புதுடெல்லி: வேளாண் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களில் ரூ.50,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமரின் தன் தானிய வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடையாளம் காணப்படும் 100 மாவட்டங்களில், நடப்பு நிதியாண்டு முதல் 6 ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். வேளாண் துறையிலும் அது சார்ந்த துறைகளிலும் விரைவான வளர்ச்சியை எட்டுவது தொடர்பாக இத்திட்டம் கவனம் செலுத்தும். இத்திட்டம், வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தல், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய தானிய சேமிப்புத் திறனை அதிகரித்தல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல், விவசாயிகளுக்குக் கடன்கள் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், மத்திய அரசின் 11 துறைகள், மாநில அரசுகளின் திட்டங்கள், தனியார் துறையினர் ஆகியோரின் கூட்டு ஒத்துழைப்புடன், தற்போது நடைமுறையில் உள்ள…
Author: admin
சென்னை: கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ராஜகோபுரக் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது ‘அரோகரா’ கோஷத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை பூங்கா நகர் கந்தகோட்டத்தில் நூற்றாண்டு பழமையான முத்துக்குமாரசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில்வள்ளி, தேவசேனா உடனுறை முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டும் ஜூலை 15-ம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கந்தகோட்டத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அந்த வகையில், கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதி ரூ.91.50 லட்சம் மதிப்பீட்டில் கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்நிதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த 10-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து, பிரவேச பலி, கோ பூஜை, புண்ணியாக வாசனம்,…
மேலக்கோட்டையூர்: தமிழியக்கம் மற்றும் மறைமலை அடிகள் கல்வி அறக்கட்டளை சார்பில், மறைமலை அடிகள் 150-வது பிறந்த நாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா, வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தமிழியக்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான முனைவர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். விழாவில், மறைமலை அடிகளார் பேரன் மறை தி.தாயுமானவன் தயாரித்த மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு என்ற தலைப்பிலான நூலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட, ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ பெற்றுக் கொண்டார். விழாவில், கோ.விசுவநாதன் பேசும்போது, ”தமிழ் மொழிக்கு பிறகு சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் சம்ஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.2,500 கோடி செலவு செய்துள்ளது. அதுவே, தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு வெறும் ரூ.140 கோடி தான் செலவு செய்துள்ளது. இதில் இருந்தே மத்திய…
5 எச்சரிக்கை அறிகுறிகள் ஒருவரின் வளர்சிதை மாற்ற வயது உயிரியல் வயதை விட பழையது (அதை எவ்வாறு சரிசெய்வது)
ஒரு வரலாற்று 18 நாள் பணியை முடித்த பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்), இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா பூமிக்கும் அவரது குடும்பத்தின் அன்பான அரவணைப்பிற்கும் திரும்பியுள்ளார். ஐ.எஸ்.எஸ் பார்வையிட்ட முதல் இந்தியராகவும், ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் மட்டுமே இந்த இந்தியராகவும் ஆன சுக்லா, இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியான உணர்ச்சிபூர்வமான மறு இணைவு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். தொடுகின்ற படங்கள், அவர் தனது மனைவி மற்றும் இளம் மகனைத் தழுவுவதைக் காட்டுகிறது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலித்தது. “வீட்டைப் போல உணர்ந்தேன்,” என்று அவர் எழுதினார், பல வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தனது அன்புக்குரியவர்களை கடைசியாக வைத்திருப்பதன் மகிழ்ச்சியையும் பாதிப்பையும் கைப்பற்றினார்.சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபன்ஷு சுக்லாவின் வரலாற்று வருவாய்ஜூலை 15 ஆம் தேதி ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூலில் ஷுக்லா பூமிக்கு திரும்பினார், இது ஐ.எஸ்.எஸ் -க்கு இந்தியாவின்…
அமராவதி/ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிந்த பின்னர், நதிநீர் பங்கீடு, அரசு ஊழியர்கள் பங்கீடு, நிதி நிலை பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் 10 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் தீர்வு காணப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து நேற்று டெல்லியில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சிஆர். பாட்டீல் முன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரு மாநில நீர் வளத்துறை அமைச்சர்கள், இரு மாநிலத்தின் தலைமை செயலாளர்கள் மற்றும் இரு மாநில உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ஆந்திர அரசு தரப்பில், ஜனகசர்லா – போலாவரம் லிங்க் அணை கட்டுவது குறித்து மட்டுமே பேசுவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால், தெலங்கானா அரசு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு, சைலம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது, பாலமூரு-ரங்காரெட்டி, திண்டி, சம்மக்கா சாகர், பிராணஹிதா-சேவள்ளு அணை விவகாரம் உள்ளிட்ட 13 அம்சங்களை பட்டியலில் சேர்த்திருந்தது. மொத்தம் 14 அம்சங்கள் குறித்து…
கிராமி விருது பெற்ற இசைக் கலைஞர்களான ரிக்கி கேஜ், சீன-அமெரிக்க இசைக்கலைஞரான டினா குவோ, ஜப்பானிய இசைக் கலைஞரான மசா டக்குமி ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள ‘காந்தி மந்த்ராஸ் ஆஃப் கம்ப்பேஷன்’ என்ற இந்த ஆல்பம் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து ரிக்கி கேஜ் கூறும்போது, “மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முதல் நெல்சன் மண்டேலா வரை பல தலைமுறைகளின் தலைவர்களுக்கு காந்தி, உந்துசக்தியாகத் திகழ்கிறார். அவருடைய தத்துவ ஜோதியை அணையாமல் காப்பதற்கான எங்களது சிறிய காணிக்கையே இந்த ஆல்பம். மகாத்மா காந்தியை போன்று எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இசைக்கும் உள்ளது” என்றார். லோனி பார்க், ஜோர்டன் புட்டோவ், கைலாஷ் சத்யார்த்தி, வானில் வெய்காஸ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை சுமதி ராம் இணை தயாரிப்பு செய்துள்ளார்.
சென்னை: மக்கள் வசிப்பிடங்களுக்கே அதிகாரிகள் சென்று, அரசின் சேவைகளை வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முதல்வரின் முகவரி துறையின் கீழ் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து, பொதுமக்களின் மனுக்களைப் பெற்று தீர்வுகாணும் திட்டங்கள் அவ்வபோது அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடங்கின. தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நகர்ப்புறத்தில் 1,428, ஊரகப் பகுதிகளில் 2,135 முகாம்கள் நடத்தப்படுகின்றன. வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும்…
சான் பிரான்சிஸ்கோவில் நடந்த எண்டோகிரைன் சொசைட்டியின் வருடாந்திர கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு புதிய ஆய்வில் ஒரு திடுக்கிடும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது: உடல் பருமனுடன் தொடர்புடைய புற்றுநோய் இறப்புகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்காவில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன. 1999 மற்றும் 2020 க்கு இடையில், உடல் பருமன் தொடர்பான புற்றுநோய்களிலிருந்து இறப்பு விகிதம் ஒரு மில்லியன் மக்களுக்கு 3.73 முதல் 13.52 ஆக உயர்ந்தது. இந்த உயர்வு பெண்கள், வயதான பெரியவர்கள், பூர்வீக அமெரிக்க மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களை விகிதாசாரமாக பாதிக்கிறது. இந்த அதிகரித்து வரும் பொது சுகாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான இலக்கு தடுப்பு, ஆரம்பகால திரையிடல் மற்றும் கவனிப்புக்கான மேம்பட்ட அணுகல் ஆகியவற்றின் அவசர தேவையை கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.உடல் பருமன் புற்றுநோய் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறதுஉடல் பருமன் இப்போது குறைந்தது 13 வகையான புற்றுநோய்களுக்கு ஒரு முக்கிய ஆபத்து காரணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது,…
கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது. திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொது செயலர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி வருகை தருவதற்கு ஒருநாள் முன்னதாக நேற்று இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆனால் மம்தா பானர்ஜியின் இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்கமொழி பேசும் ரோஹிங்கியாக்கள் மற்றும் சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி காப்பாற்றுவதற்காக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக…
