புதுடெல்லி: டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டுமென்ற சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதியளித்துள்ளார். நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் திங்கள் கிழமையன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும் உடனடியாக தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இதில் ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். டெல்லி தெருக்களை…
Author: admin
சென்னை: மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து கர்ப்பிணிகள், நோயாளிகளை மீட்டு சிகிச்சை அளிக்க படகு ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை, இஎம்ஆர்ஐகீரின் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போது 900-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. ஆனால், மழை வெள்ள பாதிப்புகளின்போது, அந்த வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. அதனால், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம், 5 படகு ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநில செயல் தலைவர் செல்வகுமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில், மீனவர்கள் உதவியுடன் படகு மூலமாக நோயாளிகள், கர்ப்பிணிகள் மீட்கப்பட்டு வருகின்றனர். சிலருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும்பட்சத்தில், அந்நேரங்களில் மனிதர்கள் மூலமாக குறைந்தபட்ச முதலுதவி சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.…
உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் சாப்பிடுவதைப் பற்றி நீங்கள் செய்யும் தேர்வுகள் உங்கள் மூளை ஆரோக்கியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஊட்டச்சத்து மனநல மருத்துவரும் ஆசிரிய உறுப்பினருமான டாக்டர் உமா நாயுடு, உணவு நினைவகம், கவனம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்கிறார். சில உணவுகள் குடல் பாக்டீரியாவை எதிர்மறையாக பாதிக்கலாம், மூளை அழற்சியைத் தூண்டும் மற்றும் ஆரம்பகால நினைவக இழப்பு அல்லது டிமென்ஷியாவுக்கு பங்களிக்கக்கூடும் என்பதை அவரது ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம், தனிநபர்கள் கூர்மையான சிந்தனை, மேம்பட்ட முடிவெடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த நீண்டகால மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.ஆரம்பகால நினைவக இழப்பு மற்றும் டிமென்ஷியாவை ஏற்படுத்தக்கூடிய பொதுவான உணவுகள்சர்க்கரைகள் சேர்க்கப்பட்டனமூளை ஆற்றலுக்காக குளுக்கோஸை நம்பியுள்ளது, ஆனால் அதிகப்படியான சர்க்கரை நினைவகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஹிப்போகாம்பஸில் உள்ள பிளாஸ்டிசிட்டியைக் குறைக்கும், இது…
புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, கடந்த வாரம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி போலீஸார், கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும். இதனை அமல்படுத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் தங்களின் கடமையைச் செய்ய தவறிவிட்டனர். பெங்களூரு, மட்டுமல்ல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று முறைகேடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கும்…
வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும். இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். அனைவரையும் அறிந்த, அனைவரிடமும் பேசும் ஒரு அதிபர் இருப்பதனால் ஏற்பட்ட நன்மை இதுதான். இதன் மூலமாக நாம் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும். எனவே நமது ராஜதந்திரிகள் இரு நாடுகளிடமும் நல்ல உறவை பராமரிக்க உறுதிபூண்டுள்ளனர்” என்றார் மேலும், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் நடந்த மோதல், மிகவும் பயங்கரமான ஒன்றாக வளர்ந்திருக்கும். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அதிபர் ட்ரம்ப் மற்றும்…
சென்னை: சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆக.13) கூடியது. இக்கூட்டத்தில், ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பிஹார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த…
இஞ்சி தேநீர் உலகளவில் ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளது, அதன் ஆறுதலான, வெப்பமயமாதல் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் ஏராளமான சுகாதார நன்மைகளுக்காகவும் மதிக்கப்படுகிறது. செரிமானத்தைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவோ, குமட்டலை எளிதாக்கவோ அல்லது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவோ பலரும் அதை தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்கிறார்கள். அதன் இயற்கையான சேர்மங்கள் ஜிங்கரால் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை தீர்வாக அமைகின்றன. இருப்பினும், எந்தவொரு சுகாதார சப்ளிமெண்டையும் போலவே, ஒவ்வொரு நாளும் மிதமான இல்லாமல் இஞ்சி தேயிலை உட்கொள்வது சில நேரங்களில் எதிர்பாராத பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியான உட்கொள்ளல் நெஞ்செரிச்சல், செரிமான அச om கரியம் அல்லது சில மருந்துகளுடனான தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இஞ்சி தேநீரை நீங்கள் தவறாமல் பருகுவதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால், எந்தவொரு குறைபாடுகளும் இல்லாமல் நீங்கள் சிறந்த நன்மைகளைப் பெறுகிறீர்கள்…
பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில், 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூருவில் உள்ள மகாதேவப்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த கே.என்.ராஜண்ணா, ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அதனை ஏன் காங்கிரஸார் தடுக்கவில்லை?” என விமர்சித்தார். இந்த கருத்து காங்கிரஸ் மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று கர்நாடக மாநிலம் மதுகிரியில் காங்கிரஸ் மேலிடத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுகிரி நகர கவுன்சிலர் கிரிஜா மஞ்சுநாத் தலைமையில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து ராஜண்ணா கூறுகையில், ‘‘எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்து எனது தரப்பு விளக்கத்தை தெரிவிப்பேன்’ என்றார்
சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை கிராமத்தில் ரூ.35 கோடியிலும், பள்ளம்துறை கிராமத்தில் ரூ.26 கோடியிலும், தூத்துக்குடி மாவட்டம், அமலி நகர் கிராமத்தில் ரூ.58 கோடியிலும் தூண்டில் வளைவுடன் மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் ரூ.26.85 கோடியில் நிரந்தரமாக முகத்துவாரம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் கிராமத்தில் ரூ.8 கோடியிலும், அரங்கன் குப்பம், கூனான்குப்பம் கிராமங்களில் ரூ. 6.81 கோடியிலும் கடலூர் மாவட்டம், சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை கிராமங்களில் ரூ.8.50 கோடியிலும் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல், கோமுகி அணையில் ரூ.5 கோடியில் புதிய அரசு மீன்விதைப் பண்ணை, சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மீன் விதைப் பண்ணையில் ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.177.16 கோடியில் 9 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு பால்…
இருதய நோய்கள் உலகளவில் நோய் மற்றும் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது விவரிக்கப்படாத சோர்வு போன்ற இதயம் தொடர்பான அறிகுறிகள் எழும்போது, மருத்துவ வல்லுநர்கள் பெரும்பாலும் நிலையை மதிப்பிடுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் கண்டறியும் மற்றும் சிகிச்சை முறைகளின் கலவையை நம்பியிருக்கிறார்கள். பொதுவாக நிகழ்த்தப்படும் இரண்டு நடைமுறைகள் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகும். பெரும்பாலும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டாலும், இவை முற்றிலும் வேறுபட்டவை. இதயம் தொடர்பான விசாரணைகள் அல்லது சிகிச்சைக்குத் தயாராகும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியமானது. ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதுஆஞ்சியோகிராம் என்றால் என்னஆஞ்சியோகிராபி என்றும் அழைக்கப்படும் ஒரு ஆஞ்சியோகிராம், உடலில் உள்ள இரத்த நாளங்களை காட்சிப்படுத்த பயன்படும் ஒரு கண்டறியும் இமேஜிங் சோதனையாகும், குறிப்பாக இதய தசையை வழங்கும் கரோனரி தமனிகள்.முக்கிய புள்ளிகள்:ஒரு வடிகுழாய் (ஒரு மெல்லிய, நெகிழ்வான குழாய்) ஒரு இரத்த நாளத்தில்,…