Author: admin

சென்னையில் இன்று (ஏப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,980 ஆகவும், பவனுக்கு ரூ.320 உயர்ந்து 71,840 ஆகவும் விற்பனையாகி வருகிறது. நாளை அட்சய திருதியை வரும் நிலையில், இந்த விலை உயர்வு நகை வாங்குபவர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. குறிப்பாக, பிற நாடுகளுடன் வரி போர் அறிவித்ததையடுத்து, சர்வதேச அளவில் தங்கம் விலை தினசரி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 22-ம் தேதியன்று ஒரு பவுன் ரூ.74,320 -க்கு அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைய தொடங்கியது. தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.65 குறைந்து கிராம் ரூ.8,940-க்கும், ஒரு பவுன் ரூ.520 குறைந்து…

Read More

சென்னை: இந்தியாவில் விரைவில் விவோ நிறுவனத்தின் வி50 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்த போன் 6,000mAh பேட்டரி பிரிவில் இந்தியாவின் ஸ்லிம்மான ஸ்மார்ட்போனாக அறியப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் விவோ வி50 ஸ்மார்ட்போன் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த போனின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. ரோஸ் ரெட், கிரே மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளியாக உள்ளது. 6,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்தப் போன் இந்தியாவின் ஸ்லிம்மான போனாக அறியப்படும் என விவோ தெரிவித்துள்ளது. இந்த போனின் டிசைனை பொறுத்தவரையில்…

Read More

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடந்து வருகிறது. இதேபோல, 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 8-ல் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்பிறகு, கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வு முன்கூட்டியே ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று, திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான இறுதி பருவத் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறுகின்றன.…

Read More

ராஜஸ்தான் ராயல்ஸின் புதுமுக அதிரடி வரவு வைபவ் சூர்யவன்ஷி நேற்று 35 பந்துகளில் சதம் கண்டு இளம் வயதில் ஐபிஎல் சதம் கண்ட சாதனை வீரர் ஆனார். அவருக்கான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதிலிருந்து இதோ சில பாராட்டு பொன்முத்துக்கள்… யூசுப் பதான்: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் எனது அதிவேக சத சாதனையை முறியடித்துள்ளீர்கள். அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது இரட்டை மகிழ்ச்சி. நானும் ராஜஸ்தான் ராயல்ஸுக்காகத்தன் என் சாதனை சதத்தை எடுத்தேன். இளம் வீரர்களுக்கு இந்த பிரான்சைஸ் செய்வது உண்மையில் மேஜிக்தான். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது சாம்பியன்! கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: 14 வயதில் குழந்தைகள் கனவு காணும், ஐஸ் கிரீம் சாப்பிடும். வைபவ் சூர்யவன்ஷி விலைமதிப்பில்லா சதத்தை அதுவும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் போட்டியில் இருக்கும் அணிக்கு எதிராக எடுத்துள்ளார். வயதுக்கு மீறிய கிளாஸ், தைரியம்.…

Read More

பெய்ஜிங்: அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதைத் தொடர்ந்து உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகம் விதித்து உலக பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளார். சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் அமல்படுத்தியிருந்தார். கடந்த 9-ம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு அமலாக இருந்த நிலையில், வர்த்தகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்த வரிவிதிப்புப் பட்டியலில் சீனாவை மட்டும் அதிபர் ட்ரம்ப் தவிர்த்துள்ளார். மேலும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார்.…

Read More

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் இன்று (ஏப்.5) காலை பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.13-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தல் நடந்தது. காலை 6 மணிக்கு பூவனநாத சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் எடுத்து ரத விதிகளை சுற்றி கோயிலை வந்தடைந்தது. காலை 7 மணிக்கு மேல் சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரம், நந்தியம் பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு, நகரமன்ற தலைவர் கா.கருணாநிதி, தமாகா வடக்கு…

Read More

சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடிப்பில் மே 1-ல் வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் ‘டார்க் காமெடி’ வகைமையில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதில், ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் முழுவதுமே படத்தின் ஒன்லைனை வெளிப்படுத்தி வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக தமிழகத்தில் குடியேறும் இலங்கைத் தமிழரின் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளே மையம். சசிகுமார் – சிம்ரன் இருவரும் இலங்கைத் தமிழ் தம்பதிகளாக கச்சிதமாக பொருந்துகின்றனர். இந்தக் குடும்பத்தை ‘காப்பாற்றும்’ கதாபாத்திரத்தில் ட்ரெய்லர்…

Read More

சென்னை: இந்தியா கொள்கை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். தமிழக பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தலைவர் மாற்றத்துக்கு பிறகு அண்ணாமலை பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, கடந்த 14-ம் தேதி ஆன்மிக பயணமாக அண்ணாமலை இமயமலை சென்றார். இமயமலையில் ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார். 3 நாள் ஆன்மிக பயணத்துக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். பின்னர், கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், கடந்த 23-ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில், கலிபோர்னியா மாகானத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், ‘ஸ்டான்போர்ட் இந்தியா மாநாடு 2025’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ்…

Read More

மத்திய அரசு விதித்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்தது. சார்க் விசா வைத்துள்ளவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ஏப்ரல் 26-ம் தேதியுடன் முடிவடைந்தது. மருத்துவ விசாவில் வந்தவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் (ஏப். 29) முடிவடைகிறது. வருகை, வணிகம், திரைப்படம், பத்திரிகையாளர், போக்குவரத்து, மாநாடு, மலையேறுதல், மாணவர், பார்வையாளர், குழு சுற்றுலா, யாத்ரீகர் மற்றும் குழு யாத்திரை உள்ளிட்ட 12…

Read More

சாட்ஜிபிடி-க்கு 2-வது பெரிய சந்தை இந்தியா என்றும் ஏஐ சிப், செயலியை உருவாக்கி வருகிறது என்றும் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த டீப்சீக் நிறுவனம் டீப்சீக்-ஆர்1 என்ற சாட்போட் செயலியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறுகிய காலத்தில் இதை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். மிகவும் குறைவான செலவில் உருவாக்கப்பட்ட இது, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உள்ளிட்ட மற்ற சாட்போட் செயலிகளைப் போலவே செயல்படுகிறது. இது ஏஐ உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஓபன் ஏஐ நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் நேற்று முன்தினம் டெல்லி வந்தடைந்தார். அவர் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில், “முழு ஏஐ ஸ்டேக்கை…

Read More