Author: admin

சென்னை: பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக மாவட்டம்தோறும் வழிகாட்டி மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விவரங்கள், விழிப்புணர்வு தகவல்கள் விளக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக வழிகாட்டி மையங்களை தொடங்க தற்போது பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாவட்டங்களின் எல்லை அளவை பொறுத்து முதல்கட்டமாக 2 அல்லது 3 வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட உள்ளன இவற்றில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க உதவுதல், அதற்கான பயிற்சிகளுக்கு வழிகாட்டுதல், பிளஸ்…

Read More

மும்பை: இங்​கிலாந்து அணிக்​கெ​தி​ரான தொடரில் இந்​திய வீரர்​கள் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்பர் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரி​வித்​தார். ஐபிஎல் கிரிக்​கெட் தொடர் முடிவடைந்​ததும், இந்​திய கிரிக்​கெட் அணி​யினர், இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளனர். இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்​ளது. மேலும், 2025 – 2027 உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் தொடரின் ஓர் அங்​க​மாக நடை​பெறும் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இரு அணி​களும் கடுமை​யாக போராடும் என்​ப​தில் சந்​தேகமில்​லை. இந்​திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்​து​வம் வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது. கடந்த சில டெஸ்ட் தொடர்​களில் இந்​திய அணி தொடர் தோல்வி​களைச் சந்​தித்​துள்​ளது. அதிலிருந்து இந்திய அணி மீண்டு வெற்​றிப்​பாதைக்கு திரும்ப வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது. இந்​நிலை​யில் செய்​தி​யாளர்​களுக்கு…

Read More

வான்கூவர்: கனடாவில் நடந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது எஸ்யுவி கார் தாறுமாறாக ஓடியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று முன்தினம் லாபு லாபு தினம் கொண்டாடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனித்துவத்தை எதிர்த்து போரிட்ட பிலிப்பைன்ஸ் தலைவரை நினைவுகூரும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களால் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் கிழக்கு 41-வது அவின்யூ மற்றும் பிராசர் தெருவில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கூட்டத்துக்குள் ஒரு எஸ்யுவி கார் வேகமாக நுழைந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தீவிரவாதம் இல்லை: இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே அந்த கார் ஓட்டுநரை கைது…

Read More

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் 300 ஆண்டு பழமையான சிதம்பர தீர்த்தத்தை விவேகானந்தா கேந்திரம் சார்பாக புனரமைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தொடர்புடைய 108 புனித தீர்த்தக்குளங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் அடக்கம். முன்பு ராமேசுவரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் ஒரு மாத காலம் தங்கி 108 தீர்த்தங்களிலும் தங்களின் பாவங்கள், தோஷங்களைப் போக்கி விட்டுச் செல்வார்கள். இந்த 108 தீர்த்தங்களில் சில திர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றங்களினால் அழிவுக்குள்ளாகியும் இருந்தன. இந்த தீர்த்தங்களை கண்டுபிடித்து, முட்புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்பி, பக்தர்கள் செல்ல ஏதுவாக விவேகானந்த கேந்திரத்தின் பசுமை ராமேசுவரம் திட்டத்தின் கீழ் கடந்த 12 காலமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரையிலும் 50 தீர்த்தங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. தர்மர், சர்வரோக நிவாரண, பரசுராம், ஞானவாதி, குமுதம், ஹர, நீலகண்ட, பனச்ச, கிருஷ்ண ஆகிய தீர்த்தங்களில் முழுமையாக மணலில் இருந்து…

Read More

அடுத்ததாக புதுமுகங்கள் நடிக்க, காதல் பின்னணியில் படம் ஒன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன். ‘தக் லைஃப்’ முடித்துவிட்டு அடுத்ததாக காதல் பின்னணியில் முழுக்க புதுமுகங்களை வைத்து படமொன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் கதை இறுதியாகிவிட்டாலும், திரைக்கதையில் சில மாற்றங்களை மட்டும் செய்து வருகிறார் மணிரத்னம். ‘தக் லைஃப்’ வெளியானவுடன், இப்படத்தினை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். சமகால காதலர்களை மனதில் வைத்து இதனை எழுதியிருக்கிறார். இதற்கும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தான் பணிபுரியவுள்ளார்.

Read More

கோவை: விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழா அரங்கில், ‘பாரதத்துக்கான வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை 20.2 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் பாசன உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இந்தியா உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. உணவுப் பற்றாக்குறையில் இருந்து உபரிக்கு மாறிய இந்தியாவின் பயணத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர். இ-நாம் திட்டத்தில் 2 கோடி விவசாயிகளும், 2.5 லட்சம் வர்த்தகர்களும் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் தொழில்முனைவோராகவும்,…

Read More

புதுடெல்லி: இந்தியா உடனான வர்த்தக உறவு முறிந்ததால் பாகிஸ்தானில் மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் மருத்துவ துறையில் அவரச நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவு முழுமையாக முறிந்திருக்கிறது. பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதோடு உயிர் காக்கும் முக்கிய மருந்துகள் இந்தியாவில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதை கண்டித்து, இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக அறிவித்தது. ஆனால் அப்போது இந்திய மருந்துகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது பஹல்காம் தீவிரவாத…

Read More

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் கூகுள், மைக்ரோ சாஃப்ட் நிறுவனங்கள் சாட்பாட்டுகளை அறிமுகப்படுத்தியது போல ‘எக்ஸ்’ தளத்தின் ‘க்ரோக்’ ஏ.ஐ சாட்பாட்டை அறிமுகப்படுத்தினார் எலன் மஸ்க். இப்போது ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘க்ரோக்’ சாட்பாட் அளிக்கும் பதில்களைச் சுற்றி பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மையில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்த க்ரோக், வரம்பு மீறி கொச்சையான சொற்களைப் பயன்படுத்தியதால் அப்பதிவு வைரலானது. வரலாறு, சினிமா, அரசியல் விமர்சனங்கள், சித்தாந்தங்கள் என அனைத்துத் தலைப்புகளை ஒட்டிய கேள்விகளுக்கும் க்ரோக் வெளிப்படையான பதில்களைப் பதிவு செய்வதால் ‘எக்ஸ்’ தளத்தில் பயனர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. சிலர், க்ரோக்கின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், க்ரோக்கின் பதில்களைப் பகிர்ந்து ஜெமினி ஏ.ஐ, ஓபன் ஏ.ஐ சாட்பாட்டுகளுடன் ஒப்பிடுகையில் க்ரோக் தனித்து நிற்கிறது என ஆதரவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில்…

Read More

கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை கல்லூரிகளும் ஜூன் 16-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என மாநில கல்லூரி கல்வி ஆணையர் இ,சுந்தரவள்ளி அறிவித்துள்ளார்,. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஏப்ரல்/மே மாத செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிஏ, பிஎஸ்சி., பிகாம். பிபிஏ, உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதி வருகின்றனர். செஸ்டர் தேர்வுக்கு பிறகு மே மாதம் கல்லூரி மாணவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஒரு மாத கால கோடை விடுமுறைக்கு பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 2025-26-ம் கல்வியாண்டு செமஸ்டர் வகுப்பு ஜூன் 16-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கலை மற்றும்…

Read More

புதுடெல்லி: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர். இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலும் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More