புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கடும் அமளி ஏற்பட்டு…
Author: admin
சென்னை: என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: கல்வி உதவி தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய படிவங்கள் மற்றும் ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஜூலை 15-ம் தேதிக்குள் முடித்திடவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதில் 40% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த பணிகளை முடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், கண்காணிப்பாளர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, என்எம்எம்எஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை துரிதமாக பதிவுசெய்ய வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பணி புரியும் பிரிவு எழுத்தர்கள் இயக்குநரகத்துக்கு நேரில் வந்து விளக்கம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9.10 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி உற்சவம், ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகியவை முக்கியமான திருவிழாக்களாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் தினசரி…
‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக், தேவயானியின் மகள் இனியா இருவரும் நடிக்கவுள்ளார்கள். பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த், சாய்குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை தியாகராஜனும், கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன்,…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்சிபுரம் சட்டமன்ற பகுதியில் நடை பயணம் மேற்கொண்டார். முன்னதாக, காஞ்சிபுரம் நத்தப்பேட்டை மற்றும் வையாவூர் ஏரிகளை பார்வையிட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்பதால், காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுக்கு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பாளையம் பகுதியில் நெசவாளர்கள் வீட்டுக்கு சென்று, நெசவாளர்களின் குறைகளை அன்புமணி கேட்டறிந்தார். மேலும், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள நெசவாளர் ஒரு வீட்டிற்கு சென்ற அன்புமணி, நெசவாளர்களிடம் நெசவு செய்வது எப்படி என்பது கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அவரும் சோதனை முறையில் நெசவு செய்தார். பின்னர், நெசவாளர்கள், அன்புமணியிடம் கலந்துரையாடினர். குறிப்பாக, மழைக் காலங்களில் நெசவு செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். கூட்டுறவு சங்கங்களில் இருந்து…
மழைக்காலம், பெட்ரிகோரின் மண் வாசனை, குளிரான வெப்பநிலை மற்றும் சூடான சாய் மற்றும் பக்கோராஸை அனுபவிப்பதற்கான சாக்கு பற்றி ஆறுதலளிக்கும் ஏதோ இருக்கிறது. ஆனால் அது அதன் தீங்குகளுடன், குறிப்பாக சமையலறைக்குள் வருகிறது. ஈரமான வானிலை மிகவும் எளிதாக வாசனையை சிக்க வைக்கும், நேற்றைய கறி, வறுத்த தின்பண்டங்கள் அல்லது ஈரமான சமையலறை துணிகளை கூட விரும்பத்தகாத நறுமணமாக மாற்றும். நீங்கள் கவுண்டர்டாப்புகளை சுத்தம் செய்து ஜன்னல்களைத் திறந்திருக்கலாம், ஆனால் வாசனை இன்னும் காற்றில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஆடம்பரமான கேஜெட்டுகள் அல்லது கடுமையான இரசாயனங்கள் தேவையில்லாத ஒரு வியக்கத்தக்க எளிய தீர்வு உள்ளது: வெள்ளை வினிகர்.பருவமழை பருவத்தில் ஏன் விரும்பத்தகாத சமையலறை வாசனை அதிகமாக நீடிக்கிறதுமழைக்காலத்தில், வீடுகள் மிகவும் மூடப்பட்டிருக்கும், ஈரப்பதம் மற்றும் வாசனையை ஏற்படுத்தும். காற்றோட்டம் குறைக்கப்படுகிறது, மேலும் ஈரப்பதம் நிலைகள் உயர்ந்து, இயற்கையான காற்று சுழற்சிக்கு சமையலறை நாற்றங்களை எடுத்துச் செல்வது கடினமானது. கூடுதலாக, சமையலறை துண்டுகள், கவசங்கள்…
ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் அழைத்தார் சுற்றுப்பாதை எரிபொருள் நிரப்புதல் நிறுவனத்தின் லட்சிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு அடுத்த பெரிய பொறியியல் தடையாக. ஒரு நிகழ்வில் பேசுவது, கஸ்தூரி இரண்டு பாரிய விண்கலங்களை சுற்றுப்பாதையில் கப்பல்துறை மற்றும் உந்துசக்தியை மாற்ற அனுமதிக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதன் சிக்கலை வலியுறுத்தியது -இதற்கு முன்பு யாரும் அடையவில்லை. சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களை ஆதரிக்கும் திறன் கொண்ட ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு பரந்த பார்வையின் ஒரு பகுதியாக அவர் சவாலை வடிவமைத்தார். “வெறுமனே தாமதமாக இயலாது என்பதில் நான் நிபுணத்துவம் பெற்றேன்,” என்று மஸ்க் வினவினார்.எலோன் மஸ்க் ஸ்டார்ஷிப்பின் விமர்சன பாய்ச்சலை சுற்றுப்பாதையில் கோடிட்டுக் காட்டுகிறார்வெற்றிகரமான சுற்றுப்பாதை எரிபொருள் நிரப்புதல் விண்வெளியில் நறுக்குதல் மற்றும் உந்துசக்தியை மாற்றுவது, அடிப்படையில் ஒரு வாகனத்தை எரிபொருள் டிப்போவாக மாற்றும் என்று மஸ்க் விளக்கினார். இந்த…
மும்பை: மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்கள் பெற்று வருவது தணிக்கையில் தெரிய வந்துள்ளது மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி 21 முதல் 65வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குட்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனிடையே, தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு இந்த திட்டம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தணிக்கை செய்யப்பட்டது. இதில், 14,298 ஆண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ.21.44 கோடி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த திட்டத்துக்கு இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டது. அப்போது, ஆண்கள், பெண்களின் பெயரில் விண்ணப்பம் செய்து இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வந்து…
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய சிறந்த 10 குறும்படங்களை தொகுத்து பள்ளிகளில் ஒளிபரப்பு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் அவ்வப்போது திரையிடப்பட்டு வருகின்றன. இது மாணவர்களின் படைப்பாற்றல், கற்பனை மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த தூண்டுகோலாக அமைகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் (2025-26) முதல் சிறார் திரைப்படம் இந்த ஜூலை மாதம் திரையிடப்பட உள்ளது. கடந்தாண்டு மாநில அளவிலான சிறார் திரைப்பட போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தயார் செய்த குறும்படங்களில் சிறந்த 10 படங்கள் தொகுக்கப்பட்டு திரையிடப்பட இருக்கிறது. இந்த படங்கள் நட்பு என்றால் என்ன, நூலகம் என்ன செய்யும், ஊனம் ஒரு தடையல்ல,…
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இந்தப் போட்டியில் கடைசி செஷனில் ஆட்டத்தில் எந்த அணியும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற சூழலில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ‘ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என சொல்லி இந்திய வீரர்களுடன் பரஸ்பரம் ஹேண்ட் ஷேக் செய்ய முயன்றார். ஆனால், அதற்கு ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் மறுத்துவிட்டனர். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்த ஆட்டம் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை நெருக்கடியுடன் எதிர்கொண்டது இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. மறுபக்கம் ஃபார்மில் உள்ள ரிஷப் பந்த், காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்வாரா என்பதும் சந்தேகமாக இருந்தது. அதனால் அழுத்தம் மிகுந்த அந்த தருணத்தில், மாரத்தான் கூட்டணியை அமைத்தனர் கேப்டன் ஷுப்மன்…