Author: admin

டொவினோ தாமஸ், சேரன் நடித்துள்ள ‘நரிவேட்டா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘இஷ்க்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினா தாமஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘நரிவேட்டா’. இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், ப்ரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் சேரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் சேரன் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகிறார். போலீஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் மே 16 அன்று வெளியாகிறது. ட்ரெய்ல்ர் எப்படி? – தங்கள் நிலத்துக்காக போராடும் பழங்குடியின மக்கள் – சிஸ்டம் / போலீஸ்/ அரசுக்கும் இடையிலான மோதலே படத்தின் அடிநாதம் என்று தெரிகிறது. காட்டை ஆக்கிரமித்திருப்பதாக கூறி பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் அவர்களிடம் சேரன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோடு தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறைகளையும், அராஜகங்களையும் காட்டுகிறது. இளம் போலீஸ்…

Read More

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து, தமிழகத்துக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்திருந்த 200 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் கடந்த 27-ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த கால அவகாசத்துக்குள் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுகிறார்களா என்பதை அந்தந்த மாநில அரசுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் பெயர், விவரங்களை குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியேற்றும் பணியை தொடங்கினர். அந்த வகையில் தமிழகத்திலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென்னையில் 20 பாகிஸ்தானியர்கள் தங்கி இருந்தனர். இதில் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த 2 பாகிஸ்தானியர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேபோன்று வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனை…

Read More

இந்திய கடற்படைக்காக ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக அளவில் மிகவும் திறமையான போர் விமானங்களில் ஒன்றாக ரபேல்-எம் கருதப்படுகிறது. இது இப்போது பிரான்ஸ் கடற்படையில் மட்டுமே இயங்கி வருகிறது. இதையடுத்து, இந்திய கடற்படைக்காக இந்த ரக விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று கையெழுத்தானது. மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கும் தஸ்ஸோ நிறுவன உயர் அதிகாரியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது கடற்படை துணை தளபதி கே.சுவாமிநாதன் உடன் இருந்தார். இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த…

Read More

சென்னை: இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஆண்டு வெளியான விவோ வி40 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட அடுத்த வெர்ஷனாக இந்த போன் வெளிவந்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போன் ப்ரீமியம் செக்மென்ட் மாடலாக வெளிவந்துள்ளது. ரோஸ் ரெட், கிரே மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.77 இன்ச் டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 3 ப்ராசஸர் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் …

Read More

சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்ரல் 16 (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ‘கோவா’ தேர்வு எனப்படும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு (Certificate course in Computer on Office Automation-COA)தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்துடன் ஜுன் மாதம் இத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 16-ம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்வு கட்டணம் ரூ.1030 ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதளத்தை ()www.dte.tn.gov.in) விரிவாக தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்காக நடத்தப்படும் குருப்-4 தேர்வுக்கு யாரும் உரிய தொழில்நுட்பக்கல்வித்தகுதி…

Read More

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இன்று ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), ராஜஸ்​தான் ராயல்​ஸ்​(ஆர்​ஆர்) அணி​கள் மோதவுள்​ளன. பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. இந்த சீசனில் இது​வரை சொந்த மைதானத்தில் நடை​பெற்ற ஒரு போட்​டி​யில் கூட பெங்​களூரு அணி வெற்றி பெற​வில்​லை. எனவே, இன்று நடை​பெறும் போட்​டி​யில் ராஜஸ்​தானை வீழ்த்தி வெற்​றிக் கணக்கை பெங்​களூரு அணி தொடங்​கும் என்று ரசிகர்​கள் எதிர்​பார்த்​துக் காத்​திருக்​கின்​றனர். பெங்​களூரு அணி இது​வரை 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 5-ல் வெற்​றி, 3-ல் தோல்வி என 10 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. பெங்​களூரு மைதானத்​தில் நடை​பெற்ற 3 ஆட்​டங்​களில் குஜ​ராத், டெல்​லி, பஞ்​சாப் அணி​களிடம் அந்த அணி தோல்வி கண்​டுள்​ளது. ஆனால் வெளிமை​தானங்​களில் நடை​பெற்ற 5 ஆட்​டங்​களி​லும் அந்த அணி வெற்றி பெற்​றுள்​ளது. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் உள்​ளூர் மைதானத்​தில் வெற்றி பெற்று கணக்​கைத் தொடங்​கு​வ​தில்…

Read More

சான் பெட்ரோ: கரீபியன் நாடான பெலீசுவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் (49) சுட்டுக் கொல்லப்பட்டார். கரீபியன் கடல் பகுதியில் பெலீசு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் கோரசோல் நகரில் இருந்து சான் பெட்ரோ நகருக்கு சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 14 பேர் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டினார். விமானம் சான் பெட்ரோ நகரில் தரையிறங்கக்கூடாது. வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அவர் மிரட்டல் விடுத்தார். ஆனால் விமானி ஹோவல் கிரேஞ்ச் மிரட்டலுக்கு அடிபணியாமல் சான் பெட்ரோ நகரை நோக்கி விமானத்தை இயக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அகின்யேலா டெய்லர், 3 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தினார். தான் விரும்பும் இடத்துக்கு விமானத்தை திருப்பவில்லை என்றால் அனைத்து…

Read More

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் சண்முகர் பச்சை மலர் சூடி திருமால் அம்சமாகவும் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த கடந்த 2-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. மேலும், இரவும் சுவாமி, அம்மன்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மாலை 4 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சண்முகர் சிகப்பு மலர் சூடி சிவன் அம்சத்தில் (ருத்திரர்) வீதியுலா வந்து அருள் பாலித்தார். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெள்ளை மலர் சூடி பிரம்மன் அம்ச…

Read More

சூர்யாவுக்கு முன்பே தனுஷும், தானும் சிக்ஸ் பேக் வைத்துவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ‘ரெட்ரோ’ விழாவில் நடிகர் சிவகுமார் பேசும் போது, “வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது” என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இடையே விவாதத்தை கிளப்பியது. பலரும் விக்ரம், விஷால் என ஒவ்வொரு நடிகரின் பெயரைக் கூறி அவர்தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தார் என்று விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து விஷால் பேசியுள்ளார். அதில், “முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தவர் தனுஷ்தான். வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ படத்தில் க்ளைமாக்ஸில் வைத்திருப்பார். அதன் பிறகு ‘சத்யம்’ படத்தின் நான் வைத்தேன். தொடர்ந்து ‘மதகஜராஜா’ படத்திலும் வைத்தேன். ஒருவேளை…

Read More

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்.30 முதல் மே 3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 4-ம் தேதி ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், ஏப். 30 முதல் மே 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி…

Read More