க​வில்​லை. பல்​கலை.​யில் நடை​பெற்ற கடந்த 3 பட்​டமளிப்பு விழாக்​களி​லும் இணைவேந்​த​ரான உயர்​கல்​வித் துறை அமைச்​சர்​கள் பங்​கேற்​க​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது. துணைவேந்தரிடம் பட்டம் பெற்ற மாணவி ஜீன் ஜோசப். ஆளுநரை புறக்​கணித்த மாணவி: பட்​டமளிப்பு விழா​வில் முனை​வர் பட்​டம் பெற வந்​திருந்த நாகர்​கோ​விலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் ஆளுநரிடம்…

Read More

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 11 ஆவணங்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் கேட்பது வாக்காளருக்கு சாதகமான அம்சம்தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிப​தி​கள் சூரிய காந்த், ஜாய்​மாலா பாக்சி அமர்வு முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்​போது, “வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​யின்​போது இந்​திய குடி​யுரிமைக்கு ஆதா​ர​மாக ஆதாரை ஏற்க மறுக்​கும் தேர்​தல் ஆணை​யம், வேறு 11 ஆவணங்​களை கேட்​பது வாக்​காளர்​களுக்கு எதி​ரான நடவடிக்கை ஆகும்’’ என்​றார். அப்​போது குறுக்​கிட்ட நீதிபதி சூர்​ய​காந்த்,…

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில் அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உள்ளிட்ட போர் விமானங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதில் எப்-16 ரக விமானமும் அடங்கும். இந்​நிலை​யில், தொலைக்​காட்சி நிறு​வனம் சார்​பில், அமெரிக்க தகவல் சுதந்​திர சட்​டத்​தின் கீழ் (எப்​ஓஐஏ) அந்​நாட்டு வெளி​யுறவுத் துறை மற்​றும் பாது​காப்​புத் துறை​யிடம் சில கேள்வி​களை கேட்​டிருந்​தது. குறிப்​பாக, ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது எப்​-16 ரக விமானங்​கள் சேதமடைந்​தது தொடர்​பான விவரங்​கள் கேட்​கப்​பட்​டிருந்​தன. இந்​தக் கேள்வி​களுக்கு பதில் அளிக்க அமெரிக்கா மறுத்​து​விட்​டது. அத்​துடன் இதுபற்றி பாகிஸ்​தான் அரசிடம்​ கேட்​கு​மாறு…

Read More

மதுரை: பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கட்சி கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்தரவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ள​தால், தனி நீதிபதி உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதிமன்றம் உத்​தரவு எது​வும் பிறப்​பிக்​காமல் முடித்​து​வைத்​தது. இதையடுத்​து, பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது. மதுரை​யில் 2 இடங்​களில் அதி​முக கொடிக் கம்​பங்​கள் அமைக்க அனு​மதி கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த தனி நீதிப​தி, தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​ற​வும், கொடிக் கம்​பங்​கள் வைப்​ப​தாக இருந்​தால் அரசிடம் அனு​மதி பெற்று பட்டா இடங்​களில் வைக்​க​வும் உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை 2 நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது. இந்த உத்​தரவை அடுத்து தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற…

Read More

புதுடெல்லி: ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார். இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்​நிலை​யில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்​றிருந்​தார். அங்கு அதிபர் புதினை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இந்த சந்​திப்​புக்​குப் பிறகு அஜித் தோவல் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ரஷ்ய அதிபர் புதின் இந்​தி​யா​வுக்கு வர விருப்​பம் தெரி​வித்​துள்​ளார். இது மகிழ்ச்சி அளிப்​ப​தாக உள்​ளது’’ என்றார். இந்​நிலை​யில், வரும் 21-ம் தேதி மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் ரஷ்​யா​வுக்கு செல்ல திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அங்கு அந்​நாட்டு வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாவ்​ரோவை சந்​தித்​துப் பேச உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இருதரப்பு உறவை மேலும் பலப்​படுத்​து​வது குறித்து…

Read More

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார். அப்போது, ஐபி 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் திலகபாமாவை தோற்கடித்தார். தற்போது அந்த வித்தியாசத்தை வைத்து விஜய் கட்சி தம்பிகள் போஸ்டர் ஒட்டி ஐபி-க்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக-வினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வோ, இபிஎஸ் வருகை அடுத்த மாத இறுதியில்தான் என்பதால் எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இடையில் புகுந்து தவெக-வினர் தான் இப்போது தடாலடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஓர் அதிரடியாக, கடந்த தேர்தலில் ஆத்​தூர் தொகு​தி​யில் ஐபி பெற்ற வாக்​கு​வித்​தி​யாசத்​தை​விட இம்​முறை ஒரு வாக்கு கூடு​தல் வித்தியாசத்தில் ஆத்​தூர் தொகு​தி​யில் தவெக வாகை சூடும் என்​ப​தைச் சுட்​டிக்​காட்​டும் வித​மாக போஸ்​டர்​களை ஒட்​டி​னார்​கள். ‘ஆத்​தூர் தொகுதியில்…

Read More