Author: admin

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காக்கள் மற்றும் சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கூறுகையில், “காஷ்மீரில் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள சுமார் 50 பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பூங்காக்கள் காஷ்மீரில் இருந்து தொலைவில் உள்ளன. அவற்றில் சில கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக திறக்கப்பப்படவை. பாதுகாப்பு சோதனை என்பது ஒரு தொடர் நடவடிக்கை. வரும் நாட்களில் இந்த மூடப்படும் பட்டியலில் மேலும் சில இடங்கள் சேர்க்கப்படலாம்.” என்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில், தூஷ்பத்ரி, கோகேர்நாக், துக்சும், சின்தான் டாப், அக்சாபால், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப் மற்றும் தோஸ்மைதானம் ஆகியவை அடங்கும். தெற்கு காஷ்மீரில் உள்ள பிரபல மொகல் தோட்டங்களுக்குச் செல்வதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மூடல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும்,…

Read More

டீப்சீக்கின் ஏஐ, ஓப்பன்ஏஐ-யின் ஜிபிடி-4o மற்றும் மெட்டா நிறுவனத்தின் லாமா ஏஐ-க்கு போட்டியாக அலிபாபா நிறுவனம் தனது ஏஐ மாடலின் குவென்2.5- மேக்ஸ் என்ற புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அலிபாபாவின் கிளவுட் டிவிஷன் வெளியிட்ட அறிக்கையில்” ஓப்பன் ஏஐ, மெட்டா நிறுவனங்களின் ஜிபிடி-4o, லாமா 3.1-405பி, டீப்சீக்-வி3 ஆகிய ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது குவென்2.5 -மேக்ஸ் செயல்பாடு மிகச் சிறப்பானதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. டீப்சீக் நிறுவனம் தொடங்கி 20 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், குறைந்த விலை, அதிக செயல்திறன் கொண்ட ஏஐ மாடல்களை அறிமுகம் செய்ததால் சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. அதேநேரம், அமெரிக்காவைச் சேர்ந்த ஏஐ நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டீப்சீக் நிறுவனத்தின் புதிய ஏஐ மாடல் ஓப்பன்ஏஐ, மெட்டா நிறுவனங்களில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அலிபாபா தனது புதிய ஏஐ மாடல் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.…

Read More

சென்னை: சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் இன்று (ஏப்.5) www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விருப்பமுள்ள 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கு ஏப்.30ம் தேதி கடைசி நாள், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இம் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் இன்று (ஏப்.5) முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.…

Read More

கொல்கத்தா: குஜ​ராத் டைடன்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் தொடக்க வீரர்​கள் சிறப்​பாக விளை​யா​டாத​தால் தோல்வி கண்​டோம் என்று கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​டன் அஜிங்​கிய ரஹானே தெரி​வித்​தார். கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் குஜ​ராத் அணி 39 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா அணி​யைத் தோற்​கடித்​தது. முதலில் விளை​யாடிய குஜ​ராத் அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 198 ரன்​கள் குவித்​தது. சாய் சுதர்​ஷன் 52 ரன்​களும், ஜாஸ் பட்​லர் 41 ரன்களும், ஷாருக் கான் 11 ரன்​களும் எடுத்​தனர். கேப்​டன் ஷுப்​மன் கில் 55 பந்​துகளில் 90 ரன்​கள் (10 பவுண்​டரி, 3 சிக்​ஸர்) விளாசி​னார். வைபவ் அரோ​ரா, ஹர்​ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்​ஸல் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். இதையடுத்து 199 ரன்​கள் வெற்றி இலக்​குடன் பேட்​டிங் செய்த கொல்​கத்தா அணி, 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு…

Read More

ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கு எதிராக லிபரல் கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அதற்கு கை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வரி, இணைப்பு அச்சுற்றுத்தல்களுக்கு இடையே கிடைக்கப் பெற்ற இந்த வெற்றியை பிரதமர் மார்க் கார்னி உற்சாகம் பொங்க வரவேற்றுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “தேர்தல் முடிவுகள், கனடாவை ஆதரிக்கவும் அதனை வலுவாகக் கட்டியெழுப்பவும் மக்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். வரவிருக்கும் நாட்களும் மாதங்களும் சவாலானதாக இருக்கும். அவை சில தியாகங்களை கோரும். ஆனால் எங்கள் தொழிலாளர்களையும் எங்கள் வணிகங்களையும் ஆதரிப்பதன் மூலம் அந்த தியாகங்களைப் பகிர்ந்து கொள்வோம். அமெரிக்க துரோகத்தின் பாடங்களை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம்.” என்று வலியுறுத்தினார். 4-வது முறையாக வெற்றி.. 343 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்)…

Read More

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா கொடியேற்றம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நம்பெருமாள்- தாயார் சேர்த்தி சேவை ஏப்.11-ம் தேதி நடைபெறுகிறது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். கருடாழ்வார் வரையப்பட்ட பெரியக் கொடி மற்றும் கொடிமரத்திற்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, மீன லக்னத்தில் கொடியை ஏற்றி வைத்தனர். இன்று துவங்கி தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின்…

Read More

சூர்யாவின் அடுத்த படத்துக்கான இசைப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ‘ரெட்ரோ’ படத்துக்குப் பின், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளார்கள். தற்போது இதன் படப்பிடிப்பு முன்பாகவே, இசைப் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக வெங்கி அட்லுரி – ஜி.வி.பிரகாஷ் இருவரும் துபாய் சென்றிருக்கிறார்கள். அங்கு பாடல் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், சில காட்சிகளுக்கான பின்னணி இசையையும் முடிவு செய்ய இருக்கிறார்கள். வெங்கி அட்லுரி இயக்கும் படம் என்றாலே ஜி.வி.பிரகாஷ் தான் இசை. அந்தளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். அந்த நட்பு சூர்யா படத்திலும் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

சென்னை: “இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசியதோடு, அந்தச் சாதனைகளால் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது வருமாறு: இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ‘ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று கருணாநிதி சொன்னார். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் ‘ஸ்டாலின் என்றால் சாதனை, சாதனை, சாதனை’ என்று சொல்லியிருப்பார். தலைவர் கலைஞர் இப்போது இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார் என்று…

Read More

சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.28) கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கு விற்பனையாகிறது. உலக அளவில் தங்கத்துக்கான தேவை அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும், ஏப்ரல் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத பல புதிய உச்சங்களைத் தொட்டுவந்த நிலையில் கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை இன்று கிராமுக்கு மேலும் ரூ.62 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.496 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.111.80-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,11,800-க்கும்…

Read More

நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இறுதியாக அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகளாவிய ஒத்துழைப்புகளில் ஒன்றின் இறுதி ஆயத்த நிலைகளுக்கு பந்து உருட்டலை அமைத்துள்ளது. நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் அல்லது நிசார் என அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) உடனான கூட்டு பணி ஜூன் 2025 இல் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது. லட்சியமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மிகப் பெரிய மற்றும் மேம்பட்ட ரேடார் இமேஜிங் அமைப்புகளில் ஒன்றாகும். செயல்பாட்டில் இருக்கும்போது, ​​பூமியின் மாறிவரும் அமைப்புகள், இயற்கை அபாயங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் பற்றிய முக்கியமான தகவல்களுடன், பூமியின் மேற்பரப்பின் புதிய சாளரத்தை நிசார் வழங்கும்.ஜூன் மாதத்தில் நிசார் பணியை இறுதி செய்ய நாசா மற்றும் இஸ்ரோ ஒருங்கிணைப்புகள் செயற்கைக்கோள் நிறைவடையும் போது, ​​நாசாவும் இஸ்ரோவும் மிஷன் வெளியீட்டு தேதியை இறுதி செய்ய ஒருங்கிணைக்கின்றன. இந்த பணியின் முதுகெலும்பாக இருக்கும் ஏவுகணை வாகனம்,…

Read More