Author: admin

அமேசான் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான ஜெஃப் பெசோஸ் தனது 78 வயதில் தனது தாயார் ஜாக்லின் கிஸ் பெசோஸ் காலமானதைத் தொடர்ந்து ஒரு மனமார்ந்த அஞ்சலி பகிர்ந்து கொண்டார். அவரது பின்னடைவு, தாராள மனப்பான்மை மற்றும் குடும்பத்திற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்ட ஜாக்லின், பெசோஸின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயணத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவர் வெறும் 17 வயதில் ஒரு தாயானார், தனது குழந்தைகளை அன்புடனும் உறுதியுடனும் வளர்த்தார், பின்னர் அமேசானில் ஆரம்பகால முதலீடுகள் உட்பட ஜெஃப்பின் தொழில் முனைவோர் அபிலாஷைகளை ஆதரித்தார். தனது குடும்பத்திற்கு அப்பால், ஜாக்லின் தன்னை பரோபகாரம் மற்றும் கல்விக்கு அர்ப்பணித்தார், பெசோஸ் குடும்ப அறக்கட்டளை மற்றும் வ்ரூம் மற்றும் பெசோஸ் அறிஞர்கள் திட்டம் போன்ற முன்முயற்சிகளை இணைத்து, எண்ணற்ற வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது காதல், விடாமுயற்சி மற்றும் சேவையின் மரபு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.ஜெஃப் பெசோஸ்…

Read More

பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவரது அரசியல் நகர்வு மாநிலம் சார்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கட்சி வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அதை சிராக் பாஸ்வான் மறுத்துள்ளார். “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்னை விலக்கி வைக்கும் நோக்கில் இது மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.…

Read More

சென்னை: பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்​சுப் பணி​யாளர்​களின் கல்​வித் தகு​தியை சரி​பார்க்க பள்​ளிக்​கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் உள்ள 2 சதவீத காலி​யிடங்​கள் அத்​துறை​யின் அமைச்​சுப் பணி​யாளர்​களின் பதவி உயர்வு மூல​மாக நிரப்​பப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு அமைச்​சுப்பணி​யாளர்​களுக்கு பட்​ட​தாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்​கான பதவி உயர்வு கலந்​தாய்வு நீதிமன்ற தீர்ப்​பின் அடிப்​படை​யில் வழங்​கப்பட வேண்​டுமென உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. அதன்​படி டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்​சுப் பணி​யாளர்​களுக்கு கலந்​தாய்வு மூல​மாக பட்​ட​தாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது. அவர்​களை உடனடி​யாக பணி விடு​விப்பு செய்​யு​மாறு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. அவ்​வாறு பணி விடு​விப்பு செய்​யும்​போது பட்​ட​தாரி ஆசிரியர் பதவிக்​குரிய கல்​வித் தகு​தியை அவர்​கள் பெற்​றுள்​ளனரா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும். பிற மாநில ஆவணங்​களாக இருந்​தால் மதிப்​பீடு செய்​யப்​பட வேண்​டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலு​வை​யில் இல்லை என்​ப​தை​ உறுதி…

Read More

சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்​டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்​கள் கடித்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்ட தகவலால் அதிர்ச்​சி​யடைந்த நீதிப​தி​கள், நாய்க்​கடி சம்​பவங்​களை தடுக்க திட்​டம் வகுத்து விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட்​டுள்​ளனர். சென்​னை​யில் வீட்​டில் செல்​ல​மாக வளர்க்​கப்​படும் ராட்​வீலர் நாய்​களும், தெரு​நாய்​களும் சிறு​வர், சிறுமியர் மற்​றும் பெண்​களை கடித்​துக் குதறிய சம்​பவங்​களை​யடுத்​து, நாய்​களை கட்​டுப்​படுத்​தக் கோரி கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞ​ரான ஆர்.எஸ்​. தமிழ்​வேந்​தன் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், ‘தெருக்​களில் வாய்​மூடி அணிவிக்​காமல் அழைத்​துச் செல்​லப்​படும் ராட்​வீலர் போன்ற வளர்ப்பு நாய்​களை​யும், ஆக்​ரோஷமாக சுற்​றித்​திரி​யும் தெரு​நாய்​களை​யும் பிடித்து பொது​மக்​களை பாது​காக்க உரிய நடவடிக்கை எடுக்க மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட வேண்​டும்’ என கோரி​யிருந்​தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசாரணைக்கு வந்​தது. அப்​போது, சென்னை மாநக​ராட்​சி​யின் முதன்மை கால்​நடைத் துறை அதி​காரி​யான ஜெ.க​மால்…

Read More

ஹைதராபாத்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்​து, கொன்ற வழக்​கில் குற்​ற​வாளிக்கு நல்​கொண்டா நீதி​மன்​றம் தூக்கு தண்​டனை விதித்​துள்​ளது. தெலங்கானா மாநிலம், நல்​கொண்​டா​வில் கடந்த 2013-ம் ஆண்​டு, வீட்​டில் தனி​யாக உறங்கி கொண்​டிருந்த 12 வயது சிறுமியை அதே பகு​தியை சேர்ந்த மொஹம்மி முகர்​ணம் என்​கிற 35 வயது நபர், வீட்​டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்​ததுடன், அவரை கொலை செய்​து, வீட்​டின் அருகே உள்ள ஒரு கால்​வா​யில் வீசி சென்​று​விட்​டார். அதன் பிறகு உடல் ஒரு ஏரிக்​கரை​யில் ஒதுங்​கியது. இதனை தொடர்ந்​து, பெற்​றோர் கொடுத்த புகாரின் அடிப்​படை​யில் நல்​கொண்டா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, குற்​ற​வாளியை கைது செய்து நல்​கொண்டா போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜர் படுத்​தினர். இவ்​வழக்கு சுமார் 12 ஆண்​டு​களாக நடந்து வந்த நிலை​யில், நேற்று இவ்​வழக்கை விசா​ரணை செய்த போக்சோ நீதி​மன்ற நீதிபதி ரோஜா ரமணி, குற்​ற​வாளி மொஹம்மி முகர்​ணத்​திற்கு தூக்கு தண்​டனை​யும், ரூ.1.10 லட்​சம் அபராத​மும்…

Read More

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் பிறந்​த​நாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்​டு ​தோறும் கொண்டாடப்பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாளை சென்​னை, காம​ராஜர் அரங்​கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. ஆக.16-ம் தேதி மாலை 4 மணி முதல் நள்​ளிரவு 12 மணி வரை விழா நடை​பெறவுள்​ளது. அதன்​படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழு​வினரின் இசைப்​பாய்ச்​சல் நிகழ்ச்​சி​யும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழு​வினரின் நடன நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது. அதைத் தொடர்ந்​து, ‘மதச்​சார் ​பின்மை காப்​போம்’ தலைப்​பில் கவியரங்​கம் நடை​பெறும். இதில் இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ், கவிஞர் விவே​கா, ஆண்​டாள் பிரியதர்​ஷினி, இளைய கம்​பன், தஞ்சை இனியன், அருண் பார​தி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். விசிக துணை பொதுச்​செய​லா​ளர் வன்​னியரசு வரவேற்​புரை​யாற்​றுகிறார். வாழ்த்​தரங்​கம் இரவு 11 மணிக்​குத் தொடங்​கு​கிறது. இதில், மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன்…

Read More

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன்​படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதில் உயி​ரிழந்த மற்​றும் நிரந்​தர​மாக புலம்​பெயர்ந்த 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள், ஏடிஆர் தொண்டு நிறு​வனம் உட்பட பல்​வேறு தரப்​பினர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் 11 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சூர்ய காந்த் மற்​றும் ஜாய்​மாலா பாக்சி அமர்வு முன்பு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறிய​தாவது: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 22 லட்​சம் பேர் இறந்​து​விட்​ட​தாக தேர்​தல் ஆணை​யம் கூறுகிறது. அப்​படி​யா​னால் இந்த தகவல் பூத் மட்​டத்​தில் தெரிவிக்​காதது ஏன்? எனவே, நீக்​கப்​பட்ட வாக்​காளர்​களின் பெயர் மற்​றும் அவர்​களை…

Read More

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக 2022-ம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்கிற்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருதரப்பையும் சேர்ந்த மிகவும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ரவி காய் குடும்பம் ஹோட்டல் மற்றும் உணவுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இன்டர் கான்டினென்டல் ஹோட்டல் மற்றும் ஐஸ்கிரீம் பிராண்டான புரூக்ளின் க்ரீமரியின் குறிப்பிடத்தக்க உரிமையைக் கொண்டுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றுள்ள சானியா சந்தோக், கால்நடை தொழில்நுட்பத்தில் பட்டயப்…

Read More

சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும் தேவாவுக்கு, ராஜசேகரின் மரணம், இயற்கையானதல்ல என்பது புரிகிறது. அதற்கு, கடத்தல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சைமனும் (நாகார்ஜுனா) அவனுடைய வலது கை, தயாளனும் (சவுபின் சாஹிர்) காரணமாக இருக்கிறார்கள். அவர்களைத் தேவா என்ன செய்கிறார்? தேவாவுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு, சைம னுக்கும் தேவாவுக்குமான முன் கணக்கு என்ன? என்பது கதை. ஒரு கமர்ஷியல், ஆக் ஷன் மசாலா படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அது அனைத்தையும் பக்காவாக கலந்து, தனது முந்தைய படங்களைப் போலவே ‘கூலி’யையும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாஜிக்கைதூர வைத்துவிட்டு, அவர் படங்களில் வரும் ரசனையான பழைய ஹிட் பாடல்கள், மிரட்டலான சண்டைக் காட்சிகள், ஏராளமான துணை நடிகர்கள், முன் பின்னான கதை சொல்லல்…

Read More

சென்னை:உங்​களு​டன் ஸ்டா​லின், நலம் காக்​கும் ஸ்டா​லின் ஆகிய அரசின் திட்​டங்​களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்​சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ‘உங்​களு​டன் ஸ்டா​லி்ன்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன், வழக்கறிஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் மற்​றும் திமுக மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதே கோரிக்​கை​யுடன் வழக்கு தொடர்ந்த அதி​முக எம்​.பி…

Read More