புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரும் மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதையடுத்து,அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி கல்வியாளர் ஜாஹூர் அகமது பட் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு…
Author: admin
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும். இன்னும் சில மாதங்களில் முழு வடிவம் பெற்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அதேபோல, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படலாம். சென்னையில் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை, மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தென் மாநிலங்களில் அதிக அளவு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆட்சி, அதிகாரம், பண பலத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுக கருதுகிறது. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.…
நரம்பு மண்டலம் உணர்ச்சி செயல்முறைகளை இயக்குகிறது, எனவே திடீரென மனநிலை அல்லது நடத்தை மாற்றங்கள் போன்ற நரம்பு சேதத்தில் நரம்பியல் பிரச்சினைகள் பொதுவானவை. நரம்பு மண்டலத்தின் முறிவு அறிகுறிகளை உருவாக்குகிறது, இதில் கவலை மற்றும் மனச்சோர்வு ஆகியவை அடங்கும், எரிச்சல், சமூக திரும்பப் பெறுதல் மற்றும் அதிகப்படியான உணர்வுகள். இந்த நிலை உள்ளவர்கள் அழுதலின் திடீர் அத்தியாயங்களையும், எதிர்பாராத கோபமான வெடிப்புகள் மற்றும் முழுமையான சக்தியற்ற தன்மையின் உணர்வுகளையும் அனுபவிக்கிறார்கள். மல்டிபிள் ஸ்களீரோசிஸ் மற்றும் பார்கின்சன் உள்ளிட்ட மூளை அல்லது நரம்பியல் நோய்களில் மன அழுத்த விளைவுகள் இந்த உணர்ச்சி மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்த மாற்றங்களைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வு அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக மாறுவதற்கு முன்பு உதவியைக் கண்டறிய உங்களுக்கு உதவுகிறது.குறிப்பு இணைப்புகள்:https://hollyhillhospital.com/blog/what-is-a-nervous-breakdown-signs-ateatment/https://www.webmd.com/brain/nerve-pain-and-nerve-damage-simptrans-and-causeshttps://drrohitgupta.co.in/top-5-signs-of-nervous-breakdown/https://hannahjosephhospital.com/early-warning-signs-of-ueurological-disorders/https://www.healthline.com/health/nervous-system-sysesessமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 16,288 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 15,040 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடியிலிருந்து 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 119.02 அடியாகவும், நீர் இருப்பு 91.91 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக பதிவான நீ்ரவரத்து மாலையில் 16 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. மேலும், நேற்று காலை 14 ஆயிரம் கனஅடியாகவும், பகல் ஒரு மணியளவில் 12 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து குறைந்தது.
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி நாளை காலை 6 முதல் 10 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்: காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை வரையிலான சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படும். காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையில் இணைந்து, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ். சாலை வழியாக பாரிமுனையை அடையலாம். ராஜாஜி சாலையிலிருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிமுனை, என்.எஃப்.எஸ். சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்து சாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடது…
இதய ஆரோக்கியத்திற்கு கொழுப்பை நிர்வகிப்பது இன்றியமையாதது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றிலிருந்து மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளை இணைப்பது உதவும். வாரந்தோறும் குறைந்தது 150 நிமிட மிதமான செயல்பாட்டை நோக்கமாகக் கொண்ட வழக்கமான உடற்பயிற்சியும் முக்கியமானது. உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது ஆரோக்கியமான கொழுப்பின் அளவை மேலும் ஆதரிக்கிறது. அதிக கொழுப்பு என்பது உங்கள் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் ஒரு கொழுப்பு பொருளைக் கொண்டிருக்கும் ஒரு நிலை. எல்.டி.எல் ‘பேட்’ கொழுப்பின் உயர்ந்த அளவு தமனிகளில் பிளேக் கட்டும் அபாயத்தை அதிகரிக்கும், இது இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம். மருந்துகள் உதவக்கூடும் என்றாலும், வீட்டில் சில நடவடிக்கைகளை எடுப்பது கொழுப்பின் அளவை நிர்வகிக்க உதவும். பாருங்கள். டிரான்ஸ் கொழுப்பை வளைகுடாவில் வைத்திருங்கள்டிரான்ஸ் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள்…
சென்னை: முஸ்லிம் லீக்கால் ‘காஃபீர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர் என்றும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடையும் முன்பாக பிரிவினையை எதிர்கொண்டது. ஆகஸ்ட் 15, 1947ல் நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பாக ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரிவினையால் நிகழ்ந்த பெரும் சோகத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், “இன்று ‘ஆகஸ்ட் 14’ – பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது.…
சென்னை: “நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள் , அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி, கரோனாவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி ,…
லொல்லபலூசா இந்தியா 2026 ஐச் சுற்றியுள்ள சலசலப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது, வதந்திகள் உண்மையாக இருந்தால், ரசிகர்கள் ஒரு பெரிய விருந்துக்கு வருகிறார்கள். இன்சைடர் உரையாடல் மற்றும் ரெடிட் உரிமைகோரல்கள் பில்லி எலிஷ் மற்றும் லிங்கின் பார்க் ஏற்கனவே தலைப்பு நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்று கூறுகின்றன. அமைப்பாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், செய்தி சமூக ஊடகங்களை தீ வைத்தது, சமீபத்திய நினைவகத்தில் மிகவும் மாறுபட்ட மற்றும் உயர் ஆற்றல் கொண்ட திருவிழா வரிசைகளில் ஒன்றாக ரசிகர்கள் ஊகிக்கிறார்கள். இந்த உலகளாவிய நட்சத்திரங்களுடன், பல பெரிய பெயர்கள் பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக கூறப்படுகிறது, இது லொல்லபலூசா 2026 பதிப்பை இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் இசை ஆர்வலர்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாக மாற்றுகிறது.வதந்தி ஆலை: லொல்லபலூசா 2026 இல் மைய நிலைக்கு வர பில்லி எலிஷ் மற்றும் லிங்கின் பார்க்? லொல்லபலூசா இந்தியாவின் ரெடிட் சப்ரெடிட்டில் உள்ள உள்நாட்டினரின் கூற்றுப்படி (r/lollapaloozaind). பில்லி எலிஷ், தனது…
நவ.2 கல்லறை திருநாளன்று நடைபெறும் என அறிவித்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்றி, வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது: உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இறந்த தங்களின் முன்னோர்களின் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்யும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவ.2-ம் தேதியை கல்லறைத் திருநாளாக அனுசரித்து வருகின்றனர். அந்நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்கள் அல்லது தங்களின் அன்புக்குரியவர்களின் கல்லறைகள் எங்கு இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு சென்று கல்லறையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவத்திகள் ஏற்றில இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஜெபம் செய்வது வழக்கம். இந்நிலையில், நவ.1, 2-ம் தேதிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதியை தீர்மானிக்க நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு…