நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘எல் 2 : எம்புரான்’ என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சையை சந்தித்தது. இதன் மூன்றாம் பாகமான ‘எல் 3: அஸ்ரேல்’ படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை நீருக்கடியில் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதை மறுத்துள்ள பிருத்விராஜ் தரப்பு, “லூசிஃபர் 3 படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. இது வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி. போலியான ஐடி மூலம்…
Author: admin
சென்னை: தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் 35 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டன. இதில் 2025-2026 ஆண்டில் மட்டும் 15 புதியக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதோடு, 253 புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு ஆசிரியர் கூட புதிதாக பணியமர்த்தப்படவில்லை என்பதுதான் வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை 14 ஆயிரம் எனும் நிலையில், வெறும் 5 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மட்டுமே நிரந்தரமாக பணியாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேர் கவுரவ விரிவுரையாளர்களாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.25…
ராப் மொகுல் ஜே-இசின் இரகசிய மகன் என்று நீண்டகாலமாக கூறியவர் ரைமிர் சாட்டர்த்வைட், தனது மிக சமீபத்திய கூட்டாட்சி வழக்கின் மீது செருகியை இழுத்துள்ளார், இருப்பினும் போர் வெகு தொலைவில் இல்லை என்று அவர் வலியுறுத்துகிறார். ஜூலை 18 அன்று, நீதிமன்ற பதிவுகள் சாட்டர்த்வைட் வழக்கை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றன, இது 2010 ஆம் ஆண்டு வரை நீடித்த ஒரு சாகாவில் மற்றொரு வியத்தகு திருப்பத்தைக் குறிக்கிறது. ஜே-இசின் ரகசிய மகன் என்று கூறும் மனிதன் கூட்டாட்சி வழக்கை கைவிடுகிறான் | கடன்: எக்ஸ்/ஸ்லீசெஸ்தான் தசாப்த கால தந்தைவழி நாடகம் மற்றொரு திருப்பத்தை எடுக்கும்வார இறுதியில், சாட்டர்த்வைட் சமூக ஊடகங்களுக்கு கதையின் பக்கத்தைச் சொல்ல அழைத்துச் சென்றார். அவர் உண்மையில் வழக்கைத் திரும்பப் பெற்றார் என்று அவர் விளக்கினார், ஆனால் விளையாட்டில் பெரிய சக்திகளைக் குறிக்கிறது, “மூடிய கதவுகளுக்கு பின்னால் நிறைய நடக்கிறது” என்று கூறினார். இந்த வழக்கு பல நகரும்…
புதுடெல்லி: டெல்லியில் ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க நினைத்த மூதாட்டியிடம் ரூ.77 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் வசிப்பவர் நீரு (62). தனியாக வசிக்கும் இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக மருத்துவர்கள் பல்வேறு மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். அத்துடன் தூக்க மாத்திரையையும் அவர் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தூக்க மாத்திரை உட்பட தனக்கு தேவையான மருந்துகளை வாங்க இணையதளத்தில் உள்ள பல மருந்து கடைகளை தேடி ஆர்டர் செய்துள்ளார். அதன் பிறகு அதை மறந்துவிட்டார். அதன் பிறகு நீருவின் தொலைபேசியில் ஒருவர் பேசினார். தன்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார். தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை வாங்கியதாகவும் டெல்லியில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுத்துள்ளதாகவும் நீரு மீது குற்றம் சுமத்தினார்.…
சென்னை: தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்று 25 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் 25 செவிலியர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நூற்றாண்டு தொடக்க விழா இலச்சினை மற்றும் காலண்டர் தொகுப்பினை வெளியிட்டார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் தலைவர் ஜெ.ராஜமூர்த்தி, பதிவாளர் எஸ்.அனி கிரேஸ் கலைமதி, துணை தலைவர் அனி ராஜா, மருத்துவக்…
உள் மருத்துவ மருத்துவரான டாக்டர் டிம் டியூட்டன், பெர்ரிகளுடன் ஒரு தயிர் கிண்ணத்தையும், கிரானோலாவையும் புற்றுநோய்-குறைக்கும் காலை உணவாக பரிந்துரைக்கிறார். கிரேக்க தயிர் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது, அதே நேரத்தில் பெர்ரி ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. கிரானோலா நெருக்கடி மற்றும் ஆற்றலைச் சேர்க்கிறது, மேலும் மரக் கொட்டைகள் புற்றுநோய் அபாயத்தை மேலும் குறைக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள். இந்த பழமொழிக்கு முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் உணவு ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது, மேலும் சரியானது உங்களை நோய்களிலிருந்து கூட பாதுகாக்க முடியும். புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நியூயார்க் நகரத்தை தளமாகக் கொண்ட போர்டு-சான்றளிக்கப்பட்ட உள் மருத்துவ மருத்துவர் டாக்டர் டிம் டியூட்டன் இப்போது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய காலை உணவு செய்முறையைப் பகிர்ந்துள்ளார். அந்த காலை உணவு என்ன? சரி, இது நிச்சயமாக உதடு-ஊடுருவுகிறது. பார்ப்போம். டாக்டர் டிம்…
புதுடெல்லி: உ.பி.யில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, அக்கட்சியின் யோகி ஆதித்யநாத் முதல்வரானார். இதையடுத்து கடந்த 2022-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலிலும் 2-வது முறையாக வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை பாஜகவுக்கு கிடைத்தது. இதுபோல, யோகி ஆதித்யநாத் 2-வது முறையாக முதல்வரானார். இந்நிலையில், யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 8 ஆண்டுகள் மற்றும் 130 நாட்களை நிறைவு செய்தார். இதன் மூலம் அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தவர் கோவிந்த் வல்லப் பந்த். உத்தர பிரதேசத்தின் (சுதந்திரத்துக்கு பிறகு) முதல் முதலமைச்சரான அவர், 8 ஆண்டுகள் 127 நாட்கள் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்துள்ளார்…
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், கன்னையா லால் என்ற தையல்காரர் கடந்த 2022-ம் ஆண்டு முகமது ரியாஸ் மற்றும் முகமது கவுஸ் ஆகியோரால் கொலை செய்யப்பட்டார். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சையான கருத்துக்கு ஆதரவாக, சமூக ஊடகத்தில் கன்னையா லால் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையப்படுத்தி ‘உதய்ப்பூர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை அமித் ஜானி என்பவர் தயாரித்துள்ளார். கன்னையா லால் கதாபாத்திரத்தில் விஜய் ராஸ் நடித்துள்ளார். இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் ‘காக்கிச் சட்டை’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிரந்தரத் தடை விதிக்கக் கோரி ஒரு தரப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. படத்திலுள்ள சில ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து ஆக.8-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில்,…
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் ‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் தாக்கம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்து பேசினார். உயர் கல்வி துறை செயலர் பொ.சங்கர் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக, உயர்கல்வி மன்ற துணை தலைவர் எம்.பி.விஜயகுமார் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். மன்றத்தின் உறுப்பினர் செயலர் டி.வேல்முருகன் நன்றி கூறினார். விழாவில், கல்லூரி கல்வி ஆணையர் ஏ.சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: தற்போது அரசு கல்லூரிகளிலும் ஏஐ மற்றும் அதுதொடர்பாக புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உயர்கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு…
புதுடெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியபோது. ஓர் அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி வர்மாவின் நேர்மை குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைத்தார். இதுதொடர்பாக விசாரிக்க தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா 3 நீதிபதிகள் கொண்ட உள் விசாரணைக் குழுவை அமைத்தார். இதற்கிடையில், நீதிபதி வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாசி…