மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம். அதேவேளையில் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து தலா ரூ.6 லட்சம் அல்லது 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ அதை கட்ட வேண்டும்.
Author: admin
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹார்வர்டு பல்கலைகழகத்துக்கான $2.2 பில்லியன் மானியங்களையும் $60 மில்லியன் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு ட்ரம்ப் நிர்வாகம் நீண்ட பட்டியல் ஒன்றை அனுப்பியது. அதில் இருந்த கெடுபிடிகளுக்கு இணங்கப்போவதில்லை என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்நிலையில் தான், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிபந்தனைகள் என்னென்ன? மாணவர்கள் முகக்கவசம் அணியக் கூடாது, மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையிலேயே இருக்க வேண்டும், பல்கலைக்கழக மாணவர்கள் பற்றி தணிக்கை மேற்கொள்ள வேண்டும், அதே போல் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் குழுக்களின் தலைவர்கள் அகியோரின் பின்புலம் பற்றியும் தணிக்கை செய்ய வேண்டும்.…
விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இந்திய தொழிலதிபரும் பரோபகாரியரும் அசிம் பிரேம்ஜி தனது குறிப்பிடத்தக்க வணிக புத்திசாலித்தனம் மற்றும் பரோபகாரத்திற்கான உறுதியற்ற அர்ப்பணிப்புக்காக அறியப்படுகிறார். அவரது குறைவான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஆளுமைக்கு உண்மையாக, பெங்களூரில் பிரேம்ஜியின் குடியிருப்பு சமகால ஆடம்பரத்துடன் கலந்த பாரம்பரிய நேர்த்தியின் அதிர்ச்சியூட்டும் பிரதிபலிப்பாகும். வைட்ஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராண்ட் ஃபார்ம்ஹவுஸ் பாணி சொத்து அவரது எளிமை, நிலைத்தன்மை மற்றும் சிறப்பான மதிப்புகளை பிரதிபலிக்கிறது.அரை ஏக்கர் பரப்பளவில், 6,000 சதுர அடி வீடு புகழ்பெற்ற பி.என்.ஏ பாலன் + நம்பிசான் கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது. ₹ 350 கோடி விலையில், சொத்து என்பது ஆடம்பரத்தை எவ்வாறு இணக்கத்துடன் இணைக்க முடியும் என்பதற்கான பிரதிபலிப்பாகும், இயற்கையை நோக்கி உணர்திறன். இந்த வடிவமைப்பு இந்திய மரபுகளில் நிறைந்துள்ளது, ஆனால் நவீன கட்டடக்கலைக் கொள்கைகளை நோக்கி சிந்தனைமிக்க கவனத்துடன், எனவே பெங்களூரின் சலசலப்பான நகர்ப்புற காட்சிக்கு மத்தியில் இது ஒரு…
கோவை; கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏழாவது படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஏப்.4) நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மார்ச் 30-ம் தேதி மாலை மங்கள இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் வழிபாடு, இறை அனுமதி பெறுதல், கிராமசாந்தி பூஜை ஆகியவை நடைபெற்றன. மார்ச் 31-ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல் ஆகியவை நடந்தன. பிரதான ராஜகோபுரம் உள்ளிட்ட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் மொத்தம் 18 கலசங்கள் பொருத்தப்பட்டன. அதேபோல, யாக பூஜைகளுக்காக கோயில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. ஏப்.1-ம் தேதி முதற்கால யாக வேள்வி தொடங்கியது. நேற்று ஐந்தாம் கால யாக வேள்வி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக நாளான இன்று…
ரஜினியின் பாபா, கமலின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், விஜய்யின் கில்லி, அஜித்தின் வாலி, தினா உள்பட பல படங்கள் ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் விஜய் நடித்து 2005-ம் ஆண்டு வெளி யான ‘சச்சின்’ படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரீரிலிஸ் செய்தார். கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இந்தப் படக்குழு சக்சஸ் மீட் நடத்தியது. இதில் தயாரிப்பாளர் தாணு, சச்சின் பட இயக்குநர் ஜான் மகேந்திரன், இசை அமைப்பாளர் தேவி பிரசாத், நடன இயக்குநர் ஷோபி கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறும்போது, “விஜய், திருப்பாச்சி, மதுர போன்ற அதிரடி படங்களில் கவனம் செலுத்திய போது, அவரிடம் இயக்குநர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் ‘குஷி’ போன்ற கதையை சொன்னார். கேட்கிறீர்களா?’ என்று கேட்டேன். பிறகு ஜான் மகேந்திரனை, விஜய்யிடம் கதை சொல்ல ஏற்பாடு செய்தேன். ஒன்றரை…
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் ஆய்வகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பிரிவு முன்னாள் இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் இயற்றிய செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் கையேட்டை வெளியிட்டனர். பின்னர், ரூ.14 லட்சம் செலவில் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை – சிகிச்சை மையம் மற்றும் ரூ.94 லட்சம் செலவில் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்துவைத்தனர். சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், துணை முதல்வர் கவிதா, நீரிழிவு நோயியல் துறை இயக்குநர் தர்மராஜன், காது, மூக்கு, தொண்டை நிலைய…
பாகிஸ்தான் இரண்டாக உடைந்து பலுசிஸ்தான் புதிய நாடாக உருவாகும் என்று கோவா முதல்வர் பிரமோத் சவந்த் ஆருடம் தெரிவித்துள்ளார். பாஜக தொண்டர்களிடம் நேற்று முன்தினம் உரையாற்றிய சாவந்த் இதுகுறித்து மேலும் கூறியதாவது: பலுசிஸ்தான் சுந்திரத்தை நோக்கி தனது இறுதி முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் இரண்டாகப் பிரியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து, பலுசிஸ்தான் புதிய நாடாக தன்னை விரைவில் அறிவித்துக் கொள்ளும் நிலை உள்ளது. பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டனர். அதிலிருந்து அவர்கள் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆனால், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது. அவர்களுடன் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் மதச்சார்பற்ற நாடு. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என நாம் அனைவரும் சமூக ஒற்றுமையுடன், அமைதியான முறையில் இணைந்து வாழ்கிறோம். பாரதம் ஒற்றை நாடாக இருந்தது. ஆனால் பிரிவினைக்குப் பிறகு அது இந்தியா, பாகிஸ்தான் என ஆனது. 1971-ம் ஆண்டு பாகிஸ்தான்…
சென்னை: ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அதன் மலிவு விலை போனான ‘ஐபோன் எஸ்இ4’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல். முந்தைய மாடல் எஸ்இ உடன் ஒப்பிடும்போது இந்த புதிய மாடல் போனில் டிசைன் மற்றும் ஹார்டுவேர் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல். ‘ஐபோன் எஸ்இ4’ போன் எஸ்இ வரிசையில் நான்காவது ஜெனரேஷனாக வெளிவர உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த போன் குறித்த தகவல் பேசுபொருளாக உள்ளது. கடைசியாக எஸ்இ போன் வரிசையில் எஸ்இ3 மாடல் கடந்த 2022-ல் வெளியானது. எஸ்இ4 மாடலின் குறித்து வெளியாகி உள்ள தகவலின் அடிப்படையில் இந்த போனின் டிசைன் ஐபோன் 14 போல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 ஓஎல்இடி டிஸ்பிளேவை இந்த போன் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் இருக்காது எனவும் தகவல். ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான மாடலில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் வகையில் இதன் ஃப்ரேம்…
சென்னை: மத்திய பட்ஜெட்டில், சென்னையில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,445.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் (ஆர்.டி.ஐ) வாயிலாக தெரியவந்துள்ளது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மத்திய பட்ஜெட்டில், 2025-26-ம் நிதியாண்டுக்கு சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,445.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.5,434.72 கோடியும், பாட்னா மெட்ரோ திட்டத்துக்கு ரூ.3,165.19 கோடியும், பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 2,217 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மஹாராஸ்டிராவில் மும்பை உட்பட நான்கு இடங்களில் நடக்கும் மெட்ரோ திட்டத்துக்கு ரூ.4,836 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. 10 மாில மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.31,755.90 கோடி…
கோப்பு – ஜனவரி 9, 2024 செவ்வாய்க்கிழமை, சான் பிரான்சிஸ்கோவில் சான் பிரான்சிஸ்கோ வாரிய மேற்பார்வையாளர் கூட்டத்தின் போது மேற்பார்வையாளர் மாட் டோர்சி காட்டப்பட்டுள்ளது. (வரவு: ஆபி) சான் பிரான்சிஸ்கோ: நடைபாதையில் ஃபெண்டானைலை புகைப்பவர்களின் போதைப்பொருள் அதிகப்படியான இறப்புகள் மற்றும் காட்சிகளிலிருந்து விலகி, சான் பிரான்சிஸ்கோ வியாழக்கிழமை ஒரு “மீட்பு முதல்” மருந்துக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு நெருக்கமாக நகர்ந்தது, இது சட்டவிரோத போதைப்பொருட்களிலிருந்து விலகலை அதன் முதன்மை இலக்காக அமைக்கிறது, இது நகரத்தில் வெப்பமான விவாதத்தை தீங்கு விளைவிக்கும் வகையில் தீங்கு விளைவிக்கும். மேற்பார்வையாளர் மாட் டோர்சியின் முன்மொழிவு, போதைப்பொருள் பாவனையை நிறுத்துவதற்கு அதன் முக்கியத்துவம் வெளியேறத் தயாராக இல்லாதவர்களை அந்நியப்படுத்துகிறது என்று கூறுகிறது, அதே நேரத்தில் ஆதரவாளர்கள் நகரம் மிகவும் அனுமதிக்கப்பட்டதாகவும், போதைப்பொருள் பயன்பாட்டை பாதுகாப்பானதாக மாற்றுவதாகவும் போதைப்பொருள் சுழற்சியை உடைக்க உதவாது. ஆல்கஹால் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வரும் டோர்சி, பாதுகாப்பான-பயன்பாட்டு சாதனங்களை விநியோகிப்பதும், மக்களை சமூக…