சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2 மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டம் மேற்கொண்டனர். இதற்கிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறிப்பதை ஒருபோதும்அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லுமாறு காவல் துறை நேற்று முன்தினம் மாலை அறிவுறுத்தியது. மேலும், நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி கலைந்து…
Author: admin
தயிர், பிற குறைந்த கொழுப்பு பால் பொருட்களுடன், உடலுக்கு கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது. உடல் பொட்டாசியம் மூலம் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது, இது சோடியம் அளவை ஒழுங்குபடுத்துகிறது. ஆரோக்கியமான இரத்த நாளங்கள் வலுவான எலும்புகளுடன் சேர்ந்து, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுகின்றன. முழு கொழுப்பு பதிப்புகளுக்கு பதிலாக குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு அல்லாத பால் மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பை உட்கொள்வதைக் குறைக்க மக்களுக்கு உதவுகிறது, இது இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். வழக்கமான தயிர் நுகர்வு பக்கவாதம் மற்றும் இதய நோய்களை வளர்ப்பதற்கான குறைந்த நிகழ்தகவுகளுக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தயிர் ஒரு சிற்றுண்டாக செயல்படுகிறது, இது காலை உணவு நேரத்தில் புதிய பழம் மற்றும் முழு தானியங்களுடன் இணைக்கப்படலாம்.ஆதாரங்கள்https://www.healthline.com/health/stroke/foods-that-prevent-strokehttps://pmc.ncbi.nlm.nih.gov/articles/pmc6047334/https://continentalhospitals.com/blog/10-Foods-to-add-to-your-diet-that-help-prevent-stroke/https://wwwhttps://wwwமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக…
புதுடெல்லி: “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம். பாலைவனங்களாக இருந்தாலும் சரி, இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, கடலின் கரைகளாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது: நாம் அனைவரும்…
சென்னை: ஜப்பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையில், செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய நிறுவனமான கோகி ஹோல்டிங் ஜப்பான், ஜெர்மனி, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அதன் துணை நிறுவனமான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15-க்கும் மேற்பட்ட விற்பனை அலுவலகங்கள், 500-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சேவை மையங்களுடன் விரிவான வலையமைப்பை கொண்டுள்ளது. ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம், மஹிந்திரா வோர்ல்டு சிட்டியில் அமைந்துள்ள தொழிற்பூங்காவில், ரூ.700 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும்…
அமேசான் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான ஜெஃப் பெசோஸ் தனது 78 வயதில் தனது தாயார் ஜாக்லின் கிஸ் பெசோஸ் காலமானதைத் தொடர்ந்து ஒரு மனமார்ந்த அஞ்சலி பகிர்ந்து கொண்டார். அவரது பின்னடைவு, தாராள மனப்பான்மை மற்றும் குடும்பத்திற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்ட ஜாக்லின், பெசோஸின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயணத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவர் வெறும் 17 வயதில் ஒரு தாயானார், தனது குழந்தைகளை அன்புடனும் உறுதியுடனும் வளர்த்தார், பின்னர் அமேசானில் ஆரம்பகால முதலீடுகள் உட்பட ஜெஃப்பின் தொழில் முனைவோர் அபிலாஷைகளை ஆதரித்தார். தனது குடும்பத்திற்கு அப்பால், ஜாக்லின் தன்னை பரோபகாரம் மற்றும் கல்விக்கு அர்ப்பணித்தார், பெசோஸ் குடும்ப அறக்கட்டளை மற்றும் வ்ரூம் மற்றும் பெசோஸ் அறிஞர்கள் திட்டம் போன்ற முன்முயற்சிகளை இணைத்து, எண்ணற்ற வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது காதல், விடாமுயற்சி மற்றும் சேவையின் மரபு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.ஜெஃப் பெசோஸ்…
பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவரது அரசியல் நகர்வு மாநிலம் சார்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கட்சி வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அதை சிராக் பாஸ்வான் மறுத்துள்ளார். “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்னை விலக்கி வைக்கும் நோக்கில் இது மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.…
சென்னை: பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் அமைச்சுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில் உள்ள 2 சதவீத காலியிடங்கள் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு அமைச்சுப்பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலமாக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு பணி விடுவிப்பு செய்யும்போது பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பிற மாநில ஆவணங்களாக இருந்தால் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லை என்பதை உறுதி…
சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், நாய்க்கடி சம்பவங்களை தடுக்க திட்டம் வகுத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் ராட்வீலர் நாய்களும், தெருநாய்களும் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களை கடித்துக் குதறிய சம்பவங்களையடுத்து, நாய்களை கட்டுப்படுத்தக் கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ஆர்.எஸ். தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘தெருக்களில் வாய்மூடி அணிவிக்காமல் அழைத்துச் செல்லப்படும் ராட்வீலர் போன்ற வளர்ப்பு நாய்களையும், ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் தெருநாய்களையும் பிடித்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியின் முதன்மை கால்நடைத் துறை அதிகாரியான ஜெ.கமால்…
ஹைதராபாத்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு நல்கொண்டா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவில் கடந்த 2013-ம் ஆண்டு, வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மொஹம்மி முகர்ணம் என்கிற 35 வயது நபர், வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள ஒரு கால்வாயில் வீசி சென்றுவிட்டார். அதன் பிறகு உடல் ஒரு ஏரிக்கரையில் ஒதுங்கியது. இதனை தொடர்ந்து, பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நல்கொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து நல்கொண்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவ்வழக்கு சுமார் 12 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று இவ்வழக்கை விசாரணை செய்த போக்சோ நீதிமன்ற நீதிபதி ரோஜா ரமணி, குற்றவாளி மொஹம்மி முகர்ணத்திற்கு தூக்கு தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும்…
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமாவளவனின் 63-வது பிறந்தநாளை சென்னை, காமராஜர் அரங்கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக.16-ம் தேதி மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை விழா நடைபெறவுள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசைப்பாய்ச்சல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ‘மதச்சார் பின்மை காப்போம்’ தலைப்பில் கவியரங்கம் நடைபெறும். இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்கின்றனர். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வரவேற்புரையாற்றுகிறார். வாழ்த்தரங்கம் இரவு 11 மணிக்குத் தொடங்குகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்…