Author: admin

இந்திய டெஸ்ட் அணியின் மிகப் பெரிய பொக்கிஷம் ரிஷப் பந்த். ஆனால், அவரை ஐபிஎல் கிரிக்கெட் காலி செய்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்போதைய தோனி போல் பேட்டிங் செய்வதை தவிர்ப்பது, பின்னால் இறங்குவது, சாக்குப் போக்குச் சொல்வது என்று அவர் மாறியிருப்பது கவலையளிக்கும் விஷயமாகும். நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் நேற்றைய போட்டியில் இறங்கும் வரை 108 பந்துகளில் 106 ரன்களையே எடுத்துள்ளார். ஆனால் 110 பந்துகளில் 106 என்பதாகவே அவர் கதை உள்ளது. தான் இறங்குவதை தோனி போலவே ஒத்திப் போடுகிறார். தோனிக்கு வயதாகிறது, சரி. இவருக்கு என்னவாயிற்று? அதுவும் ஓர் அணியின் கேப்டனாக இருந்து கொண்டு அனைவருக்கும் ஓர் உத்வேகமான தலைமையாக வழிகாட்டியாக இல்லாமல் ஓ.பி. அடிக்கலாமா? திடீரென அவருக்கு இத்தகைய பின்னடைவு ஏற்படக் காரணம் என்ன என்பதை கம்பீர் உட்பட பிசிசிஐ நிர்வாகம் உடனடியாகக் கவனிக்க வேண்டும். ஓப்பனிங் இறங்கினார், 4-ம் நிலையில்…

Read More

புதுடெல்லி: பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சண்டிகரில் செப்டம்பர் 2024 இல் நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்குக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்ஐஏ பிறப்பித்தது. அதாவது, ஓய்வுபெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) நடத்திய சதியின் ஒரு பகுதியாகும். ஹேப்பி பாசியாவுக்கு ஏற்கெனவே, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட 14 குண்டு வீச்சு தாக்குதல்களில் தொடர்பு உள்ளது. இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் ஹேப்பி பாசியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபில், ஹேப்பி பாசியா மீது 18 குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.…

Read More

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 24-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், அம்மன் திருவீதி உலாவும், 1-ம் தேதி இரவு கம்பம் சாட்டு விழாவும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று (திங்கள் கிழமை) தயாரானது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் எரியூட்டப்பட்டு, 12அடி நீளம், எட்டு அடி அகலத்தில் கோயில் முன்பாக நேற்று இரவு குண்டம் தயாரானது. அம்மன் அழைத்தல் நிகழ்வு: இதை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணி அளவில், தெப்பக்குளத்தில் இருந்து, மேள, தாளம் முழங்க அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. குண்டத்தைச் சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டு சிறப்பு…

Read More

‘கேம் சேஞ்சர்’ தோல்வி குறித்து முதன் முறையாக பேசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தின் கதை கார்த்திக் சுப்பராஜ் உடையது. அவருடைய கதையை வைத்து ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார். தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்வி குறித்து கார்த்திக் சுப்பராஜ், “சாதாரண ஓர் ஐஏஸ் அதிகாரியை பற்றிய ஒரு கதையினைத் தான் ஆரம்பத்தில் ஷங்கர் சாரிடம் கூறினேன். ஆனால், அது முற்றிலுமாக வேறொரு களத்தில் மாற்றிவிட்டார்கள். அக்கதையில் பல எழுத்தாளர்கள் ஈடுபட்டதால், கதை மற்றும் திரைக்கதை முற்றிலுமாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியான சமயத்தில், அதனை பாராட்டி கார்த்திக் சுப்பராஜ் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவினை முன்வைத்து இப்போது பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Read More

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் கசப்பான மனநிலையில் உள்ளன என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். கோடையில் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில், அதிமுக சார்பில் சென்னை திரு.வி.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், வெள்ளரிக்காய், நீர் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமாவளவன் எனது நண்பர். ஆனால், அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்கள். திருமாவளவனின் கருத்துகள், அவர் தெளிவற்ற நிலையில் இருப்பதைப் பிரதிபலிக்கிறது. அதிமுக அனைவரையும் மதிக்கும் பண்பை கொண்டுள்ளது. சிறிய கட்சிகளாக இருந்தாலும், உரிய மரியாதை கொடுப்போம். ஆனால், திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் கசப்பான அனுபவத்தோடு, கசப்பான மனநிலையோடுதான் கூட்டணியில் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக கூட்டணியில் விசிக சேருமா என்று…

Read More

டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நேற்று காலை வேகமாக சென்ற சரக்கு வேன் மோதியதில் துப்புரவு பெண் தொழிலாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் நூ ஹரியானா என்ற இடத்தில் பிரோஷ்பூர் ஜிர்கா பகுதி அருகே சரக்கு வேன் ஒன்று நேற்று காலை 10 மணியளவில் அதிவேகமாக வந்தது. கட்டுப்பாட்டை இழந்த வேன் விரைவுச்சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், மற்ற 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள மாண்டி கேரா மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறை ஆய்வாளர் அமன்சிங் கூறுகையில், ‘‘ கோர விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார். விபத்துக்கான கரணத்தை அறிய சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம். விசாரணை முடிந்து வேன் டிரைவர் அடையாளம் காணப்பட்டதும் வழக்கு…

Read More

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய செவ்வாய் கிரக வீடியோவை எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ‘‘செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறும் தனது தொலைநோக்கு திட்டம் குறித்து பேசினார். செவ்வாய் கிரகத்துக்கு இந்தாண்டில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரை உருவாக்கினால் அது எப்படியிருக்கும் என்ற கற்பனை கிராபிக்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். ‘செவ்வாய் கிரகத்துக்கு வருக’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒரு நிமிடம், 12 விநாடிகள் ஓடுகிறது. அதில் உயரமான கட்டிடங்களுக்கு இடையே சிறிய ரக விண்கலன்கள், விமானங்கள் வலம் வருகின்றன. அந்நகரத்தின் கட்டமைப்புகள் எல்லாம் மிக நவீனமாக உள்ளன. சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ள இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த சிலர் அங்கு சுவாசிக்கும் சூழல் இருக்குமா? என…

Read More

அரசுப் பணி தேர்வுக்கு வரும் 27ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக விசிக தலைவரும், திருமா பயிலகத்தின் காப்பாளருமா ன திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் ‘திருமா பயிலகம்’ இயங்கி வருகிறது. இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்புகளு க்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு பயின்ற பலர், அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த பயிலகத்தில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 2, 2ஏ, 4, விஏஓ, உதவி ஆய்வாளர் ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 27ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, மேலும் பல பகுதிகளிலும் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. அதன் விவரம்: அங்கனூர் (9843660449), ஜெயங்கொண்டம் (9952860844), சிதம்பரம்…

Read More

ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி. விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியாரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இயற்கை சூழல் நிறைந்த பஹல்காம் பள்ளத்தாக்கை குறிப்பிடும் வகையிலான படத்தை பகிர்ந்துள்ளார். அதன் மேல் பக்கம் ரத்தம் சொட்டும் வகையில் உள்ளது. அந்த படத்தில் ‘All Eyes On Pahalgam’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. “பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை குறித்து பேசுவதில் நான் மிகுந்த வருத்தத்தோடு உள்ளேன். இந்த கொடுஞ்செயலால் அப்பாவி மக்களின் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உடைந்து போயுள்ளன. இத்தகைய வன்முறை தனிநபர்களை குறிவைப்பது மட்டுமல்லாமல், நமது சமூகத்தின் கட்டமைப்பையும் மட்டுப்படுத்துகிறது. சோதனையான இந்த நேரத்தில் பயங்கரவாதத்தை கண்டிப்பதில்…

Read More

வாஷிங்டன்: சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா, இங்கிலாந்து, கனடான, மெக்சிகோ உட்பட உலகின் பல நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தினார். இந்தியாவுக்கு 27% வரியை உயர்த்திய அமெரிக்கா, சீனாவுக்கு 34% வரியை உயர்த்தியது. அமெரிக்காவின் இந்த வரி உயர்வுக்கு உலகின் பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் உயர்த்தியது. அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்பு சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்…

Read More