தஞ்சாவூர்: அதிமுக -பாஜக கூட்டணி வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்கிறது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் வராஹி அம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் கலந்துகொண்ட அர்ஜுன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதம் அழியவும், நமது நாட்டின் ராணுவம் வலிமை பெறவும், யுத்தத்தில் வெற்றி பெறவும் தெய்வ பலம் எப்போதும் அவசியம் என்பதால், சத்ரு சம்ஹார யாகம் நடத்தி உள்ளோம். தமிழகத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களுக்கு நிதி இல்லை என்கிறார்கள். ஆனால், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம், சிலை, மணிமண்டபம் என்றால் உடனே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்கள், வரவேற்பு என்ற பெயரில் கோவை மற்றும் மதுரையில் பொது சொத்தை சேதப்படுத்தி, மக்களுக்கு தொந்தரவு…
Author: admin
லக்னோ: பஹல்காம் தாக்குதலை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஹரியானாவின் அம்பாலா, மேற்கு வங்கத்தின் ஹசிமாரா பகுதியில் உள்ள இந்திய விமானப் படை தளங்கள் சார்பில், ‘ஆபரேசன் ஆக்ரமன்’ என்ற பெயரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பங்கேற்று உள்ளன. போர் பயிற்சியின் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தின் கங்கை விரைவுச் சாலையில் ரஃபேல், சுகோய், மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்கள் நேற்று தரையிறங்கின. பின்னர் அங்கிருந்து சீறிப் பாய்ந்து மேலெழுந்து சென்றன. உ.பி.யின் மீரட், பிரயாக்ராஜை இணைக்கும் வகையில் 1,047 கி.மீ. தொலைவுக்கு கங்கை விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. போர் உள்ளிட்ட அவசர காலங்களை கருத்தில் கொண்டு இந்த சாலையில் ஷாஜகான்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 3.5 கி.மீ. தொலைவுக்கு போர் விமானங்கள் தரையிறங்க சிறப்பு ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓடுதளத்தில் இந்திய விமானப்படையின் மிகப்பெரிய…
சென்னை: முழுமையான விசாரணைக்குப்பிறகே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ்கள் அளித்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்குள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்துக்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக்கோரி பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: சாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்குவதற்கு அரசு வகுத்துள்ள விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழுக்களை அமைக்க…
சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.70,040-க்கு விற்பனை விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.8,755-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.76,400-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி கிராம் ரூ.109-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,09,000-ஆக இருந்தது.
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி தரப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவருக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரிக்கும் பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்த பேச்சு அடிபட ஆரம்பித்திருப்பதால் பலரும் டெல்லிக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். இவர் தலைவராக இருந்த போதுதான் 2021-ல் பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் 6 இடங்களில் வென்ற பாஜக, முதல் முறையாக அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. இந்த நிலையில், 2023-ல் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதியை நியமித்தது பாஜக தலைமை. இவரது தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலை சந்தித்த பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி காங்கிரஸிடம் தோற்றுப் போனது. ஆளும் கூட்டணியில் இருந்தும் தொகுதியை தவறவிட்டது பாஜக-வுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கட்சியின் வளர்ச்சியும் மந்த நிலைக்குப் போனது. மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, அமைச்சர், வாரியத் தலைவர் பதவிகளை எதிர்பார்த்து…
நாம் வாழும் வேகமான வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அது சில நேரங்களில் அதிகமாகிவிடும்-வேலையில் உள்ள குழப்பம் அல்லது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கலாம். ஆனால் குழப்பத்தின் நடுவில் அமைதியாக இருப்பது ஒரு ஆளுமைப் பண்பு அல்ல – இது உளவியலின் ஆதரவுடன் ஒரு திறமை. உங்கள் மனநிலையை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, உங்கள் மனதையும் உடலையும் மன அழுத்த காலங்களில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது உங்களுக்கு தெளிவாக சிந்திக்கவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், உங்கள் நீண்டகால நல்வாழ்வைப் பாதுகாக்கவும் உதவும். உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் கட்டுப்பாட்டை மீறுவதைப் போல உணரும்போது, அடித்தளமாக இருக்க உதவும் சில அறிவியல் ஆதரவு உளவியல் உதவிக்குறிப்புகளை இங்கே பட்டியலிடுகிறோம்:
சென்னை: சென்னை காவல் துறையில் பணியாற்றி வந்த ஓர் உதவி ஆணையர், 2 காவல் ஆய்வாளர், 29 உதவி ஆய்வாளர்கள், 12 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என சென்னை காவல் துறையில் நேற்று ஒரே நாளில் 47 பேர் பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கான பிரிவு உபசார விழா வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி, துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பணி ஓய்வு பெற்ற 47 பேரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணிபுரிந்ததை பாராட்டியும், தமிழக காவல் துறைக்கும், சென்னை பெருநகர காவல் துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்தும், கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி சால்வை, மாலை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
உயிர்ம விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 151 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இயற்கை விவசாயம் மேற்கொள்ள ஊக்கத்தொகை வழங்குவது, அதற்கான சான்றிதழின் பதிவு கட்டணத்துக்கு முழு விலக்கு அளிப்பது, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் வசதிகள் ஏற்படுத்துவது, இயற்கை விவசாயத்துக்கான தேசிய இயக்கம் என பல்வேறு திட்டங்கள் தமிழக வேளாண் துறை சார்பில் இந்த 2025-26-ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளன. நம்மாழ்வார் விருது: உயிர்ம (ஆர்கானிக்) விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகள் 2025-ம் ஆண்டுக்கான ‘நம்மாழ்வார்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த க.சம்பத்குமாருக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சத்துடன் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம்,…
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை (மே 4) தொடங்குகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு – மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (மே 3) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் பழநி, திருப்பூர் மாவட்டம் பல்லடம், நல்லதங்காள் நீர்த்தேக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 2 செ.மீ.…