Author: admin

மூலவர்: பயற்ணீசுவரர் அம்பாள்: நறுமலர்பூங்குழல் நாயகி தல வரலாறு: சோழ நாட்டில் சுங்கச்சாவடி வழியாக ஒரு வணிகன் மாடுகளின் மேல் மிளகு ஏற்றிக் கொண்டு வந்தான். அதை பார்த்த அதிகாரிகள் வரி கேட்டனர். மிளகு மூட்டை என்று சொன்னால் வரி அதிகமாக விதிப்பார்கள் என்று நினைத்து, வணிகன் அதிகாரிகளை நம்ப வைப்பதற்கு, ‘இந்த ஊர் இறைவன் சாட்சியாக இது பயிர் மூட்டைகள்’ என்று கூறி, அதற்கு உண்டான வரியை செலுத்தினான். பிறகு வெகு தூரம் சென்று மூட்டைகளை அவிழ்க்கும்போது எல்லாம் பயிராக இருந்தது. தான் சொன்ன பொய்யால்தான் இந்த தண்டனை என்று நினைத்து பழமலைநாத சுவாமியிடம் முறையிட்டான். அப்போது ஓர் அசரீரி குரல்,அவனை மன்னித்துவிட்டதாகவும், இனி பயிர் அனைத்தும் மிளகாக மாறும் எனவும் கூறியது. மிளகைப் பயிறாக மாற்றியதால் சிவபெருமான் பயிறணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஊர் பத்ராரண்யம், பயறணீச்சுரம், முற்கபுரி என்று அழைக்கப்படுகிறது. கோயில் சிறப்பு: பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின்போது நீரின்றி…

Read More

தான் கடுமையான உடல்நிலை பிரச்சினையை எதிர்கொண்டு இருப்பதாக நடிகை பவித்ரா லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கடினமாக்க வேண்டாம் என்று அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. சில படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். சில மாதங்களாகவே இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டுள்ளார் என்று செய்திகள் பரவியது. இது தொடர்பாக சில விளக்கங்கள் கொடுத்திருந்தார் பவித்ரா லட்சுமி. மேலும், அவரது சமீபத்திய சமூக வலைதள புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் மீண்டும் வதந்திகள் பரவ தொடங்கியது. இது தொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பவித்ரா லட்சுமி. அதில் “என் தோற்றம் மற்றும் எடை குறித்து என்னைப் பற்றி நிறைய ஊகங்கள் பரவி வருகின்றன. என் தரப்பில் இருந்து அதற்கு விளக்கங்கள் கொடுத்த பிறகும், அவை நிறுத்தப்படவில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து…

Read More

சென்னை: தமிழகம் முழு​வதும் 77 மாவட்ட அமர்வு நீதிப​தி​களை இடமாற்​றம் செய்து உயர் நீதி​மன்ற தலை​மைப் பதி​வாளர் எஸ்​.அல்லி உத்​தர​விட்​டுள்​ளார். அதன் விவரம் வருமாறு: அரசு சொத்​தாட்​சி​யர் மற்​றும் நிர்​வாக அறங்​காவல​ராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்​கேஸ்​வரன், மயி​லாடு​துறை மாவட்ட நீதிப​தி​யாக​வும், சென்னை தொழிலா​ளர் தீர்ப்​பா​யம் நீதிபதி டி.சந்​திரசேகரன், செங்​கல்​பட்டு மாவட்ட முதன்மை நீதிப​தி​யாக​வும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.​முரு​கேசன், சென்னை 8-வது சிபிஐ நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், அங்கு பணிபுரிந்த நீதிபதி எஸ்​.ஈஸ்​வரன், சென்னை 9-வது சிபிஐ நீதி​மன்ற கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும் மாற்​றப்​பட்​டுள்​ளனர். சென்னை 2-வது பெருநகர கூடு​தல் நீதிபதி எஸ்​.தஸ்​னீம், திரு​வள்​ளூர் மாவட்ட முதலா​வது கூடு​தல் அமர்வு நீதிப​தி​யாக​வும், சென்னை 16-வது பெருநகர கூடு​தல் அமர்வு நீதிபதி எல்​.ஆபிர​காம் லிங்​கன், வில்​லிபுத்​தூர் மகளிர் நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், செங்​கல்​பட்டு மாவட்ட கூடு​தல் அமர்வு நீதிபதி கே.​கா​யத்​ரி, வேலூர் விரைவு நீதி​மன்ற நீதிப​தி​யாக​வும், சென்னை 5-வது குடும்​ப நல…

Read More

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்பியதற்காக மொத்தம் 6.3 கோடி சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ், சுனோ நியூஸ் உள்ளிட்ட செய்தி சேனல்களுக்கும் பத்திரிகையாளர்கள் இர்ஷாத் பாட்டி, அஸ்மா ஷிராசி, உமர் சீமா, முனீப் ஃபரூக் ஆகியோரின் யூடியூப் சேனல்களும் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், சமா ஸ்போர்ட்ஸ், உசேர் கிரிக்கெட், ராசி நாமா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சேனல்களை ஒருவர் அணுக முயன்றால், “தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு தொடர்பான அரசின் உத்தரவு காரணமாக இந்த சேனல் தற்போது இந்த நாட்டில் கிடைக்கவில்லை. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து கூகுள் வெளிப்படைத்தன்மை அறிக்கையை (transparencyreport.google.com) பார்வையிடவும்” என்று…

Read More

சென்னை: இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சீன தேசத்தின் 36 செயலிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020-ல் தேச பாதுகாப்பு கருதி சீன தேசத்தின் சுமார் 267 மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. டிக்-டாக் துவங்கி பல்வேறு செயலிகள் இதில் அடங்கும். அதோடு இல்லமால் சீன தேசத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மொபைல் செயலிகளும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சீன தேச செயலிகளில் சுமார் 36 செயலிகள் இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு கிடைத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இந்த செயலிகளை டவுன்லோட் செய்யலாம் எனவும் தகவல். கேமிங், ஷாப்பிங், எண்டர்டெயின்மெண்ட், ஃபைல் ஷேரிங், கன்டென்ட் கிரியேஷன், ஸ்ட்ரீமிங் தளங்கள் என இந்த மொபைல் அப்ளிகேஷன்களின் கேட்டகிரி நீள்கிறது. தடை செய்யப்பட்ட செயலிகள்…

Read More

சென்னை: ‘பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கொண்டுவர வேண்டும். தமிழ் வழியில் படிப்போருக்கு கட்டணச் சலுகை மற்றும் வேலைவாய்ப்பு உறுதியை தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி 34 தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் எழுச்சிப் பேரவை செயலர், முனைவர் பா.இறையரசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், ‘தமிழுக்காக தங்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பாராட்டு. பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக இருப்பது கட்டாயம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு ஆகியவற்றைப் பாராட்டுகிறோம். பொறியியல் மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளைத் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமரும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் கூறியுள்ளனர். தமிழத்தில் முன்பே பொறியியல், மருத்துவம் தமிழ் வழிக்கல்வி முயற்சிகள் நடந்து பொறியியல் ஓரளவு நூல்கள் உள்ளன. மூதறிஞர் ராஜாஜி கூறியது போல ஆங்கில நூல்கள் வைத்துப் பாடம் நடத்தினால், உடனே துணை…

Read More

புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் ஆர்சிபி நட்சத்திரமான விராட் கோலி, கே.எல்.ராகுலை கலாய்த்தார். கடந்த 10-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் நட்சத்திரம் கே.எல்.ராகுல் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் வெற்றியை ‘காந்தாரா’ பட ஸ்டைலில் பேட்டை தரையில் ஓங்கி நிறுத்தி கொண்டாடினார். இது என்னுடைய மைதானம் எனவும் அவர், கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டம் முடிவடைந்ததும் தேவ்தத் படிக்கல் மற்றும் கருண் நாயருடன் கே.எல்.ராகுல் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது கே.எல்.ராகுல் அருகே சென்ற விராட் கோலி கையில் பேட் இல்லாமல் இது என்னுடைய இடம்…

Read More

வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வாகனம், விண்வெளி, செமிகண்டெக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு இன்றியமையாததாக விளங்கும் மிகவும் அரிதான உலோகங்கள் மற்றும் காந்தங்கள் உள்ளிட்ட முக்கிய உயர் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த சீனா முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, முக்கியமான இறக்குமதிகள் குறித்த தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீன பொருட்களின் இறக்குமதிக்கு தற்போது 245 சதவீதம் வரையிலான வரிவிதிப்பை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அடிப்படையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலியம், ஜெர்மானியம், ஆன்டிமனி மற்றும் ராணுவ பயன்பாடுகளுடன் கூடிய பிற…

Read More

திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்.7) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூக்கு வந்துள்ளனர். பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மார்ச் 15-ம் தேதி தொடங்கியது. திணும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. ஏறத்தாழ 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட ஆழித்தேர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று இரவு 8 மணியளவில் தியாகராஜ சுவாமி, அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில் விநாயகர், சுப்பிரமணியர், தேர் வடம் பிடிக்கப்படும். காலை 7:30 மணிக்கு ஆழித் தேரோட்டம் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். ஆழித் தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி தொடர்பாக கங்கை அமரன் கருத்துக்கு பிரேம்ஜி பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்கள் உபயோகப்படுத்தி இருப்பது தொடர்பாக தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக பேசும் போது கங்கை அமரன், “7 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் உருவாக்கிய பாடல்களை விட, எங்களுடைய பாடல்களுக்கு தான் கைதட்டல்கள் அதிகமாக விழுகிறது. அது தான் வெற்றிக்கு காரணம்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அவரது மகன் பிரேம்ஜி, “அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்பதால் அப்பா பேசியிருக்கிறார். எனது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றால் நானும் பேசுவேன் அல்லவா. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும். ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்கு முழுக் காரணமும் அஜித் சார்…

Read More