திருச்சி: நாம் தமிழர் கட்சி சார்பில் ஆக.17-ம் தேதி மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 2018-ல் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: விவசாயிகள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து, திமுக அரசு எவ்விதத்திலும் மாறுபடவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கலாமா? மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் திமுக, மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதில்லை. ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக இணைத் துள்ளதாக கூறும் திமுக, வாக்குக்கு பணம் கொடுக்காமல் இருக்குமா? தமிழகத்தை…
Author: admin
கல்லீரல் நோய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன, கல்லீரல் புற்றுநோய் வழக்குகளில் குறிப்பிடத்தக்க உயர்வு உள்ளது. கல்லீரலின் முக்கிய செயல்பாடுகள், நச்சுத்தன்மை மற்றும் செரிமானம் உள்ளிட்டவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. தொடர்ச்சியான சோர்வு, மஞ்சள் காமாலை, செரிமான பிரச்சினைகள், அரிப்பு தோல் மற்றும் எளிதான சிராய்ப்பு ஆகியவை கல்லீரல் செயலிழப்பைக் குறிக்கலாம், சாத்தியமான சேதத்தை நிவர்த்தி செய்வதற்கும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் உடனடி மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது. கல்லீரல் நோய்கள் முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகின்றன. 1990 மற்றும் 2017 க்கு இடையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி, புதிய கல்லீரல் புற்றுநோய் வழக்குகளில் 100% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வைரஸ் ஹெபடைடிஸுக்கு காரணம், மற்றும் 16% NAFLD உட்பட அறியப்படாத காரணங்கள் காரணமாகும்.கல்லீரல் என்பது உங்கள் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்குவது முதல் செரிமானத்திற்கு உதவுவது வரை 500 க்கும் மேற்பட்ட முக்கிய செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும். எனவே, உங்கள்…
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டியிருக்கும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால், ரஷ்யா அதிபர் புதின், உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது. ட்ரம்ப்பை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் அடுத்த 50 நாட்களுக்குள் செக்ரைனுடன் சண்டை நிறுத்தம் சண்டை நிறுத்தம் செய்யவில்லை என்றால், ரஷ்யாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்,…
புதுமுகம் எம்.நாகரத்தினம் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘வள்ளி மலை வேலன்’. இதில் இலக்கியா, ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை என பலர் நடித்துள்ளனர். எம். என்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் நாகரத்தினம் தயாரித்துள்ள இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.மோகன். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், வி.சேகர் கலந்து கொண்டனர். இயக்குநர் வி. சேகர் பேசும்போது, “இந்தப்படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள். இப்போது முருகன்தான் சீசன் போல. அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது, சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார். இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான். அதை விளம்பரப்படுத்துவதுதான் முக்கிய வேலையாக உள்ளது. நாங்கள் படம் எடுக்கும் போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 திரையரங்குக்கு மேல் தரமாட்டார்கள். ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி, ஆயிரம் திரையரங்குகளில் பெரிய படம் மட்டும் தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு…
சென்னை: சென்னை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இன்று (ஜூலை 17) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் அழிக்கப்பட்டன. பின்னர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால், சிறப்பு கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி நிறைவடைகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, வக்பு சட்டத் திருத்த மசோதா, நிதி மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.…
கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நாடகத்தனமானது. மக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் அரசு திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில் பகுதி விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், சிதம்பரத்தில் நேற்று கலந்துரையாடிய பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருவாய்த் துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தனர். எனது தலைமையிலான அரசிலும் இது தொடர்ந்தது. இந்த திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் விளம்பரப்படுத்துகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தமிழகம் முழுவதும் சென்று மனுக்களை வாங்கினார்கள். கடந்த 4 ஆண்டுகளில் அவற்றுக்குத் தீர்வுகாணவில்லை. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தற்போது தொடங்குவதன் மூலம், மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை முதல்வரே ஒப்புக் கொள்கிறார். மீதமுள்ள 8 மாதங்களில் என்ன பிரச்சினையை இவர் தீர்க்கப் போகிறார்? இதெல்லாம் நாடகம்.…
இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் குடல் புற்றுநோய் நீண்ட காலமாக வயதானவர்களின் நோயாகக் கருதப்படுகிறது, ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக, மருத்துவர்கள் ஒரு சிக்கலான மாற்றத்தைக் கண்டனர். 50 வயதிற்குட்பட்டவர்களில் உள்ள வழக்குகள் வேகமாக ஏறுகின்றன, இதனால் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இளைய பெரியவர்களில் புற்றுநோய் தொடர்பான மரணத்திற்கு குடல் புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாகும். புதிய ஆராய்ச்சி, நாம் சாப்பிடுவது, குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் இந்த எழுச்சியில் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று கூறுகிறது.கிளீவ்லேண்ட் கிளினிக்கின் ஆராய்ச்சியாளர்கள் இளைய பெரியவர்களில் உணவு முறைகள் மற்றும் குடல் புற்றுநோய் உயிரியலுக்கு இடையிலான தெளிவான தொடர்பை அடையாளம் காண மேம்பட்ட வளர்சிதை மாற்றங்களைப் பயன்படுத்தினர். அவர்களின் கண்டுபிடிப்புகள் ஒரு விழித்தெழுந்த அழைப்பு: ஆரம்பகால புற்றுநோய் சீரற்றதல்ல. இது எங்கள் தட்டுகளில் உள்ளவற்றில் வேரூன்றியிருக்கலாம்.50 வயதிற்கு முன்னர் குடல் புற்றுநோய்? சிவப்பு இறைச்சி…
புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷாவின் குற்றத்துக்கு மன்னிப்பு வழங்க முடியாது என அப்தெல்ஃபத்தா மெஹ்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய ஊடகங்கள் குற்றவாளி நிமிஷாவை பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கும் பணியில் ஈடுவருகின்றன. இது எங்களது குடும்பத்தினரிடம் ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனது சகோதரர் தலால் அப்தோ மெஹ்தியை கொலை செய்த குற்றத்துக்காகவே நிமிஷா பிரியாவுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு மரண தண்டனையை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இந்த குற்றத்துக்கு அவருக்கு மன்னிப்பு வழங்க முடியாது‘‘ என்றார். கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மெஹ்தியை கொலை செய்த குற்றத்துக்காக கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நேற்று அது நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், நீண்டகாலமாக நடைபெற்ற பலமுனை பேச்சுவார்த்தைக்கு பிறகு நிமிஷாவின் மரண தண்டனை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின்…
திருச்சி: ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள்’ என்று காங்கிரஸ் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி கூறினார். திருச்சியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் அரசியல் அமைப்பை காப்போம் விளக்க பொதுக் கூட்டம் மணப்பாறையில் நேற்று தினம் இரவு நடைபெற்றது. இதில் திருச்சி வேலுச்சாமி பேசியதாவது: தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது 1954-ல் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை அறநிலையத் துறை அமைச்சராக்கி வரலாறு படைத்தார். தமிழகத்தின் முடிசூடாமன்னனாக முதல்வராக இருந்தவர் காமராஜர். இரு இந்தியப் பிரதமர்களை உருவாக்கியவர். ஆனால், அவர் உயிரிழக்கும்போது 100 ரூபாய் கூட அவரிடம் இல்லை. அவரைத்தான் வரலாறு பேசுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, அசாமில் இருந்து குஜராத்வரை குறுக்கும் நெடுக்குமாக தன்பாதத்தாலேயே அழகு பார்த்த ராகுல்காந்தியை பிரதமராக்கினால் நமது வாழ்க்கை பாதுகாக்கப்படும். தமிழகத்தில் காங்கிரஸும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது…
