Author: admin

இஸ்லாமபாத்: ‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி, ‘‘சிந்து நதி எங்களுக்கு சொந்தமானது. அதில் தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்’’ என்றார். இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி இது குறித்து கூறுகையில், ‘‘ சிந்து நதியில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், போருக்கு தயாராக இருக்க வேண்டும். கோரி, ஷஹீன் மற்றும் ஹஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் நாங்கள் காட்சிக்கு வைத்திருக்க வில்லை. இந்தியாவிற்காகத்தான் வைத்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.

Read More

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ் புத்தாண்டையொட்டி, பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்க கவசத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். பின்னர் நாதஸ்வரம் முழங்க வெள்ளி பல்லக்கில் கோயிலில் இருந்து சிவனின் பிரதிநிதியாகிய அங்குசதேவரும், விநாயகரின் பிரதிநிதியாகிய அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோயில் குளப் படித்துறைக்கு வந்தனர். அங்கு, தேவாரப் பாடல்களுடன் அங்குச தேவருக்கும், அஸ்திர தேவருக்கும் பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆராதனை நடத்தினர். பின்னர் பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதைக்…

Read More

Last Updated : 26 Apr, 2025 05:46 PM Published : 26 Apr 2025 05:46 PM Last Updated : 26 Apr 2025 05:46 PM அட்லி படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அறிவிப்பு விடீயோவே அனைத்து மொழிகளிலும் கவனம் ஈர்த்தது. இதில் அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணி மட்டுமே இறுதியாகி இருக்கிறது. இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு நாயகியாக நடிக்க மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார். இதில் மொத்தம் 3 நாயகிகள் இருக்கிறார்கள். இதில் ஒருவராக மிருணாள் தாகூர் தேர்வாகி இருக்கிறார். ஜான்வி கபூர் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரிடம்…

Read More

சென்னை: வணிக உரிமம் புதுப்பிப்பதற்கான அவகாசத்தை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வணிக உரிம கட்டணங்கள் 2025-26 ஆண்டுக்கு பெருமளவு உயர்த்தப்பட்டது. அதனால் வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எடுத்துச் சென்றது. அப்போது, 2025-26 ஆண்டுக்கான தொழில், வணிக உரிம கட்டணங்கள் சிறு, குறு வணிகர்களுக்கு அவசியம் குறைக்கப்பட வேண்டும் என்பதை, இப்பேரமைப்பு வலியுறுத்தியது. அதனைத் தொடர்ந்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள வணிக கடைகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,500 என்பதை, ஆண்டுக்கு ரூ.1,200 என உரிமக் கட்டணங்களை அரசு குறைத்தது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கும், தொழில் – வணிக உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தலுக்கான நடைமுறையை அமல்படுத்துவதிலும் கால தாமதம் ஏற்பட்டிருப்பதை கவனத்தில் கொண்டு, இப்பேரமைப்பு,…

Read More

குவாஹாட்டி: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்ததாக அசாம் (14), மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம், தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் ஆகியவை அரசின் சதி வேலை என கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக ஒரு பத்திரிகையாளர், ஒரு கல்லூரி மாணவர், ஒரு வழக்கறிஞர் உட்பட 6 பேர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்ததாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த…

Read More

இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் கைாகோக்கிறது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டார்லிங்கின் அதிவேக இண்டர்நெட் சேவையை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. எலான் மஸ்க் நிறுவனத்துடன் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் ஒப்பந்தம் இதுவாகும். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பது அதன் சொந்த அதிகாரத்தை பெறுவதற்கு உட்பட்டது. இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் கூறுகையில், “ ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஸ்டார்லிங் இணைய சேவையை இந்தியாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்ளுக்கு வழங்குவது நிறுவனத்தின் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல். அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்புக்கான எங்களின் உறுதிப்பாட்டை இது மேலும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது” என்றார். இந்த உடன்பாட்டின்படி, ஏர்டெல்லின் ரீடெயில் ஸ்டோர்களில் ஸ்டார்லிங் உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான வழிகள் ஆராயப்பட உள்ளன. சமூகங்கள்,…

Read More

சென்னை: ஏற்கெனவே நடத்தப்பட்ட 6 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை தேர்வர்கள் குறிப்பிட்ட காலம் வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட செயல் அலுவலர் -கிரேடு 3 தேர்வு ( குருப் 7 -பி), செயல் அலுவலர்-கிரேடு-4 தேர்வு (குருப்-8), கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குருப்-3 ஏ), ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு மற்றும் கடந்த 2024-ம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு ஆகிய 6 போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அத்தேர்வுகளை எழுதியவர்கள் தங்களின் ஒருமுறை பதிவெண் மூலம் ஓஎம்ஆர் விடைத்தாளினை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா 2-வது இடம் பெற்றுள்ளார். அவர் இதுவரை 297 சிக்ஸர்களை விளாசியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா, 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளில் 297 சிக்ஸர்களை விளாசி பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் விராட் கோலியும், 4-வது இடத்தில் எம்.எஸ். தோனியும், 5-வது இடத்தில் ஏபி டிவில்லியர்ஸும் உள்ளனர்.

Read More

ஜெட்டா: பிரதமர் மோடியின் விமானம் நேற்று சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றன. பிரதமர் மோடியின் வருகைக்கு அளிக்கப்பட்ட இந்த அரியவகை சிறப்பு மரியாதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரதமர் மோடி சவுதி, அரேபியா வரும்படி அந்நாட்டு இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். வெளிநாட்டு தலைவர்களின் வருகையின்போது, விமானநிலையத்தில் அந்நாட்டு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்த விமானத்துக்கு சவுதி போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து ஜெட்டா நகருக்கு அழைத்துச் சென்றன. சவுதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளதால், பிரதமர் மோடிக்கு இந்த அரியவகை சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதற்கு முன் கடந்த 2016 மற்றும்…

Read More

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் இன்று தெரிவித்தனர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழா ஏப்.28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய திருவிழாக்களான ஏப்.29-ம் தேதி (சித்திரை 16)செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்குமேல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைபெறும். மே 6ம் தேதி (சித்திரை 23) செவ்வாய்க்கிழமை இரவு 7.35 மணிக்குமேல் 7.59 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் மீனாட்சிஅம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மே 7ம் தேதி (சித்திரை 24) புதன்கிழமை மீனாட்சி அம்மனுக்கு திக்கு விஜயம் நடைபெறும். மே 8ம் தேதி (சித்திரை 25) வியாழக்கிழமை…

Read More