Author: admin

புதுடெல்லி: பத்து வயதுக்கு மேலான சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த வயதை சேர்ந்த குழந்தை, சிறாருக்கு வங்கிக் கணக்கை தொடங்கலாம். அப்போது அவர்களின் தாய், தந்தையை பாதுகாவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம். அவர்கள் சுயமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம், டெபாசிட் செய்யலாம். அவர்களுக்கு டெபிட் கார்டு, காசோலைகளை வழங்கலாம். இன்டர்நெட் வங்கி வசதியையும் வழங்கலாம். இது வங்கியின் முடிவுக்கு உட்பட்டது. சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் அவர்களால் கையாளப்படுகிறதா அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் கையாளப்படுகிறதா என்பதை வங்கி நிர்வாகங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்களான பிறகு வழக்கமான வங்கி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த புதிய விதிகளை அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ்…

Read More

நீங்கள் அலுவலக ஊழியரா? வேலை நீங்கள் நாள் முழுவதும் கணினியை உட்கார வைக்க வேண்டுமா அல்லது முறைத்துப் பார்க்க வேண்டுமா? உங்கள் பதில் ஆம் எனில், நீங்களே பிரேஸ் செய்யுங்கள், நீங்கள் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்களை பீதியடையச் செய்யும். அலுவலக ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகளின் ஒரு குலம் என்று வெளி உலகம் நினைக்கலாம். நாள் முழுவதும் உட்கார்ந்து (அல்லது அவர்களின் வார்த்தைகளில் ‘நிதானமாக’), தங்கள் வேலையைச் செய்வது, வெளியேறுவது. மாசுபாட்டிற்கு வெளிப்பாடு இல்லை, வானிலை குறை கூற வேண்டிய அவசியமில்லை, எந்தவொரு உடல் முயற்சியும் இல்லை. அலுவலக வேலைகள் வெளியில் கவர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் கற்பனை செய்வதை விட உள் பார்வை அசிங்கமானது. முதுகுவலி முதல் உலர்ந்த மற்றும் கஷ்டமான கண்கள், எடை அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் வரை அது மோசமாகிறது. உங்கள் வேலையின் முடிவுகள் இதனுடன் பொருந்தினால், உங்களுக்காக சில மோசமான செய்திகள் எங்களிடம் உள்ளன.…

Read More

ஏப்ரல் 24, 2025 அன்று உலகளாவிய இணைய இணைப்பை வழங்குவதில் ஸ்பேஸ்எக்ஸ் ஒரு முக்கிய மைல்கல்லை உருவாக்கியது, ஸ்டார்லிங்க் 6-74 மிஷனை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. மிஷனில், 28 செயற்கைக்கோள்கள் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் பயன்படுத்தப்பட்டன, இது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் விண்மீன் கூட்டத்திற்கு மேலும் சேர்த்தது. உலகின் மிக தொலைதூர மற்றும் குறைந்த பகுதிகளுக்கு கூட அதிவேக இணைய இணைப்பை வழங்கும் நிறுவனத்தின் பணிக்கு இந்த விரிவாக்கம் மையமாகும். ஒவ்வொரு வெற்றிகரமான வரிசைப்படுத்தலிலும், ஸ்பேஸ்எக்ஸ் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தனிநபர்களுக்கு குறைந்த தாமதமான, நம்பகமான இணையத்தை வழங்குவதற்கான அதன் பார்வைக்கு அதிக அளவில் நகர்கிறது, கிராமப்புற சமூகங்களில் இணைப்பை மேம்படுத்துகிறது.ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 கேப் கனாவெரலில் இருந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்தியதுராக்கெட் புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் வெளியீட்டு வளாகம் 40 (எல்.சி -40) இலிருந்து 9:52 PM ET க்கு தொடங்கப்பட்டது. பால்கான் 9 ராக்கெட் மாலை…

Read More

முன்னாள் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் தனது வரவிருக்கும் நினைவுக் குறிப்பில் அவர் ஆலோசனை கோரினார் என்று வெளிப்படுத்தினார் போப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கையாள்வது குறித்து பிரான்சிஸ்.ட்ரம்பின் வணிக பின்னணியை ஒரு சவாலாகக் கண்ட மேர்க்கெல், “அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு அவர் இருந்த சொத்து உருவாக்குநரின் கண்ணோட்டத்தில் எல்லாவற்றையும் அவர் பார்த்தார். ஒவ்வொரு நிலப்பகுதியையும் ஒரு முறை மட்டுமே விற்க முடியும், வேறு யாராவது அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர் உலகைப் பார்த்தார்.””அடிப்படையில் வேறுபட்ட பார்வைகள்” கொண்ட நபர்களைக் கையாள்வது குறித்த ஆலோசனையை மேர்க்கெல் போப்பிடம் கேட்டபோது, ​​அவர் டிரம்ப் மற்றும் காலநிலை உடன்படிக்கைகளை குறிப்பிடுகிறார் என்பதை அவர் புரிந்து கொண்டார் என்று அவர் உணர்ந்தார். மேர்க்கலின் கூற்றுப்படி, போப் அறிவுறுத்தினார், “பெண்ட், பெண்ட், பெண்ட், ஆனால் அது உடைக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.”நினைவுக் குறிப்பு, “சுதந்திரம்: நினைவுகள் 1954-2021″டிரம்ப் மற்றும்…

Read More

மும்பை: “பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான் குறி வைத்தனர், நாங்கள் அதைப் பார்த்தோம். எங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். இதை அரசியலாக்க வேண்டாம்” என அந்தத் தாக்குதலில் கணவரை இழந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார், “பயங்கரவாதிகள் மதத்தைக் கண்டறிந்து பின்னர் மக்களைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. யாரையாவது நெருங்கிச் சென்று அவர்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா? இது மிகவும் சர்ச்சைக்குரியது. ஏனென்றால், சிலர் இதுபோன்ற விஷயங்கள் நடந்ததாகக் கூறுகிறார்கள், மற்றவர்கள் அதை மறுக்கிறார்கள். எனவே, நாம் அது குறித்து பேச வேண்டாம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இத்தகைய பேச்சுகள் மூலம் தங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்றும், இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த புனேவைச் சேர்ந்த பிரகதி ஜக்தலே என்பவர் தெரிவித்துள்ளார். பஹல்காம்…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14 புரோ+ 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இதோடு சேர்த்து 14 புரோ மாடல் போனையும் ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் ரக போன்களையும் வெளியிடும். ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது இந்தியாவில் ரியல்மி 14 புரோ+ 5ஜி போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 14 புரோ+ சிறப்பு அம்சங்கள் 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே ஸ்னாப்டிராகன்…

Read More

மும்பை: குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை கருதி அவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் முன்னுரிமை அளித்து வருவதால் சர்வதேச பள்ளிகளை நடத்துவதில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு காலத்தில் உயரடுக்கு பிரிவினரில் ஒரு சிலருக்கு மட்டுமே சர்வதேச பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் அதற்கான செலவினம் என்பது லட்சக்கணக்கில் இருந்தது. ஆனால், தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தால் சர்வதேச பள்ளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம், உலகளாவிய கல்வி வாரியங்களுடன் இணைந்து சர்வதேச பள்ளிகளை அதிகளவில் நடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. உலகின் சர்வதேச பள்ளிகளின் சந்தையை கண்காணிக்கும் ஐஎஸ்சி ஆய்வில் தெரிவிக்கப்பட்ட புதிய தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 2019-ல் 884 சர்வதேச பள்ளிகள் இருந்த நிலையில், 2025 ஜனவரி நிலவரப்படி அதன் எண்ணிக்கை 972-ஆக அதிகரித்துள்ளது.…

Read More

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. புள்ளிகள் பட்டியலில் உயர்வான இடத்தில் இருந்தாலும் டெல்லி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது தொடர்கதையாகவே இருக்கிறது. டு பிளெஸ்ஸிஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க் ஜோடி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 3 ஆட்டங்களில் விளையாடி 81 ரன்கள் சேர்த்த டு பிளெஸ்ஸிஸ் காயம் காரணமாக அதன் பின்னர் களமிறங்கவே இல்லை. அதேவேளையில் ஜேக் பிரேசர் மெக்கர்க் 6 ஆட்டங்களில் விளையாடிய போதிலும் இன்னும்…

Read More

அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்தியுள்ளார். பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரி 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் அறிவித்தது. இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி…

Read More

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனையொட்டி முதல் நாளான இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தைச் சுற்றியுள்ள கம்பத்தடி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது சுவாமி சன்னதியிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனியாக வெள்ளி சி்ம்மாசனத்தில் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரம் முன்பு வெள்ளி சிம்மாசனத்தில் 10.35 மணியளவில் எழுந்தருளினர். யாகசாலை அமைத்து வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 10.48 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தர்ப்பைப்புல், மலர்களால் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கொடிமரத்தின் மேலிருந்து மலர்கள் தூவினர். இதில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி…

Read More