வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணுக்கால் பகுதியில் வீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த அப்டேட்டை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின்போது அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்ததும், கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்ததும் கவனத்துக்கு வந்தது. அதை மறைக்கும் வகையில் ஒப்பனை செய்திருந்தார் ட்ரம்ப். இதனால் அவரது உடல்நலன் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில், கணுக்கால் வீக்கம் காரணமாக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையின் மருத்துவ பிரதிநிதிகள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை அவருக்கு மேற்கொண்டனர். அதில் அவருக்கு காலில் வீக்கத்தை ஏற்படுத்தும் சிவிஐ (Chronic Venous Insufficiency) எனப்படும் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் நரம்பு ரீதியான பாதிப்பு இது என்று வெள்ளை மாளிகை மருத்துவக்…
Author: admin
மதிமுக-வில் தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மனம் திறந்து பேசி இருக்கிறார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு நேற்று அவரளித்த பேட்டியின் தொடர்ச்சி இது… மக்கள் நலக் கூட்டணி இயல்பாக உருவானதா… வேறு சில காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதா? மக்கள் இயக்கமாக தோன்றி, மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் மாறியது. அதன் நோக்கம் புனிதமானதாக இருந்தாலும், திமுக வெற்றி வாய்ப்பை இழக்கவே இந்தக் கூட்டணி உதயமானது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது. ஒரு மாற்று சக்தியாக, மக்கள் நலக் கூட்டணியை, மக்கள் அங்கீகரிக்கவில்லை. கேப்டன் விஜயகாந்த் உட்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர். இப்படி ஒரு தோல்வி வரும் என்று வைகோ ஏற்கெனவே யூகித்து இருந்ததால் தான், கோவில்பட்டியை தனக்காக கேட்டு வாங்கியவர், கடைசி நேரத்தில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார். துரை வைகோவுக்கும் உங்களுக்கும் இடையே நடந்த மோதலின் போது, வைகோ உங்கள் பக்கம்…
பொதுவான இந்திய மசாலாப் பொருட்களான கலோன்ஜி மற்றும் ஜீரா தனித்துவமான முடி வளர்ச்சி நன்மைகளை வழங்குகிறார்கள். கலோன்ஜி எண்ணெய் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் நீண்டகால மறுசீரமைப்பிற்கான உச்சந்தலையை வளர்க்கிறது, இது பலவீனமான அல்லது மெல்லிய உச்சந்தலைகளுக்கு ஏற்றது. இரும்பு நிறைந்த ஜீரா, உச்சந்தலையை சுத்தப்படுத்துகிறார், சுழற்சியை மேம்படுத்துகிறார், விரைவான புதுப்பிப்பை வழங்குகிறது. உகந்த முடி ஆரோக்கியத்திற்கான ஜீராவின் சுத்திகரிப்பு நடவடிக்கையுடன் கலோன்ஜியின் ஆழ்ந்த ஊட்டச்சத்து இரண்டையும் இணைத்தல். உங்கள் தலைமுடியை வேகமாகவும், அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர்க்க முயற்சிக்கிறீர்கள் என்றால், இயற்கையான முடி பராமரிப்பு ஆலோசனைகள் முழுவதும் கலோன்ஜி (கருப்பு விதை) மற்றும் ஜீரா (சீரகம்) ஆகியவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை உங்கள் சமையலுக்கான மசாலா மட்டுமல்ல, அவை உங்கள் உச்சந்தலையில் மற்றும் இழைகளுக்கான நன்மைகளால் நிரம்பியுள்ளன. ஆனால் முடி மீண்டும் வளர்ந்து வரும்போது, உண்மையில் எது சிறப்பாக செயல்படுகிறது? அதில் இறங்குவோம்.ஏன் கலோன்ஜி ஒரு உச்சந்தலையில் ஹீரோகலோன்ஜி ஆயுர்வேத மற்றும் மத்திய…
ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு துரோகம் செய்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார். சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய மக்களுக்கும், அதன் எல்லைக்கும், அதன் பாதுகாப்பு படைகளுக்கும் துரோகம் செய்யக் கூடாது என்ற வலுவான செய்தி உலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துரோகம் செய்பவர்கள் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாட்டை பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய பணியை செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியின்போது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தீவிரவாத தாக்குதல்களால் நாடு பாதிக்கப்பட்டது. அடுத்த 100 ஆண்டுகள் கூட்டுறவுக்கான ஆண்டுகளாக இருக்கும். கூட்டுறவுச் சங்கங்களை ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு ஏழைக்கும், ஒவ்வொரு விவசாயிக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் மத்தியில் கூட்டுறவு அமைச்சகம்…
சென்னை: சசிகுமார் நடிப்பில் உருவான ‘ஃப்ரீடம்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்கள், ஏற்பாடுகளை படக்குழு தீவிரமாக செய்து முடித்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அன்று பொருளாதார பிரச்சினை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனையடுத்து ட்ரெய்லர் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பு காரணமாக படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் படம் ஒத்திவைக்கப்பட்டது குறித்து விஜய் கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்பாராத சூழல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ‘ஃப்ரீடம்’ திரைப்படம் விரைவில் வெளியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமாருடன் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் உண்மையைக் கதையை இப்படம்…
சென்னை: தொழில்நுட்ப மேம்பாட்டு பணி காரணமாக, அண்ணாசாலை தலைமை அஞ்சலகம் ஆக.3, 4 ஆகிய தேதிகளில் செயல்படாது என்று சென்னை நகர அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில், அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மென்பொருள் (ஏபிடி 2.0) ஆக.5-ம் தேதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கைப்படி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இந்த டிஜிட்டல் தொழில் நுட்ப சேவையை சுமூகமாகவும், பாதுகாப்பான முறையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, ஆக.3, 4 ஆகிய நாட்கள் “பரிவர்த்தனை இல்லா நாட்களாக” கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு நாட்களும் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது. இந்த தற்காலிக சேவை நிறுத்தம், புதிய தொழில்நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்த பரிவர்த்தனை இல்லா நாட்களை கணக்கில் கொண்டு, பொதுமக்கள் தங்கள் அஞ்சல் சேவைகளை…
பாட்னா: பிஹாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பிஹாரில் மின்சார கட்டணம் ஏற்கெனவே குறைவாக உள்ளது. இந்நிலையில், வீடுகளுக்கு மாதத்துக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இது வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது ஜூலை மாதத்துக்கான பில்லில் 125 யூனிட் வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதன்மூலம் 1.67 கோடி குடும்பத்தினர் பயனடைவார்கள். மாநிலத்தில் சூரிய மின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, அடுத்த 3 ஆண்டுகளில் சூரிய சக்தி உட்பட மாற்று ஆதாரங்கள் மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளம்…
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கவும், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்க நல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய 5 இடங்கள் மற்றும் நுங்கம்பாக்கத்தில் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 10 மண்டலங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னையில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் என 2 லட்சம் நாய்களுக்கும் அதன் விவரங்கள் ஆன்லைன்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் கால்களில் வீக்கம் மற்றும் சிராய்ப்பு ஆகியவற்றிற்காக பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாள்பட்ட சிரை பற்றாக்குறை என அழைக்கப்படும் தீங்கற்ற நிலை இருப்பது கண்டறியப்பட்டது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட்டின் உத்தியோகபூர்வ அறிக்கையில், ஜனாதிபதி, 79, நிலையான “கையால் நடுங்கும்” மற்றும் “ஆஸ்பிரின்” (தடுப்பு இருதய ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக) பயன்படுத்தப்படுவதால் இந்த நிலையால் அவதிப்படுகிறார் என்பது தெரியவந்தது. அவரது அறிக்கைகள் அனைத்தும் “சாதாரண வரம்புகளுக்குள் உள்ளன” என்றும், அவருக்கு “சாதாரண இருதய அமைப்பு மற்றும் செயல்பாடு, இதய செயலிழப்பு, சிறுநீரகக் குறைபாடு அல்லது முறையான நோய் ஆகியவற்றின் அறிகுறிகள் எதுவும் இல்லை” என்றும் அவர் கூறினார்.ஆனால் நாள்பட்ட சிரை பற்றாக்குறை என்றால் என்ன, அது என்ன அறிகுறிகளை ஏற்படுத்துகிறது? நாங்கள் பார்ப்போம் …நாள்பட்ட சிரை பற்றாக்குறை என்றால்உங்கள் கால்களின் நரம்புகள் இரத்தத்தை இதயத்தை நோக்கி சரியாக பம்ப் செய்ய முடியாதபோது நாள்பட்ட சிரை…
கோப்பு புகைப்படம்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஐ.எஸ்.எஸ் கப்பலில் தனது 18 நாள் பணியை வெற்றிகரமாக முடித்ததற்காக இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை வாழ்த்தும் ஒரு தீர்மானத்தை அமைச்சரவை புதன்கிழமை நிறைவேற்றியது, இது இந்தியாவின் விண்வெளி திட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிவிக்கிறது மற்றும் எதிர்கால திட்டங்களின் தங்க பார்வையை அளிக்கிறது. தீர்மானம் குறிப்பிடப்பட்டுள்ளது: “குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் நோக்கம் ஒரு தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல – இது ஒரு புதிய தலைமுறை இளம் இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகும். இது விஞ்ஞான மனநிலையைப் பற்றவைக்கும், ஆர்வத்தைத் தூண்டும், மற்றும் அறிவியலிலும் புதுமைகளைத் தழுவிக்கொள்ள எண்ணற்ற இளைஞர்களை ஊக்குவிக்கும்.” “குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா பூமிக்கு திரும்புவதைக் கொண்டாடுவதில் அமைச்சரவை நாட்டில் இணைகிறது, ஐ.எஸ்.எஸ்ஸில் தனது வரலாற்று சிறப்புமிக்க 18 நாள் பணியை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து,” ஐ & பி அமைச்சர்…
