Author: admin

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்உடல் செயல்பாடு உங்கள் உடலுக்கு மட்டுமல்ல; இது உங்கள் மூளைக்கும் முக்கியமானது. உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது, மேலும் புதிய மூளை உயிரணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது, குறிப்பாக ஹிப்போகாம்பஸில் (மூளையின் நினைவக மையம்).

Read More

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மே 1-ல் வெளியாகும் இந்தப் படத்தின் ‘ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்’ சென்னையில் நடந்தது. நடிகர் சசிகுமார் கூறும்போது, “தரமான படத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்துக்கு நன்றி. நான் கம்பெனி புரொடக்‌ஷன்ஸைத் தொடங்கியபோது, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். அதற்கு, சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி சார் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார். அவரின் 90 படங்களில், 48 படங்கள் அறிமுக இயக்குநர்கள்தான். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தொடர்ந்து புதிய இயக்குநர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன். தங்கள் உரிமைகள் மற்றும்…

Read More

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில், பூந்தமல்லி – போரூர் வரையிலான பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி, உயர்மட்ட மின்பாதை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை…

Read More

காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளை அழைத்தேன். ஆனால் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப முடியாமல் போய்விட்டது. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது: காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலில் சிலர் தந்தையை இழந்துள்ளனர். சிலர் மகனை இழந்துள்ளனர். இதில் அண்ணன், தம்பியை இழந்துள்ளனர். அண்மையில் திருமணமாகி தேனிலவுக்கு காஷ்மீர் வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவிக்கு நான் என்ன பதில் கூறுவேன்? 10 வயது சிறுவன் தனது கண் முன்னே தந்தையை இழந்துள்ளார். அந்த சிறுவனுக்கு என்னால் எப்படி ஆறுதல் கூற முடியும்? பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல், காஷ்மீர் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…

Read More

சென்னையில் இன்று (ஏப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,980 ஆகவும், பவனுக்கு ரூ.320 உயர்ந்து 71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. நாளை அட்சய திருதியை வரும் நிலையில், இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. குறிப்பாக, பிற நாடுகளுடன் வரி போர் அறிவித்ததையடுத்து, சர்வதேச அளவில் தங்கம் விலை தினசரி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 22-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.74,320 -க்கு அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.65 குறைந்து கிராம் ரூ.8,940-க்கும், ஒரு பவுன் ரூ.520 குறைந்து…

Read More

சென்னை: இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்த போன் 6,000mAh பேட்டரி பிரிவில் இந்தியாவின் ஸ்லிம்மான ஸ்மார்ட்போனாக அறியப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த போனின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. ரோஸ் ரெட், கிரே மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளியாக உள்ளது. 6,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்தப் போன் இந்தியாவின் ஸ்லிம்மான போனாக அறியப்படும் என விவோ தெரிவித்துள்ளது. இந்த போனின் டிசைனை பொறுத்தவரையில்…

Read More

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடந்து வருகிறது. இதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 8-ல் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்பிறகு, கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று, திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறுகின்றன.…

Read More

ராஜஸ்தான் ராயல்ஸின் புதுமுக அதிரடி வரவு வைபவ் சூர்யவன்ஷி நேற்று 35 பந்துகளில் சதம் கண்டு இளம் வயதில் ஐபிஎல் சதம் கண்ட சாதனை வீரர் ஆனார். அவருக்கான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதிலிருந்து இதோ சில பாராட்டு பொன்முத்துக்கள்… யூசுப் பதான்: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் எனது அதிவேக சத சாதனையை முறியடித்துள்ளீர்கள். அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது இரட்டை மகிழ்ச்சி. நானும் ராஜஸ்தான் ராயல்ஸுக்காகத்தன் என் சாதனை சதத்தை எடுத்தேன். இளம் வீரர்களுக்கு இந்த பிரான்சைஸ் செய்வது உண்மையில் மேஜிக்தான். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது சாம்பியன்! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: 14 வயதில் குழந்தைகள் கனவு காணும், ஐஸ் கிரீம் சாப்பிடும். வைபவ் சூர்யவன்ஷி விலைமதிப்பில்லா சதத்தை அதுவும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் போட்டியில் இருக்கும் அணிக்கு எதிராக எடுத்துள்ளார். வயதுக்கு மீறிய கிளாஸ், தைரியம்.…

Read More

பெய்ஜிங்: அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9-ம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு அமலாக இருந்த நிலையில், வர்த்தகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் அதிபர் ட்ரம்ப் தவிர்த்துள்ளார். மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.…

Read More

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று (ஏப்.5) காலை பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.13-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தல் நடந்தது. காலை 6 மணிக்கு பூவனநாத சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் எடுத்து ரத விதிகளை சுற்றி கோயிலை வந்தடைந்தது. காலை 7 மணிக்கு மேல் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரம், நந்தியம் பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, நகரமன்ற தலைவர் கா.கருணாநிதி, தமாகா வடக்கு…

Read More