பிரதிநிதி படம் (TOI) சிட்னி: பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா இல்லையா என்பது அறிவியலில் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றாகும். வானியற்பியலாளர் தலைமையிலான சமீபத்திய ஆய்வு நிக்கு மதுசுதன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், பதில் இல்லை என்று கூறுகிறது. நாசாவின் அவதானிப்புகளின் அடிப்படையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிஇந்த ஆய்வு K2-18 பி இல் அன்னிய வாழ்க்கையை சுட்டிக்காட்டுகிறது, தொலைதூர எக்ஸோப்ளானெட் 124 ஒளி ஆண்டுகள் பூமி. கிரகத்தின் வளிமண்டலத்தில் டைமிதில் சல்பைட் (டி.எம்.எஸ்) எனப்படும் ஒரு வேதிப்பொருளின் வலுவான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பூமியில், டி.எம்.எஸ் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது, எனவே இது வாழ்க்கையின் கட்டாய அறிகுறியாகவோ அல்லது “பயோசிக்னேச்சர்” ஆகவோ தோன்றுகிறது. புதிய கண்டுபிடிப்புகள் தலைப்புச் செய்திகளை உருவாக்கியிருந்தாலும், வானியல் வரலாற்றைப் பார்த்தால், இதேபோன்ற கண்டுபிடிப்புகள் கடந்த காலங்களில் முடிவில்லாதவை என்பதைக் காட்டுகிறது. இந்த பிரச்சினை ஓரளவு தத்துவார்த்தமானது: விஞ்ஞானிகள் மற்றும் தத்துவவாதிகள் இன்னும் வாழ்க்கை என்றால் என்ன என்பதற்கு…
Author: admin
விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பிற்கு இணைவார் அரசாங்க செயல்திறன் துறை ((டோ. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்க செயல்திறனை (டோஜ்) வழிநடத்த தேர்வு செய்துள்ளார்.வோல் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒரு கூட்டு ஒப்-எட் எழுதிய இருவரும், மத்திய அரசின் அளவையும் நோக்கத்தையும் குறைப்பதே துறையின் முதன்மை குறிக்கோள் என்று கூறினார். குறிப்பிடத்தக்க ஒழுங்குமுறை வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர் குறைப்புகள் மூலம் இதை அடைய மஸ்க் மற்றும் ராமசாமி திட்டமிட்டுள்ளனர்.”நாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் அரசாங்கத்தை இயக்குகிறார்கள் என்ற அடிப்படை யோசனையின் அடிப்படையில் எங்கள் தேசம் நிறுவப்பட்டது. இன்று அமெரிக்கா செயல்படுகிறது அல்ல” என்று இருவரும் தங்கள் ஒப்-எட் கூறினர். தற்போதைய அமைப்பு, அதன் ஏராளமான விதிமுறைகள் மற்றும் சிவில் சர்வீஸ் பாதுகாப்புகளுடன், அதிகப்படியான அதிகாரத்துவ மற்றும் விலையுயர்ந்ததாக மாறிவிட்டது என்று அவர்கள் வாதிட்டனர்.தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட “விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்” அளவை…
புதுடெல்லி: பஹல்காமின் தீவிரவாதத் தாக்குதல் காரணமாக காஷ்மீரில் பல சுற்றுலாப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணமாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால், அம்மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 22-ல் அனந்தநாக்கின் பைஸாரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காம் வந்த சுற்றுலாவாசிகள் 26 பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் அங்கு வந்த தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் மீது முதன்முறையாக நடந்தப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதலால், ஜம்மு – காஷ்மீரில் பல்வேறு வகை தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக, காஷ்மீரின் 12 முக்கிய சுற்றுலாப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த சுற்றறிக்கை அல்லது அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணமான இந்த நடவடிக்கையால் அந்த மாநில மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்டவற்றில் குரிஜ், பங்கஸ், தூத்பத்ரி, சிந்தன் டாப், கொகேர்நாக், துக்சம், மோர்கன டாப், அச்சா பல், வெரிநாக் உள்ளிட்ட உயரமான மலைகளின் சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. இவற்றில் சுமார்…
டெக்சாஸ்: எக்ஸ் தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் சமூக வலைத்தளத்துக்கு வெளியே இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்கின் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த செயலியை எக்ஸ் ஏஐ வடிவமைத்துள்ளது. பயனர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உரையாடல் பாணியில் இந்த செயலி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களை உருவாக்கவும், உரையைச் சுருக்கவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். எக்ஸ் தள பயனர்களுக்கு ஏஐ அசிஸ்ட்டண்ஸ் வழங்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் இது அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக எக்ஸ் தளத்தில் ப்ரீமியம் சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இது அறிமுகமானது. தற்போது எக்ஸின் ஏஐ அசிஸ்டண்ட்டை கட்டணமின்றி பயன்படுத்தலாம். இருப்பினும் இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 10 ரெக்வெஸ்ட், நாள் ஒன்று மூன்று படங்கள் மட்டுமே பயனர்கள் பெற முடியும். இது செயலி வடிவில் பயன்படுத்தும்…
சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (ஏப்.1) வெளியிடப்படுகிறது. முதல் முறையாக குரூப்-1 பதவிகளுடன் தொழிலாளர் உதவி ஆணையர் பதவியும் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கிய இந்த தேர்வை பட்டதாரிகள் எழுதலாம். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி-யின் 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டணையில், குரூப்-1…
மும்பை: 2024-25 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ நேற்று (21-ம் தேதி) வெளியிட்டது. ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் நான்கு வீரர்கள் ஏ+ கிரேடு பிரிவிலும், ஆறு வீரர்கள் ‘ஏ’ கிரேடிலும், ஐந்து பேர் ‘பி’ கிரேடிலும் இடம் பெற்றுள்ளனர். மீதமுள்ள 19 பேருக்கு ‘சி’ கிரேடு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு ‘பி’ கிரேடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ‘சி’ கிரேடு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். கடந்த சீசனில் இவர்கள் இருவருமே உள்நாட்டு போட்டிகளில் விளையாட மறுத்ததால் சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர். ரிஷப் பந்த் ‘ஏ’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் ரிஷப் பந்த்துக்கு…
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் புதிய கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவருடன் பணியாற்றிய அரசியல் தலைவர்கள், அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் சிலர் மீது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம்சாட்டு, தலைமறைவு குற்றச்சாட்டின் கீழ் வங்கதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் ஏற்கெனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. தநைகர் தாகாவின் புறநகரில் உள்ள பூர்பாசல் பகுதியில் அரசு நிறுனம் சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை, சைமா புதுல், அப்போது பிரதமராக இருந்த தனது தாய் ஷேக் ஹசீனாவின் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக வாங்கியதாக குற்றம்…
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு விழா மார்ச் 8-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் நாள்தோறும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட முதல் தேரில் விநாயகர், முருகன் மற்றும் அம்மனுடன் சோமஸ்கந்தராக சுவாமி எழுந்தருளினார். 2-வது தேரில் அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேர் வடம் பிடித்தல் காலை 7.16 மணிக்கு தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் `நமச்சிவாய’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு வீதிகளையும் வலம் வந்த தேரோட்டம் மாலையில் நிறைவடைந்தது. இதையொட்டி,…
பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக, யாஷ் நடிக்கிறார். அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ராவணனாக யாஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக உஜ்ஜைனியில் உள்ள மஹாகாளேஸ்வர் கோயிலில் நடிகர் யாஷ் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழிபாட்டுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிவபெருமானின் ஆசிவேண்டும் என்பதால் இந்தக் கோயிலுக்கு வந்தேன்.நான் தீவிர சிவபக்தன். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நலத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்றார்.
திருநெல்வேலி: திருநெல்வேலியிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த காட்சிகள் வைரலானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயில் செயல் அலுவலர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இத்திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பக்தர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. புனிதமான கோயில் வளாகத்தில் இவ்வாறு அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திருக்கோயில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி நகர் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில்…