Author: admin

போபால்: மத்​தி​யபிரதேசத்​தில் பன்னா வைரச் சுரங்​கம் மிக​வும் பிரபல​மானது. தரமான வைரங்​கள் கொண்ட உலகின் இரண்​டாவது பெரிய சுரங்​கம் இது​வாகும். இங்கு 8 மீட்​டர் சுரங்க நிலம் ஆண்டுக்கு ரூ.200-க்​கு ஏலம் விடப்​படு​கிறது. வைரம் தோண்டி எடுத்த பிறகு அதை பன்னா வைர அலு​வல​கத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும். இங்கு 3 மாதங்​களுக்கு ஒரு​முறை வைர ஏலம் நடை​பெறும். இதில் நாடு முழு​வ​தி​லும் இருந்து வைர வியா​பாரி​கள் பங்​கேற்​கின்​றனர். ஏலத்​தொகை​யில் 11% ராயல்​டி, 1% டிடிஎஸ் என மொத்​தம் 12% கழிக்​கப்​பட்டு எஞ்​சிய தொகை அதை கண்​டெடுத்​தவருக்கு தரப்​படும். இந்​நிலை​யில் இங்​குள்ள ஒரு சுரங்​கத்​தில் தோண்​டும்​போது, ரச்னா கோல்​டர் என்ற பெண் தொழிலாளி 8 வைரங்​களை கண்​டெடுத்​துள்​ளார். இவற்​றில் மிகப்​பெரிய வைரம் 0.79 காரட் எடை கொண்​ட​தாகும். இதுகுறித்து வைர நிபுணர் அனுபம் சிங் கூறுகை​யில், “ரச்னா கண்​டு​பிடித்த 8 வைரங்​களில் 6 வைரங்​கள் அதிக தரம் கொண்​ட​தாகும். இதில் 2…

Read More

சென்னை: அனுபவம், வலிமை, கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்​றல் திமுக​வுக்கு மட்​டுமே இருக்​கிறது என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார். மக்​களு​டன் ஸ்டா​லின் செயலி வாயி​லாக முதல்​வர் ஸ்டா​லினுக்கு பொது​மக்​கள் கேட்ட கேள்வி​களும், அதற்கு அவர் அளித்த பதி​லும் வரு​மாறு: அண்​மை​யில் மேற்​கொண்ட வெளி​நாட்டு பயண அனுபவங்​கள் பற்றி சொல்ல முடி​யு​மா, தொழில் முதலீட்​டாளர்​களிடம் தமிழகம் பற்​றிய பார்வை எப்​படி இருக்​கிறது? தமிழகத்​தின் கட்​டமைப்​பு​கள், இங்​குள்ள திறமை​யான இளைஞர்​கள் பற்​றி​யும், மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் திறன் மேம்​பாடு பயிற்​சிகள் குறித்​தும் ஜெர்​மனி முதலீட்​டாளர்​களுக்கு காட்சி விளக்​கங்​கள் அளித்​தோம். தமிழகத்​தில் பெண்​களுக்கு வேலை​வாய்ப்​பில் அளிக்​கப்​படும் முக்​கி​யத்​து​வத்தை முதலீட்​டாளர்​கள் பெரு​மை​யுடன் கூறி​னார்​கள். புதி​தாக வளர்ந்து வரும் துறை​கள் மீது தமிழகம் கவனம் செலுத்​து​வதை​யும் அவர்​கள் அதி​க​மாகவே பாராட்டி பேசி​னார்​கள். அந்​தவகை​யில், தமிழகத்​தில் பல்​வேறு பகு​தி​களில் முதலீடு​கள் செய்ய அவர்​கள் ஆர்​வ​மாக உள்​ளனர். ஆக்​ஸ்​போர்​டுக்கு சென்​றது பற்​றி​யும், வெளி​நாடு வாழ் தமிழர்​களைச் சந்​தித்​தது பற்​றி​யும் உங்​களின்…

Read More

பெங்களூரு/ஹைதராபாத்: ட்ரம்பின் பேனாவின் பக்கவாதம்,, 000 100,000 விசா கட்டணம். இந்தியாவின் தொழில்நுட்ப தாழ்வாரங்கள் முழுவதும் பீதி, வீடுகளுக்குள் இதய துடிப்பு மற்றும் பயணத் திட்டங்கள் ஒரே இரவில் சரிவதால் திறக்கப்படாத சூட்கேஸ்கள்.இந்தியர்கள் எச் -1 பி வைத்திருப்பவர்களில் 70% க்கும் அதிகமானவர்கள், மற்றும் குழப்பம் இப்போது வெளிநாட்டில் சிக்கியவர்களைப் பிடிக்கிறது அல்லது விசா முத்திரை நியமனங்களுக்குத் தயாராகிறது. “எனது எம்.எஸ்.சி முடித்த பின்னர் நான் இப்போது ஒரு தசாப்த காலமாக அமெரிக்காவில் இருந்தேன். நான் சிகாகோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன், இரண்டு வாரங்களுக்கு ஒரு சூட்கேஸுடன் இந்தியாவுக்கு வந்தேன். எனது விசா முத்திரை செப்டம்பர் 22 அன்று ஹைதராபாத் துணைத் தூதரகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. நான் இங்கு சிக்கிக்கொண்டிருக்கும்போது என் மனைவியும் குழந்தையும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்,” என்று மும்பையிலிருந்து ஒரு தொழில்முறை நிபுணர் கூறினார்.”செப்டம்பர் 21 க்குள் என்னால் மீண்டும் பறக்க முடியாது, ஏனெனில் எனது நியமனம் செப்டம்பர்…

Read More

புதுடெல்லி: டெல்லி போலீ​ஸார் அண்​மை​யில் அப்​தாப் குரேஷி என்ற தீவிர​வா​தியை கைது செய்​து விசா​ரணை நடத்​தி​னர். அதன் அடிப்படையில், ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யின் இஸ்​லாம் நகரிருள்ள தபா​ராக் என்ற ஓட்​டலில் அண்​மை​யில் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில் தீவிர​வாதி அஷார் டேனிஷ் உட்பட 13 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த டேனிஷ், போட்​டித் தேர்​வு​களுக்​காகத் தயா​ராகி வரும் இளைஞர் எனத் தெரிய​வந்​தது. ஆனால், இந்த பாழடைந்த ஓட்​டலில் 15-ம் எண் அறை​யில் தங்​கி​யிருந்து வெடிகுண்​டு​களை தயார் செய்து வந்​துள்​ளார் டேனிஷ். இந்த வெடிகுண்​டு​களை ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத இயக்​கத்​துக்​காக அவர் தயாரித்து வந்​துள்​ளார். தற்​போது இவர்​கள் கைது செய்​யப்​பட்​டதன் மூலம் வெடிகுண்​டு​களைத் தயாரித்து தீவிர​வாத செயல்​களுக்​குப் பயன்​படுத்​தும் கும்​பல் முழு​வதும் பிடிபட்​டுள்​ளது. இவர்​கள் வெடிகுண்​டு​களைத் தயாரித்து பாஜக மூத்த தலை​வர்​களை கொலை செய்​யத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​தனர். டேனிஷின் அறையி​லிருந்து வெடிகுண்டு தயாரிக்​கப்​படும் கன் பவுடர், பொட்​டாசி​யம் நைட்​ரேட், நாட்டு துப்​பாக்​கி​கள் ஆகியவை…

Read More

Last Updated : 21 Sep, 2025 12:49 AM Published : 21 Sep 2025 12:49 AM Last Updated : 21 Sep 2025 12:49 AM மயிலாடுதுறை: ​முஸ்​லிம்​களுக்கு அரசி​யல் பிர​தி​நி​தித்​து​வம் அளிக்கவேண்​டும். வக்பு திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி மனிதநேய மக்​கள் கட்சி சார்​பில் மயி​லாடு​துறை​யில் நேற்று பொதுக்​கூட்​டம் நடைபெற்​றது. இதில் பங்​கேற்ற அக்​கட்​சி​யின் தலை​வர் ஜவாஹிருல்​லா, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பதிவு செய்​யப்​பட்ட 400 கட்​சிகளின் பதிவை இந்​திய தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது. மமக 2009 முதல் பதிவு செய்​யப்​பட்​டு, பல்​வேறு தேர்​தல்​களில் சொந்த சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றுள்​ளது. எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல்​ வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் செய்​யும் முறை​கேடு​களை அம்​பலப்​படுத்​துகிறார். அதை திசை திருப்​பவே பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளின் அங்​கீ​காரத்தை தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​. லேட்டஸ்ட்…

Read More

பத்தனம்திட்டா: கேரள அரசும் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​தான​மும் இணைந்து நடத்​தும் சர்​வ​தேச ஐயப்ப பக்​தர்​கள் சங்​கமம் நிகழ்ச்சி பத்​தனம்​திட்டா மாவட்​டம் பம்​பை​யில் நேற்று காலை தொடங்​கியது. முதல்​வர் பின​ராயி விஜயன் சங்​கமத்தை தொடங்​கி​வைத்​தார். இதில், தமிழக அமைச்​சர்​கள் சேகர் பாபு, பி.டி.ஆர். பழனிவேல் தியாக​ராஜன் ஆகியோர் கலந்து கொண்​டனர். இந்த நிகழ்ச்​சி​யில் கேரள முதல்​வர் பின​ராயி விஜயன் பேசி​ய​தாவது: சபரிமலை ஐயப்​பனை தரிசிக்க வரும் பக்​தர்​களின் எண்​ணிக்கை கூடிக்​கொண்டே இருப்பதால் 2011-12-ம் ஆண்​டில் சபரிமலை மாஸ்​டர் பிளான் தொடங்​கப்​பட்​டது. சபரிமலை மாஸ்​டர் பிளான் என்​பது சன்​னி​தானம், பம்​பை, பாரம்​பரிய பாதைகள், நிலக்​கல் ஆகிய​வற்​றின் ஒருங்​கிணைந்த வளர்ச்​சியை மைய​மாகக் கொண்​டது. 2050-க்​குள் இந்த திட்​டங்​கள் நிறைவடை​யும். இந்​தத் திட்​டத்​துக்​காக ரூ.1,033.62 கோடியை செலவு செய்ய கேரள அரசு முடிவு செய்​துள்​ளது. சன்​னி​தான மேம்​பாட்​டுக்​காக முதல் கட்​ட​மாக 2022-27-க்​குள் ரூ.600.47 கோடி​யும், இரண்​டாம் கட்​ட​மாக 2028-33-க்​குள் ரூ.100.02 கோடி​யும், மூன்​றாம் கட்​ட​மாக 2024-39-க்​குள் ரூ.77.68 கோடி​யும்…

Read More

நாகர்கோவில்: திரு​வனந்​த​புரம் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, குமரி மாவட்​டத்​திலிருந்து சுவாமி விக்​ரகங்​கள் புறப்​பாடை முன்​னிட்டு பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில், மன்​னர் மார்த்​தாண்ட வர்​மா​வின் உடை​வாள் மாற்​றும் பாரம்​பரிய நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. திரு​வனந்​த​புரம் அரண்​மனை​யில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் நவராத்​திரி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக, கன்​னி​யாகுமரி மாவட்​டம் சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்கை அம்​மன், வேளிமலை குமாரசு​வாமி, தேவாரக்​கட்டு சரஸ்​வதி தேவி ஆகிய 3 சுவாமி விக்​ரகங்​கள், பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில் இருந்து ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​படும். இந்த ஆண்டு நவராத்​திரி விழா வரும் 23-ம் தேதி தொடங்​கு​கிறது. இவ்​விழா​வில் பங்​கேற்க சுசீந்​திரம் முன்​னு​தித்த நங்கை அம்​மன் நேற்று முன்​தினம் காலை​யில் சுசீந்​திரத்​திலிருந்து பல்​லக்​கில் புறப்​பா​டாகி, மாலை​யில் பத்​ம​நாபபுரம் நீல​கண்ட சுவாமி கோயிலை அடைந்​தார். நேற்று அதி​காலை​யில் வேளிமலை குமாரசு​வாமி விக்​ரகம், பத்​ம​நாபபுரம் அரண்​மனை​யில் உள்ள தேவாரக்​கட்டு சரஸ்​வதி அம்​மன் கோயிலை வந்​தடைந்​தது. திரு​வி​தாங்​கூர் சமஸ்​தான மன்​னர் மார்த்​தாண்ட வர்​மா​வின் உடை​வாள், சுவாமி ஊர்​வலத்​தின் முன்​னால் கொண்டு செல்​லப்​படும்.…

Read More

மதுரை: புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதா​ரங்​களால் முறியடிக்க வேண்​டும் என்று மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணா கூறி​னார். தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம் (தமுஎகச) சார்​பில் சிந்​து​வெளி நாகரி​கம் உலகுக்கு அறிவிக்​கப்​பட்ட நூற்​றாண்டு நிறைவு கருத்​தரங்​கம் மதுரை விராட்​டிபத்​தில் நேற்று நடை​பெற்​றது. மாநில செயற்​குழு உறுப்​பினர் ச.தமிழ்ச்​செல்​வன் தலைமை வகித்​தார். மாநிலத் தலை​வர் மதுக்​கூர் ராமலிங்​கம் முன்​னிலை வகித்​தார். சிந்​து​வெளி ஆய்​வாள​ரும், முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி​யு​மான ஆர்​.​பால​கிருஷ்ணன், சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் ஆதவன் தீட்​சண்யா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணன் பேசி​ய​தாவது: கடவுள் நாகரி​கத்தை படைக்​க​வில்​லை. மனிதர்​கள்​தான் நாகரி​கத்தை படைத்​துள்​ளனர். தற்​போது நாகரி​கம் பற்​றிய புனை​வுக் கதைகளைத்​தான் வரலாறாகப் பார்த்​துக் கொண்​டிருக்​கிறோம். ஆதா​ரங்​கள் அடிப்​படை​யில் கட்​டமைக்​கப்​படு​வது​தான் வரலாறு. கீழடி அகழாய்வு குறித்து இன்​னும் முழு​மை​யான அறிக்​கையை நான் அளிக்​க​வில்​லை. அதற்​குள் அண்ணா பல்​கலைக்​கழக மாணவர்​கள் மணலூர் கீழடியை மகா​பாரதத்தை தொடர்​புபடுத்தி…

Read More

கொச்சி: கேரளா​வின் குட்​டிப்​புரத்தை சேர்ந்​தவர் சைதல​வி. முஸ்​லிம் மதத்தை சேர்ந்த பார்​வையற்ற இவர் மசூ​தி​களில் யாசகம் பெற்று வாழ்ந்து வரு​கிறார். சில ஆண்​டு​களுக்கு முன்பு ஜூபைரியா என்ற பெண்ணை இவர் திரு​மணம் செய்​தார். இதன்​பிறகு 2-வது திரு​மணம் செய்து கொண்​டார். தற்​போது 3-வது திரு​மணத்​துக்கு தயா​ரா​வ​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சூழலில் முதல் மனைவி ஜூபைரியா ஜீவ​னாம்​சம் கோரி கேரள உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை நீதிபதி குண்ணிகிருஷ்ணன் விசா​ரித்​தார். ஜூபைரியா நீதி​மன்​றத்​தில் கூறும்​போது, “எனது கணவர் சைதலவி யாசகம் மூலம் ஒரு மாதத்​தில் ரூ.25,000 -க்​கும் அதி​க​மாக வரு​வாய் ஈட்​டு​கிறார். இதில் ரூ.10,000-ஐ எனக்கு ஜீவ​னாம்​ச​மாக வழங்க வேண்​டும்’’ என்று வாதிட்​டார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி குனிகிருஷ்ணன் நேற்று முன்​தினம் தீர்ப்பு வழங்​கி​னார். அந்த தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: யாசகம் பெற்று வாழும் பார்​வையற்ற நபரால் மனை​விக்கு ஜீவ​னாம்​சம் வழங்க முடி​யாது. இதுதொடர்​பாக எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க முடி​யாது.…

Read More

சென்னை: ஸ்ரீ சாரதா நவராத்​திரி விழாவை முன்​னிட்​டு, காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், நேற்று சென்​னைக்கு வருகை புரிந்​துள்​ளனர். ஸ்ரீ சாரதா நவராத்​திரி மஹோற்​சவம், செப். 22-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை, சென்​னை, தாம்​பரம் கிழக்கு ராஜகீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்​வாமி வித்யா மந்​திர் பள்ளிவளாகத்​தில் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை முன்​னிட்டு காஞ்சி சங்கர மடத்​தின் பீடா​திப​தி​கள் ஸ்ரீ விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், செப். 20-ம் தேதி (நேற்​று) இங்கு வருகை புரிந்​துள்​ளனர். இதையடுத்து செப். 21-ம் தேதி (இன்​று) மாலை 4.25 மணி அளவில் திவ்ய தேச கண்​காட்​சியை தொடங்கி வைக்க உள்​ளனர். ஸ்ரீ சாரதா நவராத்​திர் மஹோற்​சவத்தை முன்​னிட்டு செப். 22-ம் தேதி முதல் பிக்ஷாவந்​தனம், சஹஸ்ர சண்டி மகா யாகத்​துக்கு ஏற்​பாடு​கள்…

Read More