சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதிகளில் காலை 10.30, முற்பகல் 11.35 மணி, சென்னை சென்ட்ரல் -சூலூர்பேட்டைக்கு காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05, சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15, பிற்பகல் 3.10, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, நண்பகல் 12.40, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு காலை 10.55, கும் மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12.00, பிற்பகல் 2.30, 3.15, சூலூர்பேட்டை – நெல்லூருக்கு பிற்பகல் 1.15, நெல்லூர் – சூலூர்பேட்டைக்கு மாலை 6.45 மணிக்கு…
Author: admin
உங்கள் சொந்த தலைமுடியிலிருந்து தயாரிக்கப்பட்ட பேஸ்டுடன் உங்கள் பல் துலக்குவதை கற்பனை செய்து பாருங்கள், இது ஒரு நகைச்சுவையான DIY ஸ்டண்ட் அல்ல, ஆனால் பல் சேதத்தை சரிசெய்ய தீவிரமான, அறிவியல் ஆதரவு தீர்வாக. முடி, தோல் மற்றும் கம்பளி ஆகியவற்றில் காணப்படும் கடினமான புரதமான கெரட்டின், உமிழ்நீரில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது பல் பற்சிப்பி உண்மையில் பிரதிபலிக்கவும் மீண்டும் உருவாக்கவும் முடியும் என்பதை லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம்பட்ட சுகாதாரப் பொருட்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், நாம் வழக்கமாக தரையில் இருந்து துடைக்கும் ஒரு பொருள் அல்லது தொட்டியில் டாஸ் செய்வது துவாரங்களைத் தடுப்பதற்கும், ஆரம்ப சிதைவை மாற்றியமைப்பதற்கும், அன்றாட உடைகள் மற்றும் கண்ணீரிலிருந்து பற்சிப்பியைப் பாதுகாப்பதற்கும் திறவுகோலைக் கொண்டிருக்கலாம். இன்னும் உற்சாகமாக, இந்த முறை தற்போது பல பல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நச்சு பிளாஸ்டிக் பிசின்களை மாற்றக்கூடும்,…
புதுடெல்லி: “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவை தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்கும்படி ராகுல் காந்தியிடம் கேட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 1983-ம் ஆண்டுதான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்பெற்றது. அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு…
சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்றாண்டின் சவால்களை கையாள்வதற்கேற்ப திறனுள்ள மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வழிகாட்டியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்: மாநில கல்விக் கொள்கையின் தற்போதைய தேவை மற்றும் நோக்கம் என்ன? – முதல்முறையாக மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளோம். தற்போதைய நவீன காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்களை காணமுடிகிறது. அறிவியல் உட்பட அனைத்து துறைகளிலும் புதிய அம்சங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், உலகளவிலும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மாறிவருகின்றன. தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோட்டிக்ஸ் போன்றவை அனைத்து துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாம் இவ்வளவு காலம் செய்துவந்த விஷயங்களை மிக விரைவாகவும், திறம்படவும் செய்து சவாலாக திகழ்கின்றன. அதற்கேற்ப பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியானது அடுத்த 20 ஆண்டுகளுக்கு பின்னரும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். வளரும் தொழில்நுட்பங்கள், மாறிவரும்…
விழுப்புரம்: தனியார் பள்ளி வகுப்பறையில் திடீரென பிளஸ்-1 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. விழுப்புரம் மேல் தெருவைச் சேர்ந்தவர் குமார் மனைவி மகேஸ்வரி. கிராம உதவியாளர். இவரது மகன் மோகன்ராஜ்(16), திருவிக வீதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் தினமும் காலை 7 மணிக்கு நடைபெறும் சிறப்பு வகுப்பில் மாணவர் மோகன்ராஜ் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக திடீரென மயங்கி விழுந்த மோகன்ராஜ் மயங்கி கீழே விழுந்தார். தகவலறிந்து பள்ளிக்குச் சென்ற தாயார் மகேஸ்வரி, மகனை நேருஜி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் மாணவரைப் பரிசோதித்தபோது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். புத்தக சுமை…
உயர் கொழுப்பு ஒரு “அமைதியான கொலையாளி” என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் வரை இது பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டவில்லை. இருப்பினும், சமீபத்திய ஆய்வுகள், கால்கள், மார்பு, முதுகு மற்றும் வயிறு போன்ற உடலின் வெவ்வேறு பகுதிகளில் வலியை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வலி பொதுவாக தமனிகளில் கொலஸ்ட்ரால் கட்டமைப்பால் ஏற்படும் இரத்த ஓட்டத்தின் காரணமாக விளைகிறது, இது புற தமனி நோய் மற்றும் ஆஞ்சினா போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த வலி சமிக்ஞைகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு மிக முக்கியமானது, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற இருதய பிரச்சினைகள் போன்ற சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.எவ்வளவு அதிக கொழுப்பு வலிக்கு வழிவகுக்கிறதுகொலஸ்ட்ரால், குறிப்பாக குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்.டி.எல்), பெரும்பாலும் “கெட்ட கொழுப்பு” என்று அழைக்கப்படுகிறது, இது காலப்போக்கில் தமனிகளின் சுவர்களில் கட்டப்படலாம். இந்த குவிப்பு…
புதுடெல்லி: துணைவேந்தர் நியமனங்கள் தொடர்பாக மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்யும் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தொடர்ந்த வழக்கும், அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணைவேந்தரை கேரள ஆளுநர் நியமித்ததை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. ஆளுநர், கேரள அரசின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், யுஜிசி விதிமுறைப்படி துணைவேந்தரை தேடும் குழு வில் மூன்று அல்லது ஐந்து பேர் இடம்பெறுவார்கள் என்று உள்ளது. ஆனால், எந்த விதியில் ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது? என்று மத்திய அரசு வழக்கறிஞரிடம் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “ஆளுநர்-மாநில அரசு இடையேயான பிரச்சினைகளுக்கு மத்தியில் கேரள துணைவேந்தர் நியமனங்களுக்கான தேடல் குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்கும். இரு…
திருச்சி: திருச்சி மாவட்டம் கிளிக்கூடு, உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி கவுத்தரசநல்லூர் பகுதியில் கொய்யா தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி, அங்கிருந்த விவசாயி சகாதேவனை(45) கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, அன்று மாலை உத்தமர்சீலியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி முன்னாள் தலைவரான கணபதி(70) என்பவர் தனது வாழைத்தோப்புக்கு சென்றபோது, அங்கு வந்த காட்டுப்பன்றி அவரையும் கடித்துக்குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர்இழந்தார். இதுகுறித்து நம்பர்-1 டோல்கேட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரங்கம் பகுதி செயலாளர் பி.தர்மா கூறும்போது, “காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை…
டாக்டர் ச ura ரப் சேத்தி ஆரோக்கியமற்ற உணவுகள் காரணமாக இளம் பருவத்தினரில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் (என்ஏஎஃப்எல்டி) ஆபத்தான உயர்வை எடுத்துக்காட்டுகிறார். பேஸ்ட்ரிகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை உணவுகளை உட்கொள்வது கல்லீரல் கொழுப்பாக அதிகப்படியான பிரக்டோஸ் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது, இது NAFLD ஐ ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாத NAFLD சிரோசிஸ் உள்ளிட்ட கடுமையான கல்லீரல் பிரச்சினைகளுக்கு முன்னேறலாம், இது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே பெருகிய முறையில் பொதுவானதாகி வருகிறது. மோசமான உணவு, உட்கார்ந்த பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட நவீன வாழ்க்கை முறை காரணிகள் இந்த பிரச்சினையின் முக்கிய இயக்கிகள். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி, இப்போது குழந்தைகளிடையே NAFLD இன் நிகழ்வு எவ்வாறு அதிகரித்து…
லக்னோ: உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்து துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பசு காப்பகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இந்த வளாகங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து விலங்குகள், பறவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.