பாட்னா: பிஹாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் விளைவாக 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்க உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: பிஹார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 6.6 கோடி வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். இது, மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 88.18 சதவீதம் ஆகும். ஜூலை 25 வரை வாக்காளர்கள் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்க காலஅவகாசம் உள்ளது. அதன் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 1.59 சதவீதம் அதாவது 12.5 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். இருப்பினும், அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், 2.2 சதவீதம் அதாவது 17.5 லட்சம் வாக்காளர்கள் பிஹாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டனர். எனவே, அவர்கள் இனி பிஹார் மாநில தேர்தல்களில் வாக்களிக்க தகுதியற்றவர்களாகி விடுகின்றனர். மேலும், 0.73…
Author: admin
சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிக்கான போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளாத சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் எஸ்.கே.சாமி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். புகார் மனுவை விசாரித்த ஆணையம், தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வரும் 6 வாரங்களுக்குள் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் மனித உரிமை ஆணைய சட்டத்தின்…
ஐவிஎஃப் மூலம் குழந்தைகளைப் பெறும்போது (விட்ரோ கருத்தரித்தல்), இன்னும் நிறைய ஆர்வமும், அக்கறையும் இருக்கிறது, நேர்மையாக இருக்கட்டும். ஐவிஎஃப் மில்லியன் கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் பெற்றோர்களாக மாற வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற உதவியிருந்தாலும், சிலர் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள்: ஐவிஎஃப் குழந்தைகள் இயற்கையாகவே கருத்தரிக்கப்பட்டதைப் போல ஆரோக்கியமானவையா? அவை வளரும்போது அவர்கள் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்கிறார்களா? இது ஒரு சரியான கேள்வி, குறிப்பாக ஐவிஎஃப் மனித இனப்பெருக்கத்தின் நீண்ட வரலாற்றில் ஒப்பீட்டளவில் புதிய முன்னேற்றமாகும், மேலும் அறிவியல் இன்னும் நீண்டகால தரவுகளை சேகரித்து வருகிறது.குறைந்த பிறப்பு எடை அல்லது முன்கூட்டிய பிரசவம் போன்ற சில சிக்கல்களுக்கு சற்று அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என்று சிலர் பரிந்துரைக்கின்றனர், சிலர் ஐவிஎஃப் குழந்தைகள் எந்தவொரு விளையாட்டு மைதானம் ராஸ்கலையும் போலவே ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் அதிக ஆற்றல் கொண்டவர்களாக வளர்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். உண்மை? இது ஆம் அல்லது இல்லை போல எளிதல்ல.…
AI கருவிகள் மனித எழுத்தாளர்களை விட, முக்கியமான, முக்கியமான, சாத்தியமான, குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான சொற்களைப் பயன்படுத்த முனைகின்றன விஞ்ஞானிகள் தங்களைத் தாங்களே செய்யாவிட்டாலும் கூட நடப்பதை அறிவார்கள். அவர்களது சகாக்களில் சிலர் தங்கள் ஆவணங்களின் அனைத்தையும் அல்லது ஒரு பகுதியை எழுத சாட்ஜ்ட் போன்ற சாட்போட்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதம் ஜர்னல் சயின்ஸ் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் டிமிட்ரி கோபக் மற்றும் அவரது சகாக்கள் தங்கள் ஆவணங்களின் சுருக்கங்களை எழுத AI சாட்போட்களை எவ்வளவு அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்ததாகக் கூறினர். AI கருவிகள், “டெல்வ்ஸ்,” “முக்கியமான,” “சாத்தியமான,” “குறிப்பிடத்தக்க” மற்றும் “முக்கியமான” போன்ற சில சொற்களைப் பயன்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். குழு 2010 மற்றும் 2024 க்கு இடையில் வெளியிடப்பட்ட 15 மில்லியனுக்கும் அதிகமான பயோமெடிக்கல் சுருக்கங்களின் சுருக்கங்களில் சொல் பயன்பாட்டை பகுப்பாய்வு செய்தது, இது சுருக்கங்களில் சில…
புதுடெல்லி: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டம் ககன்யான். இதற்காக இஸ்ரோ விமானப்படை பைலட்கள் 4 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சி அளித்தது. இவர்களில் ஒருவர் குரூப் கேப்டன் ஷுபன்ஷூ சுக்லா. அமெரிக்காவின் ஆக்ஸியாம் என்ற தனியார் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு 4 வீரர்களை ஆய்வுப் பணிக்கு அனுப்பும் நடவடிக்கையை நாசா மேற்கொண்டது. இந்த குழுவில் இந்தியா சார்பில் செல்ல ஷுபன்ஷு சுக்லா தேர்வானார். இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பால்கன் ராக்கெட்டில் கடந்த மாதம் 26-ம் தேதி சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தனர். இந்த டிராகன் விண்கலத்துக்கு ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்டது. அங்கு இவர்கள் பல ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். 2 வாரகால ஆய்வுப் பணியை முடித்துவிட்டு இவர்கள் டிராகன் விண்கலம் மூலம் நேற்று மாலை 3 மணியளவில் பூமிக்கு திரும்பினர். விண்கலம் பாராசூட் உதவியுடன் பசிபிக் கடலில் வெற்றிகரமாக…
சென்னை: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி ஏரியின் பரப்பளவு ஆக்கிரமிப்பால் குறைந்ததாக கூறி, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் குமரதாசன், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘அரசால் கையகப்படுத்தப்பட்ட கிண்டி ரேஸ் கிளப்பின் 118 ஏக்கரில் ஏரியை உருவாக்கினால் மழை பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்கலாம். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது. இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, சத்யகோபால் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ரேஸ் கிளப்பிடம்…
புதுடெல்லி: ஒலியைவிட 8 மடங்கு வேகத்தில் சென்று 1,500 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) தயாரித்து சோதனை செய்து வருகிறது. பல கட்ட வெற்றிகர பரிசோதனைக்குப்பின் இந்த ஆயுதங்கள் படையில் சேர்க்கப்படும். இந்நிலையில் இடி-எல்டிஎச்சிஎம் (Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile (ET-LDHCM) என்ற ஹைபர்சோனிக் ஏவுகணையை டிஆர்டிஓ தயாரித்தது. இது ஒலியை விட 8 மடங்கு வேகத்தில் (மேக் 8) அதாவது மணிக்கு 11,000 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. தற்போது இந்த வகை ஏவுகணை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவிடம் மட்டுமே உள்ளன. ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதால், அந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
துருவ் சர்ஜா நடித்துள்ள ‘கேடி த டெவில்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் இந்தி நடிகர் சஞ்சய் தத். அப்போது பேசிய அவர், ‘லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார், இதனால் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சீரியஸாக சொன்னதாகச் செய்திகள் வெளியானது. சஞ்சய் தத் பேசியது குறித்து லோகேஷ்கனகராஜிடம் கேட்டபோது, “அங்கே பேசிய பிறகு அவர் எனக்கு போன் செய்தார். ‘நான் வேடிக்கையாகத்தான் சொன்னேன், ஊடகங்களில்பெரிது படுத்திவிட்டார்கள்’ என்றார். நான், ‘அது பிரச்சினை இல்லை’ என்றேன். நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குநரோ அல்ல. என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், அதன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். சஞ்சய் தத்துடன் கண்டிப்பாக இன்னொரு படம் செய்வேன்” என்று தெரிவித்தார்.
சென்னை: நகை திருட்டு, தீண்டாமை வன்கொடுமை மற்றும் ரியல் எஸ்டேட் வழக்குகளில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஜரினா பேகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “92 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018 செப்.4-ல் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தும் கடந்த 7 ஆண்டுகளாக நகைகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2018 முதல் தற்போது வரை சூளைமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளர்களாக பணியாற்றிய அனைவரும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதையடுத்து நீதிபதி, “இதுபோன்ற குற்ற வழக்குகளில் எப்படி விரைவாக…
புதுடெல்லி: இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள், உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு எச்சரிக்கை பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய செய்தித்துறை அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அமைப்பு(பிஐபி) தனது எக்ஸ் தளத்தில் நேற்று கூறியுள்ளதாவது: சமோசா, ஜிலேபி, லட்டு போன்ற உணவுகளுக்கு எச்சரிக்கை வாசகங்கள் வைக்குமாறு மத்திய…
