திருநெல்வேலி: சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜக களமிறக்குகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறினார். நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடிகர் விஜய்யின் தாயார் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிக்கவே விஜய்யை பாஜககளமிறக்குகிறது. விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரிசோதனை குறித்து இதுவரை சரியான தகவல்கள் வெளியிடவில்லை. வருமான வரித்துறை அதிகாரியாக இருந்த அருண்ராஜுக்கு, தவெக கட்சியில் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் அப்போதைய அரசு வழக்குப்பதிவு செய்யவே தயங்கியது. ஆனால், அஜித்குமார் விவகாரத்தில் உடனுக்குடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.
Author: admin
காலை முன்னால் உள்ள நாளுக்கு மட்டுமல்ல, உங்கள் முழு வீட்டிலும் பாயும் ஆற்றலுக்காக காலை தொனியை அமைத்தது. குழந்தைகள் குழப்பம், குழப்பம் அல்லது ஆன்லைன் வகுப்புகளில் உள்நுழைவதற்கான அவசரத்தை எழுப்பும்போது அல்லது கதவை விட்டு வெளியேறும்போது, அவர்களின் மனநிலை அந்த வழியைப் பின்பற்றுகிறது. ஆனால் காலை அமைதியாகவும், கட்டமைக்கப்பட்டதாகவும், ஆதரவாகவும் இருக்கும்போது, ஏதோ மாறுகிறது. அவர்கள் நிலையானவர்கள், அதிக கவனம் செலுத்துகிறார்கள், நாளை எதிர்கொள்ள உந்துதலாக உணர்கிறார்கள். இதைச் செய்ய உங்கள் முழு வழக்கத்தையும் நீங்கள் மாற்றியமைக்கத் தேவையில்லை. ஒரு சில வேண்டுமென்றே பழக்கவழக்கங்கள் உங்கள் காலையை மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் குடும்ப இணைப்பிற்கான சக்திவாய்ந்த அடித்தளமாக மாற்றும். ஏழு காலை சடங்குகள் இங்கே மிகவும் நேர்மறையான சூழ்நிலையை உருவாக்குகின்றன, மேலும் உங்கள் பிள்ளை உந்துதலுடன் தங்கள் நாளைத் தொடங்க உதவுகின்றன, கரைப்பு அல்ல.
தேனி: மாதாந்திர பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவக்கிரக பிரதிஷ்டை வழிபாட்டுக்காக கடந்த 11-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 12-ம் தேதி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த 13-ம் தேதி நவக்கிரக கோயில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்று, அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், மாதாந்திர வழிபாட்டுக்காக இன்று (ஜூலை 16) சபரிமலையில் நடை திறக்கப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். நாளை அதிகாலையில் இருந்து தொடர் வழிபாடுகள் நடைபெற்று, 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். நிறைபுத்தரி பூஜைக்காக 29-ம் தேதி நடை திறக்கப்பட்டு ஒருநாள் வழிபாட்டுக்குப் பின்பு 30-ம் தேதி இரவு நடை சாத்தப்படும். தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால்…
பெரம்பலூர்: கண்ணில் பார்க்க முடியாத காற்றில்கூட ஊழல் செய்த கட்சி திமுக என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியது: இந்த 50 மாத கால திமுக ஆட்சியில் இந்தப் பகுதிக்கு இந்தத் தொகுதியின் அமைச்சர் ஏதாவது ஒரு பெரிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளாரா? தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 50 நாட்களாக குறைத்துவிட்டார்கள். கேட்டால் மத்திய அரசு நிதியைக் குறைத்துவிட்ட தாக கூறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் நீங்கள் மிகப்பெரிய ஊழல் செய்ததால் மத்திய அரசு நிதி கொடுக்க மறுத்தது. ஆனால் நாங்கள் நேரில் சென்று…
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் அதிநவீன ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பின்னர், சென்னையில் இருந்து தைலாபுரத்துக்கு கடந்த 12-ம் தேதிசென்ற தனியார் துப்பறியும் குழுவினர் 3 மணி நேரம் ஆய்வு செய்தனர். அக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் கூடுதல் எஸ்.பி. தினகரனிடம் பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில், “தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் சட்ட விரோதமாக அதிநவீன ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. நிறுவனர் ராமதாஸ் இருக்கையில் இல்லாதபோது அதைப் பொருத்தியுள்ளனர். எனவே, வீடு முழுவதும் சோதனை செய்து, மேலும் ஒட்டுகேட்பு கருவிகளை பொருத்தியுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும். இது தொடர்பாக வழக்கு பதிந்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.…
சென்னை: காமராஜரின் 123-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்த தினம் நேற்று தமிழக அரசின் சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜரின் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். காமராஜரின் 123-வது பிறந்த நாளையொட்டி, காமராஜர் மண்டபத்தில் அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி அரியலூரில் காமராஜரின்…
சென்னை: விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்ததனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த திமுக அரசு அதை முறையாக செய்யவில்லை. நடப்பாண்டில் ஒருவருக்கு கூட மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதற்கான காரணமும் திமுக அரசால் தெரிவிக்கப்படவில்லை. மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளில் 2003-ம் ஆண்டுக்கு முன்பு விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கு மட்டும் தான் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 22 ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை. தமிழக அரசு நினைத்திருந்தால், கடந்த நான்கரை…
வைட்டமின் டி குறைபாடு மற்றும் ஃபைப்ராய்டுகள்: தெரிந்து கொள்ள 5 முக்கியமான உண்மைகள்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடுத்த இரண்டரை மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர் ராஜஸ்தானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் என்ற கே.ஆர்.ஸ்ரீராம் கடந்த 2024 செப்.27 அன்று பொறுப்பேற்றார். வரும் செப்.27-ம் தேதியுடன் பணிஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யவும், அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஸ்ரீவத்சவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான கே.ஆர்.ஸ்ரீராமை, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல்…
சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் மதுரையில் செப்.4-ம் தேதி மாநில அளவிலான மாநாடு நடைபெறும். இதில் பங்கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “மதுரை மாநாட்டில் தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவை அறிவிப்போம். கட்சி நிர்வாகிகள் யாரும் எதிரணியினரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்” என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரையில் செப்.4-ம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு நடத்தப்படும். அதில் பல முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். அது வெற்றி மாநாடாகவும்,…
