சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. 11, 12-ம் வகுப்புக்கு 1:40 என்ற ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவர்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.…
Author: admin
சென்னை: பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், சுயதொழில் தொடங்க ரூ.3.50 லட்சம் வரை மானியம், இலவச காலை உணவு என்பது உட்பட 6 புதிய திட்டங்களுக்கு தமிழகஅமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள், 6 புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு, முதல்வரின் லண்டன், ஜெர்மனி பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள் குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் நல வாழ்வுக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் பல சிறப்பு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் விவரம்: தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது, நுரையீரல், தோல் நோய்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறியவும்,…
நீரிழிவு நோயை நிர்வகிப்பது என்பது நீங்கள் சுவையை அல்லது சாப்பிடுவதன் மகிழ்ச்சியை விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல. ஸ்மார்ட் சமையல் உத்திகள் மற்றும் சிந்தனைமிக்க மூலப்பொருள் தேர்வுகள் மூலம், நீங்கள் சுவையான மற்றும் இரத்த சர்க்கரை நட்பான உணவை உருவாக்கலாம். முழு உணவுகள், மெலிந்த புரதங்கள், ஃபைபர் நிறைந்த காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம், நீரிழிவு நட்பு உணவு பாரம்பரிய சமையல் குறிப்புகளைப் போலவே திருப்திகரமாக இருக்கும். மூலிகைகள், மசாலா மற்றும் படைப்பு சமையல் நுட்பங்களைப் பயன்படுத்துவது ஒவ்வொரு டிஷுக்கும் பல்வேறு மற்றும் உற்சாகத்தை சேர்க்கிறது. நீங்கள் தினசரி உணவு அல்லது சிறப்பு சந்தர்ப்பங்களைத் தயாரித்தாலும், ஒரு சீரான, சத்தான அணுகுமுறை உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்போது உங்கள் உணவை அனுபவிப்பதை உறுதி செய்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு வடிவமைக்கப்பட்ட 15 பயனுள்ள சமையல் உதவிக்குறிப்புகள்1. சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் மீது முழு தானியங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்வெள்ளை…
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கக் கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆக .15) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 16 முதல் 20-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு…
மனித உடல் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் குறிக்கிறது. டாக்டர் ச ura ரப் சேத்தி ஆரம்பகால கண்டறிதலை எடுத்துக்காட்டுகிறார். உடையக்கூடிய நகங்கள் புரதம் அல்லது இரும்பு சிக்கல்களைக் குறிக்கின்றன. கண் இமை இழுத்தல் மெக்னீசியம் குறைபாட்டைக் குறிக்கிறது. மூட்டுகளைக் கிளிக் செய்வது வைட்டமின் டி 3 அல்லது கால்சியம் பற்றாக்குறையை எச்சரிக்கக்கூடும். வைட்டமின் பி 12 அல்லது செப்பு சிக்கல்களுக்கு முன்கூட்டியே சாம்பல் இணைப்புகள். எளிதான சிராய்ப்பு சமிக்ஞைகள் வைட்டமின் சி அல்லது கே 1 குறைபாடு. இந்த அறிகுறிகளை நிவர்த்தி செய்வது பெரிய உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கிறது. நாம் புரிந்துகொள்வதை விட மனித உடல் மிகவும் அற்புதமானது. ஒரு நோய் அல்லது குறைபாடு பதுங்கும்போது, அது உங்களுக்கு அறிகுறிகளைத் தருகிறது. இந்த அறிகுறிகள் ஆய்வக சோதனைகளில் காண்பிக்கப்படுவதற்கு முன்பே தோன்றும். உங்கள் உடலுக்கு சரியாக செயல்பட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. ஆனால் அது குறுகியதாக இருக்கும்போது, உடல் சமிக்ஞைகளை…
தனது குழந்தையின் பெயரை ஜாய் கிரிசில்டா அறிவித்திருக்கும் பதிவு, மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக புகைப்படத்துடன் அறிவித்தார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார் ஜாய் கிரிசில்டா. இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு பதிவையும் இதுவரை வெளியிடவில்லை மாதம்பட்டி ரங்கராஜ். இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்துக் கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். இந்த வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகள் இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. இதனால் முதல் மனைவியுடன் மீண்டும் இணைந்துவிட்டதாக பலரும் கருதினார்கள். இதற்கு போட்டியாக ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை பிரசவிக்க அடிக்கடி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்று வருவது பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.…
சென்னை: நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் இருக்க பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சுதந்திரத்தை பேணிக்காத்து, எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்கேற்ப அனைத்து தரப்பு மக்களும் வளம் பெற சுதந்திர தின நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். பாமக தலைவர் அன்புமணி: தமிழக மக்களின் இன்றைய உண்மையான தேவை சமூகநீதி உள்ளிட்ட அனைத்து உரிமைகளுடனும், சுதந்திரமாகவும் வாழும் உரிமை தான். அதை ஜனநாயகம் என்ற கருவியைக் கொண்டு தான் வென்றெடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: மதவெறி, சாதி ஆதிக்க சக்திகளை அதிகாரத்தில் இருந்தும், சமூக வாழ்வில் இருந்தும் வெளியேற்ற இந்நாளில் உறுதியேற்போம்.…
கண்ணாடியில் பார்ப்பது சிலருக்கு நம்பிக்கையை அதிகரிக்கும், மற்றவர்களுக்கு இது பாதுகாப்பின்மையின் ஆதாரமாக மாறும்- பிரதிபலிப்பு அவர்களைத் தாக்கக்கூடிய ஒரு போட்டியாளராக இருப்பதைப் போல உணர வைக்கிறது. இதுபோன்ற 8 விலங்குகள் இங்கே ஒரு கண்ணாடியில் தங்கள் சொந்த பிரதிபலிப்பைப் பார்க்கத் தூண்டப்படுகின்றன.
இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையிலான விரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து கங்கை அமரன் தெரிவித்துள்ளார். ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் பேசியதாவது: “கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம். ஆனால் அவர் இப்போது எம்.பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ‘ஊமை விழிகள்’ படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார். ‘ஹேராம்’ படத்தில் புதுவிதமான பாட்டு உருவாகுவதற்கு நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமலஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது? நான் இசையமைக்க தயாராக…
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த காணொலியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று கூறியுள்ளார். தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தியதும், அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதும் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்தப் போராட்டம் பற்றியோ, அவர்களின் கோரிக்கைகள் பற்றியோ எதுவுமே குறிப்பிடாமல், “தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்று முதல்வர் கூறியுள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், “நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக…