புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் சேர்த்தனர். அபிஷேக் போரெல் 28, டு பிளெஸ்ஸிஸ் 22 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிருணல் பாண்டியா 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டும் வழங்கி ஒரு விக்கெட் கைப்பற்றினார். 163 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து…
Author: admin
2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான சீனாவை அனுபவியுங்கள்.” என்று இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் வரவேற்றுள்ளார். ட்ரம்ப் கெடுபிடியின் விளைவாக.. அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளி சீனா. அதுமட்டுமல்ல பொருளாதார போட்டியாளரும் கூட. இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். அதற்கு சீனாவும் பதில் வரி விதிக்க மற்ற நாடுகளுக்கு சலுகை அறிவித்து 90 நாட்களுக்கு தற்காலிகமாக வரியை நிறுத்திவைத்த ட்ரம்ப், சீனாவுக்கு மட்டும் 145% வரியை விதித்துள்ளது. இருப்பினும் சற்றும் தளராத சீனா தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து வருகிறது. மேலும், வளரும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவை வரி விதிப்பை இணைந்தே எதிர்கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு சீனா…
பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.5) காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.11-ம் தேதி நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று (ஏப்.5) காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. மூலவர், உற்சவர், விநாயகர், மயில், துவார பாலகர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, மூலவர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி பட்டக்காரர் மடத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் பழநி மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி, திரளான பக்தர்கள்…
‘ஸ்டார்’ இயக்குநர் இளன் தனது அடுத்த படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். ‘ஸ்டார்’ படத்தினை தொடர்ந்து தனுஷ் படத்தினை இயக்கவுள்ளார் இளன் என்று செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது தனுஷ் பல்வேறு படங்களை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருடைய தேதிகள் இருக்காது என்பது உறுதியாகிவிட்டது. இதனை முன்னிட்டு புதிய முடிவொன்றை எடுத்துள்ளார் இளன். தனது அடுத்த படத்தில், தானே நாயகனாக நடிக்க முடிவு எடுத்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்று, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முழுக்க காதலை மையமாக வைத்து இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் இளன். முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நடிகராக அறிமுகப்படுத்தியது ஏஜிஎஸ் நிறுவனம். தற்போது அவர் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். அந்த பாணியில் இளனையும் நாயகனாக்க முடிவு செய்திருக்கிறது ஏஜிஸ் நிறுவனம்.
சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிலையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதன்முறையாக ஆஜராகி செந்தில்பாலாஜி நேற்று கையெழுத்திட்டார். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த மூல வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் கணக்கில் வராத ரூ.1.34 கோடி பணம், அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனது அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் செந்தில்…
புதுடெல்லி: நடிகர் அஜித் குமார், லட்சுமிபதி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான கடந்த ஜனவரி 25-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதில் பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேர், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், பத்ம…
சென்னை: சென்னையில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஸூம் போன் சேவை இந்தியாவில் அறிமுகமானது. முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தச் சேவை பயனர்களுக்கு கிடைத்தது. இந்நிலையில், சென்னையில் தற்போது ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. கடந்த 2011-ல் நிறுவப்பட்டது ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம். பரவலாக ஸூம் என அறியப்படுகிறது. மீட்டிங், சாட், குரல் வழி அழைப்பு மேற்கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. கரோனா பரவலின்போது உலக அளவில் ஸூம் தளம் பயன்படுத்தப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பெரும்பாலான இடங்களில் ஸூம் சேவை அவசியமானதாக அமைந்தது. பயனர்கள் இதனை பயன்படுத்துவதும் எளிது. சென்னையில் ஸூம் போன் சேவை: இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவை அடிப்படையாக கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சிறப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்க வேண்டும் என்கிற…
மதுரை: “படிப்பதற்காக செல்போன்களை வெறும் 5 முதல் 10 சதவீதம் மாணவர்கள்தான் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூக வலைதள பயன்பாட்டுக்காகவே, தற்போது மாணவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்,” என்று மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா கவலை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (ஏப்.9) தமுக்கம் மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், ஆணையர் சித்ரா பேசுகையில், “மாணவ, மாணவிகள் சிறப்பாக 12ம் வகுப்பு தேர்வுகளை எழுதியிருந்தால் நல்லது. மோசமாக எழுதியிருந்தாலும் கவலைப்படாதீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி திறனுக்கு தகுந்தவாறு, உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதற்காகதான் இதுபோன்ற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். பொறியியல், மருத்துவம், ஐடி மற்றும் கட்டிடக்கலை படிப்புகளை தாண்டி, எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள உயர்கல்வியில் நிறைய படிப்புகள் உள்ளன. அந்த படிப்புகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம்?, என்ன படிக்கலாம்?, அரசு உதவிகள் எப்படி…
புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. வெற்றிக்குப் பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறும்போது, “ஒவ்வொரு ஆட்டமும் இங்கிருந்து முக்கியமானது. ஏனென்றால் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் முதல் 2 இடங்களுக்குள் வர விரும்புகிறோம். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேஸிங்கில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் அழுத்தத்தில் இருந்தோம், ஆனால் விராட் கோலியும், கிருணல் பாண்டியாவும் தங்கள் இன்னிங்ஸை கணக்கிட்டு விளையாடிய விதம், பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதமும் பார்க்க நன்றாக இருந்தது. நான் முன்பு கூறியது போல், நாங்கள் மைதானங்களை பார்த்து விளையாடும் அணி அல்ல. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்” என்றார்.
வாஷிங்டன்: “வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரி 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம் அறிவித்தது. இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். எனினும் இது…