சென்னை: ‘குஜராத், பிஹார், உத்தரப்பிரதேசத்தை விட வளர்ச்சியில் தமிழகம் பின்னோக்கி உள்ளது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழக பாஜக சார்பில் 79-வது சுதந்திர தினத்தையொட்டி ‘இல்லந் தோறும் மூவர்ணக்கொடி’ என்ற தலைப்பில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை. ஜனநாயக முறையில் தங்களது கோரிக்கையை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் யாரும் தயாராக இல்லை. கரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பயத்தில் இருந்தபோது, தூய்மை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக சேவை செய்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை செவிக் கொடுத்து கேட்க நேரமில்லாமல், சினிமா…
Author: admin
பெசோஸ் குடும்பத்தின் மேட்ரிக் மற்றும் ஜெஃப் பெசோஸின் அன்பான அம்மா, ஜாக்லின் “ஜாக்கி” கிஸ் பெசோஸ், ஆகஸ்ட் 14, 2025 அன்று தனது 78 வயதில் காலமானார். அவர் மியாமியில் உள்ள தனது வீட்டில் நிம்மதியாக இறந்தார், குடும்பத்தினரால் சூழப்பட்டார், லூயி உடல் டிமென்டியா (எல்.பி.டி) உடனான நீண்ட, தைரியமான சண்டையின் பின்னர்.தாய்மைக்கு ஜாக்கியின் பயணம் ஆரம்பத்தில் தொடங்கியது – அவர் வெறும் 17 வயதில் ஒரு அம்மாவாக ஆனார், நியூ மெக்ஸிகோவின் அல்புகெர்க்கியில் ஜெஃப் பெற்றார். எல்லா முரண்பாடுகளும் இருந்தபோதிலும், அவரது முதல் திருமணம் முடிந்ததும் அவர் அவரை சொந்தமாக வளர்த்தார், பின்னர் 1968 ஆம் ஆண்டில் மிகுவல் “மைக்” பெசோஸை மணந்தார், அவர் தனது கூட்டாளியாக மட்டுமல்ல, ஜெஃப்பின் வளர்ப்பு அப்பாவாகவும் ஆனார். ஜெப்பின் உடன்பிறப்புகளான கிறிஸ்டினா மற்றும் மார்க் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு நெருக்கமான குடும்பத்தை அவர்கள் ஒன்றாகக் கட்டினர்.இதயப்பூர்வமான அஞ்சலிஜெஃப் தனது தாய்க்கு சமூக ஊடகங்களில்…
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரன் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள தொலைதூர மலை கிராமத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உட்பட 46 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பின் காரணமாக தீடீர் வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரையில் மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம், உள்ளூர் தன்னார்வலர்கள் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மோசமாக இருப்பதால் என்டிஆர்எப்-ன் இரண்டு புதிய குழுக்கள் உட்பட மீட்பு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் மதியம் 12…
Last Updated : 15 Aug, 2025 05:18 AM Published : 15 Aug 2025 05:18 AM Last Updated : 15 Aug 2025 05:18 AM மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 15,040 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 9,263 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 118.99 அடியாகவும், நீர் இருப்பு 91.86 டிஎம்சியாகவும் இருந்தது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 6,500 கனஅடியாக குறைந்தது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US
ஏதோ ‘பெரிய’ பூமிக்குள் நகர்கிறது; விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்தவர்கள் இங்கே பல தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்புக்கு அடியில் ஆழமாக மறைக்கப்பட்ட மர்மங்களை அவிழ்க்க முயன்றனர். கிரகத்தின் கீழ் மேன்டல் மற்றும் வெளிப்புற மையத்திற்கு இடையிலான எல்லையில், மேற்பரப்புக்கு அடியில் சுமார் 2,700 கிலோமீட்டர் (1,700 மைல்) அமைந்துள்ள டி “அடுக்கு மிகவும் குழப்பமான பகுதிகளில் ஒன்றாகும். இந்த மண்டலம் அதன் அசாதாரண நில அதிர்வு பண்புகளுக்கு நீண்ட காலமாக அறியப்படுகிறது, இது அதன் கலவை மற்றும் நடத்தை பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.இப்போது, ஈ.டி.எச் சூரிச்சின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு அற்புதமான ஆய்வில், பூமியின் கவசத்தின் இந்த ஆழமான அடுக்கில் திடமான பாறை ஒரு திரவத்தைப் போல நகரக்கூடும், அதே நேரத்தில் அதன் திட நிலையை பராமரிக்கிறது. பேராசிரியர் மோட்டோஹிகோ முரகாமி தலைமையில், ஆய்வுக் குழு டி “அடுக்கில் உள்ள தாதுக்கள் புவியியல் நேர அளவீடுகளை எவ்வாறு சீரமைக்கின்றன மற்றும் சிதைக்கின்றன…
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் 12-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அவர் தொடர்ச்சியாக 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியேற்ற உள்ளார். செங்கோட்டைக்கு வரும் பிரதமர் மோடியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் வரவேற்பார்கள். ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் டெல்லி காவல் துறையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்…
வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போதைய நிலையில் உக்ரைனின் 22 சதவீத பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடுகள் இடையிலான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வருகிறார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி 12, மார்ச் 18, மே 19, ஜூன் 4 ஆகிய தேதிகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் நேற்று முன்தினம்…
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நாளை (ஆக. 16) நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரி பூஜைக்காக கடந்த 29-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. பின்னர் 30-ம் தேதி ஒருநாள் சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு நடைசாத்தப்பட்டது. இந்நிலையில், சிம்ம மாதத்துக்காக (ஆவணி) நாளை மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கேரளாவில் சிம்ம மாதமே மலையாளப் புத்தாண்டு கொண்டாடப்படும் மாதமாக உள்ளது. சிம்ம மாதம் 20-ம் தேதி (செப்.5) கேரளாவின் சிறப்பு வாய்ந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செப்.3-ம் தேதி மீண்டும் நடை திறந்து வழிபாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநில மாநாடு சேலத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டில் நாளை (ஆக. 16) நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள நேரு கலையரங்கில் இன்று மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஆகியோர் மாநாட்டுக் கொடியேற்றி வைக்கின்றனர். தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தொடக்க உரையாற்றுகிறார். தொடர்ந்து, அமர்ஜித் கவுர், டாக்டர் கே.நாராயணா, ஆனி ராஜா, சி.எச்.வெங்கடாசலம், டி.எம்.மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசுகின்றனர். நாளை மாலை மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் ‘வெல்க ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான எழுச்சி மாநாடு தொடங்குகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறார். திக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்,…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரும் மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதையடுத்து,அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி கல்வியாளர் ஜாஹூர் அகமது பட் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு…