Author: admin

பல தசாப்தங்களாக, வயதான அறிவியல் பெரும்பாலும் ஆண் உடல்களைச் சுற்றி வந்துள்ளது. ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் தலைப்புச் செய்திகள் இரண்டிலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தினர், பெரும்பாலும் இரத்தமாற்றம் முதல் VO2 அதிகபட்ச கண்காணிப்பு வரை தீவிரமான வயதான எதிர்ப்பு நடைமுறைகளை பரிசோதித்தனர். ஆனால் அமைதியாகவும் சக்திவாய்ந்ததாகவும், ஒரு புதிய புரட்சி விரிவடைகிறது. இது பெண் உடலைப் புரிந்துகொள்வதன் மூலம் தொடங்குகிறது, விதிவிலக்காக அல்ல, ஆனால் ஆரோக்கியமான திறப்பதற்கான திறவுகோலாக, அனைவருக்கும் நீண்ட காலம் வாழ்கிறது.ஒரு காலத்தில் ஒரு முக்கிய விஷயமாகக் கருதப்பட்ட, நீண்ட ஆயுள் ஆராய்ச்சியில் பெண் உயிரியல், இப்போது வயதான “தி கேனரி இன் தி கோல் சுரங்கத்தில்” என்று அழைக்கப்படுகிறது. மற்றும் கருப்பை? இந்த கதையில் இது மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட உறுப்பாக இருக்கலாம்.உண்மை. பெண்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். கட்டுக்கதை: அவர்களுக்கு வயது சிறந்ததுஎண்கள் பொய் சொல்லவில்லை. பெண்கள், சராசரியாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஐந்து…

Read More

டிரினிடாட்: பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 ரன்களில் சுருண்டது. இந்நிலையில், தற்போதுள்ள மேற்கு இந்தியத் தீவு கிரிக்கெட் வீரர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா வைத்துள்ளார். இதுகுறித்து பிரையன் லாரா கூறியதாவது: எங்கள் காலத்தில் நாங்கள் முதல் தர கிரிக்கெட்டை விளையாடினோம். தற்போது டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தங்களை பெறும் படிக்கல்லாக மேற்கு…

Read More

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்ட பணிகளை பருவமழை காலத்துக்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும். தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, முதலில் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன் விவரம்: அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு உருவாக்கம், பராமரிப்பு பணிகள், குறிப்பாக, குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவு, தெருவிளக்கு…

Read More

சென்னை: நடப்பாண்டு பகுதிநேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை பணிகள் இன்று (ஜூலை 18) முதல் தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினரிடம் அவற்றை கொண்டு சேர்க்கவும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் 2024-25ம் கல்வியாண்டு முதல் தோற்றுவிக்கப்பட்டன. அதன்படி சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக் கல்லூரிகள், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரம் அரசு கட்டிட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகளில் மற்றும் தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மையம் என 25 இடங்களில் இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கரகம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்மி,…

Read More

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து கடந்த வாரம் 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹெட்டிங்லி யில் நடைபெற்ற முதல் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் 2-வது போட்டியில் பும்ரா களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில்…

Read More

சென்னை: தமிழகம் முழு​வதும் பொது இடங்​கள், மாநில, தேசிய நெடுஞ்​சாலைகள் மற்​றும் உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு சொந்தமான இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், சாதி, மத அமைப்​பு​​களின் கொடிக் கம்​பங்​களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை​ உத்தரவிட்டிருந்தது. இந்த உத்​தரவை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது. அதன்​படி தமிழகம் முழு​வதும் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பாக நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் வரும் ஜூலை 24 வரை காலக்​கெடு விதித்து உத்தரவுகளை பிறப்​பித்து வரு​கிறார். இந்​நிலை​யில் கொடிக்​கம்​பங்​களை அகற்ற பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் மார்க்சிஸ்ட் சார்​பில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் தலை​மையி​லான அமர்​வு, 3 நீதிப​தி​கள் கொண்ட முழு அமர்வு விசாரித்து முடிவு செய்​யும் வகை​யில் தலைமை நீதிப​திக்கு பரிந்​துரைத்​தார். இந்​நிலை​யில் பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்ற எதிர்ப்பு தெரி​வித்து மார்க்சிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்முகம் உயர்…

Read More

சென்னை: எம்சிசி முருகப்பா ஹாக்கிப் போட்டியின் அரை இறுதியில் இந்தியன் ரயில்வேஸ், ஐஓசி அணிகள் மோதவுள்ளன. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (ஜூலை 19) மாலை 4 மணிக்கு இந்த அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள 2-வது அரை இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை அணியும் (ஐஎன்என்), இந்திய ராணுவ அணியும் (ஐஎன்ஏ) மோதவுள்ளன. முன்னதாக, நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி) அணி 5-2 என்ற கோல் கணக்கில் சாய் என்சிஓசி போபால் அணியை வீழ்த்தியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐஓசி அணியைத் தோற்கடித்தது.

Read More

சென்னை: ​மாற்​றுத் திற​னாளி​கள் எளி​தாக பயன்​படுத்​தும் வகை​யில் நவீன சக்கர நாற்​காலியை சென்னை ஐஐடி அறி​முகம் செய்​துள்​ளது. மாற்​றுத் திற​னாளி​கள், போரில் காயமடைந்து நடக்க முடி​யாத ராணுவத்​தினர் ஆகியோர் பயன்​பெறும் வகை​யில் உலக தரத்​தில், எடை குறை​வான ‘ஒய் டி ஒன்’ என்ற நவீன சக்கர நாற்​காலியை சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழு​வினர் வடிவ​மைத்​துள்​ளனர். டிரிம்​பிள் என்ற பன்​னாட்டு நிறு​வனத்​தின் பங்​களிப்​புடன் இதற்​கான ஆராய்ச்சி பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. சென்னை ஐஐடி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்​திய ராணுவ மருத்​துவ பணி​கள் தலைமை இயக்​குநர் வைஸ் அட்​மிரல் அனுபம் இந்த நாற்​காலியை அறி​முகப்​படுத்​தி​னார். அவர் பேசும்​போது, ‘‘மாற்​றுத்திற​னாளி​கள், போரில் கால்​கள் பாதிக்​கப்​பட்ட ராணுவத்​தினருக்கு ஐஐடி உரு​வாக்​கி​யுள்ள இந்த நவீன சக்கர நாற்​காலி மிக​வும் பயனுள்​ள​தாக இருக்​கும். ஐஐடி​யில் ஏராள​மான புதிய கண்​டு​பிடிப்​பு​கள், தொழில்​நுட்​பங்​கள் உரு​வாக்​கப்​பட்டு வரு​கின்​றன. புதிய கண்​டு​பிடிப்​பு​கள் அனைத்து தரப்பு மக்​களுக்​கும், குறிப்​பாக கிராமப்​புற மக்​கள், தொலை​தூர பகு​தி​யில் வசிப்​போருக்கு பயன்பட…

Read More

சென்னை: சென்னையில் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது. அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மகளிர் டென்னிஸ் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 32 வீராங்கனைகளும் (ஒற்றையர் பிரிவு), இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்று விளையாட உள்ளனர். போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு 250 புள்ளிகள் வழங்கப்படும். சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.2.40 கோடியாக உள்ளது. இந்நிலையில் போட்டி குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக அரசு இந்த ஆண்டு சென்னையில் டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டியை நடத்த ரூ.12 கோடியை ஒதுக்கியுள்ளது.…

Read More

சென்னை: ‘இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசிய கல்விக் கொள்கை (NEP) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது. என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் – NCERT ) வெளியிட்ட 7 ஆம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தானிய ஆட்சி பற்றிய எந்தக் குறிப்பும் அளிக்கப்படவில்லை. இதுவரை இந்தப் புத்தகத்தில் முகலாயப் பேரரசு மற்றும் டெல்லி சுல்தானியர்கள் குறித்து சுருக்கமான பாடங்கள் இருந்தன. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில் ஐந்து தலைப்புகளின் கீழ் 12 பாடங்கள் உள்ளன. அதன் முதல் தலைப்பு ‘இந்தியாவும் உலகமும்: நிலமும்…

Read More