சென்னை: காணொலிக் காட்சி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 16) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காணொலிக் காட்சி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும். அதுபோது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இந்த கூட்டம் நடைபெறும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
உங்கள் மனதை நிர்வகிப்பது சில நேரங்களில் அதிகமாக இருக்கும். எண்ணங்கள் இனம், கவலைகள் குவிந்து, குழப்பம் எடுத்துக்கொள்கிறது. இருப்பினும், அத்தியாவசிய விஷயங்களில் கவனம் செலுத்தும் போது மன தலையீட்டை அகற்ற ஒரு அடிப்படை நுட்பம் உள்ளது. முன்னணி மனநல மருத்துவர் டேனியல் ஜி. ஆமென், எம்.டி.யின் கூற்றுப்படி, உங்கள் தனிப்பட்ட குறிக்கோள்கள் மன நல்வாழ்வு நிர்வாகத்திற்கான மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாக செயல்படுகின்றன. தெளிவைப் பெறும், மன அழுத்த அளவைக் குறைத்து, சிறந்த முடிவெடுக்கும் திறன்களை வளர்க்கும் நபர்கள்.நீங்கள் விரும்பிய விளைவுகளை அடைய உதவும் ஒரு பக்க அதிசய உடற்பயிற்சி ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது. உங்கள் ஆசைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றுடன் ஒரு தாள் மூலம் உங்கள் அத்தியாவசிய இலக்குகளை பதிவு செய்ய இந்த பயிற்சி உங்களுக்கு உதவுகிறது. எப்படி என்று பார்ப்போம் …உங்கள் மனதிற்கு “உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை” ஏன் தெரிந்து கொள்ளுங்கள்மனிதர்கள் மன சவால்களை எதிர்கொள்கின்றனர்,…
சென்னை: “திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்பேன்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் என்னை சந்திக்க விரும்பினால் சந்திப்பதில் தயக்கமில்லை. பாஜகவில் ஏராளமானவர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். நட்பு வேறு, கொள்கை வேறு. அவர்களுக்கு அவர்களது கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல விசிகவின் கோட்பாடுகள் எனக்கு முக்கியம். இதைத் தாண்டி நட்பு இருப்பதில் தவறில்லை. அதனடிப்படையில் கே.பி.ராமலிங்கம் நன்கு அறிமுகமானவர். அவர் திமுக எம்.பி.யாக இருந்த காலத்தில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சந்தித்திருக்கிறோம். அந்த நட்பின் அடிப்படையில் சந்திப்பதாக இருந்தால் நிச்சயமாக வரவேற்போம். ஆனால், பாஜக கொள்கை என்பது அம்பேத்கரின் கொள்கைக்கு நேர் முரணானது என்பதை நாங்கள் புரிந்திருக்கிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.திமுகவுடன் இருப்பதால் பாஜகவை எதிர்ப்பதாக கருதுகின்றனர். அப்படியல்ல. திமுகவுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களால் பாஜக…
கரி இலைகள், உள்நாட்டில் கதி பட்டா என்று அழைக்கப்படுகின்றன, அவை இந்திய சமையலறைகளில் பிரதானமாக இருக்கின்றன, ஆனால் அவற்றின் பயன்பாடுகள் சுவைக்கு அப்பாற்பட்டவை. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு பூர்வீகமாக, முர்ரியா கொயினிகி (கறி இலை மரம்) நீண்ட காலமாக ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய மருத்துவத்திலும் அதன் சிகிச்சை நன்மைகளுக்காக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய எண்ணெய்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த, கறி இலைகள் நீரிழிவு மற்றும் நோய்த்தொற்றுகள் முதல் முடி வீழ்ச்சி மற்றும் அஜீரணம் வரையிலான நோய்களுக்கு ஒரு சக்திவாய்ந்த இயற்கை தீர்வாகும்.கறி உங்களுக்கு நல்லதா? ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுகாதார நன்மைகள்கறி இலைகள் கலோரிகளில் குறைவாக உள்ளன, ஆனால் ஊட்டச்சத்துக்களில் குறிப்பிடத்தக்க வகையில் நிறைந்துள்ளன, இது ஒரு சீரான உணவுக்கு ஒரு மதிப்புமிக்க கூடுதலாக அமைகிறது. வெறும் 100 கிராம் கறி இலைகள் சுமார் 830 மி.கி கால்சியத்தை வழங்குகின்றன, இது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. அவற்றில்…
கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுபவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதைக் கண்டித்து கொல்கத்தாவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுபவர்கள் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் இந்தியர் என்பதற்கான அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும் அவர்களை வங்கதேசத்தவர்கள் என குறிப்பிட்டு வங்கதேசத்துக்கு அனுப்புவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இதைக் கண்டித்து மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலும், பிற மாவட்ட தலைநகரங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கொல்கத்தாவில் திரணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணி இன்று (ஜூலை 16) மதியம் மத்திய கொல்கத்தாவின் கல்லூரி சதுக்கத்தில் இருந்து தொடங்கியது. இதில், திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மழைக்கு மத்தியில் நகரின் முக்கிய…
ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்கும் ‘ஆஷா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்கள். ‘ஆஷா’ என்று பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் பூஜை திருகக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோயிலில் நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து, படக்குழு படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. இந்த விழாவில், ஜோஜு ஜார்ஜ் உடன் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மற்றும் இயக்குநர் சஃபர் சனல் விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து படத்தின் ஜோஜு ஜார்ஜ் கிளாப் அடிக்க, மது நீலகண்டன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர். இப்படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, விஜயராகவன், ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் ‘பனி’ திரைப்படத்தில் நடித்த ரமேஷ் கிரிஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.…
மேட்டூர்: பாமகவில் சிக்கலான சூழ்நிலை இல்லை. பாமகவில் இரு அணிகள் இல்லை. ராமதாஸ் தலைமையில் இருக்கும் கட்சிதான் பாமக என அக்கட்சியின் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். மேட்டூரில் பாமகவின் புதிய நகர அலுவலக திறப்பு விழா, ராமதாஸ் அணியை சேர்ந்த மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக இணை பொதுச் செயலாளருமான அருள் புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி இன்று (ஜூலை 16) திறந்து வைத்தார். தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் 37-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் துரைராஜ், நகர செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் எம்எல்ஏ அருள் கூறும்போது, “2026-ம் ஆண்டு தேர்தலில், பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி வைக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும். பாமகவில் சிக்கலான சூழ்நிலை இல்லை. ராமதாஸ், அன்புமணி மற்றும்…
இறுதி சோதனைக்கு உங்கள் கண்காணிப்பு திறன்களை வைக்க தயாராகுங்கள்! வைரலாகி வரும் ஒரு வேடிக்கையான மற்றும் மூளை-டிக்லிங் காட்சி சவாலை நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம்-இப்போது அதை ஒரு ஷாட் கொடுப்பது உங்கள் முறை.கீழேயுள்ள படத்தில், முதல் பார்வையில் சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஒரு காட்சி உள்ளது. ஆனால் ஏமாற வேண்டாம் – படம் முழுவதும் 8 புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்ட தவறுகள் சிதறிக்கிடக்கின்றன. சில பிழைகள் வெளிப்படையானவை, மற்றவர்கள் உங்கள் மூளையை ஏமாற்றுவதற்காக மாறுவேடமிட்டுள்ளனர். நீங்கள் அனைத்தையும் பிடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?இங்கே திருப்பம்:கடன்: Pinterestகடன்: Pinterestஅனைத்து 8 தவறுகளையும் கண்டுபிடிக்க உங்களுக்கு 10 வினாடிகள் மட்டுமே உள்ளன. ஆமாம், இது வேகமான மற்றும் தீவிரமானது, ஆனால் அதுதான் உற்சாகத்தை அளிக்கிறது! இந்த ஆப்டிகல் மாயை உங்கள் செறிவு, காட்சி நினைவகம் மற்றும் கவனத்தை விவரங்களுக்கு சோதிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வேடிக்கையான செயல்பாடு மட்டுமல்ல, உங்கள் மனதைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழியாகும்.…
பிரபுதேவா – வடிவேலு கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைகிறது. ‘காதலன்’ படம் தொடங்கி பல படங்களில் இணைந்து நடித்தது பிரபுதேவா – வடிவேலு கூட்டணி. இந்தக் கூட்டணியின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். மேலும், இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வந்தார்கள். வடிவேலு கேட்டார் என்பதற்காக ‘நாய் சேகர்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல வருடங்கள் கழித்து பிரபுதேவா – வடிவேலு கூட்டணி இணைந்து நடிக்கவுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கவுள்ளார். சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்னேஷ் வாசு, எடிட்டராக ஆண்டனி மற்றும் இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. பிரபுதேவா – வடிவேலு உடன் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு தயாராகி வருகிறது. பிரபுதேவா, வடிவேலு ஏற்கெனவே இணைந்து…
சென்னை: “செஞ்சிக்கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்று கூறுவது வரலாற்றுப் பிழை மட்டுமல்ல, அடுத்தத் தலைமுறையை திட்டமிட்டு ஏமாற்றும் சதி வேலையாகும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காடவ மன்னர்கள் கட்டிய கோட்டையே செஞ்சிக் கோட்டை. யுனெஸ்கோ நிறுவனம், மகாராஷ்டிர மன்னன் சிவாஜி கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக விழுப்புரம் மாவட்டத்து செஞ்சிக்கோட்டையை அடையாளப்படுத்தி இருப்பது வரலாற்றை சிதைக்கும் கொடுஞ்செயல். ஏற்கெனவே பல்வேறு காலகட்டங்களில் பாடநூல்களில், அகழாய்வுகளில் தமிழர்தம் அடையாளத்தை சிதைக்கும் பணியை சிரமேற்கொண்டு மத்திய அரசு செய்து வந்திருக்கிறது. கடும் எதிர்ப்பு காரணமாக ஓரிரு அம்சங்கள் மாற்றப்பட்டிருந்தாலும், முழுமையாக அவற்றை மாற்ற வில்லை; முழுமையாய் அவற்றை மாற்றித் தீரவேண்டிய அந்தப் பணியே இன்னும் நமக்கு மிச்சம் இருக்கிறது. கவிச் சக்கர வர்த்தி ஓட்டக் கூத்தர், கி.பி.12-ஆம் நூற்றாண்டில் இயற்றிய மூவருலாவில் இடம்பெற்றிருக்கும் ‘விக்கிரம சோழன் உலா பாடல்-80’ தெளிவாகவே, உண்மையை, சான்றாக…
