Author: admin

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேர்தலுக்கு முன்னதாக, ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என பிரசாந்த கிஷோர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 60,000 பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக 1.5 கோடி பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டது. மேலும், ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஜேடியு அதிக இடங்களில் வெற்றி…

Read More

சென்னை: ​வி​மானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்​சி​யாளர்​கள் கண்​டு​பிடித்து சாதனை படைத்​துள்​ளனர்.பொது​வாக விமானங்​கள் ஓடு​தளத்​தில் குறிப்​பிட்ட தூரம் விரை​வாக ஓடி அதன் பின்​னரே மேலே எழும்​பும். அதே​போல, வானில் இருந்து தரை​யிறங்​கும்​போதும் ஓடு​தளத்​தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்​னரே குறிப்​பிட்ட இடத்தை வந்​தடை​யும். இந்த நிலை​யில், விமானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை (Vertical Take-off & Landing – VTOL) சென்னை ஐஐடி விண்​வெளி பொறி​யியல் துறை பேராசிரியர் பி.ஏ.​ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனத​ரா, ஆராய்ச்​சி​யாளர் அனந்து பத்​ரன் ஆகியோர் கண்​டு​பிடித்​துள்​ளனர்.

Read More

சென்னை: பொறி​யியல் மாணவர்​கள் ஆன்​லைனில் நானோ சயின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி படிக்க. அ்ண்ணா பல்​கலைக்​கழகம் சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது. இது தொடர்​பாக, அண்ணா பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் ஓர் அங்​க​மான அழகப்பா தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் (ஏ.சி.டெக்) செயல்​படும் நானோ அறி​வியல் மற்றும் தொழில்​நுட்​ப மையத்​தில், நானோ ச​யின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி தொடர்​பான குறுகிய கால படிப்பு நவ. 26 முதல் டிச. 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

Read More

புதுடெல்லி: ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஈரானின் மஹ்லா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

Read More

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​விடம், போட்​ஸ்​வானா நாட்​டின் அதிபர் துமா கிடி​யான் போக்கோ 8 சிவிங்​கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார். குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, ஆப்​பிரிக்க நாடான போட்​ஸ்​வானாவுக்கு 3 நாள் அரசு முறை சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார். இந்​நிலை​யில் நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்​டர் தொலை​விலுள்ள மோக்​கோலோடி தேசி​யப் பூங்கா​வுக்கு திர​வுபதி முர்​மு, அதிபர் துமா கிடியான் ஆகியோர் சென்​றனர். தேசி​யப் பூங்கா பகு​தி​யில் இரு​வரும், பாது​காப்பு வாக​னத்​தில் வலம் வந்​தனர்.

Read More

திருப்பதி: ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து 9 நாட்கள் வரை, அதாவது நவம்பர் மாதம் 25-ம் தேதி வரை பத்மாவதி தாயார் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையொட்டி, நேற்று வைகானச ஆகம விதிகளின்படி, கோயில் முழுவதும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம், பன்னீர் போன்றவற்றால் கருவறை உட்பட உப சன்னதிகள், கொடிக்கம்பம், பலிபீடம், விமான கோபுரம் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம வல்லுனர்கள் கோயிலை சுத்தம் செய்தனர். அதன் பின்னர் நைவேத்தியம் படைத்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் மதியம் 12 மணிக்கு மேல் தாயாரை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.

Read More

ஓடிடி தளத்தில் நவம்பர் 21-ம் தேதி ‘பைசன்’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘பைசன்’. ‘டியூட்’ படத்துடன் வெளியானாலும், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது உலகளவில் ரூ.80 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. இதனிடையே இப்படம் நவம்பர் 21-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அதன்​படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடை​பெற்ற நிகழ்​வில் கோவை மாவட்​டத்​தில் சூலூர், கிணத்​துக்​கட​வு, வால்​பாறை ஆகிய தொகு​தி​களின் நிர்​வாகி​களை முதல்​வர் ஸ்டா​லின் சந்​தித்து கலந்​துரை​யாடி​னார். அப்​போது எஸ்​ஐஆர் பணி​கள் குறித்து முதல்​வர் விசா​ரித்​த​போது, “அதி​முக பிஎல்​ஏ2-க்​கள் யாருமே களத்​துக்கே வரு​வ​தில்​லை. நமது நிர்​வாகி​கள் மிக தீவிர​மாக பணி​களை செய்து வரு​கி​றார்​கள்” என நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர்.அதன்​பின், “கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது கோயம்​புத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி​களி​லும் அதி​முக-வே வென்​றது. ஆனால், இந்த முறை நிச்​ச​யம் அதி​முக-வை வீழ்த்தி திமுக வெற்றி பெற வேண்​டும். அரசின் சாதனை​களை தொகுதி முழுக்​க​ விளம்​பரப்​படுத்த வேண்​டும். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்​களில் தகு​தி​யான​வர்​கள் இருப்​பின் அவர்​கள் உதவித் தொகை பெற கட்​சி​யினர் உதவ வேண்​டும்” என்று மண்​டலப் பொறுப்​பாளர் செந்​தில் பாலாஜிக்​கு, முதல்​வர் ஸ்டா​லின் உத்​தரவிட்​டார்.

Read More

பந்தநல்லூரில் அமைக்கப்பட்ட சாலையால், வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டாலும் அதன் சட்ட விதிகள் மாற்றப்படாமல் உள்ளது. மத்திய அரசு, சமானிய வணிகர்கள் பாதுகாக்கக்கூடிய வகையில் அந்தச் சட்டத்தை எளிமை படுத்த வேண்டும்.தமிழகத்தில் எந்த மூலையில் வணிகர்கள் பாதிக்கப்பட்டாலும், பேரமைப்பும், தமிழக முதல்வரும் உறுதுணையாக இருக்கின்றாோம். வணிகர்கள் பாதிக்கப்பட்டால், அவருக்கு தகவல் தருவதற்காக எங்களுக்கு தனி செல்போன் எண்ணை வழங்கி உள்ளார். வணிகர்கள் மீது போலீஸார், இடையூர் ஏற்படுத்தாமல், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதேபோல் வணிகர்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு விக்கிரமராஜா கூறியுள்ளார்.

Read More

புதிய வளர்சிதை மாற்ற மருந்துகள் சிகிச்சை தேர்வுகள் மற்றும் பொது எதிர்பார்ப்புகளை மறுவடிவமைப்பதால் எடை நிர்வாகத்தை ஆதரிக்கும் சிகிச்சைகளில் ஆர்வம் வேகமாக வளர்ந்துள்ளது. Orforglipron, ஒரு வாய்வழி GLP-1 ஏற்பி அகோனிஸ்ட், ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது, ஏனெனில் இது செமகுளுடைட் மற்றும் டைர்ஸ்படைடு போன்ற ஊசி விருப்பங்களுக்கு மாத்திரை அடிப்படையிலான மாற்றீட்டை வழங்குகிறது. பல தனிநபர்கள் தினசரி பயன்பாட்டிற்கு வாய்வழி மருந்துகளை விரும்புகிறார்கள், குறிப்பாக நீண்டகாலமாக கடைபிடிப்பது அவசியம், மேலும் இது ஒரு பயனுள்ள GLP-1 சிகிச்சையானது ஊசி இல்லாமல் எவ்வாறு செயல்பட முடியும் என்பது பற்றிய பரவலான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. ஆரம்ப கட்ட 3 தரவு எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற மேம்பாடுகளுக்கான ஊக்கமளிக்கும் முடிவுகளை காட்டுகிறது, உடல் பருமன் பராமரிப்புக்கான அணுகக்கூடிய மற்றும் நெகிழ்வான அணுகுமுறைகள் பற்றிய அறிவியல், மருத்துவம் மற்றும் நுகர்வோர் உரையாடல்களின் மையத்தில் orforglipron வைப்பது. அதன் வருகை எதிர்கால சிகிச்சைகள் எவ்வாறு…

Read More