பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68. தமிழில் ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘ராஜாளி’, ‘காதல் கதை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவரது படங்களில் இடம்பெற்ற சாதி, மத, பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வசனங்கள் வரவேற்பை பெற்றன. 2011-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடைசியாக 2017-ம் ஆண்டு ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக வேதிகா, யோகிபாபு நடித்த ‘கஜானா’ படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் இயக்கிய ‘காதல் கதை’ படத்தில் நாயகியாக நடித்த ஷிர்லே தாஸ் என்பவரை தனது 60-வது வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் வேலு பிரபாகரன். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வேலு பிரபாகரனுக்கு நேற்று…
Author: admin
சென்னை: தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் 10-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஓவியம், இசை, உடற்கல்வி, கணினி என பல்வேறு பாடங்களைப் பயிற்றுவிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத திமுக அரசால், சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, இதை இதுவரை நிறைவேற்றாததால் போராடும் ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மிரட்டுவதும் கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அழைத்துப் பேசி கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என பள்ளிக்கல்வித்…
மாரடைப்பின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள், குழந்தைகளில் விமர்சன இதய நிலைமைகளுடன், பெரியவர்களில் காணப்படுவதிலிருந்து வேறுபடுகின்றன. இவை பின்வருமாறு:பிறவி (பிறப்பிலிருந்து) இதய குறைபாடுகள்: இதயத்தில் கட்டமைப்பு சிக்கல்கள் அல்லது சாதாரண இரத்த ஓட்டத்தை பாதிக்கும் இரத்த நாளங்கள்.கவாசாகி நோய்: இரத்த நாள அழற்சியை ஏற்படுத்தும், மற்றும் இதயத்தின் தமனிகளை சேதப்படுத்தும் ஒரு நோய்.இதய தசையின் ஆரோக்கியம் வைரஸ் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுகிறது, இது மயோர்கார்டிடிஸுக்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக தசை பலவீனம் மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.இதயத்தின் மின் அமைப்பு பிறப்பிலிருந்து சில குழந்தைகளில் அசாதாரண தாளங்களைக் காட்டுகிறது, அவ்வப்போது ஆபத்தான இருதயக் கைது ஏற்படுகிறது.அசாதாரண இதய தாளங்கள்: சில குழந்தைகள் இதயத்தில் மின் சிக்கல்களுடன் பிறக்கின்றனர், இது ஆபத்தான தாளங்களைத் தூண்டும் மற்றும் அரிதாக, இருதயக் கைது.அரிதான, மரபணு அல்லது வாங்கிய நிலைமைகள்: இரத்த உறைவு கோளாறுகள், அதிர்ச்சி (மார்புக்கு திடீரென அடி போன்றவை) மற்றும் அரிய நோய்களும் குற்றவாளிகளாக இருக்கலாம்.
அய்ஸ்வால்: இந்தியாவின் மிசோரம் எல்லையை ஒட்டி மியான்மரின் சின் மாநிலம் உள்ளது. இங்கு சிஎன்டிஎப், சிடிஎப் ஆகிய இரு ஜனநாயக ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் இடையே இம்மாத தொடக்கத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால் இந்திய எல்லையை ஒட்டி வசிக்கும் 3,700-க்கும் மேற்பட்டோர் மிசோரம் மாநிலத்தின் 3 கிராமங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் இரு கிளர்ச்சிக் குழுக்கள் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 2,962 மியான்மர் அகதிகள் தங்கள் நாடு திரும்பி விட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
பார்சிலோனா: ஸ்பெயின் வீரர் லாமின் யாமல், பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு மெஸ்ஸியின் 10-ம் எண் ஜெர்ஸியை வழங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம். கால்பந்து உலகின் வருங்கால நட்சத்திரமாக அறியப்படுகிறார் 18 வயதான லாமின் யாமல். அதற்கான தகுதியை கிளப் அளவிலும், சர்வதேச அளவிலும் அவர் நிரூபித்துள்ளார். 2023 சீசன் முதல் பார்சிலோனா சீனியர் அணியில் அவர் விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக 18 கோல்கள் பதிவு செய்துள்ளார். சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 25 அசிஸ்ட்களை செய்து உதவியுள்ளார். லா லிகா, கோபா தெல் ரே, ஸ்பானிஷ் சூப்பர் லீக் உள்ளிட்ட உள்நாட்டு தொடரில் அவர் இடம்பெற்ற பார்சிலோனா அணி நடப்பு சீசனில் பட்டம் வென்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக்ஸ் தொடரிலும் அரையிறுதி வரை அந்த அணி முன்னேறி இருந்தது. மறுபக்கம் பார்சிலோனா அணிக்காக 2004 முதல் 2021 வரையில் மெஸ்ஸி விளையாடி இருந்தார்.…
சென்னை: ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘பாட்ஷா’ படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் “ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது. அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. பெரிய திரையில் மாயாஜாலத்தை தவறவிடாதீர்கள். அன்புள்ள ரஜினி சார். ‘பாட்ஷா’வுக்கு காரணம் நீங்கள் தான். உங்கள் அற்புதமான நடிப்பு, உங்களது திரை ஆளுமை. நீங்கள் பாட்ஷாவாக நடித்தது மட்டுமல்ல, பாட்ஷாவாகவே மாறினீர்கள். இப்போதும் திரையுலக வரலாற்றில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் தான். புகழ்பெற்ற பாட்ஷா குழுவான ஆர்.எம்.வி சார்,…
கோவை: தெற்கு ரயில்வே சார்பில் கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 15 நிமிடங்களுக்கு முன் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை -பெங்களூரு உள்ளிட்ட 8 வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் ஜூலை 17-ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத டிக்கெட்களை 15 நிமிடங்களுக்கு முன்பு வரை முன்பதிவு இல்லாத டிக்கெட்களை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களில் கூடுதல் பயணிகளை ஏற்றி செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 8 வழித்தடங்கள் விவரம்: மங்களூரு – திருவனந்தபுரம் சென்ட்ரல், திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல், சென்னை எழும்பூர்- நாகர்கோயில், நாகர்கோயில்-சென்னை எழும்பூர், கோவை -பெங்களூரு, மங்களூரு- மட்கான், மதுரை-பெங்களூரு, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிவிப்பில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கோகோ கோலா தனது அமெரிக்க பானங்களில் உண்மையான கரும்பு சர்க்கரையுடன் உயர்-பிரக்டோஸ் சோளம் சிரப்பை (எச்.எஃப்.சி) மாற்ற ஒப்புக் கொண்டதாகக் கூறினார். ட்ரூத் சோஷியல் மூலம் பேசிய டிரம்ப் நிறுவன நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, மாற்றத்தை தனது நிர்வாகத்தின் “மேக் அமெரிக்கா மீண்டும்” (மஹா) முன்முயற்சியுடன் இணைத்தார். கோகோ கோலா சுவிட்சை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அது விவாதங்களை ஒப்புக் கொண்டது, மேலும் கூடுதல் விவரங்களை விரைவில் உறுதியளித்தது. இந்த சாத்தியமான மாற்றம் “கரும்பு சர்க்கரை கோக்” மற்றும் அதன் வழிபாட்டு எதிர்ப்பாளர் “மெக்ஸிகன் கோக்” ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தைத் தூண்டியுள்ளது, இவை இரண்டும் உடல்நல உணர்வுள்ள நுகர்வோர் மற்றும் சோடா தூய்மைவாதிகள் மத்தியில் பிரபலமானவை, மிருதுவான சுவைக்காக பிரபலமாக உள்ளன.கரும்பு சர்க்கரை கோக் அல்லது மெக்ஸிகன் கோக் என்றால் என்ன?கரும்பு சர்க்கரை கோக் என்பது கோகோ கோலாவைக் குறிக்கிறது, இது சுக்ரோஸ் (டேபிள்…
பாட்னா: பிஹார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர் மீது பல கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் பக்ஸர் சிறையிலிருந்து பகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இவர் சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்து பாட்னா நகரில் உள்ள பரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையறிந்த இவரது எதிரணியைச் சேர்ந்த கும்பல், மருத்துவமனையிலேயே இவரை சுட்டுக் கொல்ல திட்டமிட்டது. இந்நிலையில் பரஸ் மருத்துவமனையில் நேற்று காலை 5 பேர் நுழைந்தனர். சந்தன் மிஸ்ரா சிகிச்சை பெறும் அறையை நெருங்கியதும், 5 பேரும் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்தனர். சந்தன் மிஸ்ரா சிகிச்சை பெறும் அறையில் புகுந்து அவரை பல இடங்களில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சந்தன் மிஸ்ரா இறந்தார். கொலையாளிகள் நுழையும் வீடியோ வைரலாக பரவியது. இந்த கும்பல், சந்தன் மிஸ்ஸாவுக்கு எதிராக செயல்படும் சந்தன் செரு தலைமையிலான ரவுடிகள்…
சென்னை: தொலைதூரக் கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பல்கலைக்கழகமான இக்னோ தொலைதூரக் கல்வி திட்டம் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி இந்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இக்னோவில் பிஇ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்து கொள்ளலாம்.…
