Author: admin

சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்​திரி விழாவை முன்​னிட்​டு, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், நேற்று சென்​னைக்கு வருகை புரிந்​துள்​ளனர். ஸ்ரீ சாரதா நவராத்​திரி மஹோற்​சவம், செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை, சென்​னை, தாம்​பரம் கிழக்கு ராஜகீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்​வாமி வித்யா மந்​திர் பள்ளிவளாகத்​தில் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை முன்​னிட்டு காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், செப். 20-ம் தேதி (நேற்​று) இங்கு வருகை புரிந்​துள்​ளனர். இதையடுத்து செப். 21-ம் தேதி (இன்​று) மாலை 4.25 மணி அளவில் திவ்ய தேச கண்​காட்​சியை தொடங்கி வைக்க உள்​ளனர். ஸ்ரீ சாரதா நவராத்​திர் மஹோற்​சவத்தை முன்​னிட்டு செப். 22-ம் தேதி முதல் பிக்ஷாவந்​தனம், சஹஸ்ர சண்டி மகா யாகத்​துக்கு ஏற்​பாடு​கள்…

Read More

தென்காசி: சுரண்டை அருகே குளத்​தில் இருந்து தண்​ணீர் எடுப்​பது தொடர்பான விவ​காரத்​தில், அதி​முக எம்​எல்ஏ தலை​மை​யில் சாலை மறியல் போராட்​டம் நடை​பெற்​றது. கிராமத்​தைச் சுற்றி 500-க்​கும் மேற்பட்ட போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​பகு​தி​யில் பதற்றம் நில​வு​கிறது. தென்​காசி மாவட்​டம் சுரண்டை அரு​கே​யுள்ள கள்​ளம்​புளி குளத்​துக்கு கருப்​பாநதி அணை​யில் இருந்து தண்​ணீர் வரு​கிறது. இந்​தக் குளம் நிரம்​பிய பின்​னர், அரு​கில் உள்ள குலை​யனேரி குளத்​துக்கு தண்​ணீர் செல்​வது வழக்​கம். கள்​ளம்​புளி குளத்தை நம்பி 48 ஏக்​கர் நஞ்​சை, 500 ஏக்​கர்புஞ்சை நிலங்​கள் உள்​ளன. இந்​நிலை​யில், கள்​ளம்​புளி குளத்​தில் இருந்து குலைநேரி குளத்​துக்கு தண்​ணீர் கொண்டு செல்​வதற்​காக தனி குழாய் பதிக்​கும் திட்​டம் சில நாட்​களுக்கு முன்தொடங்​கியது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து இப்​பகுதி மக்​கள் குளத்​துக்​குள் குடி​யிருக்​கும் போராட்​டத்தை 2 நாட்​களுக்கு முன்பு மேற்​கொண்​டனர். அவர்களுடன், அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். குழாய் பதிக்​கும் திட்​டத்தை முற்​றி​லு​மாக கைவிடு​மாறு பொது​மக்​கள் வலி​யுறுத்​தினர். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்த…

Read More

புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்​வால் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு மனை​வி​யின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்​தது. ஆந்​திர முதல்​வரும் தெலுங்கு தேசம் கட்​சித் தலை​வரு​மான சந்​திர பாபு நாயுடு குடும்​பத்​துக்கு சொந்​த​மான ஹெரிடேஜ் புட்ஸ் நிறு​வனம் ஹைத​ரா​பாத்தை தலை​மையக​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. தென்​னிந்​தி​யா​வின் முன்​னணி பால் பொருட்​கள் தயாரிப்பு நிறு​வனங்​களில் ஒன்​றாக திகழ்​கிறது. பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்​டுள்ள இதன் சந்தை மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி​யாக உள்​ளது. சந்​திர​பாபு நாயுடு மனைவி புவனேஸ்​வரி நாரா வசம் 2.26 கோடி பங்​கு​கள் (24.37%) உள்​ளன. இந்​நிலை​யில், கடந்த வியாழக்​கிழமை வர்த்​தகத்​தின் இடையே இந்​நிறு​வனத்​தின் ஒரு பங்கு விலை 10% வரை உயர்ந்​தது. புதன்​கிழமை ரூ.485 ஆக முடிவடைந்த ஒரு பங்​கின் விலை, வியாழக்​கிழமை வர்த்​தகத்​தின் இடையே ரூ.541.60 வரை உயர்ந்​தது. இறு​தி​யில் சற்று குறைந்து ரூ.527-ல் நிலை பெற்​றது. இதன் மூலம், புவனேஸ்​வரி​யின்…

Read More

வாஷிங்டன்: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றி வரும் ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விடுப்புக்காக இந்தியா சென்றுள்ள ஊழியர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்புமாறு ஐ.டி. நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித் திறன்கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். ஓராண்டில் 65,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு விநியோகம் செய்கிறது. மேலும், அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கு 20,000 எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதன்படி, ஓராண்டில் மொத்தம் 85,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. எச்1பி விசாவில் 7.50 லட்சம் பேர் இந்த விசாவை பெற்றவர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் வரை தங்கியிருந்து பணியாற்றலாம். தேவைப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் வரை விசா காலத்தை…

Read More

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் மானசரோவர் மற்​றும் முக்​தி​நாத்​துக்கு ஆன்​மிக பயணம் சென்று வருபவர்​களுக்கு ஆண்​டு​தோறும் மானி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. மேலும், ஆடி மாதத்​தில் அம்​மன் கோயில்​களுக்​கும், புரட்​டாசி மாதத்​தில் வைணவ கோயில்​களுக்​கும், ராமேசுவரத்​திலிருந்து காசிக்​கும், அறு​படை வீடு​களுக்​கும் பக்​தர்​கள் கட்​ட​ணமில்​லாமல் ஆன்​மிக பயண​மாக அழைத்​துச் செல்​லப்​பட்டு வரு​கின்​றனர். அந்​தவகை​யில், இந்த ஆண்டு 2,000 பக்​தர்​கள் புரட்​டாசி மாதத்​தில் வைணவ கோயில்​களுக்கு ஆன்​மிக பயணம் அழைத்து செல்​லப்​படு​வர் என 2025-26-ம் நிதி​யாண்​டுக்​கான சட்​டப்​பேரவை மானியக் கோரிக்​கை​யில் அறிவிக்​கப்​பட்​டது. இந்த அறி​விப்பை செயல்​படுத்​தும் வகை​யில் முதல்​கட்​ட​மாக நேற்​று,இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் 9 மண்​டலங்​களில் இருந்து பக்​தர்​கள் வைணவ கோயில்​களுக்கு ஆன்​மிக பயணம் அழைத்து செல்​லப்​பட்​டனர். சென்​னையில் திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயி​லில் இருந்து 70 பக்​தர்​கள் வைணவ கோயில்​களுக்கு ஆன்​மிக பயணம் புறப்​பட்டு சென்​றனர். இதே​போல், காஞ்​சிபுரம், விழுப்​புரம், மயி​லாடு​துறை, தஞ்​சாவூர், திருச்​சி, மதுரை, தூத்​துக்​குடி மற்​றும்…

Read More

புதுடெல்லி: நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.23-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்தியத் திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகேப் பால்கே விருதை, மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2023-ம்ஆண்டுக்கான விருது நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நடிகர் மோகன்லாலின் தனித்துவமான திறமை, நிபுணத்துவம், கடின உழைப்பு ஆகியவை இந்திய திரைத்துறை வரலாற்றில் அவருக்கு சிறந்த இடத்தை பெற்றுத் தந்துள்ளது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய திரைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.23-ம் தேதி நடைபெறும் 71-வது…

Read More

சென்னை: தூத்​துக்​குடி​யில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு மற்​றும் மசகான் டாக் ஷிப் பில்​டர்ஸ் நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார். இதுகுறித்​து, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக ஆட்​சி​யில் தொழில்​துறை வரலாறு காணாத வளர்​ச்சிகண்​டுள்​ளது. பல தொழில்​பிரிவு​கள், குறிப்​பாக எலெக்ட்​ரானிக்​ஸ், வாகன உதிரி​பாகங்​கள், காலணி தயாரிப்பு போன்ற தொழில் பிரிவு​களில் தமிழகம் முதலிடத்​தில் உள்​ளது. முதல்​வரை பொறுத்​தவரை, பாரம்​பரிய துறை​கள் மற்​றும் புதிய துறை​களில் நாம் கால்​ப​திக்க வேண்​டும், வளர்ச்சி காண வேண்​டும் என்று உத்​தர​விட்​டுள்​ளார். இதற்​கிணங்க வெளி​நாட்டு பயணங்​கள், இங்கு நடை​பெறும் முதலீட்​டாளர்​கள் மாநாடு​களில் செமிகண்​டக்​டர் போன்ற புதிய தொழில் பிரிவு​கள் மற்​றும் கப்​பல் கட்​டும் துறை​யில் அதி​ முக்​கி​யத்​து​வம் இருப்​பதை அறிந்​துள்​ளோம். நாம் கப்​பல் கட்​டும் துறை​யில் நீண்ட கால​மாக உள்​ளோம். இதன் வாயி​லாக,…

Read More

பெங்களூரு: கர்​நாட​கா​வில் 14 முக்​கிய கோயில்​களின் சேவை கட்​ட​ணங்​கள் வரும் அக்​டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்​தப்​படு​வ​தாக இந்து அற நிலை​யத்​துறை அறி​வித்​துள்​ளது. இந்த முடிவை பாஜக கடுமை​யாக விமர்​சித்​துள்​ளது. கர்​நாட​கா​வில் இந்து அறநிலை​யத்​துறை அமைச்​சகத்​தின்​கீழ் 34,566 கோயில்​கள் உள்​ளன. இதில் ஏ பிரி​வில் உள்ள 14 முக்​கிய கோயில்​களின் சேவை கட்​ட​ணம் வரும் அக்​டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்​தப்​படு​வ​தாக அற நிலை​யத்​துறை இயக்​குநரகம் அறி​வித்​துள்​ளது. அதன்​படி பெங்​களூரு​வில் உள்ள ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி கோயில், நந்தி தீர்த்த சுவாமி கோயில், குக்கே ஸ்ரீ சுப்​ரமணியா கோயில், ரெய்ச்​சூரில் உள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்​வரி கோயில் உள்​ளிட்ட 14 கோயில்​களின் பூஜை, யாகம், பிர​திஷ்டை சடங்​கு​கள் ஆகிய​வற்​றுக்​கான கட்​ட​ணங்​கள் ரூ.100 முதல் ரூ.250 வரை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. குக்கே சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பிரபல​மான ஆஷ் லேஷ பூஜை, நகர பிர​திஷ்டை சடங்​கு​களுக்​கான கட்​ட​ணம் ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக…

Read More

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக வேட்​பாளர்​களை நிறுத்​தாத மமக, கொமதேக உள்​ளிட்ட 42 அரசி​யல் கட்​சிகளின் பதிவை இந்​திய தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது. மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம் 1951, பிரிவு 29–ன்​கீழ் தேர்​தல் ஆணை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட ஒரு கட்​சி, வரு​மானவரி விலக்​கு, பொதுதேர்​தல் சின்​னங்​கள் ஒதுக்​கீட்​டில் முன்​னுரிமை, சின்​னங்​கள் ஒதுக்​கீடு, நட்​சத்​திர பிரச்​சார நியமனம் ஆகிய சலுகைகளை பெற முடி​யும். பதிவு செய்​யப்​பட்ட கட்​சி​யானது மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டபடி தேர்​தல் ஆணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்த வேண்​டும். பல கட்​சிகள், தேர்​தல்ஆணை​யத்​தால் நடத்தப்​படும்பொதுத்தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தாதது தேர்​தல் ஆணை​யத்​தின் கவனத்​துக்கு வந்​தது. இக்​கட்​சிகள் தேர்​தலில் போட்​டி​யி​டா​மல், பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளுக்கு வழங்​கப்​படும் வரு​மானவரி விலக்கு உள்​ளிட்ட சலுகைகளை மட்​டும் அனுப​வித்து வரு​வது தெரிய​வந்​தது. பல கட்​சிகள், பதிவு செய்த முகவரி​யில் கட்சி அலு​வல​கம் கூட வைக்​காமல் செயல்​பட்டு வந்​த​தாக கூறப்​படு​கிறது. மேலும் இக்​கட்​சிகள் ஆண்டு வரவு,…

Read More

நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்​சாண்டி வேலை காட்ட வேண்​டாம். வரும் தேர்​தலில் நீங்​களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுக​வுக்கு தவெக தலை​வர் விஜய் சவால் விடுத்​தார். நாகை புத்​தூர் அண்ணா சிலை அருகே திரண்​டிருந்த தொண்​டர்​கள் மத்​தி​யில் தவெக தலை​வர் விஜய் நேற்று பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மீன் ஏற்​றும​தி​யில் 2-வது இடத்​தில் இருக்​கும் நாகை​யில், நவீன வசதி​யுடன் மீன்​களை பதப்​படுத்​தும் தொழிற்​சாலைகள் இல்​லை. மீனவ மக்​கள் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள் இல்​லை. இலங்கை கடற்​படை​யால் தமிழக மீனவர்​கள் தாக்​கப்​படு​வதை கண்​டித்து குரல் கொடுப்​பது நமது கடமை. நாகை​யில் 14 ஆண்​டு​களுக்கு முன்பு மீனவர்​கள் தாக்​கப்​பட்​டதை கண்​டித்து பொதுக்​கூட்​டம் நடத்​தினோம். நான் எப்​போதும் மக்​களு​டன்​தான் இருக்​கிறேன். அதே​நேரத்​தில், ஈழத் தமிழர்​களுக்​காக துணை நிற்​பதும் நமது கடமை. மீனவர் பிரச்​சினை​யில் திமுக​தான் கபட நாடகம் நடத்​துகிறது. வெளி​நாட்​டில் முதலீ​டா? – தமிழக முதல்​வர் ஒவ்​வொரு முறை வெளி​நாடு பயணம் சென்​று​விட்டு…

Read More