Author: admin

பாட்னா: பிஹாரில் நடை​பெற்று வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் (எஸ்​ஐஆர்) நடவடிக்​கை​யின் விளை​வாக 35 லட்சத்துக்​கும் மேற்​பட்​ட​வர்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து தேர்​தல் ஆணை​யம் நீக்க உள்​ளது. இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ள​தாவது: பிஹார் மாநிலத்​தில் எஸ்​ஐஆர் பணி​கள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன. இது​வரை 6.6 கோடி வாக்​காளர்​கள் தங்​களது கணக்​கெடுப்பு படிவங்​களை சமர்ப்​பித்​துள்​ளனர். இது, மாநிலத்​தில் உள்ள மொத்த வாக்​காளர் எண்​ணிக்​கை​யில் 88.18 சதவீதம் ஆகும். ஜூலை 25 வரை வாக்​காளர்​கள் தங்​கள் படிவங்​களை சமர்ப்​பிக்க காலஅவ​காசம் உள்​ளது. அதன் பிறகு வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். 1.59 சதவீதம் அதாவது 12.5 லட்​சம் வாக்​காளர்​கள் இறந்​து​விட்​டனர். இருப்​பினும், அவர்​களது பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளது. மேலும், 2.2 சதவீதம் அதாவது 17.5 லட்​சம் வாக்​காளர்​கள் பிஹாரில் இருந்து நிரந்​தர​மாக வெளி​யேறி​விட்​டனர். எனவே, அவர்​கள் இனி பிஹார் மாநில தேர்​தல்​களில் வாக்​களிக்க தகு​தி​யற்​றவர்​களாகி விடு​கின்​றனர். மேலும், 0.73…

Read More

சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்​சி​யில் 5 பேர் உயிரிழந்த விவ​காரம் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​ய தவறி​னால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் சென்னை மெரி​னா​வில் வான் சாகச நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், 5 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தமிழகம் முழு​வதும் சோகத்தை ஏற்​படுத்​தி​யது. நிகழ்ச்​சிக்​கான போ​திய பாது​காப்பு முன்​னெச்​சரிக்கை ஏற்​பாடு​களை மேற்கொள்ளாத சென்னை காவல் ஆணை​யர் மீது நடவடிக்கை எடுக்​க கோரி வழக்​கறிஞர் எஸ்​.கே.​சாமி, தேசிய மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகாரளித்​திருந்​தார். புகார் மனுவை விசா​ரித்த ஆணை​யம், தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டிருந்​தது. இது​வரை அறிக்கை தாக்​கல் செய்​யாத நிலை​யில் நேற்று வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, “வரும் 6 வாரங்​களுக்​குள் தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இல்​லை​யென்​றால் மனித உரிமை ஆணைய சட்​டத்​தின்…

Read More

ஐவிஎஃப் மூலம் குழந்தைகளைப் பெறும்போது (விட்ரோ கருத்தரித்தல்), இன்னும் நிறைய ஆர்வமும், அக்கறையும் இருக்கிறது, நேர்மையாக இருக்கட்டும். ஐவிஎஃப் மில்லியன் கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் பெற்றோர்களாக மாற வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற உதவியிருந்தாலும், சிலர் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள்: ஐவிஎஃப் குழந்தைகள் இயற்கையாகவே கருத்தரிக்கப்பட்டதைப் போல ஆரோக்கியமானவையா? அவை வளரும்போது அவர்கள் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்கிறார்களா? இது ஒரு சரியான கேள்வி, குறிப்பாக ஐவிஎஃப் மனித இனப்பெருக்கத்தின் நீண்ட வரலாற்றில் ஒப்பீட்டளவில் புதிய முன்னேற்றமாகும், மேலும் அறிவியல் இன்னும் நீண்டகால தரவுகளை சேகரித்து வருகிறது.குறைந்த பிறப்பு எடை அல்லது முன்கூட்டிய பிரசவம் போன்ற சில சிக்கல்களுக்கு சற்று அதிக வாய்ப்புகள் இருக்கலாம் என்று சிலர் பரிந்துரைக்கின்றனர், சிலர் ஐவிஎஃப் குழந்தைகள் எந்தவொரு விளையாட்டு மைதானம் ராஸ்கலையும் போலவே ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் அதிக ஆற்றல் கொண்டவர்களாக வளர்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். உண்மை? இது ஆம் அல்லது இல்லை போல எளிதல்ல.…

Read More

AI கருவிகள் மனித எழுத்தாளர்களை விட, முக்கியமான, முக்கியமான, சாத்தியமான, குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான சொற்களைப் பயன்படுத்த முனைகின்றன விஞ்ஞானிகள் தங்களைத் தாங்களே செய்யாவிட்டாலும் கூட நடப்பதை அறிவார்கள். அவர்களது சகாக்களில் சிலர் தங்கள் ஆவணங்களின் அனைத்தையும் அல்லது ஒரு பகுதியை எழுத சாட்ஜ்ட் போன்ற சாட்போட்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதம் ஜர்னல் சயின்ஸ் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் டிமிட்ரி கோபக் மற்றும் அவரது சகாக்கள் தங்கள் ஆவணங்களின் சுருக்கங்களை எழுத AI சாட்போட்களை எவ்வளவு அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்ததாகக் கூறினர். AI கருவிகள், “டெல்வ்ஸ்,” “முக்கியமான,” “சாத்தியமான,” “குறிப்பிடத்தக்க” மற்றும் “முக்கியமான” போன்ற சில சொற்களைப் பயன்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள். குழு 2010 மற்றும் 2024 க்கு இடையில் வெளியிடப்பட்ட 15 மில்லியனுக்கும் அதிகமான பயோமெடிக்கல் சுருக்கங்களின் சுருக்கங்களில் சொல் பயன்பாட்டை பகுப்பாய்வு செய்தது, இது சுருக்கங்களில் சில…

Read More

புதுடெல்லி: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டம் ககன்யான். இதற்காக இஸ்ரோ விமானப்படை பைலட்கள் 4 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் பயிற்சி அளித்தது. இவர்களில் ஒருவர் குரூப் கேப்டன் ஷுபன்ஷூ சுக்லா. அமெரிக்காவின் ஆக்ஸியாம் என்ற தனியார் நிறுவனம் மூலம் விண்வெளிக்கு 4 வீரர்களை ஆய்வுப் பணிக்கு அனுப்பும் நடவடிக்கையை நாசா மேற்கொண்டது. இந்த குழுவில் இந்தியா சார்பில் செல்ல ஷுபன்ஷு சுக்லா தேர்வானார். இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பால்கன் ராக்கெட்டில் கடந்த மாதம் 26-ம் தேதி சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தனர். இந்த டிராகன் விண்கலத்துக்கு ‘கிரேஸ்’ என பெயரிடப்பட்டது. அங்கு இவர்கள் பல ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். 2 வாரகால ஆய்வுப் பணியை முடித்துவிட்டு இவர்கள் டிராகன் விண்கலம் மூலம் நேற்று மாலை 3 மணியளவில் பூமிக்கு திரும்பினர். விண்கலம் பாராசூட் உதவியுடன் பசிபிக் கடலில் வெற்றிகரமாக…

Read More

சென்னை: தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்​யும் வரை கிண்டி ரேஸ் கிளப்​பிட​மிருந்து கையகப்​படுத்​தப்​பட்ட நிலத்​தில் சுற்​றுச்​சூழல் பூங்கா அமைத்​தல் உள்​ளிட்ட எந்த பணி​களை​யும் மேற்​கொள்​ளக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்​பா​யம் உத்தரவிட்டுள்​ளது. வேளச்​சேரி ஏரி​யின் பரப்​பளவு ஆக்​கிரமிப்​பால் குறைந்​த​தாக கூறி, வேளச்​சேரி ஏரி பாது​காப்பு இயக்க துணைத் தலை​வர் குமர​தாசன், சென்​னை​யில் உள்ள தென்​மண்டல தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனுவை விசா​ரித்த தீர்ப்​பா​யம், ‘அர​சால் கையகப்​படுத்​தப்​பட்ட கிண்டி ரேஸ் கிளப்​பின் 118 ஏக்​கரில் ஏரியை உரு​வாக்​கி​னால் மழை பாதிப்​பில் இருந்து வேளச்​சேரியை பாது​காக்​கலாம். இது தொடர்​பாக தமிழக அரசின் தலை​மைச் செய​லா​ளர் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்’ என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​தது. இந்​நிலை​யில், இந்த மனு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தீர்ப்​பாய உறுப்​பினர்​களான நீதிபதி புஷ்பா சத்​ய​நா​ராயணா, சத்​யகோ​பால் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ரேஸ் கிளப்​பிடம்…

Read More

புதுடெல்லி: ஒலியை​விட 8 மடங்கு வேகத்​தில் சென்று 1,500 கி.மீ தூர​முள்ள இலக்கை தாக்​கும் புதிய ஹைபர்சோனிக் ஏவு​கணையை இந்​தியா நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்​தது. முப்​படைகளுக்கு தேவை​யான ஆயுதங்​களை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம் (டிஆர்​டிஓ) தயாரித்து சோதனை செய்து வரு​கிறது. பல கட்ட வெற்​றிகர பரிசோதனைக்​குப்​பின் இந்த ஆயுதங்​கள் படை​யில் சேர்க்​கப்​படும். இந்​நிலை​யில் இடி-எல்​டிஎச்​சிஎம் (Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile (ET-LDHCM) என்ற ஹைபர்​சோனிக் ஏவு​கணையை டிஆர்​டிஓ தயாரித்​தது. இது ஒலியை விட 8 மடங்கு வேகத்​தில் (மேக் 8) அதாவது மணிக்கு 11,000 கி.மீ வேகத்​தில் செல்​லும். இந்த ஏவு​கணையை இந்​தியா நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்​தது. தற்​போது இந்த வகை ஏவு​கணை ரஷ்​யா, அமெரிக்கா மற்​றும் சீனா​விடம் மட்​டுமே உள்​ளன. ஹைபர்​சோனிக் ஏவு​கணையை இந்​தியா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ள​தால், அந்த நாடு​களின் வரிசை​யில் இந்​தி​யா​வும் இணைந்​துள்​ளது.

Read More

துருவ் சர்ஜா நடித்துள்ள ‘கேடி த டெவில்’ படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் இந்தி நடிகர் சஞ்சய் தத். அப்போது பேசிய அவர், ‘லியோ படத்தில் சிறிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார், இதனால் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். ஆனால், அவர் சீரியஸாக சொன்னதாகச் செய்திகள் வெளியானது. சஞ்சய் தத் பேசியது குறித்து லோகேஷ்கனகராஜிடம் கேட்டபோது, “அங்கே பேசிய பிறகு அவர் எனக்கு போன் செய்தார். ‘நான் வேடிக்கையாகத்தான் சொன்னேன், ஊடகங்களில்பெரிது படுத்திவிட்டார்கள்’ என்றார். நான், ‘அது பிரச்சினை இல்லை’ என்றேன். நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குநரோ அல்ல. என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், அதன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். சஞ்சய் தத்துடன் கண்டிப்பாக இன்னொரு படம் செய்வேன்” என்று தெரிவித்தார்.

Read More

சென்னை: நகை திருட்​டு, தீண்​டாமை வன்​கொடுமை மற்​றும் ரியல் எஸ்​டேட் வழக்​கு​களில் உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்​காத போலீஸ் அதி​காரி​களை இடைநீக்​கம் செய்​ய​வும், துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்​க​வும் தமிழக டிஜிபிக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை சூளைமேடு பகு​தி​யைச் சேர்ந்த ஜரினா பேகம் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், “92 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக கடந்த 2018 செப்.4-ல் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்​பாக சூளைமேடு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தும் கடந்த 7 ஆண்​டு​களாக நகைகளை மீட்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. சிபிசிஐடி போலீ​ஸாரின் விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்​முரு​கன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது கடந்த 2018 முதல் தற்​போது வரை சூளைமேடு காவல் நிலை​யத்​தில் ஆய்​வாளர்​களாக பணி​யாற்​றிய அனை​வரும் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகினர். அதையடுத்து நீதிப​தி, “இது​போன்ற குற்ற வழக்​கு​களில் எப்​படி விரை​வாக…

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வில் உடல் பரு​மன் கொண்​ட​வர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. 2050-ம் ஆண்​டுக்​குள் 44.9 கோடிக்​கும் அதி​க​மான இந்​தி​யர்​கள் அதிக எடை அல்​லது உடல் பரு​ம​னாக இருப்​பார்​கள் என்​றும் கணிக்​கப்​பட்​டுள்​ளது. ஏற்​க​னவே, நகர்ப்​புறங்​களில் வசிப்​பவர்​களில் 5-ல் ஒரு​வர் உடல் பரு​ம​னாக இருப்​ப​தாக ஆய்​வில் கண்​டறியப்​பட்டு உள்​ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்​கும் மோச​மான உணவு வகைகள், உடல் செயல்​பாடு இல்​லாமை ஆகிய​வற்​றால் குழந்​தைகளுக்​கும் உடல் பரு​மன் அதி​கரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் நாக்​பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்​திய அரசு மருத்​து​வ​மனை​களி​லும், உணவுப்​பொருட்​களில் இருக்​கும் எண்ணெய் மற்​றும் சர்க்​கரை அளவு​களை பட்​டியலிட்டு எச்​சரிக்கை பலகைகள் வைக்க மத்​திய சுகா​தார அமைச்​சகம் உத்​தர​விட்​டுள்​ள​தாக செய்​தி​கள் வெளி​யா​யின. ஆனால் இதற்கு மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சகம் மறுப்பு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய செய்​தித்​துறை அமைச்​சகத்​தின் பத்​திரிகை தகவல் அமைப்​பு(பிஐபி) தனது எக்ஸ் தளத்​தில் நேற்று கூறியுள்​ள​தாவது: சமோ​சா, ஜிலேபி, லட்டு போன்ற உணவு​களுக்கு எச்​சரிக்கை வாசகங்​கள் வைக்​கு​மாறு மத்​திய…

Read More