Author: admin

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நானி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ‘ரெட்ரோ’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய படங்கள் மே 1-ம் தேதி வெளியாக உள்ளன. இதன் இரண்டு படங்களையும் விளம்பரப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது படக்குழு. இதனிடையே, நானி படமொன்றை இயக்க கார்த்திக் சுப்பராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனை நானி அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் படம் தொடர்பாக நானி, “எனக்கு கார்த்திக் சுப்பராஜின் இயக்கம் ரொம்பவே பிடிக்கும். அவருடைய ‘ரெட்ரோ’ படமும் மே 1-ம் தேதி வருகிறது. இரண்டு படங்களுமே பெரும் வெற்றியடையும் என நம்புகிறேன். எனக்கு கார்த்திக் சுப்பராஜின் படங்கள் மற்றும் அவற்றை கையாளும் விதம் ரொம்பவே பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக சில கதைகளும் பேசி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More

சென்னை: ஆளுநருக்கு எதி​ரான வழக்​கில் கிடைத்​திருக்​கும் தீர்ப்பு என்​பது தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தால் மாநிலங்​களுக்கு பெற்​றுத்​தந்​திருக்க கூடிய மாபெரும் விடு​தலை என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் நிலு​வை​யில் வைத்​திருந்த நிலை​யில் அதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​தது. இந்த வழக்​கில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவே​தி, பி.​வில்​சன் ஆகியோர் வழக்​காடி வெற்​றியை பெற்​றுத் தந்​தனர். இவர்​களுக்​கான பாராட்டு விழா சென்னை கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. முதல்​வர் ஸ்டா​லின் தலைமை வகித்​து, வழக்​கறிஞர்​களுக்கு பாராட்டு தெரி​வித்​து, பொன்​னாடை அணி​வித்​து, செங்​கோல்​களை நினைவு பரி​சாக வழங்கி கவுர​வித்​தார். விழாவுக்கு வர இயலாத முகுல் ரோஹ்தகிக்​கும் முதல்​வர் வாழ்த்து தெரி​வித்​தார். தொடர்ந்து அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வரவேற்​புரை​யாற்றி முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, அரசி​யலமைப்பு சட்​டத்​தின் முகப்பு உரையை, நினைவு பரி​சாக வழங்​கி​னார்.…

Read More

குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத் நகரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர். இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் பணியில் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையாக குஜராத்தில் 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அகமதாபாத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதல் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குஜராத் காவல் துறையின் குற்றப்பிரிவு, சிறப்பு நடவடிக்கை குழு (எஸ்ஓஜி), ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு என பல்வேறு பிரிவுகள் ஒருங்கிணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டன. இதில் 450-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுமார் 400 பேர் சண்டோலா பகுதியில் பிடிபட்டனர். குஜராத் உள்துறை அமைச்சர், மாநில காவல் துறை இயக்குநர் மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர்…

Read More

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் வானொலி அதன் தனித்தன்மையை இழக்காமல் வலம் வந்து கொண்டிருக்கிறது. வானொலி மூலம் அறியும் செய்திகளுக்கு என்றே உலகம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள். வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ ‘பிப்ரவரி 13’யை உலக வானொலி நாளாக 2011 இல் அறிவித்தது. 2012ஆம் ஆண்டு முதல் ‘உலக வானொலி நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1946இல் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13, உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக வானொலி நாளில் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளில் விவாதங்களும் நிகழ்வுகளும் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. அந்த நாளில் உள்ளூர் வானொலி நிலையங்களை ஊக்குவிப்பது; பன்னாட்டு வானொலி நிலையங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்துவது போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன. ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட வானொலி, பொழுதுபோக்கின் முகமாக மாறியதே அதன்…

Read More

சென்னை: 2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நம்நாட்டில் ஆண்டுதோறும் கல்வி, கலை, மருத்துவம், பொது விவகாரங்கள், அறிவியல், இலக்கியம், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2026-ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் எனும் இணையதளத்தில் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளை நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் இணைய வழியில் அனுப்பலாம். விளம்பரத்துக்காக அல்லாமல் அந்தந்த துறைகளுக்கு…

Read More

ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பித்தது முதல் எத்தனை சிக்சர்கள், எத்தனை பவுண்டரிகள் என்பதையெல்லாம் பெருமை பொங்க காட்டி வருகிறது. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் சீரழிந்து வரும் கிரிக்கெட்டின் இன்னொரு இன்றியமையாத பங்கான ஃபீல்டிங் தவறுகளின் எண்ணிக்கையையும், கேட்ச்கள் விடப்பட்டதன் எண்ணிக்கையையும் காட்டினால் கூட அத்தொடருக்கு ஒரு நடுநிலைத் தன்மை கிடைத்து விடும். ஐபிஎல் தொடர்களில் விடப்படும் கேட்ச்கள் எண்ணிக்கை தொடருக்குத் தொடர் அதிகரித்து வந்தவண்ணமே உள்ளன. கிரிக் இன்போ தகவல்களின் படி 2025 சீசனில் 431 கேட்ச் வாய்ப்புகளில் 103 கேட்ச்கள் நழுவ விடப்பட்டு தரைத் தட்டியுள்ளன. அதாவது, 76% என்று கேட்சிங் திறமை குறைந்திருப்பதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ புள்ளி விவரம் சுட்டுகிறது. இந்த சீசனில் 2 மேட்ச்களில் 9 கேட்ச்கள் ட்ராப் செய்யப்பட்டுள்ளது, லீகின் தரமதிப்பைச் சரித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி இடையேயான போட்டி மற்றும் பஞ்சாப் கிங்ஸ்- சிஎஸ்கே மேட்ச் இரண்டிலும்தான் இந்த அதிகப்படியான கேட்ச் ட்ராப்கள் நடந்துள்ளன.…

Read More

ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில், ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பல்கலை. மாணவர்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகம் சர்வதேச புகழ் பெற்ற கல்வி நிலையமாக அறியப்படுகிறது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் 42,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்…

Read More

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள், ‘ஆரூரா, தியாகேசா’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சைவ சமயத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில், ஆயில்ய நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆழித்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, நிகழாண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமான நேற்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, ஆழித்தேரில் நேற்று முன்தினம் இரவு தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து நேற்று அதிகாலை 5.40 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 9 மணிக்கு ஆழித் தேரோட்டம்…

Read More

அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்ரன் தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் சசிகுமார் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவுக்காகத்தான் சற்று பதற்றத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினர் பேசுவதை விட, படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன். தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த ‘குட்நைட்’, ‘லவ்வர்’ என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள்…

Read More

சென்னை: கடந்த ஓராண்டாக பல சட்டங்களை கொண்டு அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக அரசு சிதைத்து வருகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் வழங்கறிஞர் பிரிவு சார்பில் அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: சுதந்திரத்தின்போது காங்கிரஸில் பல்வேறு சட்ட நிபுணர்கள் இருந்தனர். ஜவஹர்லால் நேரு, காந்தி, படேல், ராஜாஜி உள்ளிட்ட பல சட்ட நிபுணர்கள் இருந்தாலும் அரசியல் சாசனக் குழுவுக்கு தலைவராக அம்பேத்கரை தேர்ந்தெடுத்தனர். ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை மற்ற நாடுகள் சுதந்திரம் பெற்று பல்லாண்டு காலம் கழித்துதான் போராடி வாங்கினர். ஆனால், இந்தியா குடியரசு ஆன முதல் நாளே அனைத்து மக்களுக்கும் உரிமை என அரசியல் சாசனத்தில் எழுதியது அம்பேத்கர்…

Read More