கொச்சி: தனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் மோகன்லால் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை அவருக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தாதாசாகேப் பால்கே விருதை மிக பணிவுடன் ஏற்கிறேன். இந்தப் பெருமை எனக்கானது மட்டுமல்ல. இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த ஒவ்வொருவருக்கும் உரியது. எனது குடும்பத்தினர், ரசிகர்கள், சக கலைஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அனைவருக்கும். உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் ஊக்கம் எனது மிகப்பெரிய பலமாக இருந்து, இன்று நான் யார்…
Author: admin
புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 413 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய மகளிர் அணி விரட்டியது. புதுடெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் வீராங்கனைகள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அந்த அணியின் தரப்பில் பெத் மூனி 138, ஜார்ஜியா 81, எல்லீஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 412 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி. இந்த ஆட்டத்தில் 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. நித்திய தரப்பில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் எடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 63 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 47 ஓவர்களில் 369 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது.…
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக். 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? – பாரம்பரிய உணவுக்கு ஃபாஸ்ட் ஃபுட்-க்கும் இடையிலான போராட்டமே கதைக்களம் என்பதை ட்ரெய்லரில் தெரிந்து கொள்ள முடிகிறது. கிராமத்தில் இட்லி கடை வைத்திருக்கும் ராஜ்கிரணின் மகனான தனுஷ் நகரத்துக்குச் சென்று துரித உணவுகளை பிரதானமாக தயாரிக்கும் மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். பின்னர் தன்னுடைய கிராமத்துக்கே திரும்பி தன் அப்பாவின் இட்லி கடையை நடத்துகிறார். ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன், சமுத்திரக்கனி, பார்த்திபன் என பெரும் நடிகர்…
மும்பை: அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டது. அதன் பலனை அதானி குழுமத்தின் நிறுவன தலைவரான கவுதம் அதானி அறுவடை செய்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கவுதம் அதானி. 63 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 87.4 பில்லியன் டாலர்கள். இந்த சூழலில் அதானி குழுமத்தில் மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எதுவும் நடைபெறவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அதானி குழுமத்திற்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு குற்றம்…
சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிட மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, அதிமுக, பாமக, தேமுதிக, நாதக, தவெக ஆகிய கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜகவும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதையை மாநில தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரை நடத்தினார். இந்த யாத்திரை மூலம் தமிழகத்தில் 4 எம்எல்ஏ-க்களை பாஜக பெற்றதாக கூறப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில், அப்போதைய மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம் மக்கள் சந்திப்பை நடத்தினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், அண்ணாமலையின்…
பல ஆண்டுகளாக, அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான அல்லது மெதுவாக்குவதற்கான வழிகள் விஞ்ஞானிகளிடையே ஒரு கவலையாக உள்ளன. டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவமாகும், இது உலகளவில் 57 மில்லியன் டிமென்ஷியா நோயாளிகளில் 60 முதல் 70% வரை பாதிக்கிறது. இந்த நோய்க்கான மருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளன. அல்சைமர் நோயாளிகளின் குடும்பங்கள் பெரும்பாலும் நம்பிக்கையற்றவை. ஆனால் இப்போது ஒரு கண்கவர் ஆய்வு நம்பிக்கையின் ஒளிரும். இந்த பொதுவான மூலப்பொருள் அல்சைமர் அபாயத்தைக் குறைத்து நினைவகத்தை மேம்படுத்தும் என்று கண்டுபிடிப்புகள் முடிவு செய்தன. பிரதிநிதித்துவ படம் (வரவு: கேன்வா) பக் இன்ஸ்டிடியூட் ஃபார் ரிசர்ச் மீதான புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது உணவு நார்ச்சத்து சேர்க்கிறது உணவுக்கு குடலில் சமநிலையை மீட்டெடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், சில அல்சைமர் தொடர்பான அறிகுறிகளை எளிதாக்கவும் உதவும். அல்சைமர் நோயில் டி.என்.ஏ மெத்திலேஷனை ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கிறார்கள்ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்மேம்பட்ட மரபணு சுட்டி மாதிரியைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தப்பட்டது.…
சென்னை: சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ஏ.சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் த.இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் அ.சுபேர்கான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புக் குழு மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை விரைவுபடுத்துவதற்கான பணிகளை செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிறப்புக் குழு உறுப்பினர் நியமனம் தொடர்பாக சம்பந்தப்பட்ட…
சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி மதிப்பில் நடந்துள்ள இன்சூரன்ஸ் மோசடிகள் தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளித்துள்ள 467 புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுப்ப போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு விபத்துக்கு பல்வேறு நீதிமன்றங்களில் இன்சூரன்ஸ் கோரி வழக்கு தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில், “இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ரூ.105 கோடி மோசடி தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள 467 புகார்கள் மீது இதுவரை போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. எனவே அந்த புகார்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து அந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் என வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…
புதுடெல்லி: “பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா அனுப்பும் பரிசுகளால் இந்திய மக்கள் வேதனையடைந்துள்ளனர்” என்று எச்1பி விசா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு, பெறப்படும் பரிசுகளால் இந்தியர்கள் பெரும்பாலும் வேதனையடைந்துள்ளனர். உங்கள் ‘ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்’ அரசிடம் இருந்து வரும் பிறந்தநாள் பரிசுகள் இதுதான்… எச்1பி விசாக்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை மிகவும் பாதிக்கக் கூடியது. ஏனெனில் எச்1பி விசா வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்கள். ஏற்கெனவே அமெரிக்காவால் விதிக்கப்பட்ட 50% வரியால், 10 துறைகளில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அவுட்சோர்சிங்கை பாதிக்கும் ‘ஹையர்’ சட்டம், சபாஹர் துறைமுக…
துபாய்: “எப்போதுமே தேசத்தின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” என்று பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சந்தித்தார். “கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் இடைமறித்தது. பின்னர் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாட…