மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி கடைசி நேர நாடகங்கள் முடிந்து ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதங்களுடன் டிராவில் முடிந்தது. ஆனால் இந்தியாவுக்கு தார்மிக வெற்றிதான் இது என்ற அளவுக்கு இந்தப் போட்டியைத் தங்கள் கடைசி நேர அசிங்கமான நடத்தை மூலம் பென் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து அணியும் மாற்றிவிட்டனர். 15 ஓவர்கள் இருக்கின்றன. ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என்பது பரஸ்பர ஒப்புதலுடன் நடைபெற வேண்டிய ஒன்று, களத்தில் நிற்கும் எதிரணி வீரர்கள் அதாவது பேட்டர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது ஷுப்மன் கில், பென்ஸ்டோக்ஸ் இடையே புரிந்துணர்வு இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் ஜடேஜாவிடம் கைகொடுத்து முடித்துக் கொள்ளலாம் என்று பென் ஸ்டோக்ஸ் தன்னிச்சையாக முடித்துக் கொள்ள இது என்ன அவர் வீட்டு நிகழ்ச்சியா? கடந்த போட்டியில் ஷுப்மன் கில், ஜடேஜா, சிராஜ் மற்றும் இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் அந்தரங்கமாகத் தாக்குதல் வசை புரிந்தவர்கள் தான் இந்த பென் ஸ்டோக்ஸ்…
Author: admin
சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி பிரிந்துவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன. ‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரித்தால், “ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இணையத்தில் பரவும் வதந்தியில் உண்மையில்லை” என்கிறார்கள். ஆனால், சிம்பு சம்பளம் அதிகமாக கேட்பதால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது சுமுகமாக முடிந்தால் மட்டுமே இப்படம் நடக்கும் என்கிறது ஒரு தரப்பு. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே முடிவுக்கு வரும். தற்போதைக்கு சிம்பு வைத்து படமாக்கப்பட்டுள்ள அறிமுக வீடியோவின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.…
சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிவளாகத்ததில் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்வரால் தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்படவுள்ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். முழு உடல் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். நலம் காக்கும்…
உடலுறவின் போது வலிஅசாதாரண யோனி இரத்தப்போக்கு, குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகுஅஜீரணம், குமட்டல் அல்லது வயிற்று வலிதோன்றிய புதிய அல்லது தொடர்ச்சியான முதுகுவலிஆதாரங்கள் யுடி ஹெல்த் ஈஸ்ட் டெக்சாஸ், கருப்பை புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் NHS, கருப்பை புற்றுநோய் அறிகுறிகள் அமெரிக்க புற்றுநோய் சங்கம், கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மையம், கருப்பை புற்றுநோயின் 5 ஆரம்ப அறிகுறிகள் சி.டி.சி, கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் மயோ கிளினிக், கருப்பை புற்றுநோய் அறிகுறிகள் எம்.டி ஆண்டர்சன், கருப்பை புற்றுநோயின் முதல் அறிகுறிகள்மறுப்பு: இந்த கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது.
பூமி ஒரு நெருங்கிய வான பார்வையாளரைக் காணப் போகிறது சிறுகோள் 2025 OL1 எங்கள் கிரகத்தை நெருங்குகிறது. சுமார் 110 அடி விட்டம் கொண்ட ஒரு சிறிய விமானத்தின் அளவு, இந்த விண்வெளி பாறை ஜூலை 30, 2025 அன்று அதன் மிக நெருக்கமான பாஸை உருவாக்கும். மணிக்கு 16,904 மைல் வேகத்தில் பயணிக்கும், இது பூமியைக் கடந்த சுமார் 1.29 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பாதுகாப்பாக சறுக்கும். இந்த நிகழ்வு ஆபத்தானதாகத் தோன்றினாலும், நாசா அதற்கு உறுதியளிக்கிறது சிறுகோள் எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த ஃப்ளைபி தொடர்ச்சியான கண்காணிப்புக்கான முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது பூமிக்கு அருகிலுள்ள பொருள்கள் நமது கிரகத்தை பாதுகாக்க நாசா மற்றும் இஸ்ரோ போன்ற ஏஜென்சிகளின் வளர்ந்து வரும் உத்திகள்.ஜூலை 30 அன்று நெருங்கிய பாஸுக்கு நாசா கண்காணிப்பு 2025 OL1 ஐ கண்காணிக்கிறது: வேகம் மற்றும் தூரம்ஏறக்குறைய 110 அடி விட்டம் கொண்ட, சிறுகோள்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து மக்களவையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகள் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கடும் அமளி ஏற்பட்டு…
சென்னை: என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: கல்வி உதவி தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய படிவங்கள் மற்றும் ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை ஜூலை 15-ம் தேதிக்குள் முடித்திடவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதில் 40% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இந்த பணிகளை முடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர், கண்காணிப்பாளர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, என்எம்எம்எஸ் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை துரிதமாக பதிவுசெய்ய வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பணி புரியும் பிரிவு எழுத்தர்கள் இயக்குநரகத்துக்கு நேரில் வந்து விளக்கம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை 9.10 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து நான்கு ரதவீதிகள் வழியாக தேர் இழுத்தனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி உற்சவம், ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகியவை முக்கியமான திருவிழாக்களாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் இரவு 16 சக்கர தேரில் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் தினசரி…
‘கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக், தேவயானியின் மகள் இனியா இருவரும் நடிக்கவுள்ளார்கள். பிரியதர்ஷி கதாபாத்திரத்தில் பிரசாந்த், சாய்குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை தியாகராஜனும், கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘கோர்ட் – எ ஸ்டேட் Vs எ நோபடி’. இதில் ப்ரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன்,…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, நெசவாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில், 3-வது நாளாக நேற்று காஞ்சிபுரம் சட்டமன்ற பகுதியில் நடை பயணம் மேற்கொண்டார். முன்னதாக, காஞ்சிபுரம் நத்தப்பேட்டை மற்றும் வையாவூர் ஏரிகளை பார்வையிட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் பட்டு நெசவுக்கு புகழ் பெற்ற பகுதி என்பதால், காஞ்சிபுரத்தில் பட்டு நெசவுக்கு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பாளையம் பகுதியில் நெசவாளர்கள் வீட்டுக்கு சென்று, நெசவாளர்களின் குறைகளை அன்புமணி கேட்டறிந்தார். மேலும், பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள நெசவாளர் ஒரு வீட்டிற்கு சென்ற அன்புமணி, நெசவாளர்களிடம் நெசவு செய்வது எப்படி என்பது கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அவரும் சோதனை முறையில் நெசவு செய்தார். பின்னர், நெசவாளர்கள், அன்புமணியிடம் கலந்துரையாடினர். குறிப்பாக, மழைக் காலங்களில் நெசவு செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். கூட்டுறவு சங்கங்களில் இருந்து…