புதுடெல்லி: ஒடிசாவில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் பேசிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் முழுமையான நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் காங்கிரஸ் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும் நானும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற உறுதியை அளித்தேன். நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, அது முழு சமூகத்துக்கும் ஒரு காயம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு முழுமையான நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார். என்ன நடந்தது?: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி…
Author: admin
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் இன்று ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம்…
உங்கள் சொந்த நாட்டிற்குள் அந்த அழகான நிலப்பரப்புகள் அனைத்தும் இருக்கும்போது சுவிட்சர்லாந்திற்கு ஏன் பயணிக்க வேண்டும்? உங்கள் சொந்த நாட்டில் பல்வேறு இடங்கள் உள்ளன, அவை உங்கள் பட்ஜெட்டில் அழகிய அழகு, அமைதியான நீர் மற்றும் பனிப்பொழிவு மலைகள் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குகின்றன, அவை விசா பயன்பாடுகள் மற்றும் ஆவணங்களைப் பற்றி எந்த மன அழுத்தமும் இல்லாமல் பயணிக்க முடியும்.இந்தியா வழியாக பயணிப்போம், சுவிட்சர்லாந்தை விட குறைவாக இல்லாத அதிர்ச்சியூட்டும் சில இந்திய இடங்களைப் பார்ப்போம் -(படம்: கேன்வா)
புதுடெல்லி: “இந்தி ஏன் கற்க வேண்டும் என்று இப்போது பேசுகிறோம். ஆனால், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இந்தி மட்டுமல்ல, 17 மொழிகளைக் கற்று புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்தார்” என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் பி.வி. நரசிம்ம ராவின் வாழ்க்கை மற்றும் மரபு எனும் தலைப்பில் சந்திரபாபு நாயுடு நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர், “பி.வி. நரசிம்ம ராவ் ஒரு அறிஞர். 17 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். இப்போது நாம் இந்தி ஏன் கற்க வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால், நரசிம்ம ராவ் இந்தி மட்டுமல்ல, பிற மொழிகளையும் கற்றுக்கொண்டதால், அவர் ஒரு சிறந்த மனிதராக மாறினார். 1991-க்கு முன் நாட்டின் பொருளாதாரம் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது. லைசன்ஸ் ராஜ் ஆட்சியின் கீழ் நாடு கட்டுண்டு கிடந்தது. நாட்டின் வளர்ச்சி 3-4 சதவீதம் என்ற அளவிலேயே…
சிதம்பரம்: “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார். எங்கள் கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அமித் ஷா பேசியது என்ன? – கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, “பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் இணைந்து சந்திக்க இருக்கிறோம். வரும் தேர்தலின் போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும் போட்டியிட இருக்கிறோம். வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்துதான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப்…
மருத்துவ பண்புகளுக்கு பெயர் பெற்ற இயற்கையான மூலப்பொருள் அசாதிராச்ச்தா இண்டிகா என்றும் அழைக்கப்படும் வேம், பாரம்பரிய இந்திய தோல் பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக பிரதானமாக உள்ளது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் மூலம், ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்தை அடைவதற்கு NEEM பல நன்மைகளை வழங்குகிறது. இது கிருமிகளை எதிர்த்துப் போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும், தோலில் தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. முகப்பரு, இருண்ட புள்ளிகள், வறண்ட சருமம் மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க மக்கள் வேப்பத்தைப் பயன்படுத்தினர். எண்ணெய், தூள் அல்லது பேஸ்ட் வடிவில் இருந்தாலும், வேப்பம் உங்கள் அன்றாட தோல் பராமரிப்பு வழக்கத்தின் மென்மையான மற்றும் சக்திவாய்ந்த பகுதியாக இருக்கலாம். சருமத்திற்கு வேப்பத்தைப் பயன்படுத்துவதன் நன்மைகள்முகப்பருவை அழித்து பிரேக்அவுட்களைத் தடுக்கிறது: வேப்பின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகின்றன, வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் எதிர்கால பிரேக்அவுட்களைத் தடுக்கின்றன.வயதான…
புதுடெல்லி: டெல்லியில் இன்று (ஜூலை 16) ஐந்து பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் டெல்லியில் 10 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இன்று துவாரகாவில் உள்ள செயிண்ட் தாமஸ் பள்ளி, வசந்த்குஞ் பகுதியில் உள்ள வசந்த் வேலி பள்ளி, ஹவுஸ் காஸில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி மற்றும் லோதி எஸ்டேட்டில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, டெல்லி காவல்துறை மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையைச் சேர்ந்த பணியாளர்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தீயணைப்பு வாகனங்களும் அனுப்பப்பட்டன. மின்னஞ்சல் மூலம் செயிண்ட் தாமஸ் பள்ளி மற்றும் வசந்த் வேலி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததைத் தொடர்ந்து,…
கடலூர்: அரசு வழங்கும் சேவைகள் மக்களுக்கு எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை சிதம்பரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக இதற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த முதல்வர் ஸ்டாலி னுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சிதம்பரத்தில் நேற்று காலை நடந்த இந்நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பயனாளி ஒருவருக்கு காதொலி கருவியை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சமூகப் போராளி எல்.இளைய பெருமாளின் நூற்றாண்டு அரங்கம் மற்றும் சிலையை முதல்வர் திறந்து வைத்து, அவரது குடும்பத்தினரை சந்தித்து, இளைய பெருமாளின் சேவையை நினைவு கூர்ந்தார். அமைச்சர்கள், பிற கட்சித் தலைவர்களுடன் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, சிதம்பரம் நகர் மன்றத்தலைவர் செந்தில்குமார், அண்ணாமலை பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி, கடலூர் கிழக்கு மாவட்ட…
Eஉங்கள் உணவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை கட்டுப்படுத்துவது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் வகை 2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இருதய நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும் பாராட்டத்தக்க படியாகும். இருப்பினும், பல நபர்கள் சர்க்கரை நிறைந்த விருந்தளிப்புகளை குறைத்த போதிலும் தங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். காரணம்? சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஒரு பரந்த வளர்சிதை மாற்ற படத்தின் ஒரு பகுதி மட்டுமே. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), தேசிய சுகாதார நிறுவனங்கள் (என்ஐஎச்) மற்றும் அமெரிக்க நீரிழிவு சங்கம் (ஏடிஏ) போன்ற முன்னணி சுகாதார நிறுவனங்களின் நிபுணர் வழிகாட்டுதலின் படி, இரத்த குளுக்கோஸ் அளவு பலவிதமான உணவு, ஹார்மோன் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் பாதிக்கப்படுகிறது.சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நீக்குவது ஒரு சிறந்த முதல் படியாகும், இது ஒரு வெள்ளி தோட்டா அல்ல. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மொத்த கார்போஹைட்ரேட் உட்கொள்ளல், உடல்…
ராஞ்சி: ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் இன்று (ஜூலை 16) காலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகளும், ஒரு சிஆர்பிஎப் வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொகாரோ மாவட்டத்தில் கோமியா காவல் நிலையப் பகுதியில் உள்ள பிர்ஹோர்டெரா காட்டில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த என்கவுன்டரின் போது பாதுகாப்புப் படையினர் இரண்டு மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றனர். சிஆர்பிஎப் கோப்ரா பட்டாலியனை சேர்ந்த ஒரு வீரர் இந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தார் என்று பொகாரோ மண்டலம் ஐஜி கிராந்தி குமார் காடிதேசி தெரிவித்தார். இந்த என்கவுன்டரைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பொகாரோ மாவட்ட எஸ்பி ஹர்விந்தர் சிங் தெரிவித்தார். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 2026க்குள் நக்சல்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படுவார்கள் என்றும், மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளை கைவிட்டு சரணடைய…
