Author: admin

சமூக ஊடகங்களின் வைல்ட் வெஸ்டில், சில கதாபாத்திரங்கள் இணையத்தின் கற்பனையை மிகவும் கைப்பற்றியுள்ளன டாக்டர் பாரிக் படேல்பி.ஏ., சி.எஃப்.ஏ, அக்கா, எஸ்க். ரேஸர்-கூர்மையான நையாண்டி மற்றும் தெளிவற்றது தேசி அப்பா நகைச்சுவைடாக்டர் படேல் ட்விட்டரில் இறுதி நிதி நினைவு ஆண்டவராக ஒரு வழிபாட்டை உருவாக்கியுள்ளார். ஆனால் காஷ் படேலின் நிஜ வாழ்க்கை தந்தைக்கு நியூஸ் வீக் அவரை தவறாக நினைத்தபோது, ​​டொனால்ட் டிரம்பின் வேட்பாளராக எஃப்.பி.ஐ இயக்குனர்விஷயங்கள் ஒரு புதிய அளவிலான மகிழ்ச்சியை எட்டின.டாக்டர் பாரிக் படேல் யார்?அமெரிக்கா காஷை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது !!!- டாக்டர் பாரிக் படேல், பி.ஏ, சி.எஃப்.ஏ, அக்கா எஸ்க். (@Parikpatelcfa) டிசம்பர் 4, 2024 டாக்டர் பாரிக் படேல் ஒரு உண்மையான நபர் அல்ல – அவர் இணைக்கும் அநாமதேய ட்விட்டர் பயனரின் சிந்தனையாகும் நிதி மீம்ஸ் மேலதிக தேசி கலாச்சார ஸ்டீரியோடைப்களுடன். தனது “மகன்” காஷு (காஷ் படேல்) ஒரு எஃப்.பி.ஐ வேட்பாளராக ஆனது…

Read More

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பனில் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, “பஹல்காம் தாக்குலை முதலில் அவர்கள் உணரவில்லை. இந்தியாதான் இந்த தாக்குதலையே நடத்தியதாகக் கூறியவர்கள் அவர்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு, இப்போது பதில் சொல்வது கடினம். அவர்களின் அறிக்கைகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. என்ன நடந்ததோ அது துரதிர்ஷ்டவசமானது, அது நடந்திருக்கக் கூடாது. சுற்றுலாப் பயணிகளிடையே உள்ள அச்சத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. விடுமுறையில் இங்கு வருபவர்கள் அச்சத்தை அனுபவிக்க விரும்ப…

Read More

சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு கேலக்சி எஸ்25+ மற்றும் கேலக்சி எஸ்25 அல்ட்ரா மாடல் போனும் வெளிவந்துள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எஸ்’ வரிசையில் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. கேலக்சி எஸ்25: சிறப்பு அம்சங்கள் கேலக்சி எஸ்25 சீரிஸ் போன்களில் ‘கேலக்சி எஸ்25’ மாடல் போன் பேஸ் வேரியண்ட் மாடலாக வெளிவந்துள்ளது 6.2 இன்ச்…

Read More

சென்னை: உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடநூல்களை உருவாக்குவதற்காக கல்லூரி பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: பாரதிய பாஷா புஸ்தக் என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் எண்ணிம வழியிலான (மின் நூல்கள்) புத்தகங்களை வழங்குவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பாகும். கல்வி கற்பதை மேலும் எளிதாக அணுகக் கூடியதாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடங்களை ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் நேரடியாக எழுதவும், ஏற்கெனவே ஆங்கிலத்தில் உள்ள பாடப் புத்தகங்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை இணையதளத்தில் மின் நூல்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக்கல்வி நூல்கள், பாடப்பொருள் சார்ந்த கற்றல் வளங்கள் கிடைக்க…

Read More

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ, விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பணி நியமனம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலளித்து பேசியதாவது: கடந்த ஆண்டு சட்டப்பேரவையில், மாற்றுத் திறனாளி வீரர்கள் உட்பட 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தேன். அதன்படி கடந்த ஆண்டு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 104 வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் காவல் துறையில் 11 பேர் சேர்ந்துள்ளனர். தற்போது காவல் துறையில் 32…

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், இதற்கு இணங்க மறுத்தால் அபராதமும் சிறைதண்டனையும் விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் வெளிநாட்டினர், உடனடியாக அமெரிக்க அரசில் தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். இதனை ஏற்கத் தவறுவது சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் குற்றமாகும். அதிபர் ட்ரம்ப் அரசு நிர்வாகமும், உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் க்ரிஷி நோம் ஆகியோர் வெளிநாட்டினருக்கு தெளிவான செய்தியை தெரிவிக்கின்றனர். இப்போதே நீங்களாகவே உங்களை நாடு கடத்திக் கொள்ளுங்கள் என்பதே அது.” என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரித்த அதிபர் அலுவலகம் மற்றும் க்ரிஷி நோமை டேக் செய்துள்ளது. மேலும் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கான செய்தி என்று, சுயமாக நாட்டை விட்டு வெளியேறுவதன் நன்மை மற்றும் பின்விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.…

Read More

தேனி: பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பங்குனி மாதம் ஆராட்டு (நீராடல்) விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தினமும் பல்வேறு வழிபாடுகள் நடைபெறுவதுடன், நிறைவு நாளன்று சுவாமி விக்கிரகத்தை புனிதநதியில் நீராட்டி வழிபாடு மேற்கொள்வர். இதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 11-ம் தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று (புதன்) கொடியேற்ற வைபவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை சபரிமலை சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைத்தார். முன்னதாக விளக்கேற்றி, மங்கல வாத்தியங்கள் முழங்கப்பட்டன. நடை திறந்த பிறகு 18-ம் படி வழியே கீழே சென்ற தந்திரிகள் மற்றும் நம்பூதிரி ஆகியோர், அங்குள்ள ஆழிக்குண்டத்தில் விளக்கு ஏற்றினர். பின்னர்…

Read More

‘ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை என இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து யூடியூப் பேட்டி ஒன்றில் கார்த்தி சுப்பராஜ் அளித்த பேட்டியில், “இது ஒரு கேங்ஸ்டர் கதை அல்ல. முதல்முறையாக நான் ஒரு காதல் கதையை எடுக்கிறேன். என்னுடைய முந்தைய படங்களில் நான் காதல் உறவுகளை ஆராய்ந்திருக்கிறேன் என்றாலும் கூட, இதுதான் ஒரு முழுமையான காதல் கதையாக வந்திருக்கிறது. அதே நேரம் இதில் நிறைய ஆக்‌ஷனும் உண்டு. ஆனா இப்படம் ஒரு கேங்ஸ்டரை பற்றியது அல்ல. இந்தப் படத்தில் அதிகமாக காதல் உணர்வுகளை ஆராய்ந்திருக்கிறேன். அதனால்தான் இதனை முழுமையான காதல் படம் என்று சொல்கிறேன். நான் சூர்யாவை 2,3 வருடங்களுக்கு முன்பு ஒரு முறை சந்தித்தேன். ஆனால் அப்போது நான் அவருக்குச் சொன்னது வேறொரு கதை. அவருக்கும் அது பிடித்திருந்தது. ஆனால், அந்த நேரத்தில் நான் ‘மகான்’ படத்தில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தேன். அதன் பிறகு…

Read More

சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர்.” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று (ஏப்.29) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக மக்களுக்கான வளர்ச்சியை, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் தடுத்து வருகின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு என்றால், இவர்கள் யாருடைய பணத்தை சுரண்டினார்கள்? அந்தப் பணம் தமிழக மக்களுடையது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் நிதி வரவில்லை என்று கூறுகிறார்கள். இவர்கள் சுருட்டிய பணம் மத்திய அரசிடம் கேட்பதைவிட அதிகமானதாக இருக்கும். அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வருவது எதற்காக என்றால், மக்களின்…

Read More

கோவை: தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகளுக்கு திட்ட செலவு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டும் நடுத்தர மக்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் உள்ளன. இதை சார்ந்து தமிழக அரசு அனுமதியுடன் 400-க்கும் மேற்பட்ட எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டுவந்த ராயல்டி, இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுகிறது. இதனால் கன மீட்டருக்கு ராயல்டி இப்போது ரூ.160 ஆக உயர்ந்துவிட்டது. இதையடுத்து, கனிம நில வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்…

Read More