Author: admin

லண்டன்: வார இறுதியில் அயர்லாந்தில் தாக்கப்பட்ட ஒரு இந்திய மாணவர், இதன் விளைவாக அயர்லாந்தை விட்டு வெளியேறுவதாகவும், இந்தியாவில் இருந்து ஆன்லைனில் தனது போக்கை முடிப்பதாகவும் கூறினார்.அந்த நபர், தனது 20 வயதில், டப்ளினில் உள்ள ஃபேர்வியூ பூங்காவிலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தார். குழுவில் ஒருவர் தனது மெட்டல் வாட்டர் பாட்டிலை எடுத்து கண்ணுக்கு மேலே அடித்தார், இதனால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு எட்டு தையல் கிடைத்தது. அவர்கள் தாக்குதலை விசாரிப்பதையும் அவரது காயங்கள் “உயிருக்கு ஆபத்தானது” என்றும் கார்டா உறுதிப்படுத்தினார்.ஆகஸ்ட் 9 ஆம் தேதி டப்ளினில் ஒரு பஸ் நிறுத்தத்தில் தனது பணப்பையை எடுக்க முயன்ற ஏழு மற்றும் எட்டு வயதுடைய சிறுவர்களால் தனது 60 வயது தந்தையை துன்புறுத்தியதாக ஒரு இந்திய வம்சாவளி பெண் ரெடிட்டில் ஒரு…

Read More

புதுடெல்லி: காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானுக்கு வரவேண்டிய ஒரு சொட்டு நீரைக்கூட இந்தியா நிறுத்தி வைக்க முடியாது. தண்ணீரை நிறுத்த முயற்சித்தால், மறக்க முடியாத வகையில் பாகிஸ்தான் பாடம் கற்பிக்கும். சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் வரும் தனது உரிமைகளில் பாகிஸ்தான் சமரசம் செய்து கொள்ளாது” என்றார். பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சமீபத்​தில், அணு ஆயுத தாக்​குதல் அச்​சுறுத்​தல் விடுத்த நிலை​யில், பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பும் மிரட்​டல் விடுக்​கும் வகை​யில் பேசி​யுள்​ளார். இது குறித்து கருத்து தெரி​வித்த ஹைத​ரா​பாத் எம்​.பி ஒவைஸி கூறிய​தாவது: ஒரு நாட்​டின் பிரதம​ராக இருக்​கும் ஷெபாஸ் ஷெரீப் இது போல் முறையற்ற வகை​யில் பேசக் கூடாது. இது​போன்ற பேச்​சுக்​கள் எல்​லாம் இந்​தி​யாவை பாதிக்​காது. இந்​தி​யா​விடம்…

Read More

சென்னை: ​போ​ராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறித்து போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது என தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாக போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்​களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​காக ரூ.276 கோடிக்​கான ஒப்​பந்​தத்தை தனி​யாரிடம் ஒப்​படைப்​பதை எதிர்த்து தூய்​மைப் பணி​யாளர்​கள் மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக கடந்த 13 நாட்​களுக்​கும் மேலாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர். சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை முன்​பாக சட்​ட​விரோத​மாக நடை​பாதை மற்​றும் சாலையைமறித்து பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படுத்தி வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை அங்​கிருந்து அப்​புறப்​படுத்த கோரி தேன்​மொழி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​தார். தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, நீதிபதி சுந்​தர்​மோகன் அமர்​வில் இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடந்த வாதம்: மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்…

Read More

மன அழுத்தம் என்பது நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகும், இது உங்கள் மனநிலையை மட்டுமல்ல, உங்கள் செரிமான ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. வேலை அழுத்தங்கள் முதல் வேகமான வாழ்க்கை முறைகள் வரை, மன அழுத்தம் குடல் பாக்டீரியாவின் மென்மையான சமநிலையை சீர்குலைக்கும், செரிமானத்தை மெதுவாக அல்லது துரிதப்படுத்தும், மேலும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்) அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளை கூட மோசமாக்கும். குடல் மற்றும் மூளை குடல்-மூளை அச்சு வழியாக நெருக்கமாக தொடர்பு கொள்கின்றன, அதாவது மனதில் உள்ள மன அழுத்தம் குடலில் உடல் ரீதியான பதில்களைத் தூண்டும். இந்த இணைப்பைப் புரிந்துகொள்வது செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு இரண்டையும் நிர்வகிக்க முக்கியமானது. நடைமுறை உத்திகளைக் கடைப்பிடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆரோக்கியமான குடலை ஆதரிக்கவும் உதவும்.எப்படி குடல்-மூளை இணைப்பு செரிமானம் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறதுஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின் கூற்றுப்படி, செரிமான மற்றும் மன ஆரோக்கியத்தில் குடல்-மூளை…

Read More

புனே: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் நிகழ்ச்சியில் பேசும்போது, “ஒரு முறை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு முஸ்லிமை தாக்கினோம். அது மகிழ்ச்சியாக இருந்தது என சாவர்க்கர் நூலில் குறிப்பிட்டுள்ளார்” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாவர்க்கர் வம்சாவளியைச் சேர்ந்த சத்யாகி சாவர்க்கர் ராகுல் காந்தி மீது புனே நகரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், “மனுதாரர் நாதுராம் கோட்சேவின் வம்சாவளி ஆவார். எனவே மனுதாரரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறி புனே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Read More

சென்னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி – கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்​சார ரயில்​களின் சேவை​யில் இன்று முதல் 3 நாட்​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்​டிக்கு ஆக.14, 16, 18 ஆகிய தேதி​களில் காலை 10.30, முற்​பகல் 11.35 மணி, சென்னை சென்ட்​ரல் -சூலூர்​பேட்​டைக்கு காலை 10.15, நண்​பகல் 12.10, மதி​யம் 1.05, சூலூர்​பேட்டை – சென்னை சென்ட்​ரலுக்கு மதி​யம் 1.15, பிற்​பகல் 3.10, இரவு 9 மணி ஆகிய நேரங்​களில் இயக்​கப்​படும் மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்​படு​கிறது. சென்னை கடற்​கரை – கும்​மிடிப்​பூண்​டிக்கு காலை 9.40, நண்​பகல் 12.40, கும்​மிடிப்​பூண்டி – சென்னை கடற்​கரைக்கு காலை 10.55, கும் மிடிப்​பூண்டி – சென்னை சென்ட்​ரலுக்கு நண்​பகல் 12.00, பிற்​பகல் 2.30, 3.15, சூலூர்​பேட்டை – நெல்​லூருக்கு பிற்​பகல் 1.15, நெல்​லூர் – சூலூர்​பேட்​டைக்கு மாலை 6.45 மணிக்கு…

Read More

உங்கள் சொந்த தலைமுடியிலிருந்து தயாரிக்கப்பட்ட பேஸ்டுடன் உங்கள் பல் துலக்குவதை கற்பனை செய்து பாருங்கள், இது ஒரு நகைச்சுவையான DIY ஸ்டண்ட் அல்ல, ஆனால் பல் சேதத்தை சரிசெய்ய தீவிரமான, அறிவியல் ஆதரவு தீர்வாக. முடி, தோல் மற்றும் கம்பளி ஆகியவற்றில் காணப்படும் கடினமான புரதமான கெரட்டின், உமிழ்நீரில் உள்ள தாதுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது பல் பற்சிப்பி உண்மையில் பிரதிபலிக்கவும் மீண்டும் உருவாக்கவும் முடியும் என்பதை லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்புகள் சக மதிப்பாய்வு செய்யப்பட்டு மேம்பட்ட சுகாதாரப் பொருட்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் பொருள் என்னவென்றால், நாம் வழக்கமாக தரையில் இருந்து துடைக்கும் ஒரு பொருள் அல்லது தொட்டியில் டாஸ் செய்வது துவாரங்களைத் தடுப்பதற்கும், ஆரம்ப சிதைவை மாற்றியமைப்பதற்கும், அன்றாட உடைகள் மற்றும் கண்ணீரிலிருந்து பற்சிப்பியைப் பாதுகாப்பதற்கும் திறவுகோலைக் கொண்டிருக்கலாம். இன்னும் உற்சாகமாக, இந்த முறை தற்போது பல பல் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நச்சு பிளாஸ்டிக் பிசின்களை மாற்றக்கூடும்,…

Read More

புதுடெல்லி: “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்றுள்ளது சட்டவிரோதம் இல்லையா?” என்று பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவை தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்கும்படி ராகுல் காந்தியிடம் கேட்டுள்ளது. இந்நிலையில், பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வி​யா, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1983-ம் ஆண்​டு​தான் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, இந்​திய குடி​யுரிமை பெற்​றுள்​ளார். அதற்கு 3 ஆண்​டு​களுக்கு முன்​னர் கடந்த 1980-ம் ஆண்டு வாக்​காளர் பட்​டியலிலேயே சோனியா காந்தி பெயர் இடம்​பெற்​றது. அப்​போது அதற்கு கடும் எதிர்ப்பு…

Read More

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்​றாண்​டின் சவால்​களை கையாள்​வதற்​கேற்ப திறனுள்ள மாணவர்​களை ஆயத்​தப்​படுத்​தும் வழி​காட்​டி​யாகும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பிரத்​யேக நேர்​காணல்: மாநில கல்விக் கொள்​கை​யின் தற்​போதைய தேவை மற்​றும் நோக்​கம் என்ன? – முதல்​முறை​யாக மாநிலத்​துக்​கென தனி கல்விக் கொள்​கையை கொண்டு வந்​துள்​ளோம். தற்​போதைய நவீன கால​கட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​களை காண​முடிகிறது. அறி​வியல் உட்பட அனைத்து துறை​களி​லும் புதிய அம்​சங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. அதே​போல், உலகள​விலும் தொழில்​நுட்​பம் சார்ந்த விஷ​யங்​கள் மாறிவரு​கின்​றன. தற்​போது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), ரோபோட்​டிக்ஸ் போன்​றவை அனைத்து துறை​களி​லும் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன. நாம் இவ்​வளவு காலம் செய்​து​வந்த விஷ​யங்​களை மிக விரை​வாக​வும், திறம்​பட​வும் செய்து சவாலாக திகழ்​கின்​றன. அதற்​கேற்ப பள்​ளி​களில் வழங்​கப்​படும் கல்​வி​யானது அடுத்த 20 ஆண்​டு​களுக்கு பின்​னரும் மாணவர்​களுக்கு பயனுள்​ள​தாக இருக்க வேண்​டும். வளரும் தொழில்​நுட்​பங்​கள், மாறிவரும்…

Read More

விழுப்புரம்: தனி​யார் பள்ளி வகுப்​பறை​யில் திடீரென பிளஸ்-1 மாணவர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​துள்​ளது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​உள்ளது. விழுப்​புரம் மேல் தெரு​வைச் சேர்ந்​தவர் குமார் மனைவி மகேஸ்​வரி. கிராம உதவி​யாளர். இவரது மகன் மோகன்​ராஜ்(16), திருவிக வீதி​யில் உள்ள பிரபல தனி​யார் பள்​ளி​யில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்​தார். பள்​ளி​யில் தின​மும் காலை 7 மணிக்கு நடை​பெறும் சிறப்பு வகுப்​பில் மாணவர் மோகன்​ராஜ் பங்​கேற்​றுள்​ளார். இந்​நிலை​யில் நேற்று காலை வகுப்பு தொடங்​கு​வதற்கு முன்​பாக திடீரென மயங்கி விழுந்த மோகன்​ராஜ் மயங்கி கீழே விழுந்​தார். தகவலறிந்து பள்​ளிக்​குச் சென்ற தாயார் மகேஸ்​வரி, மகனை நேருஜி சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார். அங்கு மருத்​து​வர்​கள் மாணவரைப் பரிசோ​தித்​த​போது, ரத்​தத்​தில் ஆக்​ஸிஜன் அளவு குறை​வாக இருப்​பது தெரியவந்தது. இதையடுத்​து, மேல் சிகிச்​சைக்​காக மற்​றொரு தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்​து​வர்​கள், அவர் ஏற்கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக தெரி​வித்​துள்​ளனர். புத்தக சுமை…

Read More