Author: admin

சென்னை: கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொடர் போராட்​டம் நடத்​திய தூய்மைப் பணி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு குண்டுக்​கட்​டாகக் கைது செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில், நேற்று அவர்​கள் அனை​வரும் விடுவிக்​கப்​பட்​டனர். சென்னை மாநகராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் 2 மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு தொடர் போராட்​டம் மேற்​கொண்​டனர். இதற்​கிடையே, போராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறிப்​பதை ஒரு​போதும்அனு​ம​திக்க முடி​யாது என கருத்து தெரி​வித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாக போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டது. அதையடுத்​து, போராட்​டம் நடத்​திய தூய்​மைப் பணி​யாளர்​களைக் கலைந்து செல்​லு​மாறு காவல் துறை நேற்று முன்​தினம் மாலை அறி​வுறுத்​தி​யது. மேலும், நீதி​மன்ற உத்​தர​வைச் சுட்​டிக்​காட்டி கலைந்து…

Read More

தயிர், பிற குறைந்த கொழுப்பு பால் பொருட்களுடன், உடலுக்கு கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது. உடல் பொட்டாசியம் மூலம் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது, இது சோடியம் அளவை ஒழுங்குபடுத்துகிறது. ஆரோக்கியமான இரத்த நாளங்கள் வலுவான எலும்புகளுடன் சேர்ந்து, கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுகின்றன. முழு கொழுப்பு பதிப்புகளுக்கு பதிலாக குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு அல்லாத பால் மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பை உட்கொள்வதைக் குறைக்க மக்களுக்கு உதவுகிறது, இது இதய ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். வழக்கமான தயிர் நுகர்வு பக்கவாதம் மற்றும் இதய நோய்களை வளர்ப்பதற்கான குறைந்த நிகழ்தகவுகளுக்கு வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. தயிர் ஒரு சிற்றுண்டாக செயல்படுகிறது, இது காலை உணவு நேரத்தில் புதிய பழம் மற்றும் முழு தானியங்களுடன் இணைக்கப்படலாம்.ஆதாரங்கள்https://www.healthline.com/health/stroke/foods-that-prevent-strokehttps://pmc.ncbi.nlm.nih.gov/articles/pmc6047334/https://continentalhospitals.com/blog/10-Foods-to-add-to-your-diet-that-help-prevent-stroke/https://wwwhttps://wwwமறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக…

Read More

புதுடெல்லி: “நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். நாடு முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “என் அன்பான இந்திய குடிமக்களே, இந்த சுதந்திர தின விழா பெருமை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தருணம் ஆகும். இது 140 கோடி மக்களின் கொண்டாட்டம். பாலைவனங்களாக இருந்தாலும் சரி, இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, கடலின் கரைகளாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, நாடு முழுவதும் ஒரே குரல் ஒலிக்கிறது: நாம் அனைவரும்…

Read More

சென்னை: ஜப்​பானைச் சேர்ந்த ஹிகோகி பவர் டூல்ஸ் நிறு​வனம் மற்​றும் தமிழக அரசு இடை​யில், செங்​கல்​பட்​டில் ரூ.700 கோடி முதலீட்​டில் 1000 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் மின் கருவி​கள் உற்​பத்தி ஆலை அமைக்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லி்ன் முன்னிலை​யில் ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஜப்​பான் நாட்​டைச் சேர்ந்த உலகளா​விய நிறு​வன​மான கோகி ஹோல்​டிங் ஜப்​பான், ஜெர்​மனி, சீனா, அமெரிக்கா மற்​றும் இந்​தியா ஆகிய நாடு​களில் உற்​பத்தி ஆலைகளைக் கொண்​டுள்​ளது. பெங்​களூருவை தலை​மை​யிட​மாகக் கொண்​டுள்ள அதன் துணை நிறு​வன​மான ஹிகோகி பவர் டூல்ஸ் இந்​தியா பிரைவேட் லிமிடெட், 15-க்​கும் மேற்​பட்ட விற்​பனை அலு​வல​கங்​கள், 500-க்​கும் மேற்​பட்ட விநி​யோகஸ்​தர்​கள் மற்​றும் 100-க்​கும் மேற்​பட்ட சேவை மையங்​களு​டன் விரி​வான வலை​யமைப்பை கொண்​டுள்​ளது. ஹிகோகி பவர் டூல்ஸ் இந்​தியா நிறு​வனம், செங்​கல்​பட்டு மாவட்​டம், மஹிந்​திரா வோர்ல்டு சிட்​டி​யில் அமைந்​துள்ள தொழிற்​பூங்​கா​வில், ரூ.700 கோடி உறு​தி​யளிக்​கப்​பட்ட முதலீடு மற்​றும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட நேரடி மற்​றும்…

Read More

அமேசான் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான ஜெஃப் பெசோஸ் தனது 78 வயதில் தனது தாயார் ஜாக்லின் கிஸ் பெசோஸ் காலமானதைத் தொடர்ந்து ஒரு மனமார்ந்த அஞ்சலி பகிர்ந்து கொண்டார். அவரது பின்னடைவு, தாராள மனப்பான்மை மற்றும் குடும்பத்திற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அறியப்பட்ட ஜாக்லின், பெசோஸின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பயணத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவர் வெறும் 17 வயதில் ஒரு தாயானார், தனது குழந்தைகளை அன்புடனும் உறுதியுடனும் வளர்த்தார், பின்னர் அமேசானில் ஆரம்பகால முதலீடுகள் உட்பட ஜெஃப்பின் தொழில் முனைவோர் அபிலாஷைகளை ஆதரித்தார். தனது குடும்பத்திற்கு அப்பால், ஜாக்லின் தன்னை பரோபகாரம் மற்றும் கல்விக்கு அர்ப்பணித்தார், பெசோஸ் குடும்ப அறக்கட்டளை மற்றும் வ்ரூம் மற்றும் பெசோஸ் அறிஞர்கள் திட்டம் போன்ற முன்முயற்சிகளை இணைத்து, எண்ணற்ற வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது காதல், விடாமுயற்சி மற்றும் சேவையின் மரபு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.ஜெஃப் பெசோஸ்…

Read More

பாட்னா: பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து வெளியேறுவது குறித்து தான் நினைத்து கூட பார்க்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ் அணி) தலைவரான சிராக் பாஸ்வான் மாநில அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அவரது கட்சியின் செயல்பாடும், அவரின் பேச்சும் அதை வெளிப்படுத்தின. விரைவில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவரது அரசியல் நகர்வு மாநிலம் சார்ந்து இருக்கலாம் என கருதப்பட்டது. இந்தச் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவரது கட்சி வெளியேறப் போவதாக தகவல் வெளியானது. தற்போது அதை சிராக் பாஸ்வான் மறுத்துள்ளார். “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்னை விலக்கி வைக்கும் நோக்கில் இது மாதிரியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.…

Read More

சென்னை: பட்​ட​தாரி ஆசிரிய​ராக பதவி உயர்வு பெறும் அமைச்​சுப் பணி​யாளர்​களின் கல்​வித் தகு​தியை சரி​பார்க்க பள்​ளிக்​கல்வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் உள்ள 2 சதவீத காலி​யிடங்​கள் அத்​துறை​யின் அமைச்​சுப் பணி​யாளர்​களின் பதவி உயர்வு மூல​மாக நிரப்​பப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு அமைச்​சுப்பணி​யாளர்​களுக்கு பட்​ட​தாரி ஆசிரியர், தமிழ் ஆசிரியருக்​கான பதவி உயர்வு கலந்​தாய்வு நீதிமன்ற தீர்ப்​பின் அடிப்​படை​யில் வழங்​கப்பட வேண்​டுமென உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. அதன்​படி டெட் தேர்ச்சி பெற்ற 151 அமைச்​சுப் பணி​யாளர்​களுக்கு கலந்​தாய்வு மூல​மாக பட்​ட​தாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது. அவர்​களை உடனடி​யாக பணி விடு​விப்பு செய்​யு​மாறு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. அவ்​வாறு பணி விடு​விப்பு செய்​யும்​போது பட்​ட​தாரி ஆசிரியர் பதவிக்​குரிய கல்​வித் தகு​தியை அவர்​கள் பெற்​றுள்​ளனரா என்​பதை உறு​தி​செய்ய வேண்​டும். பிற மாநில ஆவணங்​களாக இருந்​தால் மதிப்​பீடு செய்​யப்​பட வேண்​டும். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலு​வை​யில் இல்லை என்​ப​தை​ உறுதி…

Read More

சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்​டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்​கள் கடித்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்ட தகவலால் அதிர்ச்​சி​யடைந்த நீதிப​தி​கள், நாய்க்​கடி சம்​பவங்​களை தடுக்க திட்​டம் வகுத்து விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட்​டுள்​ளனர். சென்​னை​யில் வீட்​டில் செல்​ல​மாக வளர்க்​கப்​படும் ராட்​வீலர் நாய்​களும், தெரு​நாய்​களும் சிறு​வர், சிறுமியர் மற்​றும் பெண்​களை கடித்​துக் குதறிய சம்​பவங்​களை​யடுத்​து, நாய்​களை கட்​டுப்​படுத்​தக் கோரி கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞ​ரான ஆர்.எஸ்​. தமிழ்​வேந்​தன் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், ‘தெருக்​களில் வாய்​மூடி அணிவிக்​காமல் அழைத்​துச் செல்​லப்​படும் ராட்​வீலர் போன்ற வளர்ப்பு நாய்​களை​யும், ஆக்​ரோஷமாக சுற்​றித்​திரி​யும் தெரு​நாய்​களை​யும் பிடித்து பொது​மக்​களை பாது​காக்க உரிய நடவடிக்கை எடுக்க மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட வேண்​டும்’ என கோரி​யிருந்​தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசாரணைக்கு வந்​தது. அப்​போது, சென்னை மாநக​ராட்​சி​யின் முதன்மை கால்​நடைத் துறை அதி​காரி​யான ஜெ.க​மால்…

Read More

ஹைதராபாத்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்​து, கொன்ற வழக்​கில் குற்​ற​வாளிக்கு நல்​கொண்டா நீதி​மன்​றம் தூக்கு தண்​டனை விதித்​துள்​ளது. தெலங்கானா மாநிலம், நல்​கொண்​டா​வில் கடந்த 2013-ம் ஆண்​டு, வீட்​டில் தனி​யாக உறங்கி கொண்​டிருந்த 12 வயது சிறுமியை அதே பகு​தியை சேர்ந்த மொஹம்மி முகர்​ணம் என்​கிற 35 வயது நபர், வீட்​டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்​ததுடன், அவரை கொலை செய்​து, வீட்​டின் அருகே உள்ள ஒரு கால்​வா​யில் வீசி சென்​று​விட்​டார். அதன் பிறகு உடல் ஒரு ஏரிக்​கரை​யில் ஒதுங்​கியது. இதனை தொடர்ந்​து, பெற்​றோர் கொடுத்த புகாரின் அடிப்​படை​யில் நல்​கொண்டா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, குற்​ற​வாளியை கைது செய்து நல்​கொண்டா போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜர் படுத்​தினர். இவ்​வழக்கு சுமார் 12 ஆண்​டு​களாக நடந்து வந்த நிலை​யில், நேற்று இவ்​வழக்கை விசா​ரணை செய்த போக்சோ நீதி​மன்ற நீதிபதி ரோஜா ரமணி, குற்​ற​வாளி மொஹம்மி முகர்​ணத்​திற்கு தூக்கு தண்​டனை​யும், ரூ.1.10 லட்​சம் அபராத​மும்…

Read More

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் பிறந்​த​நாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்​டு ​தோறும் கொண்டாடப்பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாளை சென்​னை, காம​ராஜர் அரங்​கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. ஆக.16-ம் தேதி மாலை 4 மணி முதல் நள்​ளிரவு 12 மணி வரை விழா நடை​பெறவுள்​ளது. அதன்​படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழு​வினரின் இசைப்​பாய்ச்​சல் நிகழ்ச்​சி​யும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழு​வினரின் நடன நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது. அதைத் தொடர்ந்​து, ‘மதச்​சார் ​பின்மை காப்​போம்’ தலைப்​பில் கவியரங்​கம் நடை​பெறும். இதில் இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ், கவிஞர் விவே​கா, ஆண்​டாள் பிரியதர்​ஷினி, இளைய கம்​பன், தஞ்சை இனியன், அருண் பார​தி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். விசிக துணை பொதுச்​செய​லா​ளர் வன்​னியரசு வரவேற்​புரை​யாற்​றுகிறார். வாழ்த்​தரங்​கம் இரவு 11 மணிக்​குத் தொடங்​கு​கிறது. இதில், மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன்…

Read More