சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும் தேவாவுக்கு, ராஜசேகரின் மரணம், இயற்கையானதல்ல என்பது புரிகிறது. அதற்கு, கடத்தல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சைமனும் (நாகார்ஜுனா) அவனுடைய வலது கை, தயாளனும் (சவுபின் சாஹிர்) காரணமாக இருக்கிறார்கள். அவர்களைத் தேவா என்ன செய்கிறார்? தேவாவுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு, சைம னுக்கும் தேவாவுக்குமான முன் கணக்கு என்ன? என்பது கதை. ஒரு கமர்ஷியல், ஆக் ஷன் மசாலா படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அது அனைத்தையும் பக்காவாக கலந்து, தனது முந்தைய படங்களைப் போலவே ‘கூலி’யையும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாஜிக்கைதூர வைத்துவிட்டு, அவர் படங்களில் வரும் ரசனையான பழைய ஹிட் பாடல்கள், மிரட்டலான சண்டைக் காட்சிகள், ஏராளமான துணை நடிகர்கள், முன் பின்னான கதை சொல்லல்…
Author: admin
சென்னை:உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலி்ன்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன், வழக்கறிஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி…
டாக்டர் வில்லியம் லி புற்றுநோய் தடுப்பில் உணவுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார், சில உணவுகள் புற்றுநோய் உயிரணுக்களை பட்டினி கிடக்கும் என்பதை வலியுறுத்துகிறது. காபி, தேநீர், பிராசிகா காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் ஒமேகா -3 நிறைந்த கடல் உணவு ஆகியவை அவற்றின் அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்த வழங்கல் வெட்டும் பண்புகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த உணவுகளை உணவில் இணைப்பது பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். உலகளவில் மரணத்திற்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டில், புற்றுநோய் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது, இது ஆறு இறப்புகளில் ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல காரணிகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அதே வேளையில், WHO கூறுகிறது, 30% மற்றும் 50% புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறை மாற்றம், சரியான உணவுகளை சாப்பிடுவதாகும்.…
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) தெலுங்கு மொழித் துறையில் 4 பேராசிரியர்கள் பணியாற்றினர். அவர்களில் 2 பேர் ஓய்வு பெற்றதால் மற்ற 2 பேராசிரியர்களில் ஒருவர், 3 ஆண்டுக்கு துறைத் தலைவராகத் தொடர்ந்துள்ளார். தற்போதைய தலைவர் பேராசிரியர் சி.எஸ்.ராமச்சந்திர மூர்த்தி விடுப்பு எடுத்ததால் சக பேராசிரியர் பி.வெங்கடேஸ்வரலுதுறைத் தலைவராக இருப்பார். இந்நிலையில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்தில் பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ராமச்சந்திர மூர்த்தி. அப்போது அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கைகள் மற்றும் ஒரு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். புகாரின் அடிப்படையில் வாராணசி மாநகர காவல் துறை துணை ஆணையர் டி.சரவணன் தலைமையில் விசாரணை நடந்தது. இதில், சக பேராசிரியர் வெங்கடேஸ்வரலு கூறியபடி அவரது 2 முன்னாள் மாணவர்கள் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. அதற்காக, உள்ளூர் ரவுடிகள்…
சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. இதில் ஆடவர் இறுதிப் போட்டியில் பெரம்பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்கில் முகப்பேர் வேலம்மாள் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது இடத்தை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியும், 4-வது இடத்தை ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியும் பெற்றன. சிறுமியர் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மெக்டலின் 25-18, 25-7 என்ற செட்கணக்கில் நுங்கம்பாக்கம் வித்யோதயா மெட்ரிக் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 3-வது இடத்தை சென்னை மேல்நிலைப் பள்ளியும், 4-வது இடத்தை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளியும் கைப்பற்றின. பரிசளிப்பு வழாவில் தமிழ்நாடு…
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள், 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரம்: சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சைபர் கிரைம் செல் பிரிவு, காவல் துணை கண் காணிப்பாளர் பூரணி, திருநெல்வேலி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் உலகராணி, சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் லதா, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில் குமார், தஞ்சாவூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு…
புதுடெல்லி: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெறி நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது என்று முன்னணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்து கடந்த 11-ம் தேதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை 8 வாரங்களில் அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும்.5,000 நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்கப்பட வேண்டும். இனிமேல் ரேபிஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள்…
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 8-வது நாளான நேற்று 8-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. புள்ளிகள் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் எஞ்சிய இரு சுற்றுகளையும் டிராவில் முடித்தாலே சாம்பியன் பட்டம் வென்றுவிடலாம் என்ற சூழ்நிலையில் 8-வது சுற்று ஆட்டத்தில், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். வின்சென்ட் கீமர் வெள்ளை காய்களுடனும், ஜோர்டன் வான் பாரஸ்ட் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 59-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளை பெற்றுள்ள வின்சென்ட் கீமர், இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார். ஏனெனில் புள்ளிகள் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இன்று நடைபெறும் கடைசி…
சென்னை: ‘குஜராத், பிஹார், உத்தரப்பிரதேசத்தை விட வளர்ச்சியில் தமிழகம் பின்னோக்கி உள்ளது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழக பாஜக சார்பில் 79-வது சுதந்திர தினத்தையொட்டி ‘இல்லந் தோறும் மூவர்ணக்கொடி’ என்ற தலைப்பில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை. ஜனநாயக முறையில் தங்களது கோரிக்கையை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் யாரும் தயாராக இல்லை. கரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பயத்தில் இருந்தபோது, தூய்மை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக சேவை செய்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை செவிக் கொடுத்து கேட்க நேரமில்லாமல், சினிமா…
பெசோஸ் குடும்பத்தின் மேட்ரிக் மற்றும் ஜெஃப் பெசோஸின் அன்பான அம்மா, ஜாக்லின் “ஜாக்கி” கிஸ் பெசோஸ், ஆகஸ்ட் 14, 2025 அன்று தனது 78 வயதில் காலமானார். அவர் மியாமியில் உள்ள தனது வீட்டில் நிம்மதியாக இறந்தார், குடும்பத்தினரால் சூழப்பட்டார், லூயி உடல் டிமென்டியா (எல்.பி.டி) உடனான நீண்ட, தைரியமான சண்டையின் பின்னர்.தாய்மைக்கு ஜாக்கியின் பயணம் ஆரம்பத்தில் தொடங்கியது – அவர் வெறும் 17 வயதில் ஒரு அம்மாவாக ஆனார், நியூ மெக்ஸிகோவின் அல்புகெர்க்கியில் ஜெஃப் பெற்றார். எல்லா முரண்பாடுகளும் இருந்தபோதிலும், அவரது முதல் திருமணம் முடிந்ததும் அவர் அவரை சொந்தமாக வளர்த்தார், பின்னர் 1968 ஆம் ஆண்டில் மிகுவல் “மைக்” பெசோஸை மணந்தார், அவர் தனது கூட்டாளியாக மட்டுமல்ல, ஜெஃப்பின் வளர்ப்பு அப்பாவாகவும் ஆனார். ஜெப்பின் உடன்பிறப்புகளான கிறிஸ்டினா மற்றும் மார்க் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு நெருக்கமான குடும்பத்தை அவர்கள் ஒன்றாகக் கட்டினர்.இதயப்பூர்வமான அஞ்சலிஜெஃப் தனது தாய்க்கு சமூக ஊடகங்களில்…