செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) என்பது மனிதர்களைப் போலவே அறிவுத் திறன் கொண்ட சிந்திக்கக் கூடிய, முடிவெடுக்கக்கூடிய கணினி அல்லது கணினி நிரலாக்கத்தை உருவாக்கும் கணினி அறிவியல் துறையின் புதிய வருகை. எடுத்துக்காட்டாக, பயனர் கேட்கும் தகவல்களைத் தேடித்தரும், கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அமேசானின் ‘அலெக்சா’, கூகுள் ‘அசிஸ்டென்ட்’, மைக்ரோசாஃப்ட் டின் ‘கார்டனா’ போன்ற பிரபலமான டிஜிட்டல் மென்பொருள்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் உருவானவை. முக்கியமாகப் பயனரின் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்பட்டு, எதிர்காலத்தில் அவரது ரசனை சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் திறனைப் பெற்றுள்ளன. நவீன திறன்பேசிச் செயலிகளில், ஒளிப்பட வண்ணங்களைப் பின்னணியில் இருக்கும் மென்பொருள் தானாகத் திருத்தி மேம்படுத்துவது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடும் போது டைப் செய்யத் தொடங்கியதுமே அந்தப் பதம் என்னவாக இருக்கும் எனப் பரிந்துரைப்பது போன்றவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உபயம். Elsa (English language Speech Assistant), Google Allo, Robin போன்ற செயலிகள்…
Author: admin
சென்னை: ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் ரஜினிகாந்தை வாழ்த்தி மகிழ்வதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை: படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல. நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் எனவும் செய்திகள் வருகின்றன.பள்ளி மாணவர்கள் இடையே கத்திக் குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு… “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்ற புகழோடு அஇஅதிமுக ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டை, ‘ஸ்டாலின் மாடல்’ அரசு இட்டுச்சென்றுள்ள நிலை இது தான். அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ‘ஆக.. தனிப்பட்ட காரணம்’ Justification அளிக்க இந்த அரசு…
வீக்கம் அல்லது எடிமா கடுமையான கல்லீரல் நோய் முன்னேற்றத்தின் பொதுவான அறிகுறியைக் குறிக்கிறது. திசுக்களில் திரவக் குவிப்பு கால்களிலும் கைகளிலும் மிகவும் கவனிக்கத்தக்கதாகிறது, ஏனெனில் கல்லீரல் சரியாக செயல்படத் தவறிவிட்டது. போதுமான அல்புமின் புரதங்களை உருவாக்க கல்லீரலின் இயலாமை இரத்த நாளங்கள் திரவத்துடன் வீங்க காரணமாகிறது. இல்லாத புரதங்கள் காரணமாக திசுக்களில் திரவ கசிவுகள் ஏற்படுகின்றன, இதன் விளைவாக வீக்கம் மற்றும் அச om கரியம் ஏற்படுகிறது. கைகள் மற்றும் கால்களின் வீக்கம் கல்லீரல் நோய் மோசமடைவதற்கான அறிகுறியாக செயல்படுகிறது, அதே நேரத்தில் இது பொதுவாக எடை அதிகரிப்பு, வயிற்று வீக்கம் மற்றும் சோர்வு ஆகியவற்றுடன் தோன்றுகிறது.ஆதாரங்கள்அமெரிக்க கல்லீரல் அறக்கட்டளை: கல்லீரல் நோயின் அறிகுறிகள்கிளீவ்லேண்ட் கிளினிக்: பால்மர் எரித்மா மற்றும் கல்லீரல் நோய்நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களின் தேசிய நிறுவனம்: கல்லீரல் நோய் கண்ணோட்டம்மெட்லைன் பிளஸ்: மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் ஆரோக்கியம்மறுப்பு: இந்த கட்டுரை தகவல் மட்டுமே…
புதுடெல்லி: டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டுமென்ற சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதியளித்துள்ளார். நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் திங்கள் கிழமையன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும் உடனடியாக தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இதில் ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். டெல்லி தெருக்களை…
சென்னை: மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து கர்ப்பிணிகள், நோயாளிகளை மீட்டு சிகிச்சை அளிக்க படகு ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை, இஎம்ஆர்ஐகீரின் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போது 900-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. ஆனால், மழை வெள்ள பாதிப்புகளின்போது, அந்த வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. அதனால், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம், 5 படகு ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநில செயல் தலைவர் செல்வகுமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில், மீனவர்கள் உதவியுடன் படகு மூலமாக நோயாளிகள், கர்ப்பிணிகள் மீட்கப்பட்டு வருகின்றனர். சிலருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும்பட்சத்தில், அந்நேரங்களில் மனிதர்கள் மூலமாக குறைந்தபட்ச முதலுதவி சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.…
உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் சாப்பிடுவதைப் பற்றி நீங்கள் செய்யும் தேர்வுகள் உங்கள் மூளை ஆரோக்கியத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஊட்டச்சத்து மனநல மருத்துவரும் ஆசிரிய உறுப்பினருமான டாக்டர் உமா நாயுடு, உணவு நினைவகம், கவனம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்கிறார். சில உணவுகள் குடல் பாக்டீரியாவை எதிர்மறையாக பாதிக்கலாம், மூளை அழற்சியைத் தூண்டும் மற்றும் ஆரம்பகால நினைவக இழப்பு அல்லது டிமென்ஷியாவுக்கு பங்களிக்கக்கூடும் என்பதை அவரது ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் அல்லது கட்டுப்படுத்துவதன் மூலம், தனிநபர்கள் கூர்மையான சிந்தனை, மேம்பட்ட முடிவெடுக்கும் மற்றும் ஒட்டுமொத்த நீண்டகால மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும்.ஆரம்பகால நினைவக இழப்பு மற்றும் டிமென்ஷியாவை ஏற்படுத்தக்கூடிய பொதுவான உணவுகள்சர்க்கரைகள் சேர்க்கப்பட்டனமூளை ஆற்றலுக்காக குளுக்கோஸை நம்பியுள்ளது, ஆனால் அதிகப்படியான சர்க்கரை நினைவகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஹிப்போகாம்பஸில் உள்ள பிளாஸ்டிசிட்டியைக் குறைக்கும், இது…
புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, கடந்த வாரம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி போலீஸார், கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும். இதனை அமல்படுத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் தங்களின் கடமையைச் செய்ய தவறிவிட்டனர். பெங்களூரு, மட்டுமல்ல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று முறைகேடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கும்…
வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும். இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். அனைவரையும் அறிந்த, அனைவரிடமும் பேசும் ஒரு அதிபர் இருப்பதனால் ஏற்பட்ட நன்மை இதுதான். இதன் மூலமாக நாம் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும். எனவே நமது ராஜதந்திரிகள் இரு நாடுகளிடமும் நல்ல உறவை பராமரிக்க உறுதிபூண்டுள்ளனர்” என்றார் மேலும், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் நடந்த மோதல், மிகவும் பயங்கரமான ஒன்றாக வளர்ந்திருக்கும். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அதிபர் ட்ரம்ப் மற்றும்…
சென்னை: சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆக.13) கூடியது. இக்கூட்டத்தில், ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பிஹார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த…