Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்: மதுரை கோர்ட் எச்சரிக்கை
    மாநிலம்

    ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்: மதுரை கோர்ட் எச்சரிக்கை

    adminBy adminMay 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்: மதுரை கோர்ட் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “கிரானைட் உரிமம் மோசடி வழக்கில் சாட்சியளிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமிழக போலீஸார் பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்” என மதுரை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற சட்ட விரோத கிரானைட் குவாரி வழக்குகள் மதுரை கனிம வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் நேரில் ஆஜராக ஏற்கெனவே அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு 3-வது சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை. தனக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது நியாயமற்றது என சகாயம் பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்தார். சகாயத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து காவல்துறை சார்பில், “ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014 முதல் 2023 வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதில் சகாயமும் ஒருவர். இருப்பினும் நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இல்லாமல் சாட்சியம் அளிப்பதற்கு வசதியாக சகாயத்துக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும்” என விளக்கம் அளிக்கப்பட்டது.

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 5) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், சகாயத்துக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் சட்டவிரோத கிரானைட் குவாரி வழக்கு நீதிபதி லோகேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் ஆஜராகவில்லை. பின்னர் நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராக சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை?. அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுமா? என்பதை அரசு வழக்கறிஞர் காவல்துறையிடம் கேட்டு நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பு வழங்காவிட்டால், பாதுகாப்பு வழங்க மத்திய பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்படும், எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் செப்​.7-ல் காங்கிரஸ் மாநாடு

    August 28, 2025
    மாநிலம்

    தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    August 28, 2025
    மாநிலம்

    கையில் இருப்பது மந்திரக்கோலா, மருத்துவக்கோலா? – பிரேமலதாவும் கையில் கரகோல் வைத்திருக்கும் ‘கணக்கு’ என்ன?

    August 28, 2025
    மாநிலம்

    “பாமக அழிவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது!” – காடுவெட்டி குருவின் மகள் காட்டமான நேர்காணல்

    August 28, 2025
    மாநிலம்

    கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

    August 28, 2025
    மாநிலம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக சரிவு

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒட்டும், எண்ணெய் பொடுகு என்றால் என்ன: அதன் காரணங்களை அறிந்து கொள்ளுங்கள், வழக்கமான ஷாம்பு ஏன் தோல்வியடைகிறது, எவ்வாறு நிர்வகிப்பது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்: வைட்டமின் டி குறைபாட்டின் 5 எச்சரிக்கை அறிகுறிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட விஞ்ஞானிகள் புதிய வழியைக் கண்டுபிடிப்பார்கள்: குடல் நுண்ணுயிரிகளை குறிவைப்பது சிகிச்சையை எவ்வாறு மாற்றும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புற்றுநோய் ஆபத்து: ஹார்வர்ட் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் 3 பானங்களைப் பகிர்ந்து கொள்கிறார்
    • தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் செப்​.7-ல் காங்கிரஸ் மாநாடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.