Author: admin

புதுடெல்லி: வேளாண் மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மேம்​பாட்டு திட்​டங்​களில் ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய மத்திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. மத்​திய அமைச்​சரவை கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று நடை​பெற்றது. இதில் பிரதமரின் தன் தானிய வேளாண் திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் அடை​யாளம் காணப்​படும் 100 மாவட்​டங்​களில், நடப்பு நிதி​யாண்டு முதல் 6 ஆண்டு காலத்​திற்கு செயல்​படுத்​தப்​படும். வேளாண் துறை​யிலும் அது சார்ந்த துறை​களி​லும் விரை​வான வளர்ச்​சியை எட்​டு​வது தொடர்​பாக இத்​திட்​டம் கவனம் செலுத்​தும். இத்​திட்​டம், வேளாண் உற்​பத்​தித்​திறனை மேம்​படுத்​துதல், பயிர் பல்​வகைப்​படுத்​தல், நிலை​யான விவ​சாய நடை​முறை​களை ஊக்​கு​வித்​தல், அறு​வடைக்​குப் பிந்​தைய தானிய சேமிப்​புத் திறனை அதி​கரித்​தல், நீர்ப்​பாசன வசதி​களை மேம்​படுத்​துதல், விவ​சா​யிகளுக்​குக் கடன்​கள் கிடைப்​பதை எளி​தாக்​குதல் ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது. இந்​தத் திட்​டம், மத்​திய அரசின் 11 துறை​கள், மாநில அரசுகளின் திட்​டங்​கள், தனி​யார் துறை​யினர் ஆகியோரின் கூட்டு ஒத்​துழைப்​புடன், தற்​போது நடை​முறை​யில் உள்ள…

Read More

சென்னை: கந்​தகோட்​டம் முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் கும்​பாபிஷேகம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. ராஜகோபுரக் கலசத்​தில் புனிதநீர் ஊற்​றப்​பட்​டது. அப்​போது ‘அரோக​ரா’ கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். சென்னை பூங்கா நகர் கந்​தகோட்​டத்​தில் நூற்​றாண்டு பழமை​யான முத்​துக்​கு​மாரசு​வாமி கோயில் உள்​ளது. இக்​கோயிலில்வள்ளி, தேவசேனா உடனுறை முத்​துக்​கு​மாரசு​வாமி எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து வரு​கிறார். கடந்த 2013-ம் ஆண்​டும் ஜூலை 15-ம் தேதி இக்​கோயி​லில் கும்​பாபிஷேகம் நடந்​தது. கும்​பாபிஷேகம் நடந்து 12 ஆண்​டு​கள் முடிவடைந்த நிலையில், கந்​தகோட்​டத்​தில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் கும்​பாபிஷேகம் நடத்து​வதற்​கான பணி​கள் நடை​பெற்று வந்​தன. அந்த வகை​யில், கோயில் நிதி மற்​றும் உபய​தா​ரர் நிதி ரூ.91.50 லட்​சம் மதிப்​பீட்​டில் கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்​நி​தி​கள், மண்​டபங்​கள் புனரமைக்​கப்​பட்​டன. தொடர்ந்து கடந்த 10-ம் தேதி விக்​னேஸ்வர பூஜை​யுடன் யாக சாலை பூஜைகளு​டன் கும்​பாபிஷேக விழா தொடங்​கியது. தொடர்ந்​து, பிர​வேச பலி, கோ பூஜை, புண்​ணி​யாக வாசனம்,…

Read More

மேலக்கோட்டையூர்: தமிழியக்​கம் மற்​றும் மறைமலை அடிகள் கல்வி அறக்​கட்​டளை சார்​பில், மறைமலை அடிகள் 150-வது பிறந்த நாள் விழா மற்​றும் நூல் வெளி​யீட்டு விழா, வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள விஐடி சென்​னை​யில் நேற்று நடந்​தது. விழாவுக்​கு, தமிழியக்​கத்​தின் தலை​வரும் விஐடி வேந்​தரு​மான முனை​வர் கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்கி​னார். விழா​வில், மறைமலை அடிகளார் பேரன் மறை தி.​தா​யு​மானவன் தயாரித்த மறைமலை அடிகளாரின் நாட்​குறிப்​பேடு என்ற தலைப்​பிலான நூலை விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் வெளி​யிட, ஆளூர் ஷாந​வாஸ் எம்எல்ஏ பெற்​றுக் கொண்​டார். விழா​வில், கோ.​விசுவ​நாதன் பேசும்​போது, ”தமிழ் மொழிக்கு பிறகு சம்​ஸ்​கிருதம், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்​மொழி அந்​தஸ்து வழங்​கப்​பட்​டது. கடந்த 10 ஆண்​டு​களில் சம்​ஸ்​கிருதம் மொழி வளர்ச்​சிக்​காக மத்​திய அரசு ரூ.2,500 கோடி செலவு செய்​துள்​ளது. அது​வே, தமிழ், தெலுங்​கு,கன்​னடம், மலை​யாளம், ஒடியா மொழிகளுக்கு வெறும் ரூ.140 கோடி தான் செலவு செய்​துள்​ளது. இதில் இருந்தே மத்​திய…

Read More

5 எச்சரிக்கை அறிகுறிகள் ஒருவரின் வளர்சிதை மாற்ற வயது உயிரியல் வயதை விட பழையது (அதை எவ்வாறு சரிசெய்வது)

Read More

ஒரு வரலாற்று 18 நாள் பணியை முடித்த பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்), இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா பூமிக்கும் அவரது குடும்பத்தின் அன்பான அரவணைப்பிற்கும் திரும்பியுள்ளார். ஐ.எஸ்.எஸ் பார்வையிட்ட முதல் இந்தியராகவும், ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் மட்டுமே இந்த இந்தியராகவும் ஆன சுக்லா, இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியான உணர்ச்சிபூர்வமான மறு இணைவு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். தொடுகின்ற படங்கள், அவர் தனது மனைவி மற்றும் இளம் மகனைத் தழுவுவதைக் காட்டுகிறது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலித்தது. “வீட்டைப் போல உணர்ந்தேன்,” என்று அவர் எழுதினார், பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தனது அன்புக்குரியவர்களை கடைசியாக வைத்திருப்பதன் மகிழ்ச்சியையும் பாதிப்பையும் கைப்பற்றினார்.சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபன்ஷு சுக்லாவின் வரலாற்று வருவாய்ஜூலை 15 ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூலில் ஷுக்லா பூமிக்கு திரும்பினார், இது ஐ.எஸ்.எஸ் -க்கு இந்தியாவின்…

Read More

அமராவதி/ஹைதராபாத்: ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் பிரிந்த பின்​னர், நதிநீர் பங்​கீடு, அரசு ஊழியர்​கள் பங்​கீடு, நிதி நிலை பங்​கீடு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் 10 ஆண்​டு​கள் ஆனாலும் இன்​ன​மும் தீர்வு காணப்​ப​டா​மலேயே உள்​ளது. இதுகுறித்து நேற்று டெல்​லி​யில், மத்​திய நீர்​வளத்​துறை அமைச்​சர் சிஆர். பாட்​டீல் முன்​னிலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, இரு மாநில நீர் வளத்​துறை அமைச்​சர்​கள், இரு மாநிலத்​தின் தலைமை செய​லா​ளர்​கள் மற்​றும் இரு மாநில உயர் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது. இதில், ஆந்​திர அரசு தரப்​பில், ஜனகசர்லா – போலா​வரம் லிங்க் அணை கட்​டு​வது குறித்து மட்​டுமே பேசுவ​தாக குறிப்​பிடப்​பட்​டது. ஆனால், தெலங்​கானா அரசு கிருஷ்ணா நதி நீர் பங்​கீடு, சைலம் அணையி​லிருந்து தண்​ணீர் திறந்து விடு​வது, பாலமூரு-ரங்​காரெட்​டி, திண்​டி, சம்​மக்கா சாகர், பிராணஹி​தா-சேவள்ளு அணை விவ​காரம் உள்​ளிட்ட 13 அம்​சங்​களை பட்​டியலில் சேர்த்​திருந்​தது. மொத்​தம் 14 அம்​சங்​கள் குறித்து…

Read More

கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ, ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள ‘காந்தி மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ என்ற இந்த ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து ரிக்கி கேஜ் கூறும்போது, “மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முதல் நெல்சன் மண்டேலா வரை பல தலைமுறைகளின் தலைவர்களுக்கு காந்தி, உந்துசக்தியாகத் திகழ்கிறார். அவருடைய தத்துவ ஜோதியை அணையாமல் காப்பதற்கான எங்களது சிறிய காணிக்கையே இந்த ஆல்பம். மகாத்மா காந்தியை போன்று எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இசைக்கும் உள்ளது” என்றார். லோனி பார்க், ஜோர்டன் புட்டோவ், கைலாஷ் சத்யார்த்தி, வானில் வெய்காஸ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை சுமதி ராம் இணை தயாரிப்பு செய்துள்ளார்.

Read More

சென்னை: மக்கள் வசிப்பிடங்களுக்கே அதிகாரிகள் சென்று, அரசின் சேவைகளை வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி துறையின் கீழ் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களின் மனுக்களைப் பெற்று தீர்வுகாணும் திட்டங்கள் அவ்வபோது அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடங்கின. தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நகர்ப்புறத்தில் 1,428, ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்கள் நடத்தப்படுகின்றன. வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும்…

Read More

சான் பிரான்சிஸ்கோவில் நடந்த எண்டோகிரைன் சொசைட்டியின் வருடாந்திர கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு புதிய ஆய்வில் ஒரு திடுக்கிடும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது: உடல் பருமனுடன் தொடர்புடைய புற்றுநோய் இறப்புகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்காவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. 1999 மற்றும் 2020 க்கு இடையில், உடல் பருமன் தொடர்பான புற்றுநோய்களிலிருந்து இறப்பு விகிதம் ஒரு மில்லியன் மக்களுக்கு 3.73 முதல் 13.52 ஆக உயர்ந்தது. இந்த உயர்வு பெண்கள், வயதான பெரியவர்கள், பூர்வீக அமெரிக்க மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களை விகிதாசாரமாக பாதிக்கிறது. இந்த அதிகரித்து வரும் பொது சுகாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான இலக்கு தடுப்பு, ஆரம்பகால திரையிடல் மற்றும் கவனிப்புக்கான மேம்பட்ட அணுகல் ஆகியவற்றின் அவசர தேவையை கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.உடல் பருமன் புற்றுநோய் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறதுஉடல் பருமன் இப்போது குறைந்தது 13 வகையான புற்றுநோய்களுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது,…

Read More

கொல்கத்தா: ​​பார​திய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்​களில் வங்க மொழி பேசும் மக்​கள் பெரும் துன்​புறுத்​தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் நேற்று கொல்​கத்​தா​வில் போ​ராட்​டம் நடைபெற்றது. திரிண​மூல் காங்​கிரஸ் தேசிய பொது செயலர் அபிஷேக் பானர்ஜி உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் மற்​றும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் இந்த போ​ராட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இந்த போ​ராட்​டத்​தையொட்டி 1,500 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். முக்​கிய சாலைகளில் வாக​னப் போக்​கு​வரத்து திருப்​பி​விடப்​பட்​டது. மேற்கு வங்க மாநிலம் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்தலை எதிர்​கொள்ள உள்​ளது. இந்த நிலை​யில், பிரதமர் மோடி வருகை தரு​வதற்கு ஒரு​நாள் முன்​ன​தாக நேற்று இந்​தப் போ​ராட்​டம் நடை​பெற்​றது. ஆனால் மம்தா பானர்​ஜி​யின் இந்த போ​ராட்​டத்​துக்கு எதிர்​க்கட்சி தலை​வர் சுவேந்து அதி​காரி கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார். வங்​கமொழி பேசும் ரோஹிங்​கி​யாக்​கள் மற்​றும் சட்​ட​விரோத வங்​கதேச ஊடுரு​வல்​காரர்​களை திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி காப்பாற்​று​வதற்​காக இந்த போ​ராட்​டத்​தை முன்​னெடுத்​துள்​ள​தாக…

Read More