பெங்களூரு: “இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும்.” என்று கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பத்திரமாக மீட்ட கர்நாடக போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள ராமதீர்த்தா மலையில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் கடந்த 9-ம் தேதி…
Author: admin
காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை வெளி விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடங்கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்கள் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. 19 பேரின் நிலங்கள் பரந்தூர் விமான நிலையத்துக்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையத்துக்கான பணிகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விமான நிலையத்தால் பாதிக்கப்படும் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஏகானாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராம மக்கள் அதிகளவில் பங்கேற்றனர். மற்ற கிராமங்களில் இருந்து குறைந்த அளவு பொதுமக்களே போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து பலர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டதில் தமிழக வெற்றிக்…
பாலியூரியா என்றும் அழைக்கப்படும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறியாகும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, சிறுநீரகங்கள் சிறுநீர் மூலம் அதிகப்படியான சர்க்கரையை அகற்ற முயற்சிக்கின்றன, இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். இது மக்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும், குறிப்பாக இரவில். நிர்வகிக்கப்படாமல் இருந்தால், உயர் இரத்த சர்க்கரை அளவு நீரிழப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பாலியூரியா நீரிழிவு நோயின் முக்கிய குறிகாட்டியாக இருக்கலாம், குறிப்பாக அதன் ஆரம்ப கட்டங்களில். அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் புரிந்துகொள்வது தனிநபர்கள் மருத்துவ கவனிப்பைப் பெறவும், அவர்களின் நிலையை திறம்பட நிர்வகிக்கவும் உதவும். நீரிழிவு ஏன் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது?இரத்த சர்க்கரை அளவு உயர்த்தப்படும்போது, சிறுநீரகங்கள் பின்வரும் வழிகளில் பதிலளிக்கின்றன:ஆஸ்மோடிக் டையூரிசிஸ்: குளுக்கோஸ் கூடுதல் தண்ணீரை சிறுநீரில் இழுக்கிறது. இந்த செயல்முறை ஆஸ்மோடிக் டையூரிசிஸ் என்று அழைக்கப்படுகிறது, அங்கு சிறுநீரில் சர்க்கரை…
சிறுகோள் 2022 YS5 உலகெங்கிலும் வானியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஏஜென்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஜூலை 17 அன்று பூமிக்கு நெருங்கிய அணுகுமுறையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள ஒரு கட்டிட அளவிலான சிறுகோள் ஆகும். சிறுகோள் பூமியைக் கடந்து பாதுகாப்பான தூரத்தில் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த நிகழ்வு கிரக பாதுகாப்பு அமைப்புகளின் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது நடந்து கொண்டிருக்கிறது சிறுகோள் கண்காணிப்புமற்றும் விண்வெளியில் உலகளாவிய ஒத்துழைப்பு. நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இருவரும் 2022 YS5 எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர், ஆனால் இந்த நிகழ்வை தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் ஆயத்தத்தின் தேவையை சரியான நேரத்தில் நினைவூட்டுவதாக கருதுகின்றனர்.நாசாவின் சிறுகோள் 2022 ys5 ஜூலை 17 அன்று ஃப்ளிபிபிக்கு: அளவு மற்றும் தூரம்சுமார் 120 அடி (36.5 மீட்டர்) விட்டம் அளவிடும் 2022 ys5 சிறுகோள், சுமார் 4.15 மில்லியன் கிலோமீட்டர்…
புதுடெல்லி: லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட் அமைப்பைச் சேர்ந்த அர்சலான் பெரோஸ் அஹெங்கர் சமூக வலைதளங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அஹெங்கர் மீது யுஏபிஏ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் செப்டம்பர் 2024-ல் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஹெங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பிரமணியன் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘‘இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கங்களில் சேர்ப்பதற்கு சமூக ஊடகங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதும் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) வரம்புக்குள்தான் வருகிறது. எனவே, அஹெங்கரின் வாதம் நிராகரிக்கப்படுகிறது’’ என்றனர்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா, திமுக செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் தலைமையில் சென்னை கே.கே.நகரில் நடைபெற்றது. இதில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பங்கேற்று, பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் மட்டுமே அதிகம் படித்தவர்கள் கேள்வி கேட்கின்றனர். அவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் முயற்சி நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இந்தி திணிப்பு அதன்பின் நீட்தேர்வு. இந்தி படிக்காவிட்டால் கல்விக்கான நிதியை தரமாட்டோம் என்று மத்திய பாஜக அரசு கூறுகிறது. அதை தமிழக அரசு தரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதால், அவர்கள் கனவு தோல்வியடைந்துள்ளது. இப்போது கோயில்கள் மூலம் படிக்கும் மாணவர்களின் கல்வியை தடுக்க பார்க்கின்றனர். திருப்பதி தேவஸ்தானம், குருவாயூரப்பன் கோயில் சார்பில் பள்ளி, கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. முன்னாள் முதல்வர்கள் பக்தவத்சலம், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோயில் நிதியில் கல்லூரி கட்டவில்லையா?…
உலகளவில் கிட்டத்தட்ட 1.28 பில்லியன் பெரியவர்களை பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம், பெரும்பாலும் கவனிக்கப்படாமல், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயங்களை ஏற்படுத்துகிறது. துல்லியமான அளவீட்டு மிக முக்கியமானது, ஆனால் பொருத்தமற்ற சுற்றுப்பட்டைகளைப் பயன்படுத்துவது, வாசிப்புகளின் போது பேசுவது அல்லது முழு சிறுநீர்ப்பை வைத்திருப்பது போன்ற பிழைகள் முடிவுகளைத் திசைதிருப்பலாம். தவறான கை பொருத்துதல், குறுக்கு கால்கள், ஆதரிக்கப்படாத முதுகு மற்றும் கால்கள் மற்றும் முறையற்ற நேரமும் தவறான வாசிப்புகளுக்கு பங்களிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) 2023 தரவுகளின்படி, உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் கிட்டத்தட்ட 1.28 பில்லியன் பெரியவர்களை பாதிக்கிறது. இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அவர்களில் 46% பேர் தங்களுக்கு இந்த நிலை இருப்பதை அறிந்திருக்கவில்லை. பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது, எந்தவொரு புலப்படும் அறிகுறிகளும் இல்லாததால், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு…
விஜயவாடா: ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்தியது. அப்போது, ஜெகன் கட்சியை சேர்ந்த சிலரின் மது தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலமாக தரம் குறைந்த மதுபானங்களை மார்க்கெட்டில் விற்றது. இதனால் பலரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜெகன் ஆட்சியில் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை மது விற்பனையால் நஷ்டம் ஏற்பட்டது சிறப்பு விசாரணை குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்பேரில் இதுவரை பலரை இக்குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், ஜெகன் கட்சியை சேர்ந்த ராஜம்பேட்டை நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டியை விசாரணை குழு 4 வது குற்றயாக சேர்த்துள்ளது. இந்த நிலையில் மிதுன் ரெட்டி, தனக்கு இந்த வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனக்கு இவ்வழக்கில் முன் ஜாமீன் வழங்கிட வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் மூலம் ஆந்திர உயர்நீதி மன்றத்தில்…
சென்னை: மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களில் திருக்குறளை தவறாக அச்சிடப்பட்டதால் அவற்றை திரும்பப்பெற்று, திருத்தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்துவர் தின விழா நடந்தது. சிறப்பாக சேவையாற்றிய 50 மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேடயங்களை வழங்கி கவுரவித்தார். அந்த கேடயங்களில் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. கேடயத்தில் இடம் பெற்றிருப்பது திருக்குறளே இல்லை என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களை திரும்ப பெற்று, திருக்குறளை திருத்தம் செய்து சில தினங்களில் மீண்டும் வழங்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கேடயம் பெற்ற மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: கோவையை சேர்ந்த மருத்துவர்தான் விழாவை ஏற்பாடு செய்தார். மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கேடயத்தில் திருக்குறளில் மருத்துவம் தொடர்பான அதிகாரத்தில் இருந்து குறள்களை அச்சிடுமாறு ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.…
சிறுநீரக செயலிழப்பிலிருந்து உங்கள் இரத்த ஓட்டத்தில் கழிவுகளை உருவாக்குவது உங்கள் சுவை உணர்வை சீர்குலைக்கிறது. இந்த நிலையை அனுபவிக்கும் மக்களுக்கு உணவு பொதுவாக உப்பு, கசப்பான அல்லது உலோகத்தை சுவைக்கிறது. உங்கள் பசி குறைகிறது, ஏனெனில் இந்த மாற்றத்தின் காரணமாக உணவு தவிர்ப்பது அதிக வாய்ப்புள்ளது. எடை இழப்பு காரணமாக உங்கள் பசியின்மை, நேரம் முழுவதும் முற்போக்கான பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் பசியைக் குறைப்பார்கள், ஏனெனில் நச்சுகள் அவற்றின் செரிமான அமைப்பை சீர்குலைத்து மூளை சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இந்த அடையாளத்தை முன்கூட்டியே கண்டறிவது முக்கியமானது, ஏனென்றால் சரியான ஊட்டச்சத்து உங்கள் உடல் நோயிலிருந்து விரைவில் மீட்க உதவுகிறது.குறிப்புகள்HealthDirect.gov.au: சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்றும் காரணங்கள்Lifeoptions.org: சிறுநீரக நோயின் 15 அறிகுறிகள்NHS.UK: நாள்பட்ட சிறுநீரக நோய் அறிகுறிகள்தேசிய சிறுநீரக அறக்கட்டளை (widyney.org): சிறுநீரக நோயின் அறிகுறிகள்கிளீவ்லேண்ட் கிளினிக்: சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்றும் நிலைகள்ஸ்டான்போர்ட் ஹெல்த் கேர் – சிறுநீரக செயலிழப்பு…
