Last Updated : 28 Apr, 2025 07:34 AM Published : 28 Apr 2025 07:34 AM Last Updated : 28 Apr 2025 07:34 AM பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்தவர் முன்னி தேவி. குத்தகை தொடர்பான இவரது வழக்கு ஒன்றில் கூடுதல் காரணங்களைச் சேர்க்க கோரிய மனுவை கூடுதல் மாவட்ட நீதிபதியான அமித் வர்மா தன்னிச்சையான முறையில் மூன்றே வரி உத்தரவில் தள்ளுபடி செய்தார். அத்துடன் மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் குறித்து அந்த நீதிபதி ஒரு வரி கூட தனது தீர்ப்பில் எழுதவில்லை. இதற்கு முன்பும் இதே நீதிபதி இதே போன்ற தவறை செய்ததாக கூறிய முன்னி தேவி தனக்கு நிவாரணம்…
Author: admin
சென்னை: ஆப்பிள் நிறுவனம் அதன் மலிவு விலை மாடலான ஐபோன் எஸ்இ4 மாடல் போனை இன்று இரவு அறிமுகம் செய்கிறது. இது இந்தியாவில் ப்ரீமியம் போன் பட்ஜெட்டில் வெளியாகும் மற்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் என தகவல். கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டில் ஐபோன் எஸ்இ மாடல் போன் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அதன் 4-வது ஜெனரேஷனான எஸ்இ4 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாக உள்ளது. இது ஆண்ட்ராய்டு போன் பயனர்களை ஆப்பிள் ஐஓஎஸ் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 இன்ச் டிஸ்பிளே, ஏ18 ப்ராசஸர், 5ஜி இணைப்பு வசதி, அதிகபட்சமாக 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஐஓஸ் 18 இயங்குதளம், பின்பக்கத்தில் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஃபேஸ் ஐடி உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் என தகவல். இந்தியாவில் இந்த போனின் விலை சுமார் 40,000 ரூபாய்க்கு மேல் இருக்கும்…
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு நாளை (ஏப்.16) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசு கணினி சான்றிதழ் தேர்வு (கோவா – Certificate course in Computer on Office Automation-COA) மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜூன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஏப்.16-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.dte.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கோவா’ தேர்வு தேர்ச்சி கட்டாயம்: தமிழக அரசு துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு (‘கோவா’) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குருப்-4 தேர்வில் வெற்றிபெற்று, பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்கள்…
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய குஜராத் அணியின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் சேர்ந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் சாய் சுதர்ஷன் 39 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளுக்கு 84 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜாஸ் பட்லர் அரை சதம், வாஷிங்டன் சுந்தர் 13, ராகுல் டிவாட்டியா 9, ஷாருக் கான் 5 என குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது. 210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஜெய்ஸ்வாலும், வைபவ் சூர்யவன்ஷியும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 70, வைபவ் சூர்யவன்ஷி வெறும்…
புதுடெல்லி: விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்று சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ஏசிஐ) தெரிவித்துள்ளது. உலகின் வேகமான சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் விமானப் பயணிகள் போக்குவரத்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 10.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனாவுக்கான மதிப்பீடான 12 சதவீதத்தை விட குறைவாகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவுக்கு மிகப் பெரிய விமானச் சந்தை உள்ளது. இந்நிலையில் ஏசிஐ அமைப்பின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குநர் ஸ்டெஃபனோ பரோன்சி, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மேலும் விமானப் பயணிகள் போக்குவரத்தில் ஒரு வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவின் விமானப் பயணிகள் வளர்ச்சி விகிதம் 2026-ல் 10.5% ஆகவும் 2027-ல் 10.3% ஆகவும் இருக்கும் என ஏசிஐ…
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அறுபத்து மூவர் உற்சவம் இன்று நடைபெற உள்ளது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளன்று பவளக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர் வலம் வந்து அருள்பாலித்தார். பின்னர், அம்மை மயில் வடிவில் காட்சி தருதல் நிகழ்ச்சியும், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகர் வீதியுலா நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து அதிகார நந்தி, சவுடல் விமானம் உள்ளிட்ட வாகனங்களில் மாட வீதிகளில் சுவாமி உலா வந்தார். இந்நிலையில், பங்குனி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு திருத்தேரில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர். காலை 7.30 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. 96…
பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஷாஜி கருண் காலமானார். அவருக்கு வயது 73. 1989ஆம் ஆண்டு வெளியான ‘பிறவி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஷாஜி கருண். இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டது. இது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதுகளையும் வென்றது. 2011ஆம் ஆண்டில், இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஷாஜி கருண் மலையாள சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க வைத்த புகழ்பெற்ற கலைஞர் ஆவார். சுமார் 40 படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ‘பிறவி’, ‘ஸ்வாஹம்’, ‘வனபிரஸ்தம்’, ‘நிஷாத்’, ‘குட்டி ஸ்ராங்கு’ மற்றும் ‘ஸ்வாபானம்’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷாஜி கருண் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு…
கோவை: தவெக ஆட்சி சிறுவாணி நீரைப்போல தூய்மையானதாக இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார். தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான 2-ம் நாள் பயிற்சிப் பட்டறை கோவை எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே எங்களிடம் இடமில்லை. மக்கள் நன்மைக்காக எந்த நிலைக்கும் செல்லத் தயங்க மாட்டோம். ஊழல் இருக்காது… தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது, குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அதனால், எவ்வித தயக்கமுமின்றி மக்களை சந்தியுங்கள். தவெக ஆட்சி கோவையின் சிறுவாணி நீரைப்போல தூய்மையானதாக அமையும். தெளிவான, உண்மையான, வெளிப்படையான ஆட்சியாக இருக்கும். இவற்றை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள். பண்டிகைகளைப்போல கொண்டாட்டமாக இந்தப் பணியை மேற்கொள்ளுங்கள். வெற்றியை அடைவதில் பூத் கமிட்டி முகவர்களின் செயல்பாடு முக்கியம். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர்…
ஸ்ரீநகர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். கடந்த 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் என்ஐஏ சார்பில் நேற்று முன்தினம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர். தாக்குதலின்போது அவர்களோடு இருந்த குடும்பத்தினரிடம் என்ஐஏ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இதற்காக அந்தந்த மாநிலங்களில் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரிக்கின்றனர். இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பகுதியில்…
Last Updated : 21 Feb, 2025 11:23 AM Published : 21 Feb 2025 11:23 AM Last Updated : 21 Feb 2025 11:23 AM சென்னை: இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16e என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE4 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு மாடலை வெளியிட்டு சர்ப்ரைஸ் தந்துள்ளது. உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஆப்பிள் தயாரிப்பான ஐபோன் தன்னகத்தே கொண்டுள்ளது. கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை…