கணைய புற்றுநோய் என்பது மிகவும் ஆக்கிரோஷமான நோயாகும், இது மேம்பட்ட கட்டங்கள் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் இருக்கும், இது ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையை கடினமாக்குகிறது. புற்றுநோயின் மிக மோசமான வடிவங்களில் ஒன்றாக, அதன் அமைதியான முன்னேற்றம் காரணமாக இது குறைந்த உயிர்வாழும் விகிதத்தைக் கொண்டுள்ளது. புகைபிடித்தல், உடல் பருமன், குடும்ப வரலாறு மற்றும் நாள்பட்ட கணைய அழற்சி போன்ற கணைய புற்றுநோயின் காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகளைப் புரிந்துகொள்வது ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்புக்கு அவசியம். மஞ்சள் காமாலை, எடை இழப்பு மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட கணைய புற்றுநோய் அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது சரியான நேரத்தில் கண்டறியப்படுவதற்கு வழிவகுக்கும். வழக்கமான சோதனைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது கணைய புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கும் உயிர்வாழும் விளைவுகளை மேம்படுத்துவதற்கும் முக்கிய படிகள்.கணைய புற்றுநோய் மற்றும் அதன் காரணங்களைப் புரிந்துகொள்வதுகணைய புற்றுநோய் கணையத்தில் உருவாகிறது, இது வயிற்றின் பின்னால்…
Author: admin
புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் காசாவில் செய்தியாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்து வரும் நிலையில் இந்திய அரசு மவுனமாக நிற்பது வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகக் கண்டித்திருந்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கருத்தும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பிரியங்காவின் கருத்துகளுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் தூதர் ரியூவென் அஸார் கூறும்போது, ‘‘ஹமாஸின் புள்ளிவிவரங்களை நம்ப வேண்டாம். உங்கள் ஏமாற்று வேலைதான் வெட்கக்கேடானது. இஸ்ரேல் 25,000 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்றது. இந்த மனித உயிரிழப்புகளுக்கான பயங்கரமான செலவு, ஹமாஸின் கேவலமான தந்திரங்களான பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, வெளியேற அல்லது உதவி பெற முயலும் மக்களைச் சுடுவது, அவர்களது ராக்கெட் தாக்குதல்கள் ஆகியவற்றில் இருந்து வருகிறது. அங்கே இனப்படுகொலை நடக்கவில்லை” என்றார்.
திருச்சி: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினை ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார். திருச்சி உறையூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில் போராட்டம் நடத்திவரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, துறை அமைச்சராகிய நான் சந்தித்துப் பேசவில்லை என்பது தவறு. நாங்கள் 4 நாட்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். பணி நிரந்தரம் குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே 17,000 பேரை நாங்கள் பணி நிரந்தரம் செய்து இருக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், துப்புரவுப் பணிக்காக நியமிக்கப்பட்ட அவர்களை துப்புரவு பணிக்காக பயன்படுத்தவில்லை. நாடு முழுவதும் துப்புரவுப் பணியில் பிரச்சினை உள்ளது. அவர்கள் சொல்வதுபோல, பணி நிரந்தரம் ஒரே நாளில் செய்கிற காரியம் அல்ல. ஓரிரு நாட்களில் தூய்மைப்…
புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில், அது இந்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சந்தைகளை தேடுமாறு ஏற்றுமதியாளர்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது கூறியதாவது: தற்போதைய சூழலை ஏற்றுமதியாளர்கள் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இந்திய இறால் மற்றும் பிற மீன் வகைகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்புகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு புதிய சந்தைகளை கைப்பற்றுவதில் ஏற்றுமதியாளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். இவ்வாறு ராஜீவ் கூறினார். அமெரிக்காவுக்கான பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதியில் இந்தியா தற்போது முன்னிலையில் உள்ளது. இதன் சந்தைப் பங்கு 2015-ல் 24.4%-ஆக இருந்த நிலையில்…
எடை இழப்புக்கு உதவுதல், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மற்றும் நீண்ட ஆயுளை ஊக்குவிப்பது போன்ற உடல்நல நன்மைகள் காரணமாக உண்ணாவிரதம் பெருகிய முறையில் பிரபலமாகிவிட்டது. இருப்பினும், மிகவும் பொதுவான கேள்விகளில் ஒன்று: நீங்கள் வேகமாக இருக்கும்போது உங்கள் இரத்த சர்க்கரைக்கு என்ன நடக்கும்? உண்ணாவிரதத்தின் போது, உடல் முக்கிய வளர்சிதை மாற்ற மாற்றங்களுக்கு உட்படுகிறது. ஆரம்பத்தில், சேமிக்கப்பட்ட சர்க்கரை ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படுவதால் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது. இறுதியில், உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குகிறது, இது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இன்சுலின் எதிர்ப்பு, ப்ரீடியாபயாட்டீஸ் அல்லது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு இரத்த சர்க்கரையில் உண்ணாவிரதத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது, அங்கு குளுக்கோஸ் கட்டுப்பாடு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறதுநீங்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது, நீங்கள் ஒரு காலத்திற்கு உணவைத் தவிர்ப்பீர்கள், இது இடைவிடாத உண்ணாவிரதம் (12-16 மணிநேரம்) முதல் 24 மணிநேரம் அல்லது…
புதுடெல்லி: மக்களவையில் நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 2.17 லட்சம் எண்ணிக்கையிலான பல்வேறு மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டன. இது முந்தைய ஆண்டு எண்ணிக்கையான 2.23 லட்சத்தை விட குறைவாகும். இந்த 2.17 லட்சம் கள்ள நோட்டுகளில் 1,17,722 நோட்டுகள் ரூ.500 ஆகும். இதையடுத்து 51,069 நோட்டுகள் ரூ.100 மதிப்பும், 32,660 நோட்டுகள் ரூ.200 மதிப்பும் கொண்டதாகும். இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
Last Updated : 13 Aug, 2025 05:55 AM Published : 13 Aug 2025 05:55 AM Last Updated : 13 Aug 2025 05:55 AM திருச்சி: விருத்தாசலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் மாலை வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. விருத்தாசலத்தை அடுத்த மணலூர் அருகே சென்றபோது, திடீரென தண்டவாளத்தை கடக்க முயன்ற மாட்டின் மீது ரயில் மோதியது. இதில், ரயிலின் ஏரோடைனமிக் (முன்) பகுதி சேதமடைந்தது. மாடும் அந்த இடத்திலேயே உயிரிழந்தது. இதனால், சுமார் 15 நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததற்காக ரயில்வே சட்டம் 1989 பிரிவு 154-ன் கீழ் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாட்டின் உரிமையாளரான மணலூரைச் சேர்ந்த…
நீரிழிவு நோயை நிர்வகிப்பது ஸ்மார்ட் உணவுத் தேர்வுகளைச் செய்வதில் திறம்பட பொருந்துகிறது, குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகளுக்கு வரும்போது. பழுப்பு அரிசி மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்களும் வெள்ளை அரிசிக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை சிறந்த ஊட்டச்சத்தை வழங்குகின்றன மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இருப்பினும், நீரிழிவு நோயுடன் வாழும் மக்களுக்கு, எந்த தானிய -பிரவுன் அரிசி அல்லது குயினோவா -இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு சிறந்தது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பழுப்பு அரிசி மற்றும் குயினோவாவிற்கு இடையிலான ஊட்டச்சத்து வேறுபாடுகளை ஆராயுங்கள், அவற்றின் கிளைசெமிக் குறியீடு, புரதம் மற்றும் ஃபைபர் உள்ளடக்கத்தை ஆராய்வது மற்றும் நீரிழிவு நிர்வாகத்தில் ஒட்டுமொத்த தாக்கம். இரத்த குளுக்கோஸை உறுதிப்படுத்தவோ, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவோ அல்லது ஆரோக்கியமாக சாப்பிடவோ நீங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இது உங்கள் நீரிழிவு நட்பு உணவுக்கான சிறந்த முழு தானியங்களைத் தேர்வுசெய்ய உதவும் நடைமுறை நுண்ணறிவுகளையும் சான்றுகள் அடிப்படையிலான ஆலோசனையையும்…
நாக்பூர்: மத்தியபிரதேச மாநிலத்தின் சியோனி மாவட்டம், கரன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அமித் யாதவ் (35). இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவி கயார்சி உடன், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார். ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நாக்பூரின் லோனாரா அருகில் செல்லும்போது இவர்களின் பைக் மீது ஒரு லாரி உரசியது. இதில் சாலையில் விழுந்த கயார்சி லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கு பிறகு லாரியை நிறுத்தாமல் டிரைவர் தப்பிச் சென்று விட்டார். எதிர்பாராத விபத்தால் செய்வதறியாது தவித்த அமித் அவ்வழியே செல்லும் வாகனங்களிடம் உதவி கோரினார். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இதையடுத்து அவர் தனது மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் வைத்து கட்டிக்கொண்டு சொந்த ஊருக்குப் புறப்பட்டார். இந்நிலையில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, கயார்சியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக நாக்பூர்…
ஷேன் நிகாமுடன் இணைந்து நடிகர் சாந்தனு நடிக்கும் மலையாளப் படத்துக்கு ‘பல்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மலையாள சினிமாவில் நடிக்கிறார். முன்னதாக, 2007-ம் ஆண்டு வெளியான ‘ஏஞ்சல் ஜான்’ என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்திருந்தார். விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘பல்டி’யை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்குகிறார். அல்போன்ஸ் புத்ரன், சோடா பாபுவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சந்தோஷ் டி. குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் தயாரிக்கின்றனர். அலெக்ஸ் ஜே. புலிக்கல் ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தனு பாக்யராஜ் கூறும்போது, “பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் படம் புதிய அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்கச் சிறந்த கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது” என்றார்.