Author: admin

புதுடெல்லி: “பயங்கரவாதத்துக்கு எதிரான மனித சமூகத்தின் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணமாக திகழும். பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் ஒரு சோதனைக் களமாகவும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ அமைந்தது” என்று சுதந்திர தினத்தையொட்டிய உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு குறிப்பிட்டார். 79-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: “சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உலக அளவில் ஏராளமான வாக்காளர்களைக் கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாடாக உருவெடுத்துள்ளோம். இந்திய மக்களாகிய அனைவரும் நாம் ஒன்றிணைந்து வலிமையான நாடாக இந்தியாவை உருவாக்கச் செய்வது நம் அனைவரின் கடமையாகும். பிற ஜனநாயக நாடுகளில் வாக்களிக் கும் மக்களைப் போல் அல்லாமல் பாலினம், மதம் மற்றும் பிற காரணிகளின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சகிப்புத்தன்மையைக் கொண்ட நாடாக…

Read More

சென்னை: ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார். ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்” என்று அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தமிகத்தில் இளைஞர்கள் மத்தியில் ரசாயனப் போதைப் பொருள்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என கிண்டி கமலாலயத்தில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்குப் பனை மரத்தில் நெறிக் கட்டும் என்ற பழமொழியைப் போல ‘தமிழ் மொழிக்கும் தமிழகத்துக்கும் ஆளுநர் எதுவும் செய்யவில்லை’ எனச் சொல்லி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்து அவமானத்தைச் சந்தித்த ஆளுநர் ரவிக்கு 24 மணி நேரம் கழித்து…

Read More

எங்கள் உதடுகள் ஒரு முக்கிய முக அம்சம் மட்டுமல்ல – அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் புலப்படும் குறிகாட்டியாக செயல்படுகின்றன. பொதுவாக, ஆரோக்கியமான உதடுகள் மென்மையான, மென்மையான மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றும், சரியான நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை பிரதிபலிக்கின்றன. அவற்றின் நிறம், அமைப்பு அல்லது ஈரப்பதம் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் நீரிழப்பு முதல் தொற்று அல்லது முறையான நிலைமைகள் வரை சாத்தியமான சுகாதார கவலைகளை சமிக்ஞை செய்யலாம். ஆய்வுகள் மற்றும் புகழ்பெற்ற சுகாதார ஆதாரங்கள் மற்ற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு உதடுகள் பெரும்பாலும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன, அவை நல்வாழ்வைக் கண்காணிப்பதற்கான மதிப்புமிக்க கருவியாக அமைகின்றன. உங்கள் உதடுகளின் நிலையை தவறாமல் கவனிப்பது, சரியான நீரேற்றத்தை பராமரித்தல் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வது ஆகியவை ஆரம்பத்தில் சிக்கல்களைக் கண்டறிந்து லிப் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் இரண்டையும் ஆதரிக்க உதவும்.உதடுகள் உள் சுகாதார…

Read More

சென்னை: “அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை: “நமது தேசத்தின் சிறப்புமிக்க 79-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில், நீண்டகால ஒடுக்குமுறை காலனித்துவ ஆட்சியிலிருந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உள்பட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில், நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வெளிப்புற ஆக்கிரமிப்புகள் மற்றும் உள் குழப்பங்களிலிருந்து பாதுகாத்து, நமது அரசியலமைப்பு, சமூகம் மற்றும் அரசியலின் பன்முக மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து, உச்சபட்சமாக இன்னுயிரைத் தியாகம் செய்த ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் வீரர்களுக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். நமது தேசிய வரலாற்றில் ஒரு…

Read More

உங்கள் தோல் அல்லது கண்களின் மஞ்சள் நிறத்தை நீங்கள் எப்போதாவது வழக்கத்திற்கு மாறாக உணர்ந்தீர்களா அல்லது வீங்கியிருக்கிறீர்களா அல்லது கவனித்திருக்கிறீர்களா? காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ஜோசப் சல்ஹாப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட வீடியோவின் படி, இவை வளர்ந்து வரும் பிரச்சினையின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்: கல்லீரல் செயலிழப்பு மற்றும் சிரோசிஸ் 25 முதல் 35 வயதுடைய இளைஞர்களில் அதிகளவில் கண்டறியப்படுகின்றன. நடுத்தர வயதின் ஒரு நிலையாகக் கருதப்பட்டால், தீவிர கல்லீரல் நோய் இப்போது இருபதுகளின் நடுப்பகுதியில் மற்றும் முப்பதுகளின் முற்பகுதியில் மக்களை பாதிக்கிறது. இந்த உயர்வு மது அருந்துதல், மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான வளர்சிதை மாற்ற சிக்கல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் கல்லீரல் தாமதமாகிவிடும் முன் பாதுகாக்க காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு உத்திகளை அறிவது மிக முக்கியம்.கல்லீரல் சிரோசிஸ் என்றால் என்ன, அது ஏன் முக்கியம்NHI இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கல்லீரல் சிரோசிஸ் என்பது காலப்போக்கில் மீண்டும்…

Read More

மதுரை: “திமுக அரசால் கைதாகி பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் அறச்சீற்றம், சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்துள்ள ஆட்சியாளர்களின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது” என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ் மற்றும் மாநில பொதுச் செயலாளர் இரா.பாலசுப்ரமணியன் ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ”அகிம்சை வழியில் ஜனநாயக முறைப்படி, அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்திருக்கும் உரிமைகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் இரவோடு, இரவாக குண்டுக்கட்டாக தூக்கியெறிந்து, வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்துள்ள ஆட்சியாளர்களின் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை”- (குறள் 555) என்ற குறளில், ஆட்சியாளர்களின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக் கருவியாக மாறும் என்பதற்கேற்ப, பாதிக்கப்பட்டு நிற்கும்…

Read More

ஹெர்பெஸ் என்பது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (எச்.எஸ்.வி) காரணமாக ஏற்படும் பொதுவான வைரஸ் தொற்று ஆகும், இது முதன்மையாக தோல், வாய் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளை பாதிக்கிறது. பெரும்பாலான மக்கள் ஹெர்பெஸை புலப்படும் புண்கள் அல்லது அவ்வப்போது விரிவடையச் செய்யும்-அப்களுடன் தொடர்புபடுத்துகையில், வைரஸ் நரம்பு உயிரணுக்களில் செயலற்ற நிலையில் இருப்பதற்கும் கணிக்க முடியாத அளவிற்கு மீண்டும் செயல்படுத்துவதற்கும் ஒரு தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் மன அழுத்தம், நோய் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தால் தூண்டப்படுகிறது. மறைக்கப்பட்ட இந்த திறன் ஹெர்பெஸை ஒரு தொடர்ச்சியான மற்றும் சில நேரங்களில் குறைத்து மதிப்பிடப்பட்ட உடல்நலக் கவலையாக அமைகிறது.மிகவும் பழக்கமான உடல் அறிகுறிகளுக்கு அப்பால், நுண்ணுயிரியலில் எல்லைகள் செய்த சமீபத்திய ஆராய்ச்சி, என்ஐஎச் இல் வெளியிடப்பட்ட ஆய்வுகள் ஹெர்பெஸின் ஆச்சரியமான மற்றும் குறைவான விவாதிக்கப்பட்ட பரிமாணத்தை கண்டுபிடித்துள்ளன: நரம்பியல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தில் அதன் சாத்தியமான தாக்கம். குறிப்பாக, மனித ஹெர்பெஸ்வைரஸ் 6 (எச்.எச்.வி…

Read More

பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிரபல கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகாசுவாமி என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.…

Read More

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் இன்று (ஆக்.14) காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் கொடிப்பட்டம் கோயிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளிலும் வீதிஉலா சென்று மீண்டும் கோயிலுக்கு வந்தது. தொடர்ந்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலை 5.17 மணிக்கு கோயில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காப்பு கட்டிய சிவகுகநாதன் பட்டர் ஆவணித் திருவிழா கொடியேற்றினார். பின்னர் கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தையலம், திரவிய பொடி, மஞ்சப்பொடி, மாபொடி,…

Read More

மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி பெற விதிக்கப்பட்ட தடையை விலக்க மறுத்து, வழக்கு தொடர்பாக திமுக, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் டி.அதிகரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது பொதுமக்களிடம் ஆதார் எண் மற்றும் தனிப்பட்ட விபரங்களை சேகரிக்க தடை விதித்தும், இதுவரை பெறப்பட்ட தனிப்பட்ட விபரங்களை அழிக்கவும், சட்ட விரோதமாக ஆதார் மற்றும் தனிப்பட்ட விபரங்களை சேகரிக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி எண் பெறுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்தத் தடையை விலக்கக் கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள்…

Read More