இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வரவேற்றது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ள தகவல் குறித்து பார்ப்போம். ”பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட மற்றும் செயலிழந்த அமைப்பு ஆகும். அந்த பணியை பாகிஸ்தான் அரசு கவனமாக செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதன் உறுப்பினர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்க்கின்ற நாடுகளில் உலகளவில் முன்னணியில் உள்ளது. உலக அமைதிக்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் லஷ்கருக்கு பங்கு உள்ளதாக சொல்லும் இந்தியாவிடம் ஆதாரம் ஏதுமில்லை. உலக அளவில் பாகிஸ்தானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில்…
Author: admin
இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. வேலு பிரபாகரன், ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிக்பாக்கெட், உருவம், உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், பிரபு நடித்த ‘நாளைய மனிதன்’ என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். இதைத் தொடர்ந்து ‘அதிசய மனிதன்’ என்ற படத்தை இயக்கினார். பின்னர் ‘அசுரன்’, ‘ராஜாகிளி’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3,ரெய்டு, வெப்பன், கஜானா உள்பட பல படங்களில் நடித்தார். கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். அவர் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.திரைத்துறையினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்கு…
சென்னை: திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை சரிவர அள்ளப்படாத காரணத்தால் சுகாதாரச் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. கொசுக்களை அழிப்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கொசு மருந்து அடிப்பதில்லை. மேலும், இப்பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை. பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படுவதில்லை. நகராட்சியின் இதுபோன்ற நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்வது குறித்து, நகராட்சி நிர்வாகத்தை அணுகினால் உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. எனவே, திருநின்றவூர் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் மெத்தனமாக இருந்து வரும் திமுக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்…
நீங்கள் காபியால் அவர்களின் அன்றாட மகிழ்ச்சியின் அளவாக சத்தியம் செய்கிறீர்களா, பின்னர் நீங்கள் இடைநிறுத்தப்பட்டு படிக்க வேண்டும், ஏனெனில் உலகெங்கிலும் மிகவும் நேசித்த இரண்டு வகை காபிகளில் நாங்கள் ஆழமாக ஆராய்வோம். சுவாரஸ்யமாக, அரபிகா (காஃபியா அரபிகா) மற்றும் ரோபஸ்டா (காஃபியா கேனெஃபோரா) ஆகியவை மிகவும் விரும்பப்பட்ட இரண்டு காபி வகைகளில் இரண்டு, ஆனால் அவற்றின் சுவை முதல் சுகாதார அம்சங்கள் வரை காஃபின் உள்ளடக்கம் வரை, இந்த இரண்டு காபியும் உலகெங்கிலும் உள்ள காபி காட்சியின் 90 சதவீதத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன.எது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது?இந்த இரண்டு காபி வெரிட்டிகளும் ஒத்ததாகத் தெரிகிறது, ஆனால் இரண்டையும் வேறுபடுத்தும்போது, அவற்றின் சுவை மற்றும் சுவை சுயவிவரம். அதே நேரத்தில், ரோபஸ்டாவிற்கும் அரபிகாவும் அவற்றின் சுவையில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது, அதே நேரத்தில் அரபிகா அதன் மென்மையான, லேசான மற்றும் பெரும்பாலும் பழம் அல்லது மலர் சுவைக்கு லேசான அமிலத்தன்மைக்கு பெயர்…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது இஸ்லாம்பூர். இந்தப் பகுதியின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பான ஷிவ் பிரதிஸ்டான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த கோரிக்கை கடந்த 1986-ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடரின் கடைசிநாள் அலுவல்கள் நேற்று நடைபெற்றன. அப்போது, உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை அமைச்சர் சாகன் புஜ்பால் பேசும்போது, ‘‘சாங்லி மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர், ஈஸ்வர்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்’’ என்றார்.
சென்னை: விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ உடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம் பொங்கல் ரேஸில் மோதுவது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பதில் அளித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு பொங்கல் பந்தயத்தில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் ‘பராசக்தி’ படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசுகையில், “சிவகார்த்திகேயன் கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய ஒரு நடிகர். அவரிடம் ஒரு நேர்மை, ஈடுபாடு, பக்கத்து வீட்டு…
சென்னை: சென்னை ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை, ராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் அமைந்துள்ள பால் டிப்போ பகுதியில் தண்டையார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 60 ஆயிரம் சதுரஅடி நிலத்தில் 159 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் 75 ஆண்டு களாக மாட்டுக் கொட்டகை அமைத்து பால் வியாபாரம் செய்து இவ்விடத்திலேயே வசித்து வந்தனர். மழை வெள்ளத்தில் பாதிப்பு இந்த இடம் தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து 159 குடும்பங்களும் மிகுந்த பாதிப்படைவதால் இவர்களை மறுகுடியமர்வு அமர்த்த வேண்டி இருந்தது. கடந்த 2024-ம் ஆண்டு மழைக்காலத்தில், வெள்ள நீரினால் சூழப்பட்ட…
அல்சைமர் மற்றும் வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியின் அதிகரித்து வரும் அலைகளுடன் உலகம் தொடர்ந்து புரிந்துகொண்டு வருவதால், இந்த ஆரம்ப அறிவாற்றல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பை வழங்கக்கூடிய அன்றாட வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் உணவுப் பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர், அவற்றில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடமிருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு ஆச்சரியமான எளிய உணவுப் பொருள்: ஒரு முட்டை. அவர்களின் ஆராய்ச்சி மாதிரியிலிருந்து சேகரிக்கப்பட்ட பிரத்யேக தரவுகளின் அடிப்படையில் தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, வாரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது வயதானவர்களிடையே அல்சைமர் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கக்கூடும் என்று கூறுகிறது.அல்சைமர் என்றால் என்ன?வயதான தேசிய நிறுவனத்தின் கூற்றுப்படி, அல்சைமர் டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவமாகும், இது மூளைக் கோளாறு ஆகும், இது ஒரு நபரின் நினைவகம் மற்றும் சிந்தனை திறன்களை மெதுவாக அழிக்கிறது. அதன் அறிகுறிகள் பின்வருமாறு:…
புதுடெல்லி: நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பல்ராம்பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்று அழைக்கப்படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதையடுத்து இவருக்கு வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்தது. பட்டியல் சாதியினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள நபர்களை குறிவைத்து சட்டவிரோத மதமாற்ற நடவடிக்கையில் சிங்கூர் பாபா ஈடுபட்டதையடுத்து அவர் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் நீத்து என்கிற நஸ்ரின் என்ற பெண்ணுடன் ஜூலை 5-ம் தேதி கைது செய்யப்பட்டார். சிங்கூர் பாபா உள்ளிட்டோர் மீது ஏடிஎஸ் வழக்கு பதிவு செய்தது. சில நாட்களுக்கு முன்பு ஏடிஎப் நடத்திய சோதனையில் சிங்கூர் பாபாவிடம் இருந்து முக்கிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 2022-ல் நடைபெற்ற உ.பி. தேர்தலின்போது பாபாவிடம் இருந்து பணம் பெற்ற பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த, 2022 தேர்தலுக்கான…
லாஸ் வேகாஸ்: ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி அரை இறுதிக்கு முன்னேறினார். அதேவேளையில் ஆர்.பிரக்ஞானந்தா பட்டம் வெல்வதற்கான வேட்கையில் இருந்து வெளியேறினார். ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் மோதினார். முதல் ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகைசி 64-வது நகர்த்தலின் போது டிரா செய்தார். 2-வது ஆட்டத்தில் வெள்ளை காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன் எரிகைசி 69-வது நகர்த்தலின் போது வெற்றியை வசப்படுத்தினார். முடிவில் அர்ஜுன் எரிகைசி 1.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய…
