புதுடெல்லி: நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேச பிரிவினை நிகழ்ந்த ஆகஸ்ட் 14ம் தேதியை, பிரிவினை துயரத்தின் நினைவு தினமாக நாடு அனுசரித்து வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த திடீர் வன்முறையையும் வலியையும் நினைவுகூரும் வகையில், இந்தியா #PartitionHorrorsRemembranceDay ஐ அனுசரிக்கிறது. அவர்களின் மன உறுதியை போற்றும் நாளாகவும் இது அமைகிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொள்வதற்கான அவர்களின் திறனும், அத்தகைய ஒரு சூழலிலும் புதிதாகத் தொடங்குவதற்கான அவர்களின் தேடலும் போற்றுதலுக்குரியவை. பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளனர். நமது நாட்டை ஒன்றிணைக்கும் நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது நீடித்த பொறுப்பை இந்த நாள் நினைவூட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்…
Author: admin
தெலங்கானா மாநில அரசு தடை செய்துள்ள சட்ட விரோத ஆன்லைன் விளையாட்டு செயலிகளை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், பண மோசடி நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அந்த விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், லட்சுமி மன்சு, நித்தி அகர்வால் உள்பட 29 திரை பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. அவர்களுக்கு சம்மனும் அனுப்பி இருந்தது. பிரகாஷ் ராஜ், விஜய தேவர கொண்டா, ராணா ஆகியோர் ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் தொடர்ச்சியாக நடிகை லட்சுமி மன்சு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் வாக்குமூலங்களை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
சென்னை: சென்னை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினம் நாளை (ஆக.15) கொண்டாடப்படுகிறது. அன்று மது விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகள் ஆகியவற்றின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக், மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஓட்டல் பார்கள் என அனைத்தும் ஆக.15-ல் மூடப்பட வேண்டும். அறிவிப்பை மீறி மது விற்பனை செய்தால், மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஐரோப்பா பயணம் நம்மில் பெரும்பாலோர் புக்மார்க்கு மற்றும் பகல் கனவு கண்டிருக்கிறீர்களா? உங்கள் திட்டங்களை பின்னுக்குத் தள்ளிய உங்கள் கவலைகளில் ஒன்று பாதுகாப்பு என்றால், அந்த கவலைகளை ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது. உங்கள் அடுத்த பயணத்தில் மன அமைதிக்கு வணக்கம் சொல்லலாம்! ஐஸ்லாந்தின் பனிப்பாறை முத்தமிடப்பட்ட அமைதியானது முதல் போர்ச்சுகலின் வெயிலில் நனைத்த வீதிகள் வரை, ஐரோப்பாவின் பாதுகாப்பான நாடுகள் பூஜ்ஜிய மன அழுத்தத்துடன் அழகிய காட்சிகளை வழங்குகின்றன. (தரவு பாண்டாக்களிலிருந்து பெறப்பட்ட தரவு)பாதுகாப்பு என்பது கதவுகளை பூட்டுவது அல்லது ஸ்கெட்ச் சந்து வழிகளைத் தவிர்ப்பது மட்டுமல்ல, இது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மனநிலை மற்றும் உண்மையில் நீங்கள் எங்கிருந்தாலும் முக்கியமானது, குறிப்பாக நீங்கள் பயணம் செய்யும் போது. எனவே, பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட உலகளாவிய அமைதி குறியீடு (ஜிபிஐ), சமூக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச மோதல்கள் மற்றும்…
கனடாவின் டொரண்டோ நகரில் வசிக்கும் ரேடியோ ஜாக்கியான ஆர்ஜே சாய், ஒரே நேரத்தில், ‘பிரெய்ன்’, ‘ஷாம் தூம்’ ஆகிய 2 திரைப் படங்களைத் தயாரிக்கிறார். இதில் ‘பிரெய்ன்’ படத்தை, விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். இவர், ‘தாதா 87’, ‘பவுடர் ‘, ‘ஹரா’ படங்களை இயக்கியவர். ‘ஷாம் தூம்’ படத்தை நவீன்குமார் இயக்குகிறார். இந்த அறிவிப்பை தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆக.12-ம் தேதி சாய் வெளியிட்டார். ஆர்ஜே சாய் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் இந்தப் படங்களைத் தயாரிக்கும் ஆர்ஜே சாய், ‘ஷாம் தூம்’ படத்தின் கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார். ஆர்ஜே சாய் இதுகுறித்து அவர் கூறும்போது , “கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் திரைத்துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது என் லட்சியம். இந்தப் படங்கள் வாயிலாக என்னுடைய பயணத்தைத் தொடங்குகிறேன். சிறந்த கதைகளைக் கொண்ட படங்களையும் திறமையான இளைஞர்களையும் எனது நிறுவனம் ஊக்குவிக்கும். பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி…
சென்னை: உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாக கூறி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞரான வாஞ்சிநாதன், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு, இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வாஞ்சிநாதனை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடக் கோரி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிலர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து, நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகளில் முன்னாள் நீதிபதிகள் தலையீடு செய்யக் கூடாது என தடை விதிக்க கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், “நீதித்துறை…
நீங்கள் எப்போதாவது ஒரு உழவர் சந்தை, கார்டன் சென்டர் அல்லது உங்கள் அத்தை கொல்லைப்புறத்தில் இருந்திருந்தால், ரோஸ்மேரி போல தோற்றமளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இங்கே விஷயம், இயற்கை தாய் தந்திரங்களை விளையாட விரும்புகிறார். பல தாவரங்கள் ரோஸ்மேரியைப் போலவே சந்தேகத்துடன் இருக்கின்றன, நீங்கள் தேடுவதை உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தவறான மூலிகையை முனகலாம் (அல்லது சமைக்கலாம்).படி ஒன்று: வடிவத்தையும் அளவையும் அறிந்து கொள்ளுங்கள்ரியல் ரோஸ்மேரி (ரோஸ்மரினஸ் அஃபிசினாலிஸ்) ஒரு மரத்தாலான வற்றாத மூலிகை, இது ஒரு சிறிய பைன் மரம் ஒரு ஹேர்கட் கிடைத்தது போல் தெரிகிறது. அதன் இலைகள் ஊசி போன்றவை, ஆனால் கூர்மையானவை அல்ல, மேலும் அவை நிமிர்ந்த, மர தண்டுகளுடன் அடர்த்தியான கொத்துக்களில் வளர்கின்றன.உயரம்: வழக்கமாக தொட்டிகளில் வளரும் போது 1–3 அடி, ஆனால் தரையில் அது 4–5 அடி உயரம் வரை கிடைக்கும்.தண்டுகள்: அடிவாரத்தில் வூடி, உதவிக்குறிப்புகளுக்கு அருகில் பசுமை.இலைகள்: குறுகலான, ஒரு அங்குல…
சென்னை: தமிழ்நாடு முதல்வர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு கடந்த ஜூலை 14 முதல் என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 10 லட்சம் போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுக்கான கடைசி நாள் ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இணையதள முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் வரும் 20-ம் தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Last Updated : 14 Aug, 2025 11:25 AM Published : 14 Aug 2025 11:25 AM Last Updated : 14 Aug 2025 11:25 AM ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. இதனிடையே ‘கூலி’ படக்குழுவை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (ஆக.14) வெளியானது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், இதர மாநிலங்களில் காலை 6 மணிக்கும் திரையானது. அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது ‘கூலி’. வெளிமாநிலங்களில் காலை 6 மணிக்கே படம் ரிலீஸ் ஆனதால் தீவிர ரஜினி ரசிகர்கள் இன்று முதல் ஷோ பார்க்க ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் குவிந்தனர். ‘கூலி’ முதல் காட்சியைப் பார்த்த நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே வருகிறது.…
சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மிகுந்த பரபரப்பான இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம். சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக ரூ.276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செயய்க் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதேநேரம், முறைப்படி…